ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...

+9
manavaigiri
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
krishnaamma
ayyasamy ram
ராஜா
யினியவன்
ஜாஹீதாபானு
13 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 Empty ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...

Post by ஜாஹீதாபானு Wed Jan 13, 2016 5:34 pm

First topic message reminder :

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 EHMeZQQeYP2O6u0rDagZ+man

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்... (எந்தவிதமான பக்க விளைவுகளோ, மாத்திரைகளோ இல்லை..)

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.

மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு

மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.

ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.

1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.

உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி முகநூல்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down


ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 Empty Re: ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...

Post by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2016 2:03 pm

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 1571444738 ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 Empty Re: ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...

Post by krishnaamma Thu Jan 28, 2016 10:40 am

யினியவன் wrote:
நலங்குக்கு பலரும் வருவதால் மஞ்சள் சேர்த்த நீர் கிருமிநாசினியாக செயல்பட இருக்கலாம்

இருக்கலாம் இனியவன், விளக்கத்து க்கு நன்றி ! ................. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 Empty Re: ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...

Post by krishnaamma Thu Jan 28, 2016 10:43 am

T.N.Balasubramanian wrote:அந்த காலத்தில் பாட்டிமார்கள்
நெற்றியில் பத்துப் போடுகிறேன் என்று
கரண்டியில் சிறிது மஞ்சள் போட்டு ,
ரெண்டு சொட்டு சுண்ணாம்பு நீர் /
அல்லது ஒரு விரல் நுனி  சுண்ணாம்பை அதில் குழைத்து
லேசாக சூடு பண்ணி நெற்றியில் போட்டால்
தலையில் உள்ள நீரை எல்லாம் எடுத்து விடும் .
இது பாட்டி வைத்யம் .

எனக்கு ஜலதோஷம் வந்தால் ஒரு நாளைக்கு 20 /30 தடவை தும்முவேன் .
ஒவ்வொரு தடவையும் குறைந்தது 20 /25 தும்மலாவது வெளிப்படும் .
ஊர் பூரா எந்தன் அடுக்கு தும்மல் கேட்கும் .
கையில் விபுதி எடுத்து நீரில் குழைத்து மூக்கின் மேல் தடவ ,
போயேப் போச்சு தும்மல் .
ட்ரை பண்ணுங்க . நிச்சயம் பலன் .
இது எந்தன் வைத்தியம்

ரமணியன்

பிகு வடிவேலு ஒரு படத்தில்  பாட்டிக்கு 10 போட்டது நினைவுக்கு வருகிறது .

ரமணியன்

எங்காத்திலெயும் இதே வைத்தியம் தான் ஐயா, இவரும் 50 - 60 போடுவார், முக்கே சிவந்து போகும் நமக்கு பயமாய் இருக்கும்..............விபூதி  வைத்தியம் தான் கை கண்ட மருந்து.....................என் தங்கை தலைக்கு குளித்தாலே , சளி என்று அவஸ்த்தை படுவாள் அவளுக்கும் அம்மா விபூதியை   உச்சந்  தலை இல் வைத்து பர பர வென தேய்த்து விடுவார்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 Empty Re: ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...

Post by krishnaamma Thu Jan 28, 2016 10:51 am

manavaigiri wrote:இத இத தான் தேடிக்கிட்டு இருந்தேன்.... மிக்க நன்றி... இன்றே செய்து பார்க்கிறேன் .....

எனக்கு உடல் சூடு அதிகம் ஏற்படும் போது வறட்டு இருமல் ஏற்படுகிறது. மேலும் சில சமயம் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. ஏற்கனவே இதற்கு மருந்து கூறி இருந்தாலும் மீண்டும் ஒரு முறை தொியபடுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்....

ஒரு தேக்கரண்டி சொம்பை, நெய் துளி விட்டு வாணலி இல் வதக்கவும், சோம்பு நன்கு பொரிந்ததும், 2 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பை சிம் இல் வைக்கவும். அது நன்கு கொதித்து 1 டம்ளர் ஆனதும், 2 தேக்கரண்டி பனம் கல்கண்டு போட்டு அது கரையும் வரை மீண்டும் கொதிக்க விடவும் .

கொஞ்சம் ஆறினதும், மிதமான சூடில் அப்படியே வடிகட்டி , தம்ளரில் எடுத்துக்கொண்டு அரை ஸ்பூன் நெய் அதன் மேல் விடவும், நெய் உருகும் அளவு சூடு இருந்தால் போறும் புன்னகை..............அப்படியே 'டபக்' என குடித்து விடவும்..............வரட்டு இருமல் போயே போச் புன்னகை

செய்து பாருங்கள் நல்ல பலன் தெரியும் புன்னகை

இல்லாவிட்டால் மற்றொன்று இருக்கு,

ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கிராம்பு எடுத்துக்கொண்டு, அதை அப்படியே 4 டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விடணும் ................அது 2 டம்ளர் ஆக குறைந்ததும், அதில் மீண்டும் 1 டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பை அணைத்து விடணும்...................இப்போ , அதிலிருந்து ஒரு முறைக்கு 1/2 டம்ளர் வீதம் குடியுங்கள்................அநேகமாய் அந்த மொத்த தண்ணீரும் ஆகும் முன் உங்களுக்கு இருமல் சரியாகிவிடும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 Empty Re: ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...

Post by krishnaamma Thu Jan 28, 2016 10:54 am

T.N.Balasubramanian wrote:விபுதி வைத்தியமும் முயற்சியுங்களேன் , Jagadeesan .

இது  எப்பிடி என் கவனத்திற்கு வந்தது .

ஒரு நாள் காலை   5 மணி சுமாருக்கு , பனி மிகுந்த நாளில் , வேலைக்கு சைக்கிளில் போய் கொண்டு இருந்தேன் .அப்போது எந்தன் வயது 20/21 .
மெர்குரி விளக்கின் கீழ் ஒரு  50/55 வயது முதியவர், வெறும் கோமணத்துடன் உட்கார்ந்து இருந்தார் .
மேலே ஆடை ஏதும் இல்லை .இருப்பினும் கொஞ்சமும் குளிர் நடுக்கம் கிடையாது . உடல் பூரா விபுதி குளியல் போல் இருந்தது .  
ஆர்வம் மேலிட , வண்டியில் இருந்து இறங்கி , அய்யா குளிரவில்லையா  என்றேன் .
சிரித்துக் கொண்டே , விபுதிதான் ஆடை . இந்த ஆடையை உடுத்தால் குளிரும் வராது, அது சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது என்றார் .  
ஓரிரு நாளில் , எனக்கு கடும் ஜலதோஷம் /தும்மல் வர , விபுதி எடுத்து முக்குப் பகுதி , மார்பு பகுதி ,தொண்டை பகுதியில் அழுத்தி தேய்த்துக் கொள்ள , மறு நாள் அய்யா செம ப்ரெஷ் .
உபயோகித்து சொல்லுங்களேன் .

ரமணியன்

சூப்பர் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 Empty Re: ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...

Post by krishnaamma Thu Jan 28, 2016 10:55 am

யினியவன் wrote:அதிகாலையில் குளித்து, விபூதி பட்டை இடுவது காரணமாகத்தான் அய்யா.

நெற்றியில் நீர் கோர்த்து ஜலதோஷம் வரக்கூடாது என்பதற்காகத்தான்.

வாஸ்த்தவம் இனியவன், அதனால் தான் அந்த காலத்தில் எல்லோரும் நெத்திக்கு இட்டுக்கொண்டார்கள், 'திருமண்ணும்  ' இதே பலனை கொடுக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 Empty Re: ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...

Post by ஜாஹீதாபானு Thu Jan 28, 2016 4:20 pm

M.Jagadeesan wrote:எனக்கும் அப்படித்தான் ! தும்ம ஆரம்பித்தால் அடுக்குத் தும்மல்போல தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நான் கடையில் விற்கும் " சமஹன் " பவுடரை வெந்நீரில் கலக்கிச் சாப்பிடுவேன் . மூன்று நாட்களுக்குப் பிறகு சுத்தமாக இருக்காது . இனிமேல் ஜலதோஷம் வந்தால் மஞ்சள்பொடி ,சுண்ணாம்பு வைத்தியத்தைச் செய்து பார்க்கிறேன் . நன்றி .
மேற்கோள் செய்த பதிவு: 1187818

சூப்பர் செய்து பாருங்க பலன் என்னனு சொல்லிடுங்க

(இனியவன் அண்ணா இதுக்கு என்ன பின்னூட்டம் குடுப்பாங்கன்னு தெரியல )


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 Empty Re: ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...

Post by யினியவன் Thu Jan 28, 2016 4:27 pm

ஜாஹீதாபானு wrote:
M.Jagadeesan wrote:எனக்கும் அப்படித்தான் ! தும்ம ஆரம்பித்தால் அடுக்குத் தும்மல்போல தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நான் கடையில் விற்கும் " சமஹன் " பவுடரை வெந்நீரில் கலக்கிச் சாப்பிடுவேன் . மூன்று நாட்களுக்குப் பிறகு சுத்தமாக இருக்காது . இனிமேல் ஜலதோஷம் வந்தால் மஞ்சள்பொடி ,சுண்ணாம்பு வைத்தியத்தைச் செய்து பார்க்கிறேன் . நன்றி .

சூப்பர் செய்து பாருங்க பலன் என்னனு சொல்லிடுங்க

(இனியவன் அண்ணா இதுக்கு என்ன பின்னூட்டம் குடுப்பாங்கன்னு தெரியல )

டேய் அங்க வேலில உனக்கு என்ன வேலை? இங்க தேடுறாங்கல்ல , வந்துட்டு போ புன்னகை

எதற்கு கேட்கிறாய் பின்னூட்டம்?

எம்குலத்து ஆண்களுக்கு சுண்ணாம்பு அரைத்துக் கொடுத்தாயா? இல்லை மஞ்சள் அரைத்து கொடுத்தாயா? புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 Empty Re: ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...

Post by ஜாஹீதாபானு Thu Jan 28, 2016 4:31 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
M.Jagadeesan wrote:எனக்கும் அப்படித்தான் ! தும்ம ஆரம்பித்தால் அடுக்குத் தும்மல்போல தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நான் கடையில் விற்கும் " சமஹன் " பவுடரை வெந்நீரில் கலக்கிச் சாப்பிடுவேன் . மூன்று நாட்களுக்குப் பிறகு சுத்தமாக இருக்காது . இனிமேல் ஜலதோஷம் வந்தால் மஞ்சள்பொடி ,சுண்ணாம்பு வைத்தியத்தைச் செய்து பார்க்கிறேன் . நன்றி .

சூப்பர் செய்து பாருங்க பலன் என்னனு சொல்லிடுங்க

(இனியவன் அண்ணா இதுக்கு என்ன பின்னூட்டம் குடுப்பாங்கன்னு தெரியல )

டேய் அங்க வேலில உனக்கு என்ன வேலை? இங்க தேடுறாங்கல்ல , வந்துட்டு போ புன்னகை

எதற்கு கேட்கிறாய் பின்னூட்டம்?

எம்குலத்து ஆண்களுக்கு சுண்ணாம்பு அரைத்துக் கொடுத்தாயா? இல்லை மஞ்சள் அரைத்து கொடுத்தாயா? புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190406

சிப்பு வருது சிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருதுசிப்பு வருது அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 Empty Re: ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...

Post by GunasekarenS Mon Aug 22, 2016 8:09 pm

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 103459460 நடனம்
மஞ்சள் கிருமி நாசினி.
சுண்ணாம்பு காற்றை சுத்தப்படுத்தும், ஈரம் உறிஞ்சும்.
இது பாட்டி வைத்தியம், சித்தர் வைத்தியம்.
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

Back to top Go down

ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...  - Page 6 Empty Re: ஜலதோசம், மூக்கடைப்பு அகத்தியர் அருளிய உடனடி நிவாரணம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum