புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
81 Posts - 68%
heezulia
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
1 Post - 1%
viyasan
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
273 Posts - 45%
heezulia
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
18 Posts - 3%
prajai
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
7 Posts - 1%
mruthun
பகுத்துண்ணல் அறம் : Poll_c10பகுத்துண்ணல் அறம் : Poll_m10பகுத்துண்ணல் அறம் : Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகுத்துண்ணல் அறம் :


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Oct 16, 2018 8:57 pm

பகுத்துண்ணல் அறம் :
======================
" Charity begins at home " என்பது ஆங்கிலப் பழமொழி .

அறச்செயல்கள் வீட்டிலிருந்தே தொடங்குகின்றன என்பது இதன் பொருள் . குழந்தைகளைச் சிறுவயது முதற்கொண்டே அறம் செய்யப் பழக்கவேண்டும் . பக்கத்து வீட்டுக் குழந்தைப் பார்த்திருக்க , நம்வீட்டுக் குழந்தைத் தனித்துத் தின்பண்டங்களை உண்ண நாம் அனுமதிக்கக் கூடாது . " அந்தக் குழந்தைக்கும் கொஞ்சம் கொடு ; நீ மட்டும் தனித்து உண்டால் உன் வயிறு வலிக்கும் " என்று பொய் சொல்லியாவது , பகுத்துண்ணும் பழக்கத்தைக் குழந்தைகளின் உள்ளத்தில் வளர்க்கவேண்டும் .

குழந்தைகளால் தனித்து அறம் செய்ய இயலாது . அதற்குத் தேவையான பொருள் வசதியும் அவர்களிடம் இருக்காது . ஆகவேதான் குழைந்தைகளைப் பார்த்து

" அறம் செய்ய விரும்பு " என்றால் ஒளவைப் பாட்டி . சிறுவயதில் அந்தப் பிஞ்சு நெஞ்சில் தூவப்படும் இந்த விருப்ப விதைதான் , வருங்காலத்தில் ஈதல் அறமாகவும் , ஒப்புரவு அறமாகவும் ஓங்கி வளர உதவி செய்யும் .

பகுத்துண்ணல் அறம் பற்றி நூல் நெடுகிலும் ஐயன் வள்ளுவர் பேசுவார் . பகுத்து உண்ணலைப் " பாத்தூண் " என்று வள்ளுவர் குறிப்பிடுவார் . காமத்துப் பாலிலும் பகுத்துண்ணல் அறம் பேசுவார் .

தனக்குச் சொந்தமான வீட்டிலிருந்து , தன் உழைப்பால் வந்த உணவுப் பொருளைத் தன் சுற்றத்தாரோடு பகிர்ந்துண்ணும் இன்பமே அலாதிதான் . அந்த இன்பம் எப்படிப்பட்ட இன்பம் தெரியுமா ? தன் காதலியை இறுகத் தழுவித் துய்க்கும் இன்பத்திற்கு நிகரானது என்று சொல்கிறார் .

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு . ( 1107 )

கொல்லாமை அதிகாரத்தில் ஒன்பது குறட்பாக்களும் கொல்லாமை அறம் பேச , ஒரேயொரு குறள்மட்டும் பகுத்துண்ணலைப் பற்றிப் பேசுகிறது .

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை . ( 322 )

இதிலிருந்து நாம் அறிவது என்ன ? பகுத்துண்ணாமை கொலைக்கு நிகரானது என்ற வள்ளுவனின் நெஞ்சத்தை அறிகிறோம் . பல்லுயிர் என்றதனால் , பகுத்துண்ணல் , மனிதர்களோடு மட்டுமன்றி , நம்மைச் சுற்றியுள்ள மிருகங்களோடும் , பறவைகளோடும் , இன்னபிற உயிரினங்களோடும் இருக்கவேண்டும் என்பது பொருளாகும் .

சங்கப் பாடல்களிலேயே பகுத்துண்ணல் அறம் பேசப்படுகிறது .

சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே !

என்று ஒளவையார் அதியமானின் பகுத்துண்ணும் பண்பைப் பாராட்டுகிறார் .

கொஞ்சம் கள் கிடைத்தால் , அதை ஒளவைக்குக் கொடுத்துவிடுவானாம் . நிறைய கள் கிடைத்தால் , ஒளவையுடன் தானும் பகிர்ந்து உண்ணுவானாம் .

பகுத்துண்ணலின் ஒரு பகுதியாக விருந்தோம்பல் விளங்குகிறது . " விருந்து " என்னும் சொல்லுக்குப் புதிது , புதியவர் என்று பொருள் . தற்காலத்தில் இச்சொல் , தன் உண்மைப் பொருளை இழந்து உணவைக் குறித்து நின்றது .

விருந்தினர் புறத்தே இருக்க , அதாவது வீட்டின் திண்ணையிலே இருக்கத் தான்மட்டும் , வீட்டின் உள்ளே உணவருந்துதல் பகுத்துண்ணல் ஆகாது . அவரைப் பக்கலில் அமர்த்தி , அவரோடு சேர்ந்து உண்ணுதலே பகுத்துண்ணல் அறமாகும் . பகுத்துண்ணலின் மற்றோர் பகுதி சுற்றம் பேணல் ஆகும் . காக்கையைப் போல , சுற்றத்தாரோடு கூடி உண்ணும் பழக்கம் கொண்டவனுக்கே செல்வம் உண்டாகும் என்று கூறுகிறார் .

சிலருக்கு மலைபோல செல்வம் இருந்தாலும் , உற்றார் , உறவினர்களை அண்ட விடார் .
அவனுக்கு உறவில்லாத எவனோ ஒருவன் , அவனிடம் ஒட்டிக்கொண்டு , அந்த செல்வத்தை அனுபவித்துக்கொண்டு இருப்பான் . அத்தகைய பகுத்துண்ணல் பண்பு இல்லாதவனைப் " பேதை " என்று வள்ளுவர் அழைப்பார் .

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைப்
பெருஞ்செல்வம் உற்றக் கடை .

என்பது குறள் . அதாவது பேதையிடம் செல்வம் சேர்ந்தால் , இரத்த சொந்தங்கள் பசித்திருக்க , அயலான் உண்டு பசியாறுவான் என்பது இக்குறளின் கருத்து .

பகுத்துண்ணலின் அடுத்த பகுதி குடும்பம் ஆகும் . கணவன் , மனைவி , குழந்தைகள் , உடன் பிறந்தோர் , பெற்றோர் என்று அனைவரும் கூடி உண்ணுதலாகும் . தாய் ஓரிடத்தும் , தந்தை ஓரிடத்தும் , குழந்தைகள் ஓரிடத்தும் இருக்கின்ற இந்நாளில் , பகுத்துண்ணல் இன்பத்தைப் பெறுதல் அரிது .

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தார் ஓம்பல் தலை .

நாம் ஈட்டும் செல்வத்தில் இறந்த நம் முன்னோர்களுக்கும் , தெய்வத்திற்கும் கொஞ்சம் செலவு செய்யவேண்டும் என்பது இக்குறளின் கருத்தாகும் .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Oct 16, 2018 9:01 pm

அருமை அருமை அண்ணா ... பகுத்துண்ணல் அறம் : 3838410834



[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக