ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியாயோ.... அஞ்சுகமே .....

+8
ஜாஹீதாபானு
கார்த்திக் செயராம்
krishnaamma
M.Jagadeesan
ayyasamy ram
shobana sahas
T.N.Balasubramanian
K.Senthil kumar
12 posters

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 Empty அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by K.Senthil kumar Fri Jan 08, 2016 7:24 pm

First topic message reminder :

அறியாயோ.... அஞ்சுகமே .....

மருதாணி பறிச்சுவந்து
ஆட்டுரலில் அரச்சுவந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில ஒட்டிவச்சா
உச்சந்தல குளுரடிச்சு
கூச்சத்துல சிலுத்துக்குவ
சின்ன  பொண்ணே  தெரியாதா..??

உன் மூக்குகீழ  தூசு அத
ஒனக்கு நான் தொடச்சிவிட
காலையில நீ வந்து
கண்ணாடி பாக்கையில
செவந்த மீச கொஞ்சம்
செரப்பத்தான் மொளச்சிருக்கும்
ஊரே குலுங்கி அத
ஒக்காந்து சிரிச்ச கத
ஒனக்குந்தான் தெரியாதா..???

பாண்டி வெளையாட்ட
பக்குவமா நீயாட
நொண்டி வெளையாட்ட –நீ
நொனசொல்லி நானாட
உப்புமூட்ட ஒன்ன தூக்கி
ஒருவீதி சுத்திவந்து
எறங்க சொல்லி நான் கேக்க
எறங்காம நீ இருக்க –நான்
இடுச்சி விட்டதால –நீ
இடுப்போடிஞ்சி போனகத
எலஞ்சியமே தெரியாதா ...??  

ஆளுக்கொரு பிடிச்ச
அரிசியத்தான் எடுத்துவந்து
கரிசமர வெறகு கொல்லி
கணக்கத்தான் பொருக்கிவந்து
ஆத்துகோயில் பக்கத்துல
அடுப்பத்தான் பத்தவச்சு
கூட்டாஞ்சோறு ஆக்கிதின்னு
கொண்டாடி குளுந்தோமே
கொஞ்சங்கூட தெரியாதா...??

கரடோரம் மாடுமேய்க்க
கயிர்புடிச்சி நடக்கையில
ஓமாடு முன்ன போக
ஏமாடு பின்ன வர
கோமியத்த ஓமாடு
கொடங்கோடமா  அடிச்சிவிட
பாவாட நனைஞ்சதால
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சமண்ணே தெரியாதா..??

ஒங்க ஊட்டு வாசலுல
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடிழுக்க
நான் கொஞ்சம் கலரடிக்க
ஒரு நாள் முழுக்க அத
ஒக்காந்து ரசிப்போமே
ஒனக்கு அது தெரியாதா..??

வாழதோப்பு ஓரத்துல
வரப்போரம் நடக்கையில
வாழக்கா நான் பறிக்க
வாஞ்சையோட நீ கடிக்க
வரிபல்லு கரையாள –நீ
அர கெழவியான கத –என்
அஞ்சுகமே தெரியாதா...??

வயசுக்கு நீ வந்த பின்ன
வெளையாட வாரத்துக்கு
ஓஊட்டுல தடவிழுகவிழ
ஏமனசுல இடிவிழுகவிழ
இடிஞ்ச மனசோட
இத்தன நாள் இருக்கேனே
இந்த கத ஒனக்குந்தான்
இப்பவரைக்கும் தெரியாதா..??



                கே.செந்தில்குமார்


Last edited by T.N.Balasubramanian on Fri Jan 08, 2016 8:28 pm; edited 1 time in total (Reason for editing : spelling)


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down


அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by K.Senthil kumar Sun Jan 10, 2016 12:28 pm

கார்த்திக் செயராம் wrote:கடல் தாண்டி போனவங்க கஸ்டத்த கேட்டேன்டி.
கடல் தாண்டி போயித்தான் காசு பணம் பாக்கனுமா.
கழனியில் பாடுபட்டா காசு பணம் சேத்திடலாம்.
காலையில எழுந்திடுவேன் காளை ரெண்டு பூட்டிகிவேன்.
காட்டை நல்லா உழுதுடுவேன் கரை வச்சி பூசிடுவேன்.
கஞ்சியத்தான் குடிச்சிபுட்டு கஸ்டப்பட்டு உழைச்சிடுவேன்.
கண்மணியே உனை நானும் ராணி போல பாத்துகுவேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1186760

ஒன் பேச்சு இத்தனநாள் ஒதவாம போச்சுதைய்யா
நான் நெனச்ச கனவெல்லாம் கானல்நீரா ஆச்சுதைய்யா
காடு கழனியெல்லாம் கருவேலம் மொலச்சுதைய்யா
காலைல  ஒனக்கு கள்ளுக்கட கெடச்சுதைய்யா
கஷ்டம் தெரியாத ஒன்கிட்ட வாக்கபட்டா
காது கம்மலோட வருங்காலத்தயும் தொலச்சிருவேன்


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by ராஜா Sun Jan 10, 2016 12:42 pm

K.Senthil kumar wrote:நன்றி பானு அக்கா ...

வட்டார வக்கை பயன்படுத்தி எழுதிவிட்டோமே, சுவைக்காமல் போய்விடுமோ என்று சிறிது தடுமாறித்தான் போனேன்.
நீங்கள் அதுபோன்ற வார்த்தைகளை அறிந்திருப்பதால் நான் இனி கவலை கொள்ள தேவையில்லை .
மேற்கோள் செய்த பதிவு: 1186665

தடுமாற தேவையில்லை செந்தில் , உங்ககிட்டேயும் கார்த்திக் கிட்டேயும் பிடித்ததே இந்த எளிமையான தமிழ் வடிவம் தான். தொடருங்கள் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by கார்த்திக் செயராம் Sun Jan 10, 2016 1:07 pm

ஊரெல்லாம் மழைபெஞ்சி வெள்ளகாடா போனதடி.
நாடெல்லாம் மழைபெஞ்சி நாசமா போனதடி .
நம்ம ஊரு கரட்டு பக்கம் ஒரு துளி பெயிலடி .
ஈசானி மூலையதான் தினம் தினம் பாத்து நின்னேன் .
வடக்கால மூலையில வெண் மேகம் கருத்திருக்கு .
காஞ்சிபோன என் மனசும் வெள்ள பூவா மலர்ந்திருக்கு .


தெருவோரம் கிழக்கால காலி மனை ஒன்னுஇருக்கு .
கடகன்னி வச்சிடலாமுனு எண்ணம் ஒன்னு வந்திருக்கு .
கடல் தாண்டி போகவேண்டாம் இங்கேயே பொழசிடலாம்.
காடு கழனி பாத்துக்கலாம் சொந்த தொழில் செய்திடலாம் .
கண்மணியே உன்னை நானும் பிறிந்திட மாட்டேனே ..


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by K.Senthil kumar Sun Jan 10, 2016 1:08 pm

நன்றி ராஜா அண்ணா ..

நீங்கள் கொடுக்கின்ற ஊக்க மொழிகளில் தான் நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிகொண்டு இருக்கிறோம் ....


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by யினியவன் Sun Jan 10, 2016 1:12 pm

இருவரும் பாரதிராஜா பாணியில் கிராமத்தை படம் பிடிக்கிறீர்கள் அழகாக.
கிராமீய வாழ்க்கையின் அழகை நமக்கு பிடித்து எப்போது
நிம்மதியாக வாழ போகிறோமோ தெரியல.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by கார்த்திக் செயராம் Sun Jan 10, 2016 1:24 pm

யினியவன் wrote:இருவரும் பாரதிராஜா பாணியில் கிராமத்தை படம் பிடிக்கிறீர்கள் அழகாக.
கிராமீய வாழ்க்கையின் அழகை நமக்கு பிடித்து எப்போது
நிம்மதியாக வாழ போகிறோமோ தெரியல.
மேற்கோள் செய்த பதிவு: 1186781

இன்று கிராமிய வாழ்க்கை கூட நகரத்து சாயலால் திரிந்து போய் வருகிறது ..கொஞ்ச நாட்களில் எல்லாமே மாறிவிடும் .


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by K.Senthil kumar Sun Jan 10, 2016 2:00 pm

கார்த்திக் செயராம் wrote:ஊரெல்லாம் மழைபெஞ்சி வெள்ளகாடா போனதடி.
நாடெல்லாம் மழைபெஞ்சி நாசமா போனதடி .
நம்ம ஊரு கரட்டு பக்கம் ஒரு துளி பெயிலடி .
ஈசானி மூலையதான் தினம் தினம் பாத்து நின்னேன் .
வடக்கால மூலையில வெண் மேகம் கருத்திருக்கு .
காஞ்சிபோன என் மனசும் வெள்ள பூவா மலர்ந்திருக்கு .


தெருவோரம் கிழக்கால  காலி மனை ஒன்னுஇருக்கு .
கடகன்னி வச்சிடலாமுனு எண்ணம் ஒன்னு வந்திருக்கு .
கடல் தாண்டி போகவேண்டாம் இங்கேயே பொழசிடலாம்.
காடு கழனி பாத்துக்கலாம் சொந்த தொழில் செய்திடலாம் .
கண்மணியே உன்னை நானும் பிறிந்திட மாட்டேனே ..
மேற்கோள் செய்த பதிவு: 1186779

அழவாத்தான் பேசுறியே அறிவு கெட்ட மச்சானே
ஆலக்கெனறு தோண்ட காசு கொஞ்சம் வேணுமே
கடன்கோடுத்தே காலியாவும் கடகன்னி வெச்சாவே –பின்ன
கஞ்சி குடிக்கத்தான் அஞ்சூடு போவணுமே

பவுண கொஞ்சம் கலட்டி தாரேன்
டவுனுக்கு நீ போகவேணும் –நல்லா
காசு பணம் சேத்து வந்து –என்ன
கண்ணாலம் பண்ண வேணும்
இருக்கிற காலம் மட்டும்
இன்பமா வாழ்ந்துக்கணும் -இனியாச்சும்
இல்லேங்கற வார்த்தைய
சொல்லாம இருந்துக்கனும் ......
போயிவா... மச்சானே ..போயிவா.... மச்சானே
பொழப்புக்கு புறப்பட்டு   போயிவா.... மச்சானே


இதோட முடிங்க கார்த்திக்... அதிகமாக நீட்டினால்  படிக்கிறவங்களுக்கு களைப்பு வந்துவிடும்


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by யினியவன் Sun Jan 10, 2016 4:03 pm

போயிட்டு வா மச்சானே போயிட்டு வா மச்சானே
டவுனுக்கு போயி காசு பணம் பண்ணி சேத்து வர
போயிட்டு வா மச்சானே போயிட்டு வா மச்சானே ன்னு
பாட்டு நீயும் சொல்லி போட்ட
டவுனுல காசு பணம் சேத்து வர செத்து வர வேணுமடி
செத்து வரும் வேளையிலே கிராமீயமும் செத்து தான் போகுமடி
உன்னை கண்ணாலம் பண்ண வருவேனோ இல்ல
நீயும் கருமாதி தான் எனக்கு பண்ண வருவேனோ
வார சுகம்/சோகம் வேணாமடி
உள்ள சுகத்த உன்னோடயே
உசிரு உள்ள வரை இங்கேயே
வாழ்ந்துபுட்டு போறேனடி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by K.Senthil kumar Sun Jan 10, 2016 4:19 pm

யினியவன் wrote:போயிட்டு வா மச்சானே போயிட்டு வா மச்சானே
டவுனுக்கு போயி காசு பணம் பண்ணி சேத்து வர
போயிட்டு வா மச்சானே போயிட்டு வா மச்சானே ன்னு
பாட்டு நீயும் சொல்லி போட்ட
டவுனுல காசு பணம் சேத்து வர செத்து வர வேணுமடி
செத்து வரும் வேளையிலே கிராமீயமும் செத்து தான் போகுமடி
உன்னை கண்ணாலம் பண்ண வருவேனோ இல்ல
நீயும் கருமாதி தான் எனக்கு பண்ண வருவேனோ
வார சுகம்/சோகம் வேணாமடி
உள்ள சுகத்த உன்னோடயே
உசிரு உள்ள வரை இங்கேயே
வாழ்ந்துபுட்டு போறேனடி
மேற்கோள் செய்த பதிவு: 1186791
அண்னே .....இனியவன் அண்ணே....
இங்க இருந்து உசுர வாங்க வேனாமேனுதான் ஆள டவுனுக்கு அனுப்பறோம் ஜாலி ஜாலி ஜாலி


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by யினியவன் Sun Jan 10, 2016 4:38 pm

K.Senthil kumar wrote:
அண்னே .....இனியவன் அண்ணே....
இங்க இருந்து உசுர வாங்க வேனாமேனுதான் ஆள டவுனுக்கு அனுப்பறோம் ஜாலி ஜாலி ஜாலி

வஞ்சகமே இது வஞ்சகமே
அறிந்தேனே வஞ்சகமே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 4 Empty Re: அறியாயோ.... அஞ்சுகமே .....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum