Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அறியாயோ.... அஞ்சுகமே .....
+8
ஜாஹீதாபானு
கார்த்திக் செயராம்
krishnaamma
M.Jagadeesan
ayyasamy ram
shobana sahas
T.N.Balasubramanian
K.Senthil kumar
12 posters
Page 1 of 9
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
அறியாயோ.... அஞ்சுகமே .....
அறியாயோ.... அஞ்சுகமே .....
மருதாணி பறிச்சுவந்து
ஆட்டுரலில் அரச்சுவந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில ஒட்டிவச்சா
உச்சந்தல குளுரடிச்சு
கூச்சத்துல சிலுத்துக்குவ
சின்ன பொண்ணே தெரியாதா..??
உன் மூக்குகீழ தூசு அத
ஒனக்கு நான் தொடச்சிவிட
காலையில நீ வந்து
கண்ணாடி பாக்கையில
செவந்த மீச கொஞ்சம்
செரப்பத்தான் மொளச்சிருக்கும்
ஊரே குலுங்கி அத
ஒக்காந்து சிரிச்ச கத
ஒனக்குந்தான் தெரியாதா..???
பாண்டி வெளையாட்ட
பக்குவமா நீயாட
நொண்டி வெளையாட்ட –நீ
நொனசொல்லி நானாட
உப்புமூட்ட ஒன்ன தூக்கி
ஒருவீதி சுத்திவந்து
எறங்க சொல்லி நான் கேக்க
எறங்காம நீ இருக்க –நான்
இடுச்சி விட்டதால –நீ
இடுப்போடிஞ்சி போனகத
எலஞ்சியமே தெரியாதா ...??
ஆளுக்கொரு பிடிச்ச
அரிசியத்தான் எடுத்துவந்து
கரிசமர வெறகு கொல்லி
கணக்கத்தான் பொருக்கிவந்து
ஆத்துகோயில் பக்கத்துல
அடுப்பத்தான் பத்தவச்சு
கூட்டாஞ்சோறு ஆக்கிதின்னு
கொண்டாடி குளுந்தோமே
கொஞ்சங்கூட தெரியாதா...??
கரடோரம் மாடுமேய்க்க
கயிர்புடிச்சி நடக்கையில
ஓமாடு முன்ன போக
ஏமாடு பின்ன வர
கோமியத்த ஓமாடு
கொடங்கோடமா அடிச்சிவிட
பாவாட நனைஞ்சதால
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சமண்ணே தெரியாதா..??
ஒங்க ஊட்டு வாசலுல
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடிழுக்க
நான் கொஞ்சம் கலரடிக்க
ஒரு நாள் முழுக்க அத
ஒக்காந்து ரசிப்போமே
ஒனக்கு அது தெரியாதா..??
வாழதோப்பு ஓரத்துல
வரப்போரம் நடக்கையில
வாழக்கா நான் பறிக்க
வாஞ்சையோட நீ கடிக்க
வரிபல்லு கரையாள –நீ
அர கெழவியான கத –என்
அஞ்சுகமே தெரியாதா...??
வயசுக்கு நீ வந்த பின்ன
வெளையாட வாரத்துக்கு
ஓஊட்டுல தடவிழுகவிழ
ஏமனசுல இடிவிழுகவிழ
இடிஞ்ச மனசோட
இத்தன நாள் இருக்கேனே
இந்த கத ஒனக்குந்தான்
இப்பவரைக்கும் தெரியாதா..??
கே.செந்தில்குமார்
மருதாணி பறிச்சுவந்து
ஆட்டுரலில் அரச்சுவந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில ஒட்டிவச்சா
உச்சந்தல குளுரடிச்சு
கூச்சத்துல சிலுத்துக்குவ
சின்ன பொண்ணே தெரியாதா..??
உன் மூக்குகீழ தூசு அத
ஒனக்கு நான் தொடச்சிவிட
காலையில நீ வந்து
கண்ணாடி பாக்கையில
செவந்த மீச கொஞ்சம்
செரப்பத்தான் மொளச்சிருக்கும்
ஊரே குலுங்கி அத
ஒக்காந்து சிரிச்ச கத
ஒனக்குந்தான் தெரியாதா..???
பாண்டி வெளையாட்ட
பக்குவமா நீயாட
நொண்டி வெளையாட்ட –நீ
நொனசொல்லி நானாட
உப்புமூட்ட ஒன்ன தூக்கி
ஒருவீதி சுத்திவந்து
எறங்க சொல்லி நான் கேக்க
எறங்காம நீ இருக்க –நான்
இடுச்சி விட்டதால –நீ
இடுப்போடிஞ்சி போனகத
எலஞ்சியமே தெரியாதா ...??
ஆளுக்கொரு பிடிச்ச
அரிசியத்தான் எடுத்துவந்து
கரிசமர வெறகு கொல்லி
கணக்கத்தான் பொருக்கிவந்து
ஆத்துகோயில் பக்கத்துல
அடுப்பத்தான் பத்தவச்சு
கூட்டாஞ்சோறு ஆக்கிதின்னு
கொண்டாடி குளுந்தோமே
கொஞ்சங்கூட தெரியாதா...??
கரடோரம் மாடுமேய்க்க
கயிர்புடிச்சி நடக்கையில
ஓமாடு முன்ன போக
ஏமாடு பின்ன வர
கோமியத்த ஓமாடு
கொடங்கோடமா அடிச்சிவிட
பாவாட நனைஞ்சதால
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சமண்ணே தெரியாதா..??
ஒங்க ஊட்டு வாசலுல
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடிழுக்க
நான் கொஞ்சம் கலரடிக்க
ஒரு நாள் முழுக்க அத
ஒக்காந்து ரசிப்போமே
ஒனக்கு அது தெரியாதா..??
வாழதோப்பு ஓரத்துல
வரப்போரம் நடக்கையில
வாழக்கா நான் பறிக்க
வாஞ்சையோட நீ கடிக்க
வரிபல்லு கரையாள –நீ
அர கெழவியான கத –என்
அஞ்சுகமே தெரியாதா...??
வயசுக்கு நீ வந்த பின்ன
வெளையாட வாரத்துக்கு
ஓஊட்டுல தடவிழுகவிழ
ஏமனசுல இடிவிழுகவிழ
இடிஞ்ச மனசோட
இத்தன நாள் இருக்கேனே
இந்த கத ஒனக்குந்தான்
இப்பவரைக்கும் தெரியாதா..??
கே.செந்தில்குமார்
Last edited by T.N.Balasubramanian on Fri Jan 08, 2016 8:28 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
அருமையான உங்கள் இளமை நினைவை
அழகாக கொண்டுவந்துள்ளீர் .
ஓரிரு எழுத்துபிழை . திருத்துகிறேன் .
ஓரிரு வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை .
"நொனசொல்லி " " எலஞ்சியமே"........
ரமணியன்
அழகாக கொண்டுவந்துள்ளீர் .
ஓரிரு எழுத்துபிழை . திருத்துகிறேன் .
ஓரிரு வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை .
"நொனசொல்லி " " எலஞ்சியமே"........
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
நோனசொல்லி –குறைசொல்லுதல் , குற்றம் சாட்டுதல் , தப்பு கண்டு பிடித்தல்
எலஞ்சியமே- இளஞ்சியமே, அஞ்சுகமே, ரஞ்சிதமே
மருதாணி பறித்துவந்து
ஆட்டும் உரலில் அரைத்து வந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில் ஒட்டிவைத்தால்
உச்சந்தலை குளிரடித்து
கூச்சத்தில் சிலிர்த்து கொள்வாயே
சின்னபொன்னே தெரியாதா..??
உன் மூக்குகீழ் தூசு அதை
உனக்கு நான் துடைத்துவிட
காலையிலே நீ வந்து
கண்ணாடி பார்க்கையிலே
சிவந்த மீசை கொஞ்சம்
சிறப்பாக முளைத்திருக்கும்
ஊரே குலுங்கி அதை
உட்கார்ந்து சிரித்த கதை
உனக்குதான் தெரியாதா..???
பாண்டி விளையாட்டை
பக்குவமாய் நீ ஆட
நொண்டி விளையாட்டை –நீ
குறைசொல்லி நான் ஆட
உப்புமூட்டை உன்னை தூக்கி
ஒருவீதி சுற்றி வந்து
இறங்க சொல்லி நான் கேக்க
இறங்காம நீ இருக்க –நான்
இடித்து விட்டதால் –நீ
இடுப்போடிந்து போனக்கதை
இளஞ்சியமே தெரியாதா ...??
ஆளுக்கொரு பிடித்தல்
அரிசியைத்தான் எடுத்துவந்து
கரிசல் மர விறகுகளை
கணக்காக பொருக்கிவந்து
ஆற்று கோயில் பக்கத்தில்
அடுப்பு ஒன்று பற்ற வைத்து
கூட்டம் சோறு ஆக்கி தின்று
கொண்டாடி குளிர்ந்தோமே
கொஞ்சம் கூட தெரியாதா...??
கரடு ஓரம் மாடுமேய்க்க -மாட்டு
கயிர் பிடித்து நடக்கையிலே
உன் மாடு முன்னால் போக
என் மாடு பின்னால் வர
கோமியத்தை உன் மாடு
குடம் குடமாய் அடித்து விட
பாவாடை நனைந்தால்
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சை மண்ணே தெரியாதா..??
உங்க வீட்டு வாசலிலே
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடு இழுக்க
நான் கொஞ்சம் கலர் அடிக்க
ஒரு நாள் முழுக்க அதை
உட்க்கார்ந்து ரசிப்போமே
உனக்கு அது தெரியாதா..??
வாழை தோப்பு ஓரத்திலே
வரப்பு ஓரம் நடக்கையிலே
வாழக்காய் நான் பறிக்க
வாஞ்சையுடன் நீ கடிக்க –இரண்டு
வரி பல்லு கரையானதில் –நீ
அரை கிழவியான கதை –என்
அஞ்சுகமே தெரியாதா...??
வயதுக்கு நீ வந்த பின்னர்
விளையாட வருவதற்கு
உன் வீட்டில் தடை விழவே
என் மனதில் இடி விழவே
இடிந்த மனதுடனே
இத்தனை நாள் இருக்கிறேனே
இந்த கதை உனக்குந்தான்
இன்றுவரையில் தெரியாதா..??
எலஞ்சியமே- இளஞ்சியமே, அஞ்சுகமே, ரஞ்சிதமே
நாட்டுபுற வடிவம் அதை நாட்டுபுற பாடல் ராகத்தில் நான் சொல்லி பார்க்கும் பொழுது மனதிற்கு இனிமையாக இருக்கிறது அந்த சுவையை மற்றவர்களும் உணரட்டுமே என்றுதான் அவ்வாறு பதிவிட்டிருந்தேன். முடிந்த அளவு எளிமை படுத்தி மீண்டும் பதிவிட்டிறிக்கிறேன் ஐயா....
நாட்டுபுற பாடல் வடிவம் புரிந்துகொள்ள கடினமாக இருப்பது போல் தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா. அந்த நடையை நான் கைவிட்டுவிடுகிறேன்.
நாட்டுபுற பாடல் வடிவம் புரிந்துகொள்ள கடினமாக இருப்பது போல் தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா. அந்த நடையை நான் கைவிட்டுவிடுகிறேன்.
மருதாணி பறித்துவந்து
ஆட்டும் உரலில் அரைத்து வந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில் ஒட்டிவைத்தால்
உச்சந்தலை குளிரடித்து
கூச்சத்தில் சிலிர்த்து கொள்வாயே
சின்னபொன்னே தெரியாதா..??
உன் மூக்குகீழ் தூசு அதை
உனக்கு நான் துடைத்துவிட
காலையிலே நீ வந்து
கண்ணாடி பார்க்கையிலே
சிவந்த மீசை கொஞ்சம்
சிறப்பாக முளைத்திருக்கும்
ஊரே குலுங்கி அதை
உட்கார்ந்து சிரித்த கதை
உனக்குதான் தெரியாதா..???
பாண்டி விளையாட்டை
பக்குவமாய் நீ ஆட
நொண்டி விளையாட்டை –நீ
குறைசொல்லி நான் ஆட
உப்புமூட்டை உன்னை தூக்கி
ஒருவீதி சுற்றி வந்து
இறங்க சொல்லி நான் கேக்க
இறங்காம நீ இருக்க –நான்
இடித்து விட்டதால் –நீ
இடுப்போடிந்து போனக்கதை
இளஞ்சியமே தெரியாதா ...??
ஆளுக்கொரு பிடித்தல்
அரிசியைத்தான் எடுத்துவந்து
கரிசல் மர விறகுகளை
கணக்காக பொருக்கிவந்து
ஆற்று கோயில் பக்கத்தில்
அடுப்பு ஒன்று பற்ற வைத்து
கூட்டம் சோறு ஆக்கி தின்று
கொண்டாடி குளிர்ந்தோமே
கொஞ்சம் கூட தெரியாதா...??
கரடு ஓரம் மாடுமேய்க்க -மாட்டு
கயிர் பிடித்து நடக்கையிலே
உன் மாடு முன்னால் போக
என் மாடு பின்னால் வர
கோமியத்தை உன் மாடு
குடம் குடமாய் அடித்து விட
பாவாடை நனைந்தால்
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சை மண்ணே தெரியாதா..??
உங்க வீட்டு வாசலிலே
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடு இழுக்க
நான் கொஞ்சம் கலர் அடிக்க
ஒரு நாள் முழுக்க அதை
உட்க்கார்ந்து ரசிப்போமே
உனக்கு அது தெரியாதா..??
வாழை தோப்பு ஓரத்திலே
வரப்பு ஓரம் நடக்கையிலே
வாழக்காய் நான் பறிக்க
வாஞ்சையுடன் நீ கடிக்க –இரண்டு
வரி பல்லு கரையானதில் –நீ
அரை கிழவியான கதை –என்
அஞ்சுகமே தெரியாதா...??
வயதுக்கு நீ வந்த பின்னர்
விளையாட வருவதற்கு
உன் வீட்டில் தடை விழவே
என் மனதில் இடி விழவே
இடிந்த மனதுடனே
இத்தனை நாள் இருக்கிறேனே
இந்த கதை உனக்குந்தான்
இன்றுவரையில் தெரியாதா..??
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
அஹ்ஹா ... கவிதை (நாட்டுப்புற பாடல் ) அருமை .
இரண்டுமே பிரமாதம் . அசத்திடீங்க செந்தில் .
இரண்டுமே பிரமாதம் . அசத்திடீங்க செந்தில் .
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
மேற்கோள் செய்த பதிவு: 1186422shobana sahas wrote:அஹ்ஹா ... கவிதை (நாட்டுப்புற பாடல் ) அருமை .
இரண்டுமே பிரமாதம் . அசத்திடீங்க செந்தில் .
நன்றி சோபனா அவர்களே....
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
sendhilkumar wrote:நாட்டுபுற பாடல் வடிவம் புரிந்துகொள்ள கடினமாக இருப்பது போல் தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா. அந்த நடையை நான் கைவிட்டுவிடுகிறேன்.
நடையை மாற்றவேண்டாம் . அவசியமுமில்லை .
புதிதாக சில விஷயங்களை கற்றுக் கொள்வதில் எனக்கு விருப்பமே !
நன்றி ,தொடர்ந்து உங்கள் பணியை தொடருங்கள் .
சந்தேக விளக்கங்களுக்கு நன்றி , செந்தில் .
நேற்று உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
மேற்கோள் செய்த பதிவு: 1186545T.N.Balasubramanian wrote:sendhilkumar wrote:நாட்டுபுற பாடல் வடிவம் புரிந்துகொள்ள கடினமாக இருப்பது போல் தெரிந்தால் சொல்லுங்கள் ஐயா. அந்த நடையை நான் கைவிட்டுவிடுகிறேன்.
நடையை மாற்றவேண்டாம் . அவசியமுமில்லை .
புதிதாக சில விஷயங்களை கற்றுக் கொள்வதில் எனக்கு விருப்பமே !
நன்றி ,தொடர்ந்து உங்கள் பணியை தொடருங்கள் .
சந்தேக விளக்கங்களுக்கு நன்றி , செந்தில் .
நேற்று உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி .
ரமணியன்
நன்றி ஐயா ...
நொனசொல்லி என்பது நம்ம திருச்சி ஊர்பகுதியின் வட்டார வழக்குதான் ஐயா ..
உங்களுக்கு இப்பொழுது புரியவரும் என்று நினைக்கிறேன்.
மருமகள் தன் மாமியாரை பற்றி இப்படி சொல்கிறாள்.
என் மாமியார் எப்ப பார்த்தாலும் தோன தொணன்னு என்னபத்தி நொனசொல்லி கொண்டே இருப்பதே வேலையா போச்சு
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
நாட்டுப்புற கவிதை மிகவும் நன்று . தொடர்க !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: அறியாயோ.... அஞ்சுகமே .....
நாட்டுப்புற கவிதை ரொம்ப நல்லா இருக்கு செந்தில்...........தொடருங்கள்................
.
.
.நொனசொல்லி என்பது போலவே "நொட்டை சொல்லறாங்க" என்று கூட சொல்வார்கள் தானே?
.
.
.நொனசொல்லி என்பது போலவே "நொட்டை சொல்லறாங்க" என்று கூட சொல்வார்கள் தானே?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Page 1 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|