ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

+3
யினியவன்
ayyasamy ram
கார்த்திக் செயராம்
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்! - Page 2 Empty 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

Post by கார்த்திக் செயராம் Thu Jan 07, 2016 5:38 am

First topic message reminder :

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தையே கிடுகிடுக்க வைத்த போலி சான்றிதழ் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழக பள்ளிகளில் பத்தாம் வகுப்புக்கும், பன்னிரண்டாம் வகுப்புக்கும் பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் பலர்,  எட்டாவதைக் கூட தாண்டாதவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

முன்னர் சூட்டைக் கிளப்பிய அதே வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை மையம் கொண்டு சுழலத்துவங்கியிருக்கும் இந்த புயல், கல்வித்துறையை கதிகலங்கடித்துள்ளது இப்போது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தீவிர சான்றிதழ் பரிசோதனைகள் நடந்துவருகிறது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில், போலியான ஆசிரியர் பட்டச்சான்றிதழ் மற்றும் ஆசிரிய பட்டயச் சான்றிதழ்களை கொடுத்து ஏராளமானோர் பணியில் சேர்ந்துள்ளதாக, கடந்த 2003‍ -ம் ஆண்டு இறுதியில் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, சான்றுகள் சரிபார்ப்பு பணிகளை கல்வித்துறை கையிலெடுத்தது. கல்வித் துறையின் இந்த நடவடிக்கையை அடுத்து, பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு போகாமல், 'ஆப்சென்ட்' ஆகினர்.

இது குறித்த முக்கிய ஆதாரத்தின் அடிப்படையில், தர்மபுரி குற்றப்பிரிவு போலீசில் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டது. சோதனையில்,  பலர் பத்தாம் வகுப்பைக் கூட தாண்டாதவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. ஒட்டுமொத்த கல்வித்துறையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றது. இதனால் பல்வேறு இடங்களிலும் இவ்வாறு போலியான சான்றிதழ்கள் கொடுத்து பணிக்கு சேர்ந்தவர்கள், ஓட்டம் பிடிக்கத் தொடங்கினர்.

முன் ஜாமீன் வாங்குவதிலும், தெரிந்த ஆட்களைப் பிடித்து கைதிலிருந்த தப்பிப்பதிலும் பல போலி ஆசிரியர்கள் முனைந்தனர். இந்நிலையில் மீண்டும் இந்த பிரச்னை பூதாகரமாகியுள்ளது.



2016 ம் ஆண்டு துவக்கத்தில் மக்கள் புத்தாண்டு குதூகலத்தில் கிடக்க, போலி ஆசிரியர்கள் கலக்கத்தில் இருந்தனர். காரணம் புத்தாண்டு கொண்டாட்டப் பொழுதில் தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், சேலம், நாமக்கல் மற்றும் வேலூர் மாவட்ட காவல்துறையின் தனிப்படைகள்,  'போலி'களை வேட்டையாடிக்கொண்டிருந்தனர். ரெய்டில் அடுத்தடுத்து பலர் சிக்கினர். பாலக்கோடு முனியப்பன், போச்சம்பள்ளி செந்தில்குமார், கிருஷ்ணகிரி ராஜேந்திரன், முனியப்பன் என முதல் வேட்டையிலேயே நால்வர் சிக்கினர்.
 
கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி ஆசிரியர் அருள்சுந்தரம், குருபரப்பள்ளி ஆசிரியர் மாரியப்பன், அரசம்பட்டி சுதாகரன், வேலூர் குணசேகரன், மனோகரன் மற்றும் ஆத்தூரில் பணியாற்றும் ஆசிரியைகள் என சுமார் நூறு பேர் வரை, இந்த மாவட்டங்களில் போலிகளாக வகுப்பெடுத்து வந்ததை காவல்துறை கண்டுபிடித்தது. ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவானதோடு, முன் ஜாமீன் கோரி அவர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிகிறது.

இவர்களில் பாலக்கோடு முனியப்பனும், கிருஷ்ணகிரி ராஜேந்திரனும் ஆசிரியர் பணியில் இருந்ததோடு, 'பத்தாம் வகுப்பு பெயில்' ஆன பலநூறு பேர்களை போலி ஆசிரியர் சான்றிதழ்கள் மூலம் ஆசிரியர்களாக்கி உள்ளனர் என்பதால், போலீசார் இவர்களிடமிருந்து விசாரணையை துவக்க திட்டமிட்டுள்ளனர்.



சென்னையில் இதே விவகாரத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் சிக்கி சிறை சென்றவர்,  'போலி கல்விச் சான்று' தரகர் ஏகாம்பரம். அப்போது அவரைக் கைது செய்த சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார், போலி சான்று தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், பல ரகங்களில் இருந்த மை பாட்டில்கள், ரப்பர் ஸ்டாம்புகள், தயார் நிலையில் பெயரை மட்டும் போடாமல் வாடிக்கையாளருக்காக காத்திருந்த  ஆயிரக்கணக்கான சான்றுகள் என அனைத்தையும் 'டிஸ்பிளே" வைத்தனர்.

அத்தனையும் சென்னை புளியந்தோப்பு, பெரம்பூர், ஓட்டேரி, வியாசர்பாடி, அயனாவரம், புரசைவாக்கம், ராயபுரம், காசிமேடு, பழைய மற்றும் புது வண்ணாரப் பேட்டை, திருவொற்றியூர் தாங்கல் பகுதிகளில் தயாரிக்கப்பட்டவை என்பதோடு, அந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில்தான் போலி ஆசிரியர்கள் பத்து மற்றும் பன்னிரெண்டுவரை படித்தார்கள் என்பது போல் சான்றுகள் தயாரிக்கப்பட்டிருந்தன.

அதன் அடிப்படையில் 'போலிகள்' பி.எட், பட்டய ஆசிரியர் (டிடி.எட்) போன்ற படிப்புகளை முடித்ததாக சான்றுகள் தயாரிக்கப்பட்டிருந்தன. அந்த வழக்குகளில் காவல்துறை தீவிரம் காட்டி பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இப்போது போலி சான்றிதழ் விவகாரம் மீண்டும் தொடர்கதையாகி இருக்காது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். எப்படியோ இந்த கல்வியாண்டின் தொடக்கத்திற்குள் "போலி" களை களையெடுத்துவிடுவோம் என்கிறது காவல்துறை.



கல்வித்துறையின் மீது படிந்த இந்த களங்கம் உடனடியாக துடைக்கப்படவெண்டும் என ஆட்சி மேலிடத்திலிருந்து கடுமையான உத்தரவு காவல்துறையினருக்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால்,  வடமாவட்டங்களில் ஒரே நேரத்தில் ஐந்து எஸ்.பி.களின் தலைமையில் தேடுதல் பணி நடந்துவருகிறது. தலைநகரிலும் களையெடுப்பு பணி துரிதவேகத்தில் நடைபெற்றுவருகிறது.

கல்வித்துறையை களங்கப்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில்,  நம் முன் எழும் சில கேள்விகள்...

காவல்துறை மெத்தனமான நடவடிக்கையை முந்தைய சம்பவத்தில் கடைபிடித்தது ஏன்... அன்று சிக்கிய ஏகாம்பரம் என்ன ஆனார்? அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? ஏகாம்பரத்தின் தொடர்பில் இருந்தவர் எனறு கூறப்பட்டவரும், சந்தேகத்தில்பேரில் போலீசார் விசாரிக்கப் போனபோது விஷம் குடித்தவருமான சென்னை அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையின் அன்றைய ஊழியர் இப்போது என்ன செய்கிறார்?



காவல்துறையிடம் ஏகாம்பரமும், ஏகாம்பரத்தின் கூட்டாளியான மனோகரனும் அளித்த வாக்குமூலத்தில்,  சென்னை மாநகராட்சியில் அன்று பணியில் இருந்த கல்வி மற்றும் சான்றளிப்புத் துறையின் பொறுப்பாளர்கள் மூவரை கை காட்டினார்களே,  அந்த மூவர் (மிக சமீபத்தில் அவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்) இப்போது என்ன செய்கிறார்கள்? அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் நடக்காதது ஏன்?

கட்டணக் கொள்ளை, கல்வித் தரமின்மை என்று பல விஷயங்கள் தமிழ்நாட்டை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்க,  இதில் 'போலி' களும் சேர்ந்து கொண்டால் தமிழகத்தின் கல்விச்சூழல் எதிர்காலத்தில் என்னவாகும் என்ற கவலை மனதை சூழ்கிறது.

வரும் ஆசிரியர் தினத்திற்குள் அத்தனை போலி ஆசிரியர்களையும் களையெடுத்து,  இந்த போலிகளை உருவாக்கும் மோசடி நெட்வொர்க் கும்பலையும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இல்லையேல் தமிழகத்தில் கொண்டாடப்படுவது 'போலி ஆசிரியர்' தினமாகத்தான் இருக்கும்!

கல்வித்துறை இனிமேலாவது பாடம் கற்கவேண்டும்!

நன்றி விகடன் செய்தி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down


8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்! - Page 2 Empty Re: 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

Post by ராஜா Thu Jan 07, 2016 3:31 pm

கார்த்திக் செயராம் wrote:8ம் வகுப்புப் பெயலான கருணாநிதி தமிழ்நாட்டையே ஆள முடிந்திருக்குது...
இன்னும் ஆள நிற்கிறார்.. ஒருவர் அங்கு ஆசிரியராக இருந்தால் தான் தப்பா..?!
மேற்கோள் செய்த பதிவு: 1185975

அதானே .... நல்ல கேளுங்க கார்த்திக்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்! - Page 2 Empty Re: 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

Post by T.N.Balasubramanian Thu Jan 07, 2016 4:29 pm

ராஜா wrote:
கார்த்திக் செயராம் wrote:8ம் வகுப்புப் பெயலான கருணாநிதி தமிழ்நாட்டையே ஆள முடிந்திருக்குது...
இன்னும் ஆள நிற்கிறார்.. ஒருவர் அங்கு ஆசிரியராக இருந்தால் தான் தப்பா..?!
மேற்கோள் செய்த பதிவு: 1185975

அதானே .... நல்ல கேளுங்க கார்த்திக்
மேற்கோள் செய்த பதிவு: 1185985

அரசியல் ஆளுமைக்கு படிப்பு ஓரளவு முக்கியம் என்றாலும் ,அவசியமில்லை .
அதிகம் படிக்காத காமராஜர் செம்மையாக ஆளுமை புரியவில்லையா ?
கமிஷன் முறையை 20% என்று ஆரம்பித்தது கருணாநிதி என்றாலும் ,
ஆளுமை முற்றிலும் குறை சொல்ல முடியாது . அந்த காலத்தில் ஆரம்பித்த 20 இன்று கிடுகிடுவென ஏறியுள்ளது .
விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிவதில் மன்னன் என்று சர்க்காரியா கமிஷனால்
போற்ற  (தூற்ற)ப்பட்டவர் . இப்போதும் பாருங்கள் 2G மூலம்  200 கோடி கலைஞர் TV இக்கு
வருவதற்கு எவ்வளவு கம்பனிகள் இவருக்கு கம்பனி கொடுத்து இருக்கு .

ராபரி தேவி என்னப்படித்திருக்கார் ? பீகாரின் முதலமைச்சராக இருந்தாரே !
என்ன இருந்தாலும் கலைஞர் மன்னன் தான் ..அவர் சாமர்த்தியம் அவருடைய எந்த குழந்தைக்கும் கிடையாது .
ஊழலை எப்பிடி எப்பிடி எல்லாம் செய்யலாம் என்று சொல்லி கொடுப்பவர்கள் , படித்த அதிகாரிகள் ,கணக்காளர்கள் , எப்பிடி தப்பிக்கலாம் என்று கூறுபவர்கள் சட்ட வல்லுனர்கள்


ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்! - Page 2 Empty Re: 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

Post by krishnaamma Thu Jan 07, 2016 5:03 pm

கார்த்திக் செயராம் wrote:8ம் வகுப்புப் பெயலான கருணாநிதி தமிழ்நாட்டையே ஆள முடிந்திருக்குது...
இன்னும் ஆள நிற்கிறார்.. ஒருவர் அங்கு ஆசிரியராக இருந்தால் தான் தப்பா..?!
ஹுஹும்.... கூடாது கூடாது கூடாது தப்பு கார்த்தி, எல்லோரும் ஒரு கருணாநிதியாகவோ ஒரு காமராஜராகவோ   ஆகமுடியாது இது ஒரு புறம் என்றால், அவர்கள் யாருக்கும் பாடம் கற்பிக்கும் பொறுப்பான பணி இல் இல்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்...........செந்தில் குமார் கூட சொல்லலையா அவரின் ஆசிரியர் எந்த லட்சணம் என்று.......இவர்களில் ஒருத்தர் தான் அவருக்கு கற்பித்தரோ  என்னவோ............. 

நம் நாட்டை பரன் ட்ரைன் ஆக்க வெளி இல் இருந்து ஆட்கள் வரவேண்டாம் , நாமே சொந்த துட்டில் சூனியம் வைத்துக்கொள்வோம்..............சோகம்  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்! - Page 2 Empty Re: 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

Post by krishnaamma Thu Jan 07, 2016 5:04 pm

ராஜா wrote:
கார்த்திக் செயராம் wrote:8ம் வகுப்புப் பெயலான கருணாநிதி தமிழ்நாட்டையே ஆள முடிந்திருக்குது...
இன்னும் ஆள நிற்கிறார்.. ஒருவர் அங்கு ஆசிரியராக இருந்தால் தான் தப்பா..?!
மேற்கோள் செய்த பதிவு: 1185975

அதானே .... நல்ல கேளுங்க கார்த்திக்
மேற்கோள் செய்த பதிவு: 1185985


என்ன ராஜா இது நீங்களும் இப்படி சொல்லரேள் ? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்! - Page 2 Empty Re: 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

Post by krishnaamma Thu Jan 07, 2016 5:13 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
கார்த்திக் செயராம் wrote:8ம் வகுப்புப் பெயலான கருணாநிதி தமிழ்நாட்டையே ஆள முடிந்திருக்குது...
இன்னும் ஆள நிற்கிறார்.. ஒருவர் அங்கு ஆசிரியராக இருந்தால் தான் தப்பா..?!
மேற்கோள் செய்த பதிவு: 1185975

அதானே .... நல்ல கேளுங்க கார்த்திக்
மேற்கோள் செய்த பதிவு: 1185985

அரசியல் ஆளுமைக்கு படிப்பு ஓரளவு முக்கியம் என்றாலும் ,அவசியமில்லை .
அதிகம் படிக்காத காமராஜர் செம்மையாக ஆளுமை புரியவில்லையா ?
கமிஷன் முறையை 20% என்று ஆரம்பித்தது  கருணாநிதி என்றாலும் ,
ஆளுமை முற்றிலும் குறை சொல்ல முடியாது . அந்த காலத்தில் ஆரம்பித்த 20 இன்று கிடுகிடுவென ஏறியுள்ளது .
விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிவதில் மன்னன் என்று சர்க்காரியா கமிஷனால்
போற்ற  (தூற்ற)ப்பட்டவர் . இப்போதும் பாருங்கள் 2G மூலம்  200 கோடி கலைஞர் TV இக்கு
வருவதற்கு எவ்வளவு கம்பனிகள் இவருக்கு கம்பனி கொடுத்து இருக்கு .

ராபரி தேவி என்னப்படித்திருக்கார் ? பீகாரின் முதலமைச்சராக இருந்தாரே !
என்ன இருந்தாலும் கலைஞர் மன்னன் தான் ..அவர் சாமர்த்தியம் அவருடைய எந்த குழந்தைக்கும் கிடையாது .
ஊழலை எப்பிடி எப்பிடி எல்லாம் செய்யலாம் என்று சொல்லி கொடுப்பவர்கள் , படித்த அதிகாரிகள் ,கணக்காளர்கள் , எப்பிடி தப்பிக்கலாம் என்று கூறுபவர்கள் சட்ட வல்லுனர்கள்


ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1185989


அரசியல் ஆளுமைக்கு படிப்பு  வேண்டாம் என்று ஆகிவிட்டது ஐயா, அதற்காக கற்பிக்கும் ஆசிரியருக்கும் தேவை இல்லை என்றால்....................பேசாமல் யாருமே படிக்க வேண்டாம் என்று சொல்லிடலாமே..............எதுக்கு இந்த பொய்  பித்தலாட்டம் எல்லாம்? சோகம் .......


Last edited by krishnaamma on Thu Jan 07, 2016 6:22 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்! - Page 2 Empty Re: 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

Post by ராஜா Thu Jan 07, 2016 5:20 pm

T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
கார்த்திக் செயராம் wrote:8ம் வகுப்புப் பெயலான கருணாநிதி தமிழ்நாட்டையே ஆள முடிந்திருக்குது...
இன்னும் ஆள நிற்கிறார்.. ஒருவர் அங்கு ஆசிரியராக இருந்தால் தான் தப்பா..?!
மேற்கோள் செய்த பதிவு: 1185975

அதானே .... நல்ல கேளுங்க கார்த்திக்
மேற்கோள் செய்த பதிவு: 1185985

அரசியல் ஆளுமைக்கு படிப்பு ஓரளவு முக்கியம் என்றாலும் ,அவசியமில்லை .
அதிகம் படிக்காத காமராஜர் செம்மையாக ஆளுமை புரியவில்லையா ?
கமிஷன் முறையை 20% என்று ஆரம்பித்தது கருணாநிதி என்றாலும் ,
ஆளுமை முற்றிலும் குறை சொல்ல முடியாது . அந்த காலத்தில் ஆரம்பித்த 20 இன்று கிடுகிடுவென ஏறியுள்ளது .
விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிவதில் மன்னன் என்று சர்க்காரியா கமிஷனால்
போற்ற  (தூற்ற)ப்பட்டவர் . இப்போதும் பாருங்கள் 2G மூலம்  200 கோடி கலைஞர் TV இக்கு
வருவதற்கு எவ்வளவு கம்பனிகள் இவருக்கு கம்பனி கொடுத்து இருக்கு .

ராபரி தேவி என்னப்படித்திருக்கார் ? பீகாரின் முதலமைச்சராக இருந்தாரே !
என்ன இருந்தாலும் கலைஞர் மன்னன் தான் ..அவர் சாமர்த்தியம் அவருடைய எந்த குழந்தைக்கும் கிடையாது .
ஊழலை எப்பிடி எப்பிடி எல்லாம் செய்யலாம் என்று சொல்லி கொடுப்பவர்கள் , படித்த அதிகாரிகள் ,கணக்காளர்கள் , எப்பிடி தப்பிக்கலாம் என்று கூறுபவர்கள் சட்ட வல்லுனர்கள்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1185989தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி , என்னுடைய பின்னூட்டம் நகைச்சுவைக்காக மட்டுமே பதியப்பட்டது.


krishnaamma wrote:
ராஜா wrote:
கார்த்திக் செயராம் wrote:8ம் வகுப்புப் பெயலான கருணாநிதி தமிழ்நாட்டையே ஆள முடிந்திருக்குது...
இன்னும் ஆள நிற்கிறார்.. ஒருவர் அங்கு ஆசிரியராக இருந்தால் தான் தப்பா..?!
மேற்கோள் செய்த பதிவு: 1185975
அதானே .... நல்ல கேளுங்க கார்த்திக்
மேற்கோள் செய்த பதிவு: 1185985
என்ன ராஜா இது நீங்களும் இப்படி சொல்லரேள் ? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1185999உங்களுக்கும் அதே பதில் தான் புன்னகை


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்! - Page 2 Empty Re: 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

Post by krishnaamma Thu Jan 07, 2016 5:27 pm

ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185989தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி ,  என்னுடைய பின்னூட்டம் நகைச்சுவைக்காக மட்டுமே பதியப்பட்டது.


மேற்கோள் செய்த பதிவு: 1185999உங்களுக்கும் அதே பதில் தான் புன்னகை


மேற்கோள் செய்த பதிவு: 1186007

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்! - Page 2 1571444738 ........... நன்றி ................ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .................நன்றி ராஜா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்! - Page 2 Empty Re: 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

Post by கார்த்திக் செயராம் Thu Jan 07, 2016 5:41 pm

இனி இவர்களைத் தேடிப் பிடித்து வழக்கு என்றும் வாய்தா என்றும் இழுபறிப் படுகிறதை விட , எனக்குத் தெரிந்து ஓரே வழி
இருக்கு...!

இந்த ஆ சிரியர்களை  5ம் வகுப்பாசிரியர்களாக  மீள்தகுதி அளித்து  ஆசிரியர் பற்றாக்குறையாக இருக்கும் கிராமப் பாடசாலைகளுக்கு கட்டாயப் பணி கொடுத்து அனுப்பி விடலாம்...! 


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்! - Page 2 Empty Re: 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

Post by T.N.Balasubramanian Thu Jan 07, 2016 8:25 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:
ராஜா wrote:
கார்த்திக் செயராம் wrote:8ம் வகுப்புப் பெயலான கருணாநிதி தமிழ்நாட்டையே ஆள முடிந்திருக்குது...
இன்னும் ஆள நிற்கிறார்.. ஒருவர் அங்கு ஆசிரியராக இருந்தால் தான் தப்பா..?!
மேற்கோள் செய்த பதிவு: 1185975

அதானே .... நல்ல கேளுங்க கார்த்திக்
மேற்கோள் செய்த பதிவு: 1185985

அரசியல் ஆளுமைக்கு படிப்பு ஓரளவு முக்கியம் என்றாலும் ,அவசியமில்லை .
அதிகம் படிக்காத காமராஜர் செம்மையாக ஆளுமை புரியவில்லையா ?
கமிஷன் முறையை 20% என்று ஆரம்பித்தது  கருணாநிதி என்றாலும் ,
ஆளுமை முற்றிலும் குறை சொல்ல முடியாது . அந்த காலத்தில் ஆரம்பித்த 20 இன்று கிடுகிடுவென ஏறியுள்ளது .
விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிவதில் மன்னன் என்று சர்க்காரியா கமிஷனால்
போற்ற  (தூற்ற)ப்பட்டவர் . இப்போதும் பாருங்கள் 2G மூலம்  200 கோடி கலைஞர் TV இக்கு
வருவதற்கு எவ்வளவு கம்பனிகள் இவருக்கு கம்பனி கொடுத்து இருக்கு .

ராபரி தேவி என்னப்படித்திருக்கார் ? பீகாரின் முதலமைச்சராக இருந்தாரே !
என்ன இருந்தாலும் கலைஞர் மன்னன் தான் ..அவர் சாமர்த்தியம் அவருடைய எந்த குழந்தைக்கும் கிடையாது .
ஊழலை எப்பிடி எப்பிடி எல்லாம் செய்யலாம் என்று சொல்லி கொடுப்பவர்கள் , படித்த அதிகாரிகள் ,கணக்காளர்கள் , எப்பிடி தப்பிக்கலாம் என்று கூறுபவர்கள் சட்ட வல்லுனர்கள்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1185989தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி ,  என்னுடைய பின்னூட்டம் நகைச்சுவைக்காக மட்டுமே பதியப்பட்டது.quote

அட ச்சே இப்பிடி ஆயிடுத்தே !
இதைத்தான் anti கிளைமாக்ஸ்  என்பார்களோ !

ரமணியன்  அழுகை  அழுகை


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்! - Page 2 Empty Re: 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

Post by ராஜா Thu Jan 07, 2016 8:37 pm

T.N.Balasubramanian wrote:அட ச்சே இப்பிடி ஆயிடுத்தே !
இதைத்தான் anti கிளைமாக்ஸ்  என்பார்களோ !

ரமணியன்  அழுகை  அழுகை
[/quote] இந்த நேரத்துல இந்த வார்த்தையை பயன்படுத்தாதீங்க

http://www.eegarai.net/t125969p30-topic#1186056 இந்த பதிவுல ஒரே களேபரமா இருக்குது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்! - Page 2 Empty Re: 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவிப்பு
» "8-ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ முடித்தால் 10-ஆம் வகுப்பு முடித்ததற்குச் சமம்'
» 10ம் வகுப்பு தேர்வில் 4 பேருக்கு முதல் ராங்க்
» 10ம் வகுப்பு தேர்வு முடிவு : 5 மாணவிகள் முதலிடம்
» நிர்வாணமாக்கி அடித்து உதைத்ததால் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum