ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

2 posters

Go down

வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!!  நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Wed Jan 06, 2016 7:22 pm

வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!!

நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு sabavadivelu@gmail.com


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


மணிமேகலைப் பிரசுரம், 7 (ப.எண். 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017. போன் : 044 24342926, பக்கம் : 100, விலை : ரூ. 60

*****

கவிதை உறவு இலக்கியத் திங்களிதழின் ஆசிரியர் கலைமாமனி ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை, அழகுரை. நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது.


நூலின் தலைப்பே மனிதநேயம் மலர்விப்பதாக உள்ளது. அந்தத் தலைப்பிலான கவிதை மிக நன்று.


வீழ்க சாதி சமயம்!

வெல்க மனிதநேயம்!
சாதிமதம் துறந்த கலப்பு மணங்களே
சகலருக்கும் பொதுவான நாட்டுவளங்களே
சமத்துவம் சமுதாயம் சமைத்திடுவோம்
சாதி துறப்போம்! மதம் மறப்போம்!


ஆம், இன்றைக்கு சாதியும், மதமும் தான் சமுதாயத்தின் அமைதியை அழித்து வருகின்றன. சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் விலைமதிப்பற்ற மனித உயிர்கள் பலியாகி வருகின்றன. தந்தை பெரியார் சொன்ன பகுத்தறிவைப் பயன்படுத்தினால் மோதல்கள் முடிவுக்கு வரும்.


அணிந்துரையில் ஏர்வாடியார் குறிப்பிட்டது போல, அழகெனப்படுவது யாதெனின் கவிதையும் அழகு தான். அழகு எவை என வரிசையாகச் சொல்லி விட்டு எது அழகு என்று எழுதி முடித்தது அழகு தான்.


அழகெனப்படுவது யாதெனின்!

அடர்ந்த காடென்பர் சிலர்

ஆடும் மயிலென்பர் பலர்
பனியின் வெளிரென்பர் சிலர்

பட்டுப் புல்லென்பர் பலர்
தாய்மையின் தூய்மையாய்த்

தழைய தழைய வருமழகே!
அழகு அழகு தாய்மையே அழகென்பேன்!


இன்றைக்கு பலருக்கும் நீரிழிவு நோய் வந்துள்ளது. இதன் காரணமாக பலரும் மனவருத்தத்தில் கவலையில் உள்ளனர். அவர்களுக்கு கவிதையிலேயே நோய் நீங்கிட தீர்வு சொல்லிய விதம் நன்று.


இடும்பைகூர் நிரிழிவே,

உன்னோடு வாழ்தல் அரிது
நாளும் உடற்பயிற்சி செய்திடுவீர்

உடலை வளைத்து உழைத்திடுவீர்!
உண்பதைச் சீராய் செய்திடுவீர்

கண்டதை யெல்லாம் உண்ணாதீர்!
கவலை மனத்தில் தேக்காதீர்

உணர்வை ஆளக் கற்றிடுவீர்!
உடல் நலம் என்றும் பேணிடுவீர்!


மருத்துவர் போல சர்க்கரை நோய் நீங்குவதற்கான வழிமுறைகளை கவிதையில் உணர்த்தியது சிறப்பு. வாசகர்களுக்கு பயன்படும் வித்தியாசமான சிந்தனை. நூல் ஆசிரியர் கவிஞர் சபா வடிவேலு அவர்களுக்கு பாராட்டுக்கள். அவரது பெயரிலேயே சபா இருப்பதால் சபாவில் பாடினால் கைத்தட்டல் விழும். கவியரங்கக் கவிதைகள் போலவே நூலில் எழுதி உள்ளார். கவிஞர் வடிவேலு, வடிவான கவிதைகளை வடிப்பவர் எனலாம்.


வள்ளுவர் சொன்ன வாய்மையை காந்தியடிகள் வாழ்ந்த வாய்மையை உணர்த்தும் விதமாக மெய்யின் மேன்மையை சிறப்பிக்கும் விதமாக பொய்யால் வரும் தீமையை பட்டியலிட்டுள்ளார். ஒருமுறை நாம் பொய் சொல்லி விட்டால், அடுத்து நாம் பேசும் மெய்யும் சந்தேகத்திற்கு உட்படுத்தப்படும். எனவே மெய் பேசி வாழ்வதே இன்பம்.


பொய்யாதீர் மானிடரே!

பொய்த்து விடும் மன்னுயிரே!

காதலன் பொய் நினைக்க, காதல் பொய்த்து விடும்!
மணாளன் பொய் நினைக்க, மனையும் பொய்த்திடும்
கற்றவன் பொய் பரப்ப கல்வி பொய்த்து விடும்
மாணவன் பொய் கற்க மனமே பொய்த்து விடும்
மருத்துவன் பொய் செய மருத்துவம் பொய்த்து விடும்
ஆதலால் மானிடரே பொய்யாதீர்!
பொய் போற்றின், பொய்த்து விடும் மன்னுயிரே!


இக்கவிதைக்குக் காரணமாக விளங்கிய திருக்குறளையும் கவிதையின் முடிவில் எழுதியது சிறப்பு.


பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமைநன்று. குறள் 297



நலிவுடையுதே நான்குகால் மண்டபம் என்ற கவிதையுல் இன்றைய அரசியல் அவலத்தை எழுதி கடைசியாக முடித்த முடிப்பு நன்று. பொருத்தமாக பாராளுமன்றத்தின் ஓவியமும், தராசின் ஓவியமும் பதிந்தது சிறப்பு.


நல்லவரும் வல்லவரும் – நம்மில்
செயலிழந்தே ஒதுங்கிடாது – சேர்ந்தே
களை எடுக்க முனைவோமை
கடன் முடித்து வெல்வோமே!


இன்று நல்லவர்களுக்கு அரசியலில் இடமில்லை என்றாகி விட்டது. ஆனால் நூலாசிரியர் கவிஞர் சபா வடிவேலு அவர்கள், நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற தனது ஆசையை கவிதையில் நன்கு வடித்துள்ளார்.


உலக பூமி தினம் ஏப்ரல் 22. அதற்கும் ஒரு கவிதை எழுதி உள்ளார். கவிகங்களுக்கு கவிதையின் தலைப்பு என்பது லட்டுப் போல, தலைப்பு கிடைத்து விட்டால், உடன் சிந்தனையை ஓடவிட்டு அழகிய கவிதை வடித்திடுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல கவிதைகள் நூலில் உள்ளன. பாராட்டுகள்.


நூலாசிரியர் கவிஞர் சபா வடிவேலு அவர்கள், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி இயக்குநராகவும், முதுநிலை வணிகவியல் பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். காமராசர் போல உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் இன்று இல்லையே என்ற ஆதங்கத்தை இன்றைய அரசியல் அவலத்தை பல்வேறு கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.


மழை பற்றிய கவிதையும் நன்று. இக்கவிதை மழை இல்லாத காலத்தில் பாடிக் கொள்ளலாம். மழையால் சென்னையில் மரணஓலம் கேட்டது/ இப்படி பல நினைவுகளை மலர்வித்தது மழை கவிதை!


முயற்சி திருவினையாக்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழியை வழிமொழிந்து வடித்த கவிதை நன்று. மூச்சு இருக்கும் வரை முயற்சி இருக்க வேண்டும். இன்றைய இளையதலைமுறை கவனத்தில் கொள்ள வேண்டும்.


முயற்சி!

முயற்சி திருவினை ஆக்கும்
பொய்யாமோ வள்ளுவர் வாக்கு?
முயற்சி போயின், முயற்சி போயின்
தளர்ச்சி, தளர்ச்சி, தளர்ச்சியே!


நாளிதழ்களில் படிக்கும் செய்திகள் படைப்பாளிகள் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அவை படைப்புகளாக வெளிவரும். குருதிக்காசு என்ற கவிதை அப்படி எழுதப்பட்டது.


நூலின் இறுதியில் புதிய உலக நீதி என்ற தலைப்பில் வைரவரிகளை வழங்கி உள்ளார்.


மனைதனிலே தமிழ் பேச மறக்க வேண்டா
தாய்மொழியில் பெயர் வைக்கத் தயங்க வேண்டா


இந்த இரண்டு வரிகளை உலகத் தமிழர்கள் வாழ்வில் கடைபிடித்தால் உலகம் உள்ளவரை தமிழ்மொழி வாழும். நூலாசிரியர் கவிஞர் சபா வடிவேலு அவர்களுக்கு பாராட்டுகள்.

--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !


eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!!  நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty Re: வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by ayyasamy ram Wed Jan 06, 2016 7:52 pm



மனைதனிலே தமிழ் பேச மறக்க வேண்டா
தாய்மொழியில் பெயர் வைக்கத் தயங்க வேண்டா
-
வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!!  நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!!  நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty Re: வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Thu Jan 07, 2016 6:51 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!!  நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty Re: வீழ்க சாதி சமயம்! வெல்க மனிதநேயம்!! நூல் ஆசிரியர் : கவிஞர் சபா வடிவேலு நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum