ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

+6
krishnaamma
ayyasamy ram
கார்த்திக் செயராம்
சசி
T.N.Balasubramanian
K.Senthil kumar
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 3 Empty செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

Post by K.Senthil kumar Sat Jan 02, 2016 7:17 pm

First topic message reminder :

ஏக்கங்கள் இப்படியும் இருக்கலாம்...???

இன்னும் ஒருமுறை
இவ்வுலகில் அவதரிக்க வேண்டும்
புத்தரே
என் நிழலில் அமர்ந்து
ஞானம் பெற
ஞாலத்தில் எவருளர்...??
போதிமரம்


இருவரிகளால் மனிதர்களின்
வாழ்க்கை நெறியை
வகுத்து கொடுத்த வள்ளுவரே
உன் கரவிரல்களுக்குள்
என்று அகப்படுவேன்..??
எழுத்தாணி

அனுதினமும் ஆயிரம்பேர்
வந்துபோனாலும்
அந்த கரிகால் பெருவளத்தானின்
அடிச்சுவடு
இன்னொரு முறை
இங்கு படுமா...??
கல்லணை

பெருவுடையாரை கட்டிஎழுப்பிய
பெரிய மனதுடையார்
ராஜராஜனே
என்னை ரா
ஜ்ஜியம் பண்ண 
என்றாவது வருவீரா..???
தஞ்சை


பறவையின் போதனைகள்
கிளைக்கு கிளை
மரத்துக்கு மரம்
தாவும் பறவை
தனியேதான் செல்லும்

நீண்ட பயணம்
நெடிய தொலைவு
போகும் பறவை
கூடியேதான் செல்லும்

அன்பு
கழிப்பதற்கு நீ கணக்கல்ல
வளர்ப்பதற்கு நீ மரம்

அகிலம் முழுமைக்கும் ஆலயம்
அன்பர்கள்  உணர்கின்ற ஓவியம்
அனைவரையும் ஆள்கின்ற ராஜ்ஜியம்
அழிக்க இயலாத காவியம்

மௌனம்
உதடுகள் உமிழாத மொழி
உணர்வுகளின் உச்சம்
உறுதியான புரட்சி
உண்மையின் உபதேசம்

நிழல்
இந்த காலம் இறந்த காலமாகும் பொழுது
நிஜங்கள் எல்லாம் நிழல்களாய்
நினைவில்..
நான் எங்கு சென்றாலும்
என் ஏக்கங்கள், ஆசைகள்,
இலக்குகள், இலட்சியங்கள்
நடத்தைகள், வாக்குகள்
அனைத்தும் என் பின்னே
நிழல்களாய்...

ஆணவம்
அழிவின் ஆதாரம்-அதுவே
வாழ்வின் சேதாரம்
ஆணவம் ஆதிக்கம் செலுத்தினால்
அழியுமே மானமும் மகிழ்ச்சியும்

புன்னகை
மறைவற்ற மனம்
நிறைவுற்ற குணம்-இவற்றில்
மலரோ மென்மையாக மலரும்
பலரை இனிமையாக கவரும்

கனவு
நினைவின் மறுவுருவம் கனவு
நித்திரையில் வரும் –அது
பகலிலும் நிகழும்
விழிப்போடு இருக்கையில்
வரும் கனவு  
விளைவுகள் பலவும்
தரும் கனவு

உயர்வு தாழ்வு அடங்கியிருக்கும்
உன்னத கனவே உயர்வை தரும்-அதுவே
உறுதியையும் தரும்



அனுபவவித்து  உணரலாம்
காலில் காலணிகள் இருந்தால்
கழற்றிவிடுங்கள் தோழர்களே
காலைபொழுதின்
மணல்வேளியும் புல்வெளியும்
கம்பளம் விரிக்க
கொஞ்சம் நடந்ததுதான் பாருங்கள்
கொதிக்கும் குருதிகூட
குளிர்ந்துவிடும்

இதற்கு இப்படி முரண்படலாம்...!!

எதற்கு...?? இரவில் உடைத்துபோட்ட
மதுபாட்டிலின் கண்ணாடி உடைசல்கள்
கால்களை பதம்பார்க்கவா..........??

முயற்சி
மூலையில் முடங்கி கிடந்த ஒருவன்
மன ஊனத்தை உடைத்தெறிந்து
வெற்றிபெற எடுத்துவைக்கும்
முதல் அடி –அதுவே
அவன் வெற்றிக்கு முதல் படி

வறுமை
வாடிய வயிற்ருக்குள் எரியும் தீ
வளர்ச்சியில்லாத தாவரம்
வறண்டு கிடக்கும் நதி

மரம்
பூத்துக்குலுங்கும்போது உன் புன்னகை
இலைகளை அசைக்கும்போது உன்சிரிப்பு
பசுமையாய் இருக்கும்போது உன்வாழ்வு
இதனால் உன்மீது காதல் ஏற்பட்டு
என்மனம் உன்னை கொள்ளை கொள்கிறது
ஆனால் ஊர்க்காரர்கள்
உன்னை கொள்ளை கொள்ளும்போது
என் மனம் கொலை செய்யப்படுகிறது

சுனாமி
கடல் தாயே...
பெரியவர்களை அள்ளினால்
எளிதில் ஜீரணிக்காது என்று
நினைத்தா மிக அதிகமான
பிஞ்சுகளை அள்ளிக்கொண்டாய்..??

மனிதர்களின் வாழ்வை
வளமாக்கி கொண்டிருந்த
கடல்த தாயே  
உன்னை வள்ளல்
என்று நினைத்தேன்
அந்த எமதர்மனுக்கு
எண்ணற்ற மனிதர்களை
எச்சில் செய்து அள்ளித்தந்தாயே
நிச்சயம் நீ வள்ளல் தான்......

         கே.செந்தில் குமார்




Last edited by K.Senthil kumar on Sat Jan 02, 2016 7:39 pm; edited 1 time in total


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down


செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 3 Empty Re: செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

Post by K.Senthil kumar Tue Jan 05, 2016 4:39 pm

ஜாஹீதாபானு wrote:அனைத்தும் அருமை செந்தில்...


மேற்கோள் செய்த பதிவு: 1185465

நன்றி அக்கா ..


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 3 Empty Re: செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

Post by krishnaamma Tue Jan 05, 2016 6:05 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:
அடாடா...........கவலைபடாதீங்கோ, எனக்கு கண்ணில் பட்டவரை திருத்துகிறேன்...........நீங்களும் பார்த்து பார்த்து சரி செய்து கொண்டு விடலாம்.....ஓகே வா? புன்னகை .................. ஆறுதல் ஆறுதல் ஆறுதல் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கிரிஷ்ணாப்பா இன்னும் திருந்தலையா? புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185459


உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ இங்கே.......இப்போ ஒருத்தரை திருத்தணும் என்று பார்க்கறேன்...............சரியா கண்ணில் பட மாட்டேன் என்கிறார்........... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்..................நிகழ்நிலை என்பது கூட தெரியாமல் வந்து போகிறார்................... குதூகலம் குதூகலம் குதூகலம்................என்றாவது ஒருநாள் பிடி பட மாட்டாரா என்று ................ ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்...................ஒகே வா?............... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 3 Empty Re: செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

Post by M.Jagadeesan Tue Jan 05, 2016 6:59 pm

K.Senthil kumar wrote:ஏதோ ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுகிறான் என்று நினைத்து நிர்வாகத்தினர் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் , நான் இவ்வாறு இருக்க என் பள்ளியை சாடுவதை தவிர வேறு வழியில்லை என் பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி திரி துவங்கியாக வேண்டும்
எல்லோரும் கல்விக்கூடத்தை கோவிலாகவும் போதித்த ஆசான்களை தெய்வமாகவும் பார்க்கின்ற நிலையில்
நான் இவ்வாறு நினைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1185421

கல்லொன்று மோதி உதிரம் பெருகிட்டால்
கல்லின் சதியென்று சொல்வாரோ -தொல்லுலகில்
ஈசனுக்கு ஒப்பாய் விளங்குகின்ற ஆசானை
ஏசிடுதல் நன்றாமோ சொல் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 3 Empty Re: செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

Post by K.Senthil kumar Tue Jan 05, 2016 8:46 pm

M.Jagadeesan wrote:
K.Senthil kumar wrote:ஏதோ ஒன்றாம் வகுப்பு மாணவன் எழுதுகிறான் என்று நினைத்து நிர்வாகத்தினர் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும் , நான் இவ்வாறு இருக்க என் பள்ளியை சாடுவதை தவிர வேறு வழியில்லை என் பள்ளியை பற்றி சொல்ல வேண்டுமானால் அதற்கென்று தனி திரி துவங்கியாக வேண்டும்
எல்லோரும் கல்விக்கூடத்தை கோவிலாகவும் போதித்த ஆசான்களை தெய்வமாகவும் பார்க்கின்ற நிலையில்
நான் இவ்வாறு நினைக்கும் கட்டாயத்தில் இருக்கிறேன் ...
மேற்கோள் செய்த பதிவு: 1185421

கல்லொன்று மோதி உதிரம் பெருகிட்டால்
கல்லின் சதியென்று சொல்வாரோ -தொல்லுலகில்
ஈசனுக்கு ஒப்பாய் விளங்குகின்ற ஆசானை
ஏசிடுதல் நன்றாமோ சொல் .
மேற்கோள் செய்த பதிவு: 1185486

நீங்கள் சொல்கின்ற ஆசான் போதித்தவர்கள்
நான் சொல்கின்ற ஆசான் கடலை மிட்டாயும்
கடலைமிட்டாயும் கலர் சோடாவும்
வாங்கி வரச்சொல்லியும், காலை அமுத்திவிட சொல்லியும்
காலம் போக்கியவர்கள் .

என்னுடன் தொடக்க கல்வி பயின்றோரில்  நான் ஒருவனே கல்லூரியை எட்டி பார்த்தேன்
என் பல் சற்று மேல்நோக்கி துருத்தியிருக்கும் அதை தேங்காய் திருவி என்று அழைத்து
மனதால் காயபடுத்தியவர்கள் இன்று வரை அதன் காயம் ஆறவில்லை . இன்று உள்ள தொழில்நுட்பம் அன்று இருக்குமானால் அவர்களை சிறைக்கு அனுப்பியிருப்பேன்.


ஒரு சிலரே நல்லவர்களாக விதிவிலக்காக  இருந்தார்கள் .அந்த ஒரு சிலர் இன்றும் என் மனதில் தெய்வமாக வாழ்கிறார்கள் ..

வரம்பு மீறிய வாதத்திற்கு என்னை மன்னிக்கவும் ஐயா ...

இது  கிராமத்து மாணவர்கள் படும் துன்பத்தின் மொழி
அநேகருக்கு புரிய வாய்ப்பில்லை ....


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 3 Empty Re: செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

Post by T.N.Balasubramanian Tue Jan 05, 2016 10:21 pm

மனக்குமறல்களை வெளிப்படுத்த ஒரு வடிகாலாக ஈகரை வழிபடுகிறது
மனமகிழ்சிகளை பகிர்ந்து கொள்ள ஒரு இத(இணை)ய தளமாக இருக்கிறது .
செம்மை படுத்தவும் மேன்மை படுத்தவும் ஒரு பாலமாக திகழ்கிறது ஈகரை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 3 Empty Re: செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

Post by krishnaamma Tue Jan 05, 2016 10:26 pm

கவலைப் படாதீர்கள் செந்தில் குமார், ரமணீயன் ஐயா சொல்வது நிஜம்............

// மனக்குமறல்களை வெளிப்படுத்த ஒரு வடிகாலாக ஈகரை வழிபடுகிறது 
மனமகிழ்சிகளை பகிர்ந்து கொள்ள ஒரு இத(இணை)ய தளமாக இருக்கிறது .
செம்மை படுத்தவும் மேன்மை படுத்தவும் ஒரு பாலமாக திகழ்கிறது ஈகரை .//


இங்கு நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம், எல்லோரும் ஆதரவு அளிப்பார்கள் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு .............


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 3 Empty Re: செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

Post by krishnaamma Tue Jan 05, 2016 10:27 pm

T.N.Balasubramanian wrote:மனக்குமறல்களை வெளிப்படுத்த ஒரு வடிகாலாக ஈகரை வழிபடுகிறது
மனமகிழ்சிகளை பகிர்ந்து கொள்ள ஒரு இத(இணை)ய  தளமாக இருக்கிறது .
செம்மை படுத்தவும் மேன்மை படுத்தவும் ஒரு பாலமாக திகழ்கிறது ஈகரை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1185521


வி.பொ.பா. ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 3 Empty Re: செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

Post by K.Senthil kumar Tue Jan 05, 2016 10:27 pm

அந்தோ பரிதாபம் .........
அந்த நிலை குலைந்த தோழர்களின்
நிலையை கண்டால் கண்ணில்
வடியாதோ உதிரம்

தான்தான் கற்கவில்லை தன்பிள்ளைகள்
பெறுவார்கள் கல்வி பேரு –என்று
எண்ணி ஏமார்ந்த பெற்றோரின்
அவலம்

அவ்வூர் செல்லும்போது அந்த
நிலை கண்டு வழியால்
துடித்த என் இதயம்

மாலை நேர வகுப்பு சென்று
ஓரளவு கல்வி கண்டு
கல்லூரி வாசல் வந்து விட்டுசென்ற
தனியார் பயிற்சி மையம்

அந்தோ பரிதாபம்
ஆடுகளாய் மாடுகளாய் ஆயிணோமே
அந்த அரசு பள்ளி என்னும் தொழுவத்தில்


வெண்தாமரையில் வீற்றிருக்கும்
கல்வி கலைமகளை
கறைபடுத்திய கலைக்கூடம்
யாரறிவர்....??? யாரறிவர்....???


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 3 Empty Re: செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

Post by K.Senthil kumar Tue Jan 05, 2016 10:33 pm

T.N.Balasubramanian wrote:மனக்குமறல்களை வெளிப்படுத்த ஒரு வடிகாலாக ஈகரை வழிபடுகிறது
மனமகிழ்சிகளை பகிர்ந்து கொள்ள ஒரு இத(இணை)ய தளமாக இருக்கிறது .
செம்மை படுத்தவும் மேன்மை படுத்தவும் ஒரு பாலமாக திகழ்கிறது ஈகரை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1185521
krishnaamma wrote:கவலைப் படாதீர்கள் செந்தில் குமார், ரமணீயன் ஐயா சொல்வது நிஜம்............

// மனக்குமறல்களை வெளிப்படுத்த ஒரு வடிகாலாக ஈகரை வழிபடுகிறது 
மனமகிழ்சிகளை பகிர்ந்து கொள்ள ஒரு இத(இணை)ய தளமாக இருக்கிறது .
செம்மை படுத்தவும் மேன்மை படுத்தவும் ஒரு பாலமாக திகழ்கிறது ஈகரை .//


இங்கு நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம், எல்லோரும் ஆதரவு அளிப்பார்கள் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு .............
மேற்கோள் செய்த பதிவு: 1185525

பழைய நினைவுகளில் மூழ்கி வாடிய நேரத்தில் ஆறுதல் கூறிய அம்மாவிற்கும், ரமணியன் ஐய்யாவிர்க்கும்
எனது நன்றிகள்...


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 3 Empty Re: செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

Post by T.N.Balasubramanian Wed Jan 06, 2016 10:51 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:மனக்குமறல்களை வெளிப்படுத்த ஒரு வடிகாலாக ஈகரை வழிபடுகிறது
மனமகிழ்சிகளை பகிர்ந்து கொள்ள ஒரு இத(இணை)ய  தளமாக இருக்கிறது .
செம்மை படுத்தவும் மேன்மை படுத்தவும் ஒரு பாலமாக திகழ்கிறது ஈகரை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1185521


வி.பொ.பா. ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185527

நன்றி நன்றி கிருஷ்ணம்மா !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

செந்தில் குமாரும்  குட்டிகவிதைகளும்  - Page 3 Empty Re: செந்தில் குமாரும் குட்டிகவிதைகளும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum