Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம்
2 posters
Page 1 of 1
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம்
![பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் LzWDjnwkTLOCc3XstKbF+punjab_2680450g](https://www.filepicker.io/api/file/lzWDjnwkTLOCc3XstKbF+punjab_2680450g.jpg)
-
![பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் SYBZcmzxSeyew95MlQne+Pathankot_Air_base_2680346g](https://www.filepicker.io/api/file/sYBZcmzxSeyew95MlQne+Pathankot_Air_base_2680346g.jpg)
-
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படைத்தளத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; படையினர் மூவர் வீரமரணம் அடைந்தனர்.
பாகிஸ்தான் எல்லையோரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது பதன்கோட் விமானப் படைத்தளம். இங்கு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு ராணுவ வீரர்கள் உடையில் நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனையடுத்து, பாதுகாப்புப்படை வீரர்கள் முழுவீச்சில் தீவிரவாதிகள் மீது அதிரடித் தாக்குதலில் இறங்கினர்.
இது குறித்து பஞ்சாப்பின் சட்டம் ஒழுங்குப் பிரிவு போலீஸார் எச்.எஸ். ஹில்டன் கூறும்போது, "இரு தரப்பினருக்கும் இடையேயான சண்டை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. தீவிரவாதிகள் அதிக அளவிலான ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருட்களை தங்கள் வசம் வைத்திருந்தனர். விமானப் படைத்தளத்தின் பின்புறம் உள்ள வனப்பகுதி வழியாக அவர்கள் இங்கு ஊடுருவினர்" என்றார்.
இந்தக் கடும் சண்டையின் முடிவில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்கே பாக்ஷி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பாதுகாப்புப் படையினர் இருவர் வீரமரணம் அடைந்ததாகவும் மற்றும் 6 வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் துப்பாக்கிச்சூடு:
விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அங்கு மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, அங்கு மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்தில் விசாரணை நடத்தும் பொருட்டு, தேசிய புலனாய்வு ஆணைய அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
அங்கு மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்டை மாநில நகரமான டேரடுனிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலும் விமான நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பிற முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு கணிசமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
விமானப் படைத்தளத்தை குறிவைத்தது யார்?
விமானப் படைதளத்தை குறிவைத்தவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாப் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை மாநிலமான ஹரியாணாவிலும் இரண்டுக்கும் பொதுவான தலைநகராக திகழும் சண்டிகரிலும் பலத்த தீவிர சோதனை நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விமானப் படைத்தளம் சுற்றிலும் ரோந்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தளத்தின் தொழில்நுட்ப மையம் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாபில் கடந்த 6 மாதத்தில் நடந்துள்ள இரண்டாவது மோசமான தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் இதுவாகும். முன்னதாக கடந்த ஜூலை 27-ம் தேதி பஞ்சாப்பின் குருதாஸ்பூரின் தினான்நகரில் 3 தீவிரவாதிகள் ராணுவ உடையில் நுழைந்து தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.
என்ன சொல்கிறார் ராஜ்நாத்?
இதனிடையே, தீவிரவாதத் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, "பாகிஸ்தானுடன் நல்லுறவில் இருக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்காக அங்கிருந்து வரும் அனைத்து தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி அளிக்காமல் இருக்க மாட்டோம். நம் படையினர் மிகச் சிறப்பாக பதில் தாக்குதல் நடத்தினர்" என்றார்.
மோடியின் பாக். பயணத்துக்கான பதில்: ஒமர் அப்துல்லா
இந்தத் தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முத்ல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, "எனது முந்தைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன். தீவிரவாதிகள் விமானப் படைதளத்தை குறிவைத்து தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் மட்டுமே ஊடுருவி இருக்க வேண்டும்.
பிரதமர் மோடி மேற்கொண்ட தைரியமான 'திடீர்' பாகிஸ்தான் பயணத்துக்கான உடனடி பதில்தான் இது. அவர் சந்தித்திருக்கும் முதல் சவால்தான் இந்தத் தாக்குதல்.
தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றோடு ஒன்றாக வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை என்பதனை பாஜக இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். தாக்குதல்களுக்கு நடுவே இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
=
தமழ் தி இந்து காம்
Re: பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம்
சவால்தான் .
வீரமரணம் அடைந்த இரு வீரர்களுக்கும் எமது கண்ணீர் கலந்த அஞ்சலி .
அவர் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
ரமணியன்
வீரமரணம் அடைந்த இரு வீரர்களுக்கும் எமது கண்ணீர் கலந்த அஞ்சலி .
அவர் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Re: பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம்
சமீபத்திய செய்தி
-
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து உதவிகள்
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் இன்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தானில் இருந்து தொலைபேசி மூலம் கால் டாக்ஸி வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
பதன்கோட்டில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் நேற்று டோயோடா இன்னோவா காரில் வந்துள்ளனர். அந்த கார் ஓட்டுநருக்கு பாகிஸ்தானில் இருந்து செல்போன் மூலம் அழைப்பு வந்து கால் டாக்ஸி வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது.
அந்த கால் டாக்ஸி ஓட்டுநரிடம், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஓட்டுநர், பாகிஸ்தானில் இருந்து வரும் கடத்தல்காரர்களுக்கு உதவி செய்து வருகிறாரா அல்லது தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரா அல்லது அந்த எண் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கிறது என்பது தெரியாதவரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த ஓட்டுநர், பதன்கோட்டில் ஒரு பகுதிக்கு வந்துள்ளார். அங்குதான் தீவிரவாதிகள் இன்னோவா காரில் ஏறியுள்ளனர்.
வரும் வழியில் அந்த கார் பழுதானதால், அதிலிருந்து இறங்கி, எஸ்யுவி (மகிந்திரா எஸ்யுவி 500) வாகனத்தை கடத்தியுள்ளனர். அந்த வாகனத்தில்தான் பஞ்சாப் காவல்துறை கண்காணிப்பாளர் தனது நண்பர் மற்றும் உதவியாளருடன் வந்து கொண்டிருந்தார்.
காவல்துறை கண்காணிப்பாளரையும், உதவியாளரையும் வண்டியில் இருந்து இறக்கிவிட்டுவிட்ட தீவிரவாதிகள், நண்பரை மட்டும் பிணையக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு காரில் சென்றுவிட்டனர்.
வாகனத்தைக் கடத்தும் போது, காவல்துறை கண்காணிப்பாளரின் செல்போனை பறித்துச் சென்ற தீவிரவாதிகள், அதில் இருந்து பாகிஸ்தானில் இருக்கும் அவர்களது அமைப்புக்கு போன் செய்துள்ளனர். அந்த எண்ணும், இன்னோவா கார் ஓட்டுநருக்கு அழைப்பு வந்த எண்ணும் ஒன்று என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்துதான், தீவிரவாதிகள் எந்த வழியில் செல்ல வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தினமணி
-
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து உதவிகள்
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் இன்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தானில் இருந்து தொலைபேசி மூலம் கால் டாக்ஸி வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
பதன்கோட்டில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் நேற்று டோயோடா இன்னோவா காரில் வந்துள்ளனர். அந்த கார் ஓட்டுநருக்கு பாகிஸ்தானில் இருந்து செல்போன் மூலம் அழைப்பு வந்து கால் டாக்ஸி வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது.
அந்த கால் டாக்ஸி ஓட்டுநரிடம், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஓட்டுநர், பாகிஸ்தானில் இருந்து வரும் கடத்தல்காரர்களுக்கு உதவி செய்து வருகிறாரா அல்லது தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரா அல்லது அந்த எண் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கிறது என்பது தெரியாதவரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த ஓட்டுநர், பதன்கோட்டில் ஒரு பகுதிக்கு வந்துள்ளார். அங்குதான் தீவிரவாதிகள் இன்னோவா காரில் ஏறியுள்ளனர்.
வரும் வழியில் அந்த கார் பழுதானதால், அதிலிருந்து இறங்கி, எஸ்யுவி (மகிந்திரா எஸ்யுவி 500) வாகனத்தை கடத்தியுள்ளனர். அந்த வாகனத்தில்தான் பஞ்சாப் காவல்துறை கண்காணிப்பாளர் தனது நண்பர் மற்றும் உதவியாளருடன் வந்து கொண்டிருந்தார்.
காவல்துறை கண்காணிப்பாளரையும், உதவியாளரையும் வண்டியில் இருந்து இறக்கிவிட்டுவிட்ட தீவிரவாதிகள், நண்பரை மட்டும் பிணையக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு காரில் சென்றுவிட்டனர்.
வாகனத்தைக் கடத்தும் போது, காவல்துறை கண்காணிப்பாளரின் செல்போனை பறித்துச் சென்ற தீவிரவாதிகள், அதில் இருந்து பாகிஸ்தானில் இருக்கும் அவர்களது அமைப்புக்கு போன் செய்துள்ளனர். அந்த எண்ணும், இன்னோவா கார் ஓட்டுநருக்கு அழைப்பு வந்த எண்ணும் ஒன்று என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்துதான், தீவிரவாதிகள் எந்த வழியில் செல்ல வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தினமணி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தருமபுரத்தில் சிறிலங்கா படையினர் மீது புலிகள் தாக்குதல்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்!
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» எல்லை தாக்குதல்: 5 பேர் வீரமரணம்
» மாவோயிஸ்ட் தாக்குதல்: 15 வீரர்கள் வீரமரணம்
» பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ அதிகாரி உட்பட 5 வீரர்கள் வீரமரணம்
» எஸ்.ஐ. ஆல்வின் சுதன் கொலை வழக்கு : இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை
» எல்லை தாக்குதல்: 5 பேர் வீரமரணம்
» மாவோயிஸ்ட் தாக்குதல்: 15 வீரர்கள் வீரமரணம்
» பயங்கரவாதிகள் தாக்குதல்: ராணுவ அதிகாரி உட்பட 5 வீரர்கள் வீரமரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|