ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை

4 posters

Go down

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Empty உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை

Post by ayyasamy ram Sat Jan 02, 2016 8:16 am

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை I9VhX2MJTUm2KeaDNt2Q+1ila_1816683h
-
தமிழ் இலக்கிய வரலாற்றில் 18,19-ம் நூற்றாண்டுகளில் எண்ணற்ற தமிழ்ச் சான்றோர் தோன்றினர். இந்த நூற்றாண்டுகளைச் சிற்றிலக்கியக் காலம் என்றும் கூறுவர். இந்தக் காலத்தில் திருத்தலங்களின் வரலாறு கூறும் தல புராணங்கள் பெருமளவில் பாடப்பெற்றன. அக்காலகட்டத்தில் தலபுராணங்களைப் பாடிய பெருமை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களையே சாரும்.

பல பெரியோர்களின் பெருமை, அவர்களிடம் கல்வி கற்ற மாணவர் களாலும், மாணவர்களின் பெருமை அவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் களாலும் உலகுக்குத் தெரியவரும். அத்தகைய பெருமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கிய சிறப்பு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு மட்டுமே வாய்த்தது. வித்துவான் தியாகராசச் செட்டியார், உ.வே. சாமிநாதய்யர் போன்ற தலைசிறந்த மாணவர்கள் அவருக்குக் கிடைத்தனர்.

1815-ம் ஆண்டு திருச்சிராப்பள்ளியில் பிள்ளையவர்கள் பிறந்தார். தன் தந்தையாரைக் குருவாகக் கொண்டு ஆரம்பக் கல்வியைக் கற்கத் துவங்கிய அவர், சான்றோர் முதல் சாதாரணமானவர் வரை என யாரிடமெல்லாம் கற்க வேண்டியன உள்ளனவோ அவர்களிடமெல்லாம் கைப்பொருள் கொடுத்துக் கல்வி பயின்று மகாவித்துவான் ஆனார். சிவபக்தி, வெகுளாமை, விருந்தோம்பும் பண்பு, சாதி, மதம் நோக்காத உயர்ந்த நெஞ்சம், கற்றாரைப் போற்றும் பெருந்திறம், ஆன்மீகக் கற்பனை மிக்க கவிதைகளை விரைந்தியற்றும் பேராற்றல் இத்தகைய பெருமைகளைப் பெற்றிருந்த பேராளர் அவர். தம்மிடம் வாய்த்திருந்த கல்வித் திறனைச் சாதி மதம் பாராது எவ்விதக் கைமாறும் பெற்றுக்கொள்ளாமல் வந்து சேர்ந்த மாணவர்களச் சொந்த மக்களைப் போலக் வாரி வழங்கிய திறம் என அவரது பெருமைகள் பல. அவரது மாணவர் உ.வே.சா., அவரது பெயரை எழுத்தால் எழுதுவதற்கு அஞ்சுவதாகக் குறிப்பிடுவார். மாணாக்கர்களிடம் அத்தகைய குருபக்தியை ஏற்படுத்தியவர் மகாவித்துவான். தம்மை நாடி வந்த அனைத்து மாணவர்களுக்கும் உணவளித்துத் தங்குமிடமும் அளித்துக் கல்வி புகட்டியவர் அவர். அவர் இயற்றிய புராணங்கள் 22. பிற காப்பியங்கள் ஆறு. பிள்ளைத்தமிழ் முதலியன 45. எண்ணிறந்த தனிப்புராணங்களும் இயற்றியுள்ளார்.

நீதிபதி வேதநாயகம் பிள்ளையின் பால் இவர் பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரைப் பாராட்டிக் குளத்துக்கோவை என்னும் நூல் இயற்றியுள்ளார். தகுதியில்லாத யாரையும் புகழ்ந்து பாடும் பழக்கத்தைக் கொண்டிராத மகாவித்துவான் பாடிய பாடல் அவரது சமயப் பொறைக்கும் சமயம் கடந்த சிறந்த நட்புக்கும் சிறந்த சான்றாகும். பிறருக்குக் கல்வி கற்பிப்பதில் வள்ளலாக வாழ்ந்த அந்தப் பெருந்தகையின் வாழ்வு இன்றைய ஆசிரியப் பெருமக்களுக்ககெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதாகும்.

–புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்

தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Empty Re: உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை

Post by Dr.S.Soundarapandian Sat Jan 02, 2016 9:35 am

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1571444738 உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Empty Re: உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை

Post by T.N.Balasubramanian Sat Jan 02, 2016 2:09 pm

அவர் எழுத்தும் தமிழ்நடையும் ......படித்து ரசிக்கத்தான் முடிந்தது .

நல்ல பதிவு ram ,நன்றி .

ரா.பி .சேது பிள்ளையும் இவர் மாணாக்கர் என்று எண்ணுகிறேன் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Empty Re: உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 02, 2016 9:55 pm

ayyasamy ram wrote:
பல பெரியோர்களின் பெருமை, அவர்களிடம் கல்வி கற்ற மாணவர் களாலும், மாணவர்களின் பெருமை அவர்களுக்குக் கல்வி கற்பித்த ஆசிரியர் களாலும் உலகுக்குத் தெரியவரும். அத்தகைய பெருமை வாய்ந்த மாணவர்களை உருவாக்கிய சிறப்பு மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு மட்டுமே வாய்த்தது. வித்துவான் தியாகராசச் செட்டியார், உ.வே. சாமிநாதய்யர் போன்ற தலைசிறந்த மாணவர்கள் அவருக்குக் கிடைத்தனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1184625
உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை 3838410834 உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை 103459460 உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை Empty Re: உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உதாரண ஆசிரியர்: மீனாட்சி சுந்தரம் பிள்ளை!
» சிறகின் சப்தமல்ல நீ கேட்டது – கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம்
» இரை தேடும் பறவை நூல் ஆசிரியர் கவிஞர் கருவை சு .சண்முக சுந்தரம்
» நீங்களும் சொற்பொழிவாளர் ஆகலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி முனைவர் இளசை சுந்தரம் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நீங்களும் மகுடம் சூடலாம் ! நூல் ஆசிரியர் கலைமாமணி ,முனைவர் இளசை சுந்தரம் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum