புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
61 Posts - 43%
heezulia
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
9 Posts - 6%
prajai
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
21 Posts - 5%
prajai
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
தமிழும் அமுதும் Poll_c10தமிழும் அமுதும் Poll_m10தமிழும் அமுதும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழும் அமுதும்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Jan 01, 2016 7:06 pm

தெள்ளிய ஆலின் சிறு பழத்தோர் விதை

செம்மீன் சினையினும் நுண்ணிதே ஆயினும்

அண்ணல் யானை ஆட்பெரும்படையுடன்

மன்னருக்கிருக்க நிழலாகும்மே!!

தேம்படு பனையின் திரள் பழுத்தோர் விதை

வானுற ஓங்கி வளமுற வளரினும்

ஒருவருக்கிருக்க நிழலாகும்மா?

- வெற்றி வேற்கை

 

ஆலம் பழத்தின் விதை உருவத்தில் மீனின் சினை முட்டையை விட மிகமிக சிறியதாக இருந்தாலும்கூட அந்தவிதை மண்ணில் ஊன்றி பின்னர் வளமுற வளர்ந்துவிடின் மன்னரது காலாட்படை, குதிரைப் படை,யானைப்படை,போன்ற எண்ணற்ற நபர்களுக்கு நிழல் தந்து இளைப்பாற இடம் தரும் அளவிற்கு மாபெரும் ஆலமரமாக வளர்ந்து உதவிசெய்கிறது.

அதே நேரம் பனைமரத்தின் விதை உருவத்தில் மிக பெரியதாக இருந்தாலும் கூட பனைமரமாக வளர்ந்துவிடும்போது அதன் நிழலில் ஒருவர்கூட இளைப்பாற முடியாத நிலைதான் ஏற்படுகிறது.
நன்றி அஞ்சரன்-யாழ்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Jan 01, 2016 7:07 pm

நாகப்பாம்பும் வஞ்சனையும்...

நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்

அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத் தவர். (மூதுரை-25)

நாகப்பாம்பு தன்னிடம் நஞ்சு இருப்பதை அறிந்து புற்றில் ஒளிந்து வாழும்.நஞ்சு இல்லாத நீர்ப் பாம்போ அஞ்சாமல் எங்கும் திரியும்.

வஞ்சனை மிக்க உள்ளத்தினர் மறைத்துப் பேசுவர்.வஞ்சனையில்லா நெஞ்சத்தவரோ ஒளித்துப் பேசமாட்டார்.நீர்ப்பாம்புக்கு விஷமில்லாத தால்அது எங்கும் பயமின்றித் திரியும்.விஷமுள்ள நாகப்பாம்பு புற்றில் வசிக்கும். அதேபோல,உள்ளத்திலே கள்ளம் இல்லாதவர் வெளிப்படையாகப் பேசுவார். வஞ்சகர் ஒளித்துப் பேசுவார்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 01, 2016 7:41 pm

இது போன்ற சிலேடைகளை அதிகமாக பதிவிடுங்கள் கார்த்திக்

படிக்க இனிமையாக இருக்கிறது.



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 02, 2016 7:40 am

மிக்க செல்வநீ படைத்த விறகுமேவிப் பாவிகாள்

விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவ தறிகிலீர்

மக்கள்பெண்டிர் சுற்றமென்று மாயைகாணு மிவையெலாம்

மறலிவந் தழைத்தபோது வந்துகூட லாகுமோ?

சிவவாக்கியார்

எவ்வளவு மிகுதியாகச் செல்வம் படைத்தவனாயிருந்தாலும், இறந்தபின் விறகில் வைத்துக் கொளுத்தி விடுவார்கள்;. பிறகு வெந்தபின் சாம்பல் ஒன்றே மீதி. மாடு, மனை, மக்கள், சுற்றம் ஆகிய பந்த பாசம் தருபவை எல்லாம் எமன் வந்து அழைக்கும்போது துணை வருவார்களோ?



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 02, 2016 8:23 am

ஔவையாரின் பதிலடி- ஏ.கே.ராஜகோபாலன்

ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.

அந்தக் காலத்தில் இன்றுள்ளது போல் பேருந்துகளோ மற்ற மோட்டார் வாகனங்களோ கிடையாது. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் நடந்தோ, குதிரை மீதோ அல்லது குதிரை அல்லது மாட்டு வண்டியிலோ தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் வழிப்போக்கர்கள் இளைப்பாறிச் செல்வதற்காகவென்றே திண்ணை இருக்கும்.

ஔவையார் அமர்ந்த திண்ணையக் கொண்ட வீட்டில் "சிலம்பி" என்ற தாசி இருந்தாள். தன் வீட்டின் திண்ணையில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பதைக் கண்ட சிலம்பி தான் குடிப்பதற்காக வைத்திருந்த கூழைக் கொணர்ந்து ஔவையாருக்குக் கொடுத்தாள்.

கூழை அருந்திய ஔவையார் அந்த வீட்டின் சுவற்றிலே காரிக் கட்டியினால் எழுதியிருந்த இரண்டு வரிகளைக் கவனித்தார்:

"தண்ணீருங் காவிரியே தார் வேந்தன் சோழனே

மண்ணாவதுஞ் சோழ மண்டலமே"

தனக்குப் பசியாரக் கூழ் கொடுத்த சிலம்பியை நோக்கி, "இது என்ன?" என்று கேட்டார் ஔவையார்.

"குலோத்துங்க சோழ மன்னனின் அவைக்களப் புலவரான கம்பர் வாயால் பாடல் பெற்றவர்கள் மிகவும் சீரோடும் சிறப்போடும் வாழ்வதாகக் கேள்விப்பட்டு நான் சேர்த்து வைத்திருந்த 500 பொற்காசுகளைக் கொடுத்து என் மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று அவரைக் கேட்டுக் கொண்டேன். அதற்குக் கம்பர், 'ஒரு பாடலுக்கு ஆயிரம் பொன் தர வேண்டுமென்றும் 500 பொன்னுக்கு அரைப் பாடல் தான் கிடைக்கும்' என்றும் கூறிக் காரிக் கட்டியால் இவ்விரண்டு வாரிகளைச் சுவற்றில் எழுதிவிட்டுப் போய்விட்டார். கையிலிருந்த 500 பொன்னும் பறிபோனதால் நான் அன்றிலிருந்து வறுமையில் வாடுகிறேன்." என்று கூறினாள் சிலம்பி.

அதைக் கேட்ட ஔவையார் உடனே ஒரு காரித்துண்டினை எடுத்து அவ்விரண்டு வாரிகளின் கீழே கீழ்க்கண்ட வாரிகளைச் சேர்த்துக் கவிதையைப் பூர்த்தி செய்தார்:

"பெண்ணாவாள் அம்பர்ச் சிலம்பி அரவிந்தத் தாளணியும்

செம்பொற் சிலம்பே சிலம்பு."

என்பதாகும் அவ்வரிகள்.

ஔவையார் வாயால் பாடல் பெற்றதும் சிலம்பியின் புகழ் நாடெங்கும் பரவியது. அவள் கால்களில் செம்பொன்னிலான சிலம்பணியுமளவிற்குப் பெரிய செல்வச் சீமாட்டியாக ஆனாள்.

தான் 500 பொன் பெற்று ஏழையாக்கிய சிலம்பியை ஔவையார் கூழுக்குப் பாடிச் செல்வச் செழிப்பு மிக்கவளாக்கி விட்டதைக் கேள்வியுற்ற கம்பர் ஔவையார் மீது துவேஷம் கொண்டார். ஒரு நாள் ஔவையார் அரசவைக்கு வருகை தந்தார். அப்பொழுது கம்பர் அவரை நோக்கி ஆரைக் கீரைக்கும் ஔவைக்கும் சிலேடையாக அதாவது இரு பொருள் படும் படியாக ஔவையையும் ஆரக்கீரையையும் ஒப்பிட்டு,

"ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ"

என்று கூறினார். இதற்கு உத்தரமாக ஔவையார்,

"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பா¢யே

மட்டில் பொ¢யம்மை வாகனமே முட்டமேற்க்

கூறையில்லா வீடே, குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னாயது."

தமிழில் "அ" அன்பது எண் 8 ஐக் குறிக்கும் "வ" 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் "அவ" என வரும்.

எட்டேகால் லட்சணமே என்றால் "அவ லட்சணமே" எனப் பொருள் படும். எமனேறும் பாரி எருமை. எமனேறும் பாரியே என்றால் "எருமையே" எனப் பொருள் படும். மட்டில் பெரியம்மை வாகனமே என்றால் "மூதேவியின் வாகனமே" என்று பொருள். கூரையில்லா வீடு குட்டிச் சுவர். கூரையில்லா வீடே என்றால் "குட்டிச் சுவரே" என்று பொருள்.

"குலராமன் தூதுவனே" என்றால், ராமாயணத்தை எழுதியவனே என்றும், ராமனுக்குத் தூது சென்ற ஹனுமானான "குரங்கே" என்றும் பொருள் படும். "ஆரையடா சொன்னாயது" என்றால் நீ சொன்னதன் பொருள் ஆரக்கீரை யென்றும் யாரைப் பார்த்து இப்படிச் சொன்னாய் என்றும் இருபொருள் படும். இத்துடன் "அடா" என்ற அடைமொழி சேர்த்துத் தன்னை "அடி" என்றதற்குப் பதிலடி கொடுத்தார்.

எவ்வளவு அருமையான புலமை விளையாட்டு!

நன்றி

நிலாச்சாரல்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Jan 02, 2016 10:45 am

எனது முதல் சிலேடை :-

வந்த முதலில் ஆசையாய் வரவேற்று
பூஜை காட்டி புகழ் மாலை சூடி
போகும் நாட்களில் கிழி கிழி' என்று கிழித்து .
சரக்கு தீர்ந்தபின் வீசப்படும் வீதியிலே .
நாட்காட்டியும் மனிதனை போல .


நன்றி

கார்த்திக் ஜெயராம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Jan 02, 2016 7:23 pm

கார்த்திக் செயராம் wrote:எனது முதல் சிலேடை :-

வந்த முதலில் ஆசையாய் வரவேற்று
பூஜை காட்டி புகழ் மாலை சூடி
போகும் நாட்களில் கிழி கிழி' என்று கிழித்து .
சரக்கு தீர்ந்தபின் வீசப்படும் வீதியிலே .
நாட்காட்டியும் மனிதனை போல .


நன்றி

கார்த்திக் ஜெயராம்
[You must be registered and logged in to see this link.]

அருமை..
நல்ல முயற்சி கார்த்திக்...



மெய்பொருள் காண்பது அறிவு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 02, 2016 8:36 pm

சுகித்து கிழித்து விட்டீர்கள் - நன்று




பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 10:26 am

கார்த்திக் செயராம் wrote:
ஆலம் பழத்தின் விதை உருவத்தில் மீனின் சினை முட்டையை விட மிகமிக சிறியதாக இருந்தாலும்கூட அந்தவிதை மண்ணில் ஊன்றி பின்னர் வளமுற வளர்ந்துவிடின் மன்னரது காலாட்படை, குதிரைப் படை,யானைப்படை,போன்ற எண்ணற்ற நபர்களுக்கு நிழல் தந்து இளைப்பாற இடம் தரும் அளவிற்கு மாபெரும் ஆலமரமாக வளர்ந்து உதவிசெய்கிறது.
அதே நேரம் பனைமரத்தின் விதை உருவத்தில் மிக பெரியதாக இருந்தாலும் கூட பனைமரமாக வளர்ந்துவிடும்போது அதன் நிழலில் ஒருவர்கூட இளைப்பாற முடியாத நிலைதான் ஏற்படுகிறது.
நன்றி அஞ்சரன்-யாழ்.
[You must be registered and logged in to see this link.]
தமிழும் அமுதும் 3838410834 தமிழும் அமுதும் 103459460 தமிழும் அமுதும் 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 10:30 am

கார்த்திக் செயராம் wrote:
நாகப்பாம்பு தன்னிடம் நஞ்சு இருப்பதை அறிந்து புற்றில் ஒளிந்து வாழும்.நஞ்சு இல்லாத நீர்ப் பாம்போ அஞ்சாமல் எங்கும் திரியும்.
வஞ்சனை மிக்க உள்ளத்தினர் மறைத்துப் பேசுவர்.வஞ்சனையில்லா நெஞ்சத்தவரோ ஒளித்துப் பேசமாட்டார்.நீர்ப்பாம்புக்கு விஷமில்லாத தால்அது எங்கும் பயமின்றித் திரியும்.விஷமுள்ள நாகப்பாம்பு புற்றில் வசிக்கும். அதேபோல,உள்ளத்திலே கள்ளம் இல்லாதவர் வெளிப்படையாகப் பேசுவார். வஞ்சகர் ஒளித்துப் பேசுவார்.
[You must be registered and logged in to see this link.]
தமிழும் அமுதும் 3838410834 தமிழும் அமுதும் 103459460 தமிழும் அமுதும் 1571444738

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக