Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்றில் இன்று - ஜனவரி
+9
ராஜா
சசி
பழ.முத்துராமலிங்கம்
Dr.S.Soundarapandian
K.Senthil kumar
ayyasamy ram
krishnaamma
T.N.Balasubramanian
விமந்தனி
13 posters
Page 8 of 13
Page 8 of 13 • 1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13
வரலாற்றில் இன்று - ஜனவரி
First topic message reminder :
Last edited by விமந்தனி on Fri Jan 01, 2016 2:34 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வரலாற்றில் இன்று - ஜனவரி
பொங்கலை சமைத்தாலும்
பொங்கலை ரசிக்க ருசிக்க
இன்னிக்கு உணவகத்தை
தேடி போயிடுவீங்கல்ல?
பொங்கலை ரசிக்க ருசிக்க
இன்னிக்கு உணவகத்தை
தேடி போயிடுவீங்கல்ல?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வரலாற்றில் இன்று - ஜனவரி
மெட்றாஸ் ஸ்டேட், தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அழைத்த நாள் இன்று
ஒவ்வொரு விஷயத்தையும் போராடியே பெற்று வந்திருக்கிறது இந்த தமிழ் மண். மதறாஸ் மாநிலம் என்றும் மெட்றாஸ் ஸ்டேட் என்றும் 1967 வரை இப்படித்தான் அழைக்கப் பட்டு வந்தது, நம் தமிழ்நாடு. அதை தமிழ்நாடு என்று மாற்றுவதற்கு நம் தமிழாய்ந்த முன்னோடிகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் கொஞ்சமல்ல... மெட்றாஸ் ஸ்டேட்டை, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அழைத்த அந்த நாள் இன்றுதான்.
சங்கரலிங்கமும் தமிழ்நாடும்
தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதெல்லாம் யாரும், சங்கரலிங்க நாடார் எனப்படும் கண்டன் சங்கரலிங்கத்தை மறந்து விடக் கூடாது. இதை நம்முடைய சந்ததியினருக்கும் தாய்ப்பாலோடு புகட்டி வளர்க்க வேண்டும். அப்படி என்னதான் செய்தார் சங்கரலிங்கம் ? பிள்ளைகள், தங்கள் பள்ளியில் இதைப் பாடமாக படித்து தெரிந்து கொண்டிருக்கலாம், தெரிந்து கொள்ளாமலும் இருக்கலாம்... சங்கரலிங்கம் யார்? அண்ணா யார்? ம.பொ.சி. யார் ? மொழி, மாநில உரிமைகளில் இவர்களின் பங்களிப்பு எவ்விதம் அமைந்திருந்தது, சொல்லிக் கொடுப்பது நம் கடமையும் கூட.
தமிழ்நாடு பெயர் கேட்டு மனு
எந்தவொரு அரசியல் பின்னணியோ, அரசியல் கட்சியில் பொறுப்பிலோ இல்லாதிருந்தவர், விருதுநகர் மாவட்டத்தின் மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம். அதே வேளையில் வசதியான பின்புலம் கொண்டிருந்தவர். எத்தனை காலம்தான் என் தாய்த்தமிழ் பேசும் மாநிலத்தை மெட்றாஸ் ஸ்டேட் என்று சொல்லிக் கொண்டிருப்பீர்கள், இனியும் அது முடியாது என்று வெளிப்படையாய் கொதித்தவர். பல மனுக்களை மாநிலத்தில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் அரசுக்கும், மத்திய அரசுக்கும் கொடுத்துக் கொடுத்து சோர்ந்து போனார் சங்கரலிங்கம்.
உண்ணாநிலை முடிவு
அந்தவேளையில்தான் டெல்லியின் செங்கோட்டையே நடுங்கும் விதமாக, அகிம்சா முறையில் சாகும் வரை அல்லது கோரிக்கை நிறைவேறும் வரை தண்ணீர் கூட அருந்த மாட்டேன் என்று கூறி உண்ணா நிலை என்ற ஆயுதத்தை கையிலெடுத்தார். ஆனால், ஆட்சியாளர்கள் அதைக் கண்டு அச்சப்பட வில்லை. சங்கரலிங்கமும் தன் போராட்டத்தை கை விடவில்லை. ஒரு நாள், இருநாள் அல்ல, தொடர்ந்து 75 நாட்கள் உண்ணா நிலையிலேயே இருந்து தன்னுடைய கோரிக்கை நிறைவேறாமலே மூச்சை நிறுத்திக் கொள்ளும் நிலைக்கு, அவர் உடல்நிலை போய் விட்டது.
உயிர்நீத்தார், சங்கரலிங்கம்
அக்டோபர் 10, 1956- வீட்டின் முன்பாக உண்ணாநிலையில் இருந்த சங்கரலிங்கம் மயங்கிக் கீழே சாய்ந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு போய் காப்பாற்றி விடும் முயற்சியில் பலர் தீவிரம் காட்டினர். அவர்களின் முயற்சியை மதிப்பது போல அடுத்த இரண்டு நாட்கள் வரை மட்டுமே உயிரோடு இருந்த சங்கரலிங்கம் 13-ந்தேதி இதயத்துடிப்பை நிறுத்திக் கொண்டார். தனியாக மொழிவழி மாகாணம், அரசியல் தலைவர்கள் தங்களின் ஆடம்பர செலவினங்களை குறைக்க வேண்டும், இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை முன் வைத்துதான் சங்கரலிங்கத்தின் உண்ணாநிலை பயணம் இருந்தது... ஆனால், அதில் தமிழ்நாடு என்ற ஒரு கோரிக்கைப் பயணம் மட்டும் வெற்றிப் பயணமானது, ஆனால், அதைப் பார்க்கத்தான் அவர் இல்லை.
சமாதானம் செய்த அண்ணா
சங்கரலிங்கத்தின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டு அவர் வீட்டுக்கே காமராஜர், அண்ணா, ஜீவா, ம.பொ.சி. என்று பல தலைவர்கள் போய் பேசிப் பார்த்தும் சங்கரலிங்கம் மசியவில்லை. என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தும் நேரம், மத்திய மாநில அரசுகளிடம் பேசிப் பாருங்கள் என்பது போலத்தான் அவர்களை பார்த்தார். சங்கரலிங்கம் தமிழுக்காக, தமிழ்நாடு என்ற பெயருக்காக உண்ணா நிலையைக் கையிலெடுக்க, ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் நடத்திய தொடர் போராட்டங்களே உத்வேகத்தை கொடுத்தன.
தோல்வியும், வெற்றியும்
1962--_ மார்ச்ச்சில் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் கோரும் தனி மசோதாவே கொண்டு வரப்பட்டும் அதை தோல்வியடையச் செய்தனர். 1964- ஜனவரியில் மெட்றாஸ் மாநில சட்டமன்றத்திலும் தமிழ்நாடு பெயர் கோரும் தீர்மானம் தள்ளுபடியானது. பெரும் முயற்சிக்குப் பின்னர் 23.11.1968-ல் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் செய்யப் பட்டது. இதே நாள்( ஜனவரி 14) 1968-ல் தமிழ்நாடு என்ற பெயர் முழுமை பெற்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அண்ணாவின் பண்பு
... அண்ணா, உங்களுக்கு இப்போதுள்ள உடல் சூழ்நிலையில் ஓய்வு அவசியம். மெட்றாஸ் ஸ்டேட்டுக்கு தமிழ்நாடு என்று உங்கள் ஆட்சிகாலத்தில் தான் பெயர் சூட்டப் பெற்றது, இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். தயவு செய்து ஓய்வெடுங்கள், இப்போது இதில் பங்கேற்க வேண்டாம்... என்று தொண்டர்கள் மட்டுமல்ல, சிகிச்சை அளித்த மருத்துவர்களும் மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். ஆனால், அந்த பொன்னான தருணத்தை இழக்க விரும்பாத அண்ணா, தமிழ்நாடு என்ற பெயர் சூட்டு விழாவில் பங்கேற்றார், ஒரு தமிழனாக...
நன்றி விகடன் செய்தி
ஒவ்வொரு விஷயத்தையும் போராடியே பெற்று வந்திருக்கிறது இந்த தமிழ் மண். மதறாஸ் மாநிலம் என்றும் மெட்றாஸ் ஸ்டேட் என்றும் 1967 வரை இப்படித்தான் அழைக்கப் பட்டு வந்தது, நம் தமிழ்நாடு. அதை தமிழ்நாடு என்று மாற்றுவதற்கு நம் தமிழாய்ந்த முன்னோடிகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் கொஞ்சமல்ல... மெட்றாஸ் ஸ்டேட்டை, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அழைத்த அந்த நாள் இன்றுதான்.
சங்கரலிங்கமும் தமிழ்நாடும்
தமிழ்நாடு என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதெல்லாம் யாரும், சங்கரலிங்க நாடார் எனப்படும் கண்டன் சங்கரலிங்கத்தை மறந்து விடக் கூடாது. இதை நம்முடைய சந்ததியினருக்கும் தாய்ப்பாலோடு புகட்டி வளர்க்க வேண்டும். அப்படி என்னதான் செய்தார் சங்கரலிங்கம் ? பிள்ளைகள், தங்கள் பள்ளியில் இதைப் பாடமாக படித்து தெரிந்து கொண்டிருக்கலாம், தெரிந்து கொள்ளாமலும் இருக்கலாம்... சங்கரலிங்கம் யார்? அண்ணா யார்? ம.பொ.சி. யார் ? மொழி, மாநில உரிமைகளில் இவர்களின் பங்களிப்பு எவ்விதம் அமைந்திருந்தது, சொல்லிக் கொடுப்பது நம் கடமையும் கூட.
தமிழ்நாடு பெயர் கேட்டு மனு
எந்தவொரு அரசியல் பின்னணியோ, அரசியல் கட்சியில் பொறுப்பிலோ இல்லாதிருந்தவர், விருதுநகர் மாவட்டத்தின் மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த சங்கரலிங்கம். அதே வேளையில் வசதியான பின்புலம் கொண்டிருந்தவர். எத்தனை காலம்தான் என் தாய்த்தமிழ் பேசும் மாநிலத்தை மெட்றாஸ் ஸ்டேட் என்று சொல்லிக் கொண்டிருப்பீர்கள், இனியும் அது முடியாது என்று வெளிப்படையாய் கொதித்தவர். பல மனுக்களை மாநிலத்தில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் அரசுக்கும், மத்திய அரசுக்கும் கொடுத்துக் கொடுத்து சோர்ந்து போனார் சங்கரலிங்கம்.
உண்ணாநிலை முடிவு
அந்தவேளையில்தான் டெல்லியின் செங்கோட்டையே நடுங்கும் விதமாக, அகிம்சா முறையில் சாகும் வரை அல்லது கோரிக்கை நிறைவேறும் வரை தண்ணீர் கூட அருந்த மாட்டேன் என்று கூறி உண்ணா நிலை என்ற ஆயுதத்தை கையிலெடுத்தார். ஆனால், ஆட்சியாளர்கள் அதைக் கண்டு அச்சப்பட வில்லை. சங்கரலிங்கமும் தன் போராட்டத்தை கை விடவில்லை. ஒரு நாள், இருநாள் அல்ல, தொடர்ந்து 75 நாட்கள் உண்ணா நிலையிலேயே இருந்து தன்னுடைய கோரிக்கை நிறைவேறாமலே மூச்சை நிறுத்திக் கொள்ளும் நிலைக்கு, அவர் உடல்நிலை போய் விட்டது.
உயிர்நீத்தார், சங்கரலிங்கம்
அக்டோபர் 10, 1956- வீட்டின் முன்பாக உண்ணாநிலையில் இருந்த சங்கரலிங்கம் மயங்கிக் கீழே சாய்ந்தார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு போய் காப்பாற்றி விடும் முயற்சியில் பலர் தீவிரம் காட்டினர். அவர்களின் முயற்சியை மதிப்பது போல அடுத்த இரண்டு நாட்கள் வரை மட்டுமே உயிரோடு இருந்த சங்கரலிங்கம் 13-ந்தேதி இதயத்துடிப்பை நிறுத்திக் கொண்டார். தனியாக மொழிவழி மாகாணம், அரசியல் தலைவர்கள் தங்களின் ஆடம்பர செலவினங்களை குறைக்க வேண்டும், இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை முன் வைத்துதான் சங்கரலிங்கத்தின் உண்ணாநிலை பயணம் இருந்தது... ஆனால், அதில் தமிழ்நாடு என்ற ஒரு கோரிக்கைப் பயணம் மட்டும் வெற்றிப் பயணமானது, ஆனால், அதைப் பார்க்கத்தான் அவர் இல்லை.
சமாதானம் செய்த அண்ணா
சங்கரலிங்கத்தின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டு அவர் வீட்டுக்கே காமராஜர், அண்ணா, ஜீவா, ம.பொ.சி. என்று பல தலைவர்கள் போய் பேசிப் பார்த்தும் சங்கரலிங்கம் மசியவில்லை. என்னிடம் பேச்சு வார்த்தை நடத்தும் நேரம், மத்திய மாநில அரசுகளிடம் பேசிப் பாருங்கள் என்பது போலத்தான் அவர்களை பார்த்தார். சங்கரலிங்கம் தமிழுக்காக, தமிழ்நாடு என்ற பெயருக்காக உண்ணா நிலையைக் கையிலெடுக்க, ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் நடத்திய தொடர் போராட்டங்களே உத்வேகத்தை கொடுத்தன.
தோல்வியும், வெற்றியும்
1962--_ மார்ச்ச்சில் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பெயர் கோரும் தனி மசோதாவே கொண்டு வரப்பட்டும் அதை தோல்வியடையச் செய்தனர். 1964- ஜனவரியில் மெட்றாஸ் மாநில சட்டமன்றத்திலும் தமிழ்நாடு பெயர் கோரும் தீர்மானம் தள்ளுபடியானது. பெரும் முயற்சிக்குப் பின்னர் 23.11.1968-ல் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் செய்யப் பட்டது. இதே நாள்( ஜனவரி 14) 1968-ல் தமிழ்நாடு என்ற பெயர் முழுமை பெற்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அண்ணாவின் பண்பு
... அண்ணா, உங்களுக்கு இப்போதுள்ள உடல் சூழ்நிலையில் ஓய்வு அவசியம். மெட்றாஸ் ஸ்டேட்டுக்கு தமிழ்நாடு என்று உங்கள் ஆட்சிகாலத்தில் தான் பெயர் சூட்டப் பெற்றது, இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். தயவு செய்து ஓய்வெடுங்கள், இப்போது இதில் பங்கேற்க வேண்டாம்... என்று தொண்டர்கள் மட்டுமல்ல, சிகிச்சை அளித்த மருத்துவர்களும் மன்றாடிக் கேட்டுக் கொண்டனர். ஆனால், அந்த பொன்னான தருணத்தை இழக்க விரும்பாத அண்ணா, தமிழ்நாடு என்ற பெயர் சூட்டு விழாவில் பங்கேற்றார், ஒரு தமிழனாக...
நன்றி விகடன் செய்தி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: வரலாற்றில் இன்று - ஜனவரி
அந்த பொன்னான தருணத்தை இழக்க விரும்பாத அண்ணா,
மிழ்நாடு என்ற பெயர் சூட்டு விழாவில் பங்கேற்றார், ஒரு தமிழனாக...
-
-
மிழ்நாடு என்ற பெயர் சூட்டு விழாவில் பங்கேற்றார், ஒரு தமிழனாக...
-
-
Re: வரலாற்றில் இன்று - ஜனவரி
2001 - விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது.
விக்கிப்பீடியா என்பது, இலாப நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும், பன்மொழி, கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமாகும்.
தமிழ் விக்கிப்பீடியாவின் 60000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன.
பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும். மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது.
சனவரி 2016 வரையில், விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயற்படுகிறது. இது இணையத்தளத்தில் இயங்கும் உசாத்துணைப் பகுதிகளிலேயே மிகவும் பெரியதும், அதிகப் பிரபலமான ஒன்றுமாகும்.
மேலும், இது அலெக்சா இணையத்தளத்தில் காணப்படும் இணையத்தளங்களின் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளதோடு, உலகளாவிய ரீதியில் அண்ணளவாக 365 மில்லியன் வாசகர்களையும் கொண்டுள்ளது.
விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் சனவரி 15, 2001-இல் ஆரம்பிக்கப்பட்டது. சாங்கர் அவர்கள், விக்கிப்பீடியா என்ற சொல்லை, விக்கி (ஒருவகை கூட்டாக்க இணையத்தளம். இது ஹவாய் மொழியில் "விரைவு" எனப் பொருள்படும் விக்கி என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.)
மற்றும் பீடியா (கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலச் சொல்லான என்சைக்ளோபீடியாவிலிருந்து), ஆகிய சொற்களின் இணைப்பாக உருவாக்கினார்.
2006-இல், டைம் சஞ்சிகை, உலகளாவிய ரீதியில் இணைய மக்கள் கூட்டுப் பங்களிப்பின் துரித வளர்ச்சிக்கு யூடியூப், மைஸ்பேஸ் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு மேலதிகமாக விக்கிப்பீடியாவினது பங்களிப்பையும் குறிப்பிட்டுள்ளது.
விக்கிப்பீடியா, ஒரு செய்தி ஊடகமாகவும் குறிப்பிடப் படுகிறது. இதற்குக் காரணம், முக்கியச் செய்திகள் தொடர்பான கட்டுரைகள் அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதேயாகும்.
விக்கிப்பீடியா என்பது, இலாப நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும், கூட்டாகத் தொகுக்கப்படும், பன்மொழி, கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியமாகும்.
தமிழ் விக்கிப்பீடியாவின் 60000க்கும் மேற்பட்ட கட்டுரைகளுடன் சேர்த்து இதன் மொத்தக் கட்டுரைகளான 24 மில்லியன் கட்டுரைகளும் உலகெங்கிலுமுள்ள தன்னார்வலர்களால் கூட்டாக எழுதப்படுகின்றன.
பெரும்பாலும் இதன் எல்லாக் கட்டுரைகளும், இதனைப் பயன்படுத்தும் எவராலும் தொகுக்கப்பட முடியும். மேலும் இது கிட்டத்தட்ட 100,000 முனைப்பான பங்களிப்பாளர்களையும் கொண்டுள்ளது.
சனவரி 2016 வரையில், விக்கிப்பீடியா 285 மொழிகளில் செயற்படுகிறது. இது இணையத்தளத்தில் இயங்கும் உசாத்துணைப் பகுதிகளிலேயே மிகவும் பெரியதும், அதிகப் பிரபலமான ஒன்றுமாகும்.
மேலும், இது அலெக்சா இணையத்தளத்தில் காணப்படும் இணையத்தளங்களின் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளதோடு, உலகளாவிய ரீதியில் அண்ணளவாக 365 மில்லியன் வாசகர்களையும் கொண்டுள்ளது.
விக்கிப்பீடியா, ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் சனவரி 15, 2001-இல் ஆரம்பிக்கப்பட்டது. சாங்கர் அவர்கள், விக்கிப்பீடியா என்ற சொல்லை, விக்கி (ஒருவகை கூட்டாக்க இணையத்தளம். இது ஹவாய் மொழியில் "விரைவு" எனப் பொருள்படும் விக்கி என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.)
மற்றும் பீடியா (கலைக்களஞ்சியத்தின் ஆங்கிலச் சொல்லான என்சைக்ளோபீடியாவிலிருந்து), ஆகிய சொற்களின் இணைப்பாக உருவாக்கினார்.
2006-இல், டைம் சஞ்சிகை, உலகளாவிய ரீதியில் இணைய மக்கள் கூட்டுப் பங்களிப்பின் துரித வளர்ச்சிக்கு யூடியூப், மைஸ்பேஸ் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றுக்கு மேலதிகமாக விக்கிப்பீடியாவினது பங்களிப்பையும் குறிப்பிட்டுள்ளது.
விக்கிப்பீடியா, ஒரு செய்தி ஊடகமாகவும் குறிப்பிடப் படுகிறது. இதற்குக் காரணம், முக்கியச் செய்திகள் தொடர்பான கட்டுரைகள் அடிக்கடி இற்றைப்படுத்தப்படுவதேயாகும்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வரலாற்றில் இன்று - ஜனவரி
2003 - கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமி திரும்புகையில் வெடித்துச் சிதறியது.
கொலம்பியா விண்வெளி ஓடம் (Space Shuttle Columbia) நாசாவின் ஒரு விண்கலம் ஆகும். இதுவே முதன் முதலில் விண்ணில் செலுத்தப்பட்ட விண்வெளி ஓடம் ஆகும்.
இந்த முதற் பயணம் STS-1 என்ற விண்கலத்தை ஏப்ரல் 12, 1981 இல் ஏற்றிச் சென்று ஏப்ரல் 14, 1981 இல் திரும்பியது.
பெப்ரவரி 1, 2003 இல் கொலம்பியா தனது 28வது பயணத்தை வெற்றிகரமாக முடித்து பூமி திரும்புகையில் டெக்சாசுக்கு மேலே வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா என்ற இந்திய பெண் உட்பட அனைத்து ஏழு விண்வெளிவீரர்களும் கொல்லப்பட்டனர்.
கொலம்பியா விண்வெளி ஓடம் (Space Shuttle Columbia) நாசாவின் ஒரு விண்கலம் ஆகும். இதுவே முதன் முதலில் விண்ணில் செலுத்தப்பட்ட விண்வெளி ஓடம் ஆகும்.
இந்த முதற் பயணம் STS-1 என்ற விண்கலத்தை ஏப்ரல் 12, 1981 இல் ஏற்றிச் சென்று ஏப்ரல் 14, 1981 இல் திரும்பியது.
பெப்ரவரி 1, 2003 இல் கொலம்பியா தனது 28வது பயணத்தை வெற்றிகரமாக முடித்து பூமி திரும்புகையில் டெக்சாசுக்கு மேலே வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா என்ற இந்திய பெண் உட்பட அனைத்து ஏழு விண்வெளிவீரர்களும் கொல்லப்பட்டனர்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வரலாற்றில் இன்று - ஜனவரி
@ கார்த்திக் செயராம் & ராம் ஐயா.மெட்றாஸ் ஸ்டேட், தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அழைத்த நாள் இன்று
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வரலாற்றில் இன்று - ஜனவரி
இல்லையில்லை......... வீட்டுல மட்ட்ட்ட்டும் தான்.யினியவன் wrote:பொங்கலை சமைத்தாலும்
பொங்கலை ரசிக்க ருசிக்க
இன்னிக்கு உணவகத்தை
தேடி போயிடுவீங்கல்ல?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வரலாற்றில் இன்று - ஜனவரி
1917 - எம். ஜி. இராமச்சந்திரன், தமிழ்நாட்டின் முதலமைச்சர் பிறந்த தினம் இன்று.
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.
எம். ஜி. சக்கரபாணி அவர்களின் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். அண்ணல் காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இணைந்தார்.
சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.
இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.
எம். ஜி. சக்கரபாணி அவர்களின் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். அண்ணல் காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று தேசிய முற்போக்கு காங்கிரசில் இணைந்தார்.
சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.
இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: வரலாற்றில் இன்று - ஜனவரி
-
'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...'
என சினிமாவில் பாடியதை போல வாழ்ந்து காட்டியவர்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.,
சினிமா துறையிலும் சரி... அரசியல் துறையிலும் சரி தனி முத்திரை பதித்தவர்.
Page 8 of 13 • 1, 2, 3 ... 7, 8, 9 ... 11, 12, 13
Similar topics
» வரலாற்றில் இன்று - ஜனவரி
» வரலாற்றில் இன்று - மே
» வரலாற்றில் இன்று....!
» இன்றைய நாள்
» வரலாற்றில் இன்று !
» வரலாற்றில் இன்று - மே
» வரலாற்றில் இன்று....!
» இன்றைய நாள்
» வரலாற்றில் இன்று !
Page 8 of 13
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|