ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...

+5
shobana sahas
சசி
T.N.Balasubramanian
ayyasamy ram
K.Senthil kumar
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Empty சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...

Post by K.Senthil kumar Mon Dec 28, 2015 5:31 am

சீர் கெட்டுவரும் சினிமா....சீர்கெடுக்கும் சினிமா...

சினிமாவுக்கு போனோமுங்க
சினிமாவுக்கு போனோமுங்க
சீர்கெடுக்கும் சினிமா பாக்க
சிரிச்சி சிரிச்சி போனோமுங்க...
படம் பாக்குற நேரத்துல
பயமாத்தான் இருக்குது
ரொம்ப படபடப்பா இருக்குது
அது வன்முறைய தூண்டுது
அதுல வரமுறையும் இல்லெங்க

அந்த கால படங்களெல்லாம்
பகுத்தறிவ வளத்துச்சு
நல்ல பண்பையுமே வளத்துச்சு
இந்தகால படங்களெல்லாம்
இச்சையத்தான் தூண்டுது..
வார்த்த கொச்சையாக இருக்குது-அந்த
கொச்சையான வார்த்தையெல்லாம்
கொட்டி கொட்டி கெடக்குது –அது
கொழந்த கொனத்த கெடுக்குது...
அப்ப குடும்பத்தோடு பாக்க போனா
குதுகலமா இருக்கலாம் -அங்க
குலுங்கி குலுங்கி சிரிக்கலாம்
இப்ப குடும்பத்தோடு பாக்க போனா
கோணி நாணி இருக்கணும்-பச்ச
கொழந்த மொகத்த மறைக்கணும்......
அப்ப சினமாவுல நடிச்சவங்க
சிறப்பாத் தான் இருந்தாங்க
ரொம்ப சிறப்பாத்தான் இருந்தாங்க
இப்ப சினிமாவுல இருக்கறவங்க
சிறப்பு ஒன்னும் இல்லெங்க-பொழப்பு
சிரிப்பாதான் சிரிக்குதுங்க..

சண்ட அடிச்சு மண்ட உடச்சு -மனசுல
மருந்த ஏத்துறாங்க  
வெஷ மருந்து ஏத்துறாங்க...
புகைய புடுச்சு மதுவ குடிச்சு
புத்தி புகட்டுறாங்க
கெட்ட புத்தி புகட்டுறாங்க...
விவரமில்லா பசங்க அத
வெரச்சு பாக்குறாங்க....
ரொம்ப விரும்பி பாக்குறாங்க..
வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போளக்குறாங்க...
பெருசா வாய போளக்குறாங்க..பசங்க
பாத்துபுட்டு பழகிக்கிட்டு
வரிஞ்சி கட்டுறாங்க
வம்புக்கு வரிஞ்சி கட்டுறாங்க...
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.

அரிதாரம் பூசிக்கிட்டு
அரசமைக்க ஆசைப்பட்டு
அருமையாத்தான் நடிக்கிறான்
அளவில்லாம நடிக்கிறான்..
அரசு பதவிபிடிக்க அறிஞ்சு நல்லா
திட்டம் தீட்டுறாங்க..
திருட்டு திட்டம் தீட்டுறாங்க...
அதுக்கு வார்த்தை ஜாலம் ரொம்ப நல்லா
வரியில் சேர்க்குறாங்க...
பாட்டு வரியில் சேர்க்குறாங்க..
அந்த திருட்டு வேஷம் தெரியாம
மக்கள் இருக்குறாங்க..
நம்ம மக்கள் இருக்குறாங்க...அவங்க
பொல்லாத மனிசர் பேசும்
பொறியில் விழுகுறாங்க...
பேச்சு  பொறியில் விழுகுராங்க....
பொறிபோல வசனம் பேசி நல்லா
மனச புடிக்குறாங்க
மக்கள் மனச புடிக்குறாங்க.....
திருடன் தடுக்கி விழுந்தால் கூட
தீ குளிக்கிறாங்க
பசங்க தீ குளிக்கிறாங்க
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.

போலிஸ் வேஷம் போட்ட ஆளு
பொழப்பு சிரிச்சு போச்சு
இங்க பொழப்பு சிரிச்சு போச்சு..
பொண்ணுங்க எல்லாம் கொடி புடிக்க
ஓடி ஒளிஞ்சாச்சு
அவங்க ஓடி ஒளிஞ்சாச்சு....
வெளியில் மட்டும் வெள்ளை உருவ
பவுடர் பூசிக்கொண்டு
உள்ளுக்குள்ள தூசுபடிஞ்ச
மனச வச்சுக்கொண்டு
இது வரையில் ஏமாத்தி
சொன்ன சேதி போதும்
இல்லேனா அதுக்கு இனிமேல்
இருண்ட காலமாகும்.........
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Empty Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...

Post by ayyasamy ram Mon Dec 28, 2015 5:42 am

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... 103459460 சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... 3838410834
-
தீபத்தின் ஒளியில்..திருக்குறளும் படிக்கலாம்...ஒரு ஊரையும் கொளுத்தலாம்.
என்று சொல்வார்கள்...
-
எல்லாவற்றிலும் நன்மையும், தீமையும் உண்டு
தீமைகளை புறந்தள்ளி, நன்மைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
-
அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த காந்திஜி சத்தியத்தைக்
கடைப்பிடித்தார். உண்மையே வெல்லும், பொய் சொல்லக் கூடாது
என்று அந்த நாடகம் போதித்தது...
-
இன்றைய காலகட்டத்தில் அதே நாடகம், ஒரு சிலரது மனதில்
பொய் பேசினால்தான் வாழ்க்கையை சுலபமாக ஓட்ட
முடியும் என்ற எண்ணத்தைப் பதிக்கலாம்...
-
எல்லாம் கலிகாலத்தின் மகிமை...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Empty Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...

Post by K.Senthil kumar Mon Dec 28, 2015 5:50 am

ayyasamy ram wrote:சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... 103459460 சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... 3838410834
-
தீபத்தின் ஒளியில்..திருக்குறளும் படிக்கலாம்...ஒரு ஊரையும் கொளுத்தலாம்.
என்று சொல்வார்கள்...
-
எல்லாவற்றிலும் நன்மையும், தீமையும் உண்டு
தீமைகளை புறந்தள்ளி, நன்மைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
-
அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த காந்திஜி சத்தியத்தைக்
கடைப்பிடித்தார். உண்மையே வெல்லும், பொய் சொல்லக் கூடாது
என்று அந்த நாடகம் போதித்தது...
-
இன்றைய காலகட்டத்தில் அதே நாடகம், ஒரு சிலரது மனதில்
பொய் பேசினால்தான் வாழ்க்கையை சுலபமாக ஓட்ட
முடியும் என்ற எண்ணத்தைப் பதிக்கலாம்...
-
எல்லாம் கலிகாலத்தின் மகிமை...!!
மேற்கோள் செய்த பதிவு: 1183442

வருகிற முக்கால் வாசி படங்கள் கோரமும் கொடூரமும் தாங்கித்தான் வருகிறது.
அதைதான் பதிவு செய்திருக்கிறேன்..
தங்களின் கருத்துக்கு நன்றி ஐயா..


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Empty Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...

Post by ayyasamy ram Mon Dec 28, 2015 6:04 am


வருகிற முக்கால் வாசி படங்கள் கோரமும் கொடூரமும் தாங்கித்தான் வருகிறது.

என்பதும் மறுக்க முடியாத உண்மைதான்
-
இந்தக்கால நகைச்சுவைகளும் அப்படித்தான் இருக்கிறது...
-
மனைவி கணவனிடம் சொல்கிறாள்...
நம்ம பையன் மொட்டை மாடியில் சிகரெட் பிடிக்கிறான்
போய் என்ன்னான்னு கேளுங்க என்கிறாள்
-
கணவன் சொல்கிறான்....காலையிலே கேட்டப்பவே
எனக்கு ஒரு சிகரெட் கொடுத்துட்டான்....இனிமே தர
மாட்டான்...!
-
கண்டிக்க வேண்டிய தகப்பனின் நிலை இப்படித்தான்
இருக்கிறது ...!!
-
சாராயக் கடைகள் அமுலில் இருந்த போது, கடைக்கு
பத்து வயது மகனுடன் வந்து அவனுக்கும் சாராயம்
வாங்கிக் கொடுத்த தகப்பன்மார்களை நான் நேரிடையாக
கண்டுள்ளேன்...
அதாவது டீ சாப்பிடும் தகப்பன் மகனுக்கும் டீ வாங்கிக்
கொடுப்பது போல...
-
நடிகை பத்மினி நடித்த ஒரு இந்தி படத்தில் அருவியில் குளிப்பது
போல ஒரு சீன் இருந்தது....அந்த காட்சியை முன்னிட்டு
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர்,
இந்தி மொழிக்கு  எதிர்ப்பு நிலவிய கால கட்டத்தில் அந்த
படம் இந்தி மொழி தெரியாதவர்களால் பார்க்கப்பட்டு பல
வாரம் ஓடியது....
-
இப்படி சில முரண்கள் இருக்கத்தான் செய்கின்றன...
-
அந்தக்கால நினைவுகள் ரமணியன் தொடருவார்...!!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Empty Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...

Post by K.Senthil kumar Mon Dec 28, 2015 6:20 am

கவிதையில் முரண் இருந்தால் ரசிக்கலாம்
கலையுலகில் முரணிருந்தால் சகிக்க முடியவில்லை ஐயா....


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Empty Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...

Post by T.N.Balasubramanian Mon Dec 28, 2015 7:42 pm

[quote="ayyasami ram"]நடிகை பத்மினி நடித்த ஒரு இந்தி படத்தில் அருவியில் குளிப்பது
போல ஒரு சீன் இருந்தது....அந்த காட்சியை முன்னிட்டு
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர்,
இந்தி மொழிக்கு  எதிர்ப்பு நிலவிய கால கட்டத்தில் அந்த
படம் இந்தி மொழி தெரியாதவர்களால் பார்க்கப்பட்டு பல
வாரம் ஓடியது....
-
இப்படி சில முரண்கள் இருக்கத்தான் செய்கின்றன...
-
அந்தக்கால நினைவுகள் ரமணியன் தொடருவார்...!!!

என்ன சாமி நம்மலே மாட்டிவிடுறீங்க !
ஏதோ கொஞ்சம் கொஞ்சம் ஹிந்தி புரிந்த காரணதிற்காகவும் ,
ராஜ்கபூர் நடிப்பு பிடிக்கும் என்பதாலும் ,
ஷங்கர் ஜெய்கிஷன் ம்யுசிக் பிடிக்கும் என்பதாலும்
"ஜிஸ் தேஷ் மெ கங்கா  பஹ்தி ஹை" பார்த்தது உண்டு .
அதே போல் "சங்கம் " சினிமாவும் பார்த்ததுண்டு .
சங்கம் நீண்ட நேர சினிமா --2 இடைவெளிகள் .
அதில் தென்னிந்தியா தாரகை வைஜயந்தி மாலாநடித்திருப்பார் .
ஒரு குளத்தில் வைஜயந்தி மாலா குளித்துக் கொண்டு இருப்பார் .
மேலே மரத்தில் ராஜ்கபூர் உட்கார்ந்து கொண்டே ,
"போல் ராதா போல் ,சங்கம்  ஹோகா ஹி நஹி  " என்று பாடிக்கொண்டே
crane shot இல் வைஜயந்தியை படம் பிடித்து இருப்பார் .
அதில் அவர் முழுமையாக ,நினைத்தபடி எடுக்க முடியாதலால் ,
பத்மினியை பேருக்கு ஒரு துணியை சுற்றி ,அருவியில் அவர் அழகை எல்லாம்
காண்பித்து சந்தோஷமடைந்தார் ., ஜிஸ் தேஷ் மெ கங்கா பஹ்தி ஹை மூலமாக .

தூங்கி கொண்டு இருந்த என்னை எழுப்பிய a ram அவர்களை சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Empty Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...

Post by T.N.Balasubramanian Mon Dec 28, 2015 7:52 pm

செந்தில் குமார் ,
ஒரு parable (நீதி கதை ) ஐ அழகான நீண்ட கவிதையாக மாற்றி
தந்துள்ளீர் . அருமையாக இருக்கிறது . ரசித்தேன் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Empty Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...

Post by T.N.Balasubramanian Mon Dec 28, 2015 8:02 pm

K.Senthil kumar wrote:கவிதையில் முரண் இருந்தால் ரசிக்கலாம்
கலையுலகில் முரணிருந்தால் சகிக்க முடியவில்லை ஐயா....
மேற்கோள் செய்த பதிவு: 1183450

சினிமா , TV சீரியல் என்ற கலை உலகம் ஒரு சாக்கடை .
உழைப்பவர்கள் பலர் . பலன் அடைபவர்கள் சிலர் .
பலன் பெறவேண்டும் என்பதற்காக , எதையும் தர தயங்காதவர்கள் பலர் .
தான் பலன் அடையவேண்டும் என்பதற்காக சக கலைஞரை பற்றி மோசமாக
பிரசாரம்   செய்பவர்கள் . இந்திய தவளைகள் கதைதான், இந்த கலைஞர் கள்.

ரமணியன


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Empty Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...

Post by K.Senthil kumar Tue Dec 29, 2015 2:44 am

இந்த பாடல் ஒரு தெருக்கூத்தில் கலைவாணரும் மதுரம் அவர்களும் பாடினால் எவ்வாறு பாடுவார்கள் என்ற கற்பனையில் எழுதப்பட்டவை. இதோ எண்ணத்தில் எவ்வாறு உதித்ததோ அப்படியே  இங்கு பதிவிடுகிறேன் ..

சினிமாவுக்கு போனோமுங்க                                                                                                  (ஆண் பெண்)
சினிமாவுக்கு போனோமுங்க
சீர்கெடுக்கும் சினிமா பாக்க
சிரிச்சி சிரிச்சி போனோமுங்க...

படம் பாக்குற நேரத்துல                                                                                                                    பெண்
பயமாத்தான் இருக்குது
ரொம்ப படபடப்பா இருக்குது
அது வன்முறைய தூண்டுது
அதுல வரமுறையும் இல்லெங்க

அந்த கால படங்களெல்லாம்                                                                                                              ஆண்
பகுத்தறிவ வளத்துச்சு
நல்ல பண்பையுமே வளத்துச்சு
இந்தகால படங்களெல்லாம்
இச்சையத்தான் தூண்டுது..
வார்த்த கொச்சையாக இருக்குது-அந்த
கொச்சையான வார்த்தையெல்லாம்
கொட்டி கொட்டி கெடக்குது –அது
கொழந்த கொனத்த கெடுக்குது...

அப்ப குடும்பத்தோடு பாக்க போனா                                                                                                    
குதுகலமா இருக்கலாம் -அங்க
குலுங்கி குலுங்கி சிரிக்கலாம்
இப்ப குடும்பத்தோடு பாக்க போனா
கோணி நாணி இருக்கணும்-பச்ச
கொழந்த மொகத்த மறைக்கணும்......

அப்ப சினமாவுல நடிச்சவங்க                                                                                                              
சிறப்பதான் இருந்தாங்க
ரொம்ப சிறப்பாதான் இருந்தாங்க
இப்ப சினிமாவுல இருக்கறவங்க
சிறப்பு ஒன்னும் இல்லெங்க-பொழப்பு
சிரிப்பாதான் சிரிக்குதுங்க..

சண்ட அடிச்சு மண்ட உடச்சு -மனசுல                                                                                                 
மருந்த ஏத்துறாங்க  
வெச மருந்து ஏத்துறாங்க...
புகைய புடுச்சு மதுவ குடிச்சு
புத்தி புகட்டுறாங்க
கெட்ட புத்தி புகட்டுறாங்க...

விவரமில்லா பசங்க அத                                                                                                                  
வெரச்சு பாக்குறாங்க....
ரொம்ப விரும்பி பாக்குறாங்க..
வித்தையெல்லாம் பாத்துபுட்டு
வாய போலக்குறாங்க...
பெருசா வாய போலக்குறாங்க..

பசங்க பாத்துபுட்டு பழகிக்கிட்டு                                                                                                           
வரிஞ்சி கட்டுறாங்க
வம்புக்கு வரிஞ்சி கட்டுறாங்க...
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க.

அரிதாரம் பூசிக்கிட்டு                                                                                                                          
அரசமைக்க ஆசைப்பட்டு
அருமையாத்தான் நடிக்கிறான்
அளவில்லாம நடிக்கிறான்..

அரசு பதவிபிடிக்க அறிஞ்சு நல்லா                                                                                                    
திட்டம் தீட்டுறாங்க..
திருட்டு திட்டம் தீட்டுறாங்க...
அதுக்கு வார்த்தை ஜாலம் ரொம்ப நல்லா
வரியில் சேர்க்குறாங்க...
பாட்டு வரியில் சேர்க்குறாங்க..
அந்த திருட்டு வேஷம் தெரியாம
மக்கள் இருக்குறாங்க..
நம்ம மக்கள் இருக்குறாங்க...அவங்க
பொல்லாத மனிசர் பேசும்                                                                                                                  
பொறியில் விழுகுறாங்க...
பேச்சு  பொறியில் விழுகுராங்க....
பொறிபோல வசனம் பேசி
மனச புடிக்குறாங்க
மக்கள் மனச புடிக்குறாங்க.....

திருடன் தடுக்கி விழுந்தால் கூட                                                                                                        
தீ குளிக்கிறாங்க
பசங்க தீ குளிக்கிறாங்க
இந்த அசிங்கமெல்லாம் நடப்பதெல்லாம்
இந்த நாட்டில் தாங்க
இந்த நம்ம நாட்டில் தாங்க. ...

போலிஸ் வேஷம் போட்ட ஆளு                                                                                                         
பொழப்பு சிரிச்சு போச்சு
இங்க பொழப்பு சிரிச்சு போச்சு..
பொண்ணுங்க எல்லாம் கொடி புடிக்க
ஓடி ஒழுஞ்சாச்சு
அவங்க ஓடி ஒழுஞ்சாச்சு....

வெளியில் மட்டும்                                                                                                                 ஆண் பெண் 
வெள்ளை உருவ                                                                                      
பவுடர் பூசிக்கொண்டு
உள்ளுக்குள்ள தூசுபடிஞ்ச
மனச வச்சுக்கொண்டு
இது வரையில் ஏமாத்தி
சொன்ன சேதி போதும்
இல்லேனா அதுக்கு இனிமேல்
இருண்ட காலமாகும்.........


Last edited by T.N.Balasubramanian on Tue Dec 29, 2015 2:24 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Empty Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...

Post by K.Senthil kumar Tue Dec 29, 2015 2:47 am

T.N.Balasubramanian wrote:
K.Senthil kumar wrote:கவிதையில் முரண் இருந்தால் ரசிக்கலாம்
கலையுலகில் முரணிருந்தால் சகிக்க முடியவில்லை ஐயா....
மேற்கோள் செய்த பதிவு: 1183450

சினிமா , TV சீரியல் என்ற கலை உலகம் ஒரு சாக்கடை .
உழைப்பவர்கள் பலர் . பலன் அடைபவர்கள் சிலர் .
பலன் பெறவேண்டும் என்பதற்காக , எதையும் தர தயங்காதவர்கள் பலர் .
தான் பலன் அடையவேண்டும் என்பதற்காக சக கலைஞரை பற்றி மோசமாக
பிரசாரம்   செய்பவர்கள் . இந்திய தவளைகள் கதைதான், இந்த கலைஞர் கள்.

ரமணியன
மேற்கோள் செய்த பதிவு: 1183561



தங்களின் வரிகளும் மிக அழகாக விளக்குகின்றன..
நன்றி ஐயா..


மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா... Empty Re: சீர் கெட்டுவரும் சினிமா,,, சீர்கெடுக்கும் சினிமா...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum