புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
91 Posts - 61%
heezulia
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
7 Posts - 5%
eraeravi
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
1 Post - 1%
viyasan
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
19 Posts - 3%
prajai
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_m10சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 19, 2016 6:18 pm

தை பிறந்தால் வழி பிறக்கும்'- என்ற பழமொழிக்கு ஏற்றவாறு இந்த முறை தை பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றிலிருந்து நான்கு மாதத்தில் தமிழகத்தில் புதிய அரசு அமைந்திருக்கும். அது, தற்போது இருக்கின்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.தி.மு.க) அரசாகவே இருக்குமா அல்லது அதற்கு போட்டியாக களத்தில் நிற்கும் திராவிட முன்னேற்றக் கழக (தி.மு.க.) அரசாக இருக்குமா என்பதே 'பொங்கல் பட்டிமன்றமாக' தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆம், தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, மே மாதத்தில் புதிய அரசு அமைய வேண்டும். அந்த ஜனநாயக திருவிழாவில் எந்தெந்தக் கட்சிகள் யார் யாரோடு உறவாடும் அல்லது பகையாடும் என்பது இன்னும் சில வாரங்களில் வெளிச்சத்துக்கு வந்து விடும்.

அதன் முதல்கட்டமாக, தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தே.மு.தி.க) பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்று முடிந்திருக்கிறது. அதில் பேசிய விஜயகாந்த் அ.தி.மு.கவை கடுமையாகவும், தி.மு.க.வை மென்மையாகவும் விமர்சித்து 'தே.மு.தி.க., தி.மு.க.வின் பக்கம் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன' என்ற கருத்துக்கு உரம் போட்டுள்ளார். ஆனால், தி.மு.க.வுடன் தே.மு.தி.க. சேர்ந்தால், அது தமிழக தேர்தல் முடிவுகளில் அதிரடி மாற்றத்தை உருவாக்கி விடும் என்பது முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதாவுக்கும் தெரியும், தி.மு.கவுக்கு எதிரணியில் நிற்க விரும்பும் கட்சிகளுக்கும் புரியும்.

ஆனாலும் 'யார் எந்த அணியில்' என்பது இறுதி செய்யப்படும் வரை இப்போதைக்கு ஆறு அணிகளாக தமிழக தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. ஒன்று தி.மு.க. அணி. இன்னொன்று, அ.தி.மு.க அணி. மூன்றாவது, தே.மு.தி.க. அணி. நான்காவது, மக்கள் நலக்கூட்டணி. ஐந்தாவது, பாட்டாளி மக்கள் கட்சி அணி. ஆறாவது, பா.ஜ.க. அணி. இதில் உறுதியான அணிகள் என்றால் இது நாள் வரை நான்கு அணிகள் உள்ளன.

அவற்றுள் அ.தி.மு.க, தி.மு.க., மக்கள் நலக்கூட்டணி, பா.ம.க. என்று எடுத்துக் கொள்ளலாம். இன்னும் நாள் நகர நகர இந்த ஆறு அணியா அல்லது நான்கு அணியா அல்லது இந்த அணிகளுக்குள் சங்கமம் ஆகி இரண்டே அணியாக தேர்தல் களத்தில் நிற்பார்களா என்பது தெரிய வரும்.

அந்த வரிசையில், இப்போது இந்த ஆறு அணி கட்சிகளையும் ஒரே வரிசையில் சேர்த்துள்ள ஒரு விவகாரம் தமிழகத்தில் நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 'மாடுகளுக்கும் சுதந்திரம் இருக்கிறது' என்ற கோட்பாட்டின் அடிப்படையிலும், அரசியல் சட்டத்தின் அடிப்படையில் 'மாடுகளுக்கும் வாழ்வுரிமை இருக்கிறது' என்ற உன்னத கொள்கை அடிப்படையிலும் இந்த ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

'மாடுகள் உள்ளிட்ட விலங்கினங்களுக்கு ஐந்து வகை சுதந்திரம் ஐ.நா. மன்றம் அளித்துள்ளது. அந்த சுதந்திரத்தை காப்பாற்ற வேண்டியது இந்திய அரசு, அதன் கீழ் உள்ள மாநில அரசு ஆகியவற்றின் பொறுப்பு' என்பதை அழுத்தம் திருத்தமாக சென்ற 7.5.2014 அன்று வழங்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெளிவாகக் குறிப்பிடுகிறது. அது மட்டுமின்றி 'தமிழர்கள் சிவனை வழிபடுகிறவர்கள். அவர்கள் ஏன், சிவனின் வாகனமான காளைகளைத் துன்புறுத்த வேண்டும்' என்று கேள்வி எழுப்பிய அந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான பெஞ்ச் 'ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை' விதித்துள்ளது.

இந்த தீர்ப்புக்குப் பின்னர்? பரபரப்பாக நடத்தப்படும் என்று எதிர்பார்த்த ஜல்லிக்கட்டு இப்போது 'மொட்டை போடும் போராட்டம்' 'உண்ணாவிரதப் போராட்டம்' ' சாலை மறியல்' என்றெல்லாம் தென் மாவட்டங்களில் களை கட்டியிருக்கிறது. பால் பொங்கி மகிழ்ச்சியடைய வேண்டிய நேரத்தில் தென் மாவட்ட மக்கள் மனதில் இப்போது 'ஜல்லிக்கட்டு கோபம்' பொங்கி வடிந்து கொண்டிருக்கிறது.

இந்த ஜல்லிக்கட்டு அரசியல், அ.தி.மு.கவுக்கு சிம்மசொப்பனமாக இருக்கப் போகிறது. ஏனென்றால், அந்த தென் மாவட்டங்களில் வலுவுள்ள கட்சி அ.தி.மு.க. அதுவும் ஜல்லிக்கட்டு இரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெற்ற கட்சியும் கூட. கடைசி நேரத்திலாவது 'அவசரச் சட்டம்' கொண்டு வந்து மத்திய அரசு ஜல்லிக்கட்டை நடத்தி விடும் என்று நினைத்து இருந்தவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேட்டி பேரிடியாக வந்து இறங்கியது. 'உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

அதனால் மத்திய அரசு சட்டம் கொண்டு வர முடியாது. வேண்டுமென்றால் மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டு வரலாம்' என்று கூறிவிட்டார். மத்திய அரசு ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர தயாராக இல்லை என்பதை இந்த பேட்டி உறுதி செய்கிறது. அதே நேரத்தில் மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டு வர முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

'விலங்கினங்கள் வதை தடுப்புச் சட்டம்' ஒரு 'Welfare legislation' என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மாநில அரசுக்கு உரிமையில்லை. இந்த சட்டத்தில் என்ன திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றாலும் மத்திய அரசுக்கே அதிகாரம் இருக்கிறது என்று ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் சொல்வது போல், மாநில அரசு இதில் அவசரச் சட்டம் கொண்டு வந்தால், அதையும் உச்சநீதிமன்றம் தடை செய்யாது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.

இந்த சூழ்நிலையில், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளுமே, 'மக்களின் கோபத்தை' மாநில அரசு பக்கம் திருப்பவே முயற்சி செய்யும். ஏற்கெனவே, மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தில், அ.தி.மு.க அரசுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. அந்த அதிருப்தியை நீக்கவே வருகிற 20ஆம் திகதி தமிழக சட்டமன்றக் கூட்டத்தை கூட்டியுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா, அன்றைய தினம் 'அ.தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கைகளை விளக்கிப் பேசுவார்' என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இப்போது புதிய தலைவலியாக 'ஜல்லிக்கட்டு' விவகாரமும் வந்து விட்டது.

ஆகவே, வருகின்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் 'அவசரச் சட்டம் கொண்டு வர மாநில அரசுக்கு அதிகாரம் ஜல்லிக்கட்டு விடயத்தில் இருக்கிறதா' என்பதை முதலமைச்சர் விளக்குவார். ஆனால், அதற்குள் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான திகதிகள் முடிந்து விடும். பொங்கல் பண்டிகையும் ஓய்ந்து விடும். ஆகவே 'பொங்கல் களத்தை' தாண்டி, இந்த ஜல்லிக்கட்டு விடயம், தேர்தல் களத்தில் பிரசாரமாக மாறப் போகிறது.

இப்படி விவகாரங்கள் மேல் விவகாரங்கள், அ.தி.மு.க அரசுக்கு எதிராக திடீரென்று உருவாகி வருகின்றன. இரு மாதங்களுக்கு முன்பு வரை அ.தி.மு.க அரசுக்கு 'அதிருப்தி இல்லை' என்ற நிலை மாறி, இன்றைக்கு 'முந்தைய ஆதரவு'- அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற போது கிடைத்த ஆதரவு அக்கட்சிக்கு இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது.

அதேபோல் 'தி.மு.க.வுக்கு வாக்களிப்பதா' என்று முன்பிருந்த தேக்க நிலை இப்போது மாறி, 'அ.தி.மு.கவை தோற்கடிக்க தி.மு.க.வை விட்டால் வேறு வழி இல்லை' என்ற எண்ணம் பரவலாக மக்கள் மனதில் தோன்றியிருக்கிறது. 'ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஏதும் செய்யவில்லை. உச்சநீதிமன்ற தடைக்குப் பின்னர், மத்திய அரசு அமைதி காத்து விட்டது' என்ற வருத்தம் பாரதிய ஜனதா கட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள எந்தக் கட்சி முன் வரும் என்ற கேள்வியும்; எழுந்திருக்கிறது. தே.மு.தி.க. இன்னும் மதில் மேல் பூனையாக இருக்கிறது. அது தி.மு.க.வுடனா அல்லது பா.ஜ.க.வுடனா என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான விடை கிடைக்கவில்லை. தி.மு.க. பக்கம் போவது போன்ற தோற்றத்தை விஜயகாந்த் கடைசியாக ஏற்படுத்தியிருந்தாலும், இன்னும் பா.ஜ.க.வுடனோ, மக்கள் நலக்கூட்டணியுடனோ கூட்டணியே கிடையாது என்று வெளிப்படையாக எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இப்படி குழப்பங்களின் மொத்த வடிவமாக 'தமிழக தேர்தல் கூட்டணி' தத்தளித்துக் கொண்டு நிற்கிறது.

ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. முதல் ரவுண்டிலில் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக வந்த ராஜேஷ் லகானி 'மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்டப் பொலிஸ் அதிகாரிகளை சந்தித்து' ஆலோசனை நடத்தி விட்டார். வருகின்ற 20ஆம் திகதி திருத்தப்பட்ட தமிழக வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார். தேர்தல் ஆணையம் 'தேர்தலை நடத்த தயார்' என்று சமிக்ஞை காட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஆதாரமாக இருக்கும் அரசியல் கூட்டணி அமைய 'இன்னும் எங்களுக்கு கால அவகாசம் இருக்கிறது' என்று அரசியல் கட்சிகள் அமைதி காக்கின்றன.

ஆனால் 'மழை வெள்ள பாதிப்பு' 'ஜல்லிக்கட்டு விளையாட்டு தடுத்து நிறுத்தம்' என்று தேர்தல் பிரசாரத்துக்கு தேவையான காரணிகள் மட்டும் புதிது புதிதாக தோன்றிக் கொண்டிருக்கின்றன. 'இது பொங்கலோ பொங்கல்' என்பதை விட 'தேர்தலோ தேர்தல்' என்ற பாதையை நோக்கி தமிழக அரசியல் மட்டும் நகர்ந்து கொண்டிருக்கிறது- தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு.

நன்றி காசிநாதன்

தமிழ் மிரர்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக