புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 20%
heezulia
கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_m10கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து ! (இயைபுத் துளிப்பாக்கள்) நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Dec 19, 2015 7:28 pm

கவிதைகளால் ஒரு தமிழ் விருந்து !
(இயைபுத் துளிப்பாக்கள்)
நூல் ஆசிரியர் : வெண்பா வேந்தர் புலவர் இராம. வேதநாயகம்
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
*****
நூலாசிரியர் அவர்களின் இயற்பெயர் இராம. வேதநாயகம். புனைபெயர் மறைமுதல்வன். இந்த நூல் படித்து விட்டு, ‘மரபு முதல்வன்’ என்றே பட்டம் கொடுக்கலாம். அந்த அளவிற்கு இயைபுத் துளிப்பாவை குற்றால அருவி போல கொட்டி உள்ளார். கல்வி, மது, வெண்சுருட்டு என்று, பாடாத பொருள் இல்லை எனுமளவிற்கு அனைத்து பொருளிலும் பாடி உள்ளார்.
மரபு அறிந்த மரபுக்கவிஞரின் புதுக்கவிதை இது. பல்வேறு பட்டங்கள் பெற்று, தமிழாசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற பின்னரும், இலக்கியத்திலிருந்து ஓய்வு பெறாமல் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி. படிப்பாளி. அறிவாளி இவர். ஜப்பானில் புகழ்பெற்ற வடிவங்களான ஹைக்கூ, லிமரைக்கூ இவை பற்றிய புரிதல் வந்துவிட்டால் அற்புதமாக அழகு தமிழில் வடிக்கலாம். லிமரைக்கூ என்பதை தமிழில் ‘இயைபுத் துளிப்பா’ என்றும் அழைக்கலாம். மரபு அறிந்தவரின் புதுப்பா மணக்கும். இப்பா இனிக்கும்.
ஹைக்கூ கவிதைகளுக்கு தலைப்பு தரக்கூடாது என்பார்கள். இவர் தலைப்பை எழுதி விட்டு அது தொடர்பாகவே சிந்தித்து வடித்துள்ளார். 100 தலைப்புகளில், தலைப்புக்கு 5 பாடல்கள் வீதம் மொத்தம் 500 பாடல்கள் உள்ளன. நூலாசிரியரின் தமிழ்ப்புலமை தான் இந்த நூலின் வெற்றிக்கு காரணம். சொல் விளையாட்டு விளையாடி உள்ளார். இறைவன் என்ற தலைப்பில் தொடங்கி கைப்பேசி என்ற தலைப்பு வரை அற்புதமாக வடித்துள்ளார். மரபுக்கவிதை தான் இதுவும். மரபின் வாசனம் மதுரை மல்லிகைப்பூ போல வீசுகின்றது. உதிர்த்த முத்துக்கள் அனைத்தும் தமிழின் சொத்துக்கள். உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத சொல்வளம் நம் தமிழ்மொழி ஒன்றுக்கே உண்டு.
உலகின் முதல்மொழியான தமிழ் பற்றி பாடிய லிமரைக்கூ மிக நன்று.
தமிழ்
மொழிகளுக்கெல்லாம் ஆதி
எல்லா மொழியும் தமிழின் பின்தான்
எல்லாம் அறிவோம் சேதி!
மொழிஞாயிறு தேவ நேயப் பாவாணர் அவர்கள் ஆராய்ந்து அறிவித்த கருத்தை வழிமொழிந்து லிமரைக்கூ வடித்துள்ளார். பாராட்டுக்கள்.
மனதில் கவலை இருந்தால், வானத்தை அன்னார்ந்து பார்த்தால் கவலை காணாமல் போகும். நூலாசிரியர் கவிஞர் அவர்களும் வானத்தை, இயற்கையை ரசிக்கும் குணம் உடையவர். அதனால் தான் அவரால் இயற்கை பற்றி லிமரைக்கூ வடிக்க முடிகின்றது.
வானம்!
எல்லை இல்லா வானம்
எழிலை எல்லாம் உள்ளில் கொண்டே
அடக்கம் தன்னைப் பூணும்!
நிலவை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். பார்க்க, சலிக்காத வனப்பு மிக்க நிலவு பற்றி கவிதை பாடுவது என்பது கவிஞர்களுக்கு கற்கண்டு போன்றது. இவரும் நிலவு பற்றி லிமரைக்கூ வடித்துள்ளார்.
நிலவு!
அம்புலி யாக வலம் வரும்
கவிஞர் நெஞ்சில் கவிதை யாகி
இலக்கியந் தன்னில் நலம் பெறும்!
இப்படி நூல் முழுவதும் பல்வேறு தலைப்புகளில், பல்வேறு விதமாக சிந்தித்து தமிழ் விருந்து வைத்துள்ளார்கள். வளரும் கவிஞர்கள் அனைவரும், படிக்க வேண்டிய நூல். புதிய சொற்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாக உள்ள சொற்களஞ்சியமாக நூல் உள்ளது. பாராட்டுக்கள். நூலாசிரியருக்கு இது ஏழாவது நூல். ஏழாவது அறிவை பயன்படுத்தி வடித்துள்ளார்கள்.
உலகப்பொதுமறை படைத்த திருவள்ளுவர் வழியில் அறம் பற்றியும், லிமரைக்கூ வடித்துள்ளார். அறவழி நடந்தால் நாட்டில் அமைதி நிலவும், அன்பு மலரும். அறம் தவறினால் துன்பம் சூளும் என்பது உணமை.
அறம்
அறத்தால் பெறுவதோ இன்பம்
பொருந்தாச் செயல்கள் புரிந்து மேலும்
அறநெறி தவறின் துன்பம்!
சிலர் பணத்தாசை காரணமாக, அறநெறி தவறி, தவறான செயல்களில் ஈடுபட்டு பணம் சேர்த்தால், பின்னால் தண்டனை என்ற துன்பம் வரும் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.
மரணம் பற்றிய அச்சம் அனைவருக்கும் உண்டு. இறப்பினை மிக இயல்பாக அறிவியல் உண்மையோடு லிமரைக்கூவாக வடித்துள்ளார். மரண பயம் நீக்கி உள்ளார்.
இறப்பு !
செல்களின் இயக்கம் இன்மை
உழைத்த செல்களின் தேய்மா னத்தால்
உயிர்கள் அழியும் உண்மை!
இசையால் பயிர்கள் வளர்கின்றது என்று ஆய்வுகள் சொல்கின்றன. பயிர்களே வளரும் போது இசையால் மனிதர்களுக்கு ஏற்படும் மனமகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமோ? இசை பற்றிய லிமரைக்கூ மிக நன்று.

இசை!
இன்பம் நல்கும் அருங்கலை
இசையால் மயங்கா உயிர்கள் இல்லை
அதனால் இசையோ பெருங்கலை!
கொடுத்துச் சிவந்த கரங்கள் என்பார்! முடிந்த வரை பிறருக்கு வழங்க, வாழ வேண்டும். பிறர் வழங்குவதை தடுக்காமல் வாழ வேண்டும் என்கிறார்.
ஈகை!
ஈவதை என்றும் விலக்காதே,
மற்றவர் அன்பாய் பிறருக் களிப்பதை
எந்த நாளும் தடுக்காதே!
தந்தை பெரியார் சொல்வார். பக்தி என்பது தனி சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து. ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக உணர்த்தியவர் திருவள்ளுவர். அந்த வழியில் வடித்த லிமரைக்கூ.
ஒழுக்கம்
தனிமனித ஒழுக்கம் அவசியம்,
அடையாளம் காட்டும் கருவியாய் இருப்பதால்
ஒழுக்கம் தேவை அவசரம்!
அறிவியல் வளர்ச்சியின் காரணமாக வந்த கைப்பேசி பற்றியும் லிமரைக்கூ வடித்துள்ளார்.
நாமெலாம் இருப்பதோ தென்துருவம்
உலகில் எவ்விடம் யாராய் இருப்பினும்
எப்போதும் பேசலாம் வடதுருவம்!
பதச்சோறாக சில மட்டும் எழுது உள்ளேன். இது தோரண வாயில் தான். நூலின் உள்ளே சென்று படித்துப் பாருங்கள். தமிழ் விருந்து காத்திருக்கின்றது.
நூலாசிரியர் புலவர் வெண்பா வேந்தர் இராம. வேத நாயகம் அவர்கள் லிமரைக்கூ வேந்தராகவும் முத்திரை பதித்துள்ளார். பாராட்டுக்கள். தன் சிந்தையில் உதிர்த்த முத்துக்களை கோர்த்து முத்துமாலை வழங்கி உள்ளார்.



--

.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 8:18 am

eraeravi wrote:. உலகில் உள்ள எந்த மொழிக்கும் இல்லாத சொல்வளம் நம் தமிழ்மொழி ஒன்றுக்கே உண்டு.
உலகின் முதல்மொழியான தமிழ் பற்றி பாடிய லிமரைக்கூ மிக நன்று.
தமிழ்
மொழிகளுக்கெல்லாம் ஆதி
எல்லா மொழியும் தமிழின் பின்தான்
எல்லாம் அறிவோம் சேதி!
.
மேற்கோள் செய்த பதிவு: 1181584
அருமையான பதிவு, நன்றி இரவி.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Dec 20, 2015 10:33 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 20, 2015 12:50 pm

இராம. வேதநாயகம் , இரா.இரவி ஆகியோர்க்கு நன்றி !
நல்ல முயற்சி!
வளர்க!
மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Dec 20, 2015 3:01 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக