புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலைத் தென்றல் பாடி வரும்! Poll_c10காலைத் தென்றல் பாடி வரும்! Poll_m10காலைத் தென்றல் பாடி வரும்! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
காலைத் தென்றல் பாடி வரும்! Poll_c10காலைத் தென்றல் பாடி வரும்! Poll_m10காலைத் தென்றல் பாடி வரும்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
காலைத் தென்றல் பாடி வரும்! Poll_c10காலைத் தென்றல் பாடி வரும்! Poll_m10காலைத் தென்றல் பாடி வரும்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
காலைத் தென்றல் பாடி வரும்! Poll_c10காலைத் தென்றல் பாடி வரும்! Poll_m10காலைத் தென்றல் பாடி வரும்! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
காலைத் தென்றல் பாடி வரும்! Poll_c10காலைத் தென்றல் பாடி வரும்! Poll_m10காலைத் தென்றல் பாடி வரும்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காலைத் தென்றல் பாடி வரும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 8:11 pm

குட் மார்னிங்!
-
‘வைகறையில் துயில் எழு’ என்பார்கள்.
நமது மத சம்பிரதாயங்கள் எல்லாம் அதிகாலையில் எழ வேண்டும்
என்பதையே முன்மொழிகின்றன.

கிராமிய வாழ்வில் கோழி கூவ எழுந்து அவரவர் தத்தம் தங்களது
வேலைகளுக்குப் புறப்படுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இரவு 8 மணிக்கு எல்லாம் ஊரே அடங்கி விடும்.
இன்றோ எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
-
காலைத் தென்றல் பாடி வரும்! 25KGjDCdSly1hCNJL6aP+17

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 8:12 pm

நகரவாசிகள் மட்டுமல்ல… கிராமவாசிகளிடம் கூட அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் அருகி விட்டது. எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்பதை விட எந்த நேரத்தில் தூங்க வேண்டும் என்பதே முக்கியம்… அதிகாலை எழுவதால் உடல் மற்றும் மன
ரீதியிலான பல நன்மைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்… இது பற்றி இயற்கை வாழ்வியல் செயல்பாட்டாளர் முருகவேலனிடம் பேசினோம்.
-
அதிகாலை 3-6 மணிக்குள் எழும்போதுதான் ஆகாய பூதத்தின் ஆற்றலை நாம் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியும். எவ்வளவு அசுத்தங்கள் இருந்தாலும் பூமி தன்னை சுத்திகரித்துக் கொண்டு தூய்மையான காற்றை வழங்குவது அதிகாலை நேரத்தில்தான்!

‘‘மனிதர் தவிர்த்த மற்ற உயிரினங்கள் எல்லாமே இயற்கைக்கு ஏற்றபடியான முறைப்படுத்துதல்களோடு வாழ்கின்றன. ஆகவேதான், அவை ஆரோக்கியமாக இருக்கின்றன. சில பறவை இனங்கள் அதிகாலை 3 மணிக்கு எழுந்து விடும். காகம், குயில், குருவி போன்ற பறவையினங்கள் 4 மணிக்கு எழுந்து விடும். பொதுவாக அனைத்து உயிரினங்களும் அதிகாலை 3-6 மணிக்குள் எழ வேண்டும் என்பதுதான் முறை.

ஏன் என்கிறீர்களா? அந்த நேரத்தில் எழும்போதுதான் ஆகாய பூதத்தின் ஆற்றலை நாம் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியும். எவ்வளவு அசுத்தங்கள் இருந்தாலும் பூமி தன்னை சுத்திகரித்துக் கொண்டு தூய்மையான காற்றை வழங்குவது அந்நேரத்தில்தான். அப்போது வீசும் காற்றை வள்ளலார் அமுதக்காற்று (Elixir Air) என்று குறிப்பிடுகிறார்.அந்நேரத்தில் எழுந்து ஆகாயத்துடன் தொடர்பு கொண்டிருக்கும்படியான செயல்களில் ஈடுபடும்போதுதான் ஆகாய ஆற்றல் நமக்குக் கிடைக்கும். ஆகாயம் என்பது மனதுடன் தொடர்புடையது என்பதால், அதிகாலையில் எழுவதால் மன நலத்துக்கு உகந்தது. அதனால்தான் ‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்று பாரதி பாடினார்.

மிகப்பெரும் கண்டுபிடிப்புகள் எல்லாம் அதிகாலை நேரத்தில்தான் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பதுவே இதற்கான சாட்சியம்.நம் முன்னோர் ஒரு நாளை 6 சிறு பொழுது களாக பிரித்திருக்கிறார்கள். பின்னிரவு 2-6 வைகறை, 6-10 காலை, 10-2 நண்பகல், 2-6 எற்பாடு, 6-10 மாலை, 10-2 யாமம். ஆகவேதான், ‘வைகறையில் துயில் எழு’ என்பதை முன் வைத்தார்கள். மார்கழி மாதத்தின் வைகறைப் பொழுது மிக முக்கியமானது.

2-6 மணி எப்படி ஒரு நாளின் வைகறையோ அதே போல மார்கழி மாதம் என்பது ஒரு ஆண்டின் வைகறை. அம்மாதத்தில் வைகறையில் எழுந்தோம் என்றால் எப்படிப்பட்ட நோய்களும் தீரும் என்பதை காலம் காலமாக நமது சடங்குகள் வழியாக பின்பற்றி வருகிறோம். பிராணாயாமம் செய்வது நுரையீரலுக்கு நல்லது என்று சொல்வார்கள். மொழியை அதிர்வெனில் உச்சரிப்பது பிராணாயாமத்துக்கு ஈடானது. இதைச் செய்வதன் மூலம் நுரையீரலில் உள்ள கெட்ட காற்று வெளியேறி நல்ல காற்று உட்புகும். வைகறைப் பொழுதைத் தவிர்த்து வேறு எந்த நேரத்தில் பிராணாயாமம் செய்தாலும் பலனளிக்காது.

இந்து மத சம்பிரதாயங்களின்படி அதிகாலை 3-4 மஹா பிரம்ம முகூர்த்தம், 4-6 பிரம்ம முகூர்த்தம் என்று பிரித்திருப்பதற்கான காரணமும் இதுதான். இஸ்லாமியர்கள் அதிகாலையில் எழுந்து தொழுகின்றனர். உலக அளவில் பெரும்பான்மையான மதங்களும் அதிகாலைப் பொழுதை முக்கியமான பொழுதாகவே வலியுறுத்துகின்றன. சித்தர் மரபு ‘அண்டத்தில் இருப்பதுதான் பிண்டத்திலும்… பிண்டத்தில் இருப்பதுதான் அண்டத்திலும்’ என்கிறது. அதாவது, பஞ்ச பூதங்களுக்கும் ஐம்புலன்களுக்கும் தொடர்பு இருக்கிறது. சித்த மருத்துவத்தின் மூன்று அலகுகளான வாதம், பித்தம், கபம் என்பவை காற்று, தீ மற்றும் நீர் பூதங்களே. அவற்றைச் சீர்படுத்துவதன் வழியாக நோயைக் குணப்படுத்தலாம் என்பதே அம்மருத்துவத்தின் தத்துவம். அம்மூன்றையும் சீர்படுத்த ஆகாய, மண் பூதங்
களையும் துணைக்குக் கொள்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

அதனால்தான் ஆகாய பூதத்திற்காக மந்திரங்களையும், மண் பூதத்திற்காக உணவுக்கட்டுப்பாட்டையும் (பத்தியத்தையும்) வலியுறுத்தினர். மணி, மந்திரம், மருந்து எனும் சித்த மருத்துவத்தின் தனித்துவத்தை அறியாதவர்களாகவே இன்றைக்கு நாம் இருக்கிறோம். நம் மரபில் நவீன யுகத்துக்கான நெறிமுறைகள் பலவையும் இருக்கின்றன. அவற்றை பின்பற்ற வேண்டியது நம் கடமை” என்கிறார் முருகவேலன் ஆணித்தரமாக.

அதிகாலை எழுவதால் உடல் மற்றும் மன ரீதியிலான நன்மைகள் பற்றி விளக்குகிறார் தூக்கவியல் மருத்துவர் ராமகிருஷ்ணன்…‘‘இரவு 9-11 மணிக்குள் தூங்கி 5-6 மணிக்குள் எழுவதுதான் சரியான தூக்கமாக இருக்கும். இந்த நேரத்தைத் தவிர்த்து வேறு நேரத்தில் எத்தனை மணி நேரம் தூங்கினாலும் அது போதுமானதாக இருக்காது. இந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் தூங்கினால் ஆழ்ந்த தூக்கத்துக்கு செல்ல முடியும். சரியான நேரத்தில் எழும்போது களைப்பு எதுவுமின்றி உடல் மற்றும் மன ரீதியாக புத்துணர்ச்சி ஏற்படும்.

இதனால் நாள் முழுவதும் சோர்வின்றி பணி புரிய முடியும். நினைவாற்றல் அதிகரிக்கும். ஹார்மோன் சுரப்பிகள் சரியாக வேலை செய்வதால் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருக்கும். மாதவிடாய் பிரச்னைகள் குணமாவதோடு முறைக்குள் வரும். ரத்த அழுத்தம் சீராக இருக்கும். ஆகவே அனைத்து வயதினரும் மேற்சொன்ன நேரத்துக்குள் தூங்கி நேரத்துக்குள் எழ வேண்டும். தாமதமாக தூங்கி அதிகாலை எழுவது முழுமையான பயனைத் தராது. இரவு நேரப் பணி புரிபவர்கள்
பகலில் எவ்வளவு நேரம் தூங்கினாலும் அது முழுமையான தூக்கமாக இருக்காது’’ என்கிறார் ராமகிருஷ்ணன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2015 8:13 pm

காலைத் தென்றல் பாடி வரும்! Drc69zoQDawGLMs7prNA+17a
-
அதிகாலை எழுபவர்கள் இந்த மாற்றங்களை அனுபவ ரீதியாக உணர்கிறார்களா? கர்நாடக இசைக்கலைஞர் சுதா ரகுநாதனிடம் கேட்டோம்…‘‘எல்லா நாளும் அதிகாலை எழுவேன்னு சொல்ல முடியாது. பெரும்பாலான நாட்கள் அதிகாலைல எழுந்துடுவேன். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழும்போது நிலவுற அமைதி இருக்கே… அந்த அமைதியான சூழல்லதான் சாதகம் பண்ணுவேன்.

சாதகம் பண்றதுக்கு அதிகாலை நேரத்தைத் தவிர்த்து உகந்த நேரம் வேறெதுவுமில்லை. அந்த நேரத்தில் எந்த வேலை செஞ்சாலும் அது மேல ஒரு ஃபோக்கஸ் இருக்கும். மனரீதியாகவும் பல மாற்றங்களை உணர முடிஞ்சது. அதிகாலை எழுந்திருக்கும்போது அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியோட, எந்த விதமான குழப்பங்களும் மனச்சோர்வும் இல்லாம இருக்க முடியுது. எவ்வளவு பெரிய பிரச்னையா இருந்தாலும் அதிகாலைல யோசிக்கும்போது அதுக்கான நல்ல தீர்வு கிடைக்குது’’ என்கிறார்.

தானும் அப்படியொரு மாற்றத்தை உணர்ந்ததாகச் சொல்கிறார் ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா.‘‘வாரத்தில் 3 நாட்கள் பயிற்சிக்காக அதிகாலை 4:30 மணிக்கு எழுந்துருவேன். எழுந்திருக்க கொஞ்சம் சிரமமா இருந்தாலும் என்னோட பயிற்சியாளரோட வலியுறுத்தல் காரணமா எழுந்து பயிற்சி செய்வேன். மத்த நேரங்கள்ல செய்யுற பயிற்சியை விட அதிகாலை நேரத்துல பயிற்சி செய்யும்போது ரொம்பவும் எனர்ஜியா இருக்கிற மாதிரி ஃபீல் பண்றேன். மனதளவிலயும் விளையாடுறதுக்கான உறுதியும் நம்பிக்கையும் கிடைக்குது. பயிற்சிக்கு மட்டுமில்லாம அதிகாலைல எழும்போது அந்த நாளே சிறப்பா இருக்கு’’ என்கிறார்.
-
– கி.ச.திலீபன்
குங்குமம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 11:06 am

ayyasamy ram wrote:
கிராமிய வாழ்வில் கோழி கூவ எழுந்து அவரவர் தத்தம் தங்களது
வேலைகளுக்குப் புறப்படுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இரவு 8 மணிக்கு எல்லாம் ஊரே அடங்கி விடும்.
இன்றோ எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1181183
இன்றும் பல கிராமங்களில் இது நடைமுறையில் உள்ளது.,நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 11:08 am

ayyasamy ram wrote:
-அதிகாலை 3-6 மணிக்குள் எழும்போதுதான் ஆகாய பூதத்தின் ஆற்றலை நாம் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடியும். எவ்வளவு அசுத்தங்கள் இருந்தாலும் பூமி தன்னை சுத்திகரித்துக் கொண்டு தூய்மையான காற்றை வழங்குவது அதிகாலை நேரத்தில்தான்!
மேற்கோள் செய்த பதிவு: 1181184
அருமையான தகவல்,நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 11:11 am

ayyasamy ram wrote:
அதிகாலை எழுபவர்கள் இந்த மாற்றங்களை அனுபவ ரீதியாக உணர்கிறார்களா? கர்நாடக இசைக்கலைஞர் சுதா ரகுநாதனிடம் கேட்டோம்…‘‘எல்லா நாளும் அதிகாலை எழுவேன்னு சொல்ல முடியாது. பெரும்பாலான நாட்கள் அதிகாலைல எழுந்துடுவேன். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழும்போது நிலவுற அமைதி இருக்கே… அந்த அமைதியான சூழல்லதான் சாதகம் பண்ணுவேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1181185
வைகறை பொழுது அற்புத அனுபவம் எப்போதும்,நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக