புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது பக்குவப்பட்ட சிந்தனை? Poll_c10எது பக்குவப்பட்ட சிந்தனை? Poll_m10எது பக்குவப்பட்ட சிந்தனை? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
எது பக்குவப்பட்ட சிந்தனை? Poll_c10எது பக்குவப்பட்ட சிந்தனை? Poll_m10எது பக்குவப்பட்ட சிந்தனை? Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது பக்குவப்பட்ட சிந்தனை? Poll_c10எது பக்குவப்பட்ட சிந்தனை? Poll_m10எது பக்குவப்பட்ட சிந்தனை? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
எது பக்குவப்பட்ட சிந்தனை? Poll_c10எது பக்குவப்பட்ட சிந்தனை? Poll_m10எது பக்குவப்பட்ட சிந்தனை? Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது பக்குவப்பட்ட சிந்தனை?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 17, 2015 7:42 am

உங்களுக்கு, ஒரு உண்மை தெரியுமா? ஒவ்வொரு நாள் விடியலும் உங்களுக்கு இரண்டு விஷயங்களை உணர்த்தும் ஒன்று வயதில் ஒரு நாள் அதிகரிக்கிறது. இரண்டு ஆயுளில் ஒரு நாள் குறைகிறது.


வயதில் ஒரு நாள் அதிகரிப்பதும், ஆயுளில் ஒரு நாள் குறைவதும் மனிதனுக்கு பக்குவத்தையும், பக்குவப்பட்ட சிந்தனையையும் தந்தாக வேண்டும். பக்குவப்பட்ட சிந்தனை என்பது எது?


குடும்பத்திற்காக என்ன செய்திருக்கிaர்கள்? உங்களுக்காக என்ன செய்திருக்கிaர்கள்? என்று சிந்தித்துப் பாருங்கள். குடும்பத்திற்காக செய்ய வேண்டியதை பெரும்பாலானவர்கள் தவறாமல் செய்து விடுகிறார்கள். உழைப்பது, சம்பாதிப்பது, மனைவி, பிள்ளைகளை கவனிப்பது எல்லாமும் குடும்பத்திற்காகச் செய்வது. உங்களுக்காக என்பது உங்கள் மறுபிறப்பின் நலனுக்காக நீங்கள் சமூகத்திற்கு செய்ய வேண்டிய சேவை.


புத்தர் காட்டின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். மக்கள் தன்னை பார்த்துவிட்டால் உணவு படைத்துவிடுவார்கள் என்பதற்காக காட்டுப் பாதையை தேர்ந்தெடுத்தார். உறவுகளை தவிர்த்த அவருக்கு உணவு மீதும் ஆசையில்லை. உடலை பராமரிக்க வேண்டும் என்ற ஆசையும் இல்லை. மாறாக உடலை வருத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்.


நடந்தார்.... மாதக் கணக்கில்... வருடக் கணக்கில்...! போகிற போக்கில் சிறிய நதி ஒன்று குறுக்கிட்டது. நிரஞ்சனா என்பது அதன் பெயர். அதைக் கடக்க வேண்டும். இறங்கினார். குறைந்த அளவே தண்ணீர் ஓடினாலும் புத்தரின் சக்தியற்ற உடலால் தண்ணீரின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. தடுமாறினார். தண்ணீர் இழுத்துச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக ஒரு கிளையை பற்றிப் பிடித்துக்கொண்டார்.


‘நீங்கள்தான் உயிரைப் பற்றியே கவலைப் படவில்லையே அப்படி இருக்க ஏன் இந்த கிளையை பற்றிப் பிடித்துக்கொண்டு தொங்குகிaர்கள்?’ என்று கேட்டது மனசாட்சி. உடனே கிளையை விட்டுவிட்டு தண்ணீரில் நின்றார். அப்போது அவர் உடலில் சக்தி அதிகரித்தது போல் இருந்தது.


தண்ணீரில் நடந்து.... கடந்து... கரையேறி நேராக போதி மரத்தடிக்குப் போனார். ‘எனக்கு ஞானம் பிறக்க வேண்டும் இல்லையேல் இந்த இடத்திலே நான் மரணமடைய வேண்டும்’ என்று பிடிவாதமக அமர்ந்தார். தன் உடலை பல வழிகளில் வருத்திக் கொண்டிருந்த இவர், மரணத்தை வா என்று அழைத்த மறுவினாடியே ஞானம் பிறந்துவிட்டது. ஆக மரணத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் ஞானம் வந்துவிடுகிறது. மரணமும், ஞானமும் ஞானிகளுக்கு ஒன்றுதானே!


மரணத்தை துச்சமாக நினைக்கிறவர்கள், புதுப் புது சக்திகளைப் பெறுகிறார்கள். மரணத்தை நினைத்து பயம் கொள்கிறவர்கள், இருக்கிற சக்தியையும் இழந்து விடுகிறார்கள்.


மனிதர்கள் தங்கள் சக்திகளை செலவிட்டு இன்பம், துன்பம், சோகம், சுகம் போன்ற பலவற்றையும் அனுபவித்துக்கொண்டே இருக்கிறார்கள். எத்தனையோ விஷயங்களை திரும்பத் திரும்ப பல ஆயிரம் தடவை அனுபவித்தாலும், வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே அனுபவிக்கக் கூடிய ‘த்ரில்’ அனுபவம் மரணம் மட்டும்தான்! ஆனால் பல அனுபவங்களைப் பெற போட்டி போடக்கூடிய மனிதர்கள் இந்த ஒரு த்ரில் அனுபவத்தை மட்டும் பெற விரும்பாமல் தப்பித்து ஓட முயற்சிக்கிறார்கள்.


இந்த உலகத்தில் கோடான கோடி மக்கள் மடிந்திருக்கிறார்கள். காற்றோடு, நீரோடு, மண்ணோடு கலந்திருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள். வாழ்கிறார்கள் இறக்கிறார்கள் அது ஒரு சுழற்சி. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.


கடந்த காலங்களில் மக்கள் இயற்கை விவசாய முறையில் ஈடுபட்டிருந்தார்கள். விளைச்சல் குறைவாக இருந்தது. ஆரோக்கியம் நிறைவாக இருந்தது. செயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் பெருமளவு விளைச்சல் அதிகரிக்கும். பட்டினி நீங்கும். அதே நேரத்தில் அவைகளை உண்ணும் மக்களுக்கு நோயும் அதிகரிக்கும் என்ற உண்மை முன்னெடுத்து வைக்கப்பட்டது. ‘நோய் அதிகரித்தாலும் பரவாயில்லை. உணவில்லை என்று கையேந்தும் நிலை வந்துவிடக் கூடாது’ என்ற நோக்கத்தில் புகுத்தப்பட்ட செயற்கை உர விவசாயம் நாளுக்கு நாள் அதிகரித்து இன்று உணவே மனிதனுக்கு விஷமாகி, மனிதனை பிரமாண்ட ஆஸ்பத்திரிகள் முன்பு குவியல் குவியலாக கொண்டு போய் சேர்த்துவிட்டது.


நாம் உடலுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறோம்! யாரும் காணமுடியாத அளவுக்கு மூடிவைக்கிறோம். மற்றவர்கள் தொட்டால் துடித்துப் போகிறோம். தொட்டவர்களை துடிக்க வைத்து விடுகிறோம். ஆனால் நோய் என்று வந்துவிட்டால் உயிர் முக்கியம் என்று அந்த உடல் டாக்டரிடம் மனப்பூர்வமாக சிகிச்சைக்காக ஒப்படைக்கப்பட்டு விடுகிறது. இறந்துவிட்டால், அந்த உடலை யார் யார் கையிலோ ஒப்படைத்து விடுகிறோம். அளவு கடந்த உரிமை உள்ளவர்கள் என்றாலும் அடுத்து நிற்க முடியாது அந்த உடலுக்கு ஆகவேண்டிய காரியங்களை எல்லாம் முன்பின் அறிமுகமற்ற யாரோ ஒருசிலர்தான் செய்கிறார்கள். அவர்கள் கையில்தான் உடல் ஒப்படைக்கப்படுகிறது. இதுதான் உலகம்... இது தான் உண்மை.


இந்த உண்மைகளை உணர்ந்தால் உடல்கள் மீது இருக்கும் ஆசையும் ஆர்வமும் அடங்கும், இந்த உடலுக்காக வெட்டு குத்து எத்தனை? வேதனை அவமானம் எத்தனை? ஜெயிலில் பெரும் பகுதி இடங்கள் நிரம்பி வழிவதற்கான காரணமும் இதுதானே?!


அன்று ஆலயத்தில் மிக அதிகமான கூட்டம். மக்கள் நீ நான் என போட்டி போட்டுக்கொண்டு கடவுளை காணச் சென்றனர். பூசாரிகள் உள்ளே இருந்தனர். உள்ளே இருந்த இரண்டு கடவுள்களும் வெளியே வந்துவிட்டார்கள்.


* இவர்களில் பலர் பெற்றோர், உறவினர்கள். குடும்பத்தினரிடம் அன்பு செலுத்துவதில்லை. அவர்களை எட்டிக்கூடப் பார்ப்பதில்லை. ஆனால் நம்மைப் பார்க்க இங்கே வந்து முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். பெற்று வளர்த்தவர்களிடமே அன்பு காட்டாத இந்த சுயநலவாதிகள் நம்மிடம் எப்படி பக்தி வைப்பார்கள்? இவர்களை நம்பி ஆசீர்வதிக்க முடியவில்லை. அதனால்தான் வெளியே வந்துவிட்டேன்’ என்றார் முதல் கடவுள்.


* அதற்குள் சிலர் கையில் இருந்த பணத்தை வாயிலில் நிற்கிறவரிடம் கொடுத்துவிட்டு நமது அனுக்கிரகங்களைப் பெற குறுக்குவழியில் செல்கிறார்கள். அதனால் நான் உங்களுக்கு முன்பே வெளியே வந்துவிட்டேன் என்றார், அடுத்த கடவுள். நமது கற்பனைக்கு தக்கபடி கடவுளுக்கு உருவங்களை கொடுத்தோம். நமக்கு மகிழ்ச்சி தரும் அளவிற்கு ஆராதனைகளை செய்கிறோம். நம்மை உற்சாகப்படுத்திக் கொள்ள திருவிழாக்களும் நடத்துகிறோம். கடவுளின் சக்தியை அறிந்துகொண்டு, அதற்கு தக்கபடி நம்மை புதுப்பித்துக் கொள்வதற்குப் பதில், கடவுளைச் சுற்றி நடக்கும் விடயங்களில் கவனத்தை செலுத்தி கடவுளோடு சேர்ந்து சக மனிதர்களையும் திண்டாடவைத்துக்கொண்டி ருக்கிறோம்.


கொண்டாட்டங்கள் இல்லாத இடத்தில் கடவுளே இல்லை என்பதுபோல் காட்டிவிட்டார்கள். பக்தியின் அர்த்தம் பாதை மாறிப் போய்விட்டது. அதுபோல்தான் மரணத்தின் அர்த்தமும் மனிதர்களுக்கு தெரியாமலே இருக்கிறது. மரணத்தின் போது மற்றவர்கள் அழும் அழுகையே மனக்கண் முன் நின்று அதை மற்றவர் களுக்கு கொடூரமானதாக உணர்த்திக் கொண்டி ருக்கிறது.


இன்று காலாவதியான மருந்து உணவுப் பொருட் களை எல்லாம் அழிக் கிறார்கள். அவைகளை அழிக்கும்போது மகிழ்கிறோம். ஆனால் காலாவதியாகும் மனிதனை இயற்கையே அழிக்கும்போது அழுகிறோம்... அந்த ஆன்மா மீண்டும் துளிர்க்கும் என்பதை அறியாமலே.

நன்றி சென்னை நியூஸ்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 6:00 pm

கார்த்திக் செயராம் wrote:
இந்த உலகத்தில் கோடான கோடி மக்கள் மடிந்திருக்கிறார்கள். காற்றோடு, நீரோடு, மண்ணோடு கலந்திருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் பிறக்கிறார்கள். வாழ்கிறார்கள் இறக்கிறார்கள் அது ஒரு சுழற்சி. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1181000
நல்ல பதிவு கார்த்தி அருமை.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 17, 2015 6:55 pm

அருமையிருக்கு மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக