Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒப்பிடுவது ஏன் ஒர்க்அவுட் ஆவதில்லை ?
3 posters
Page 1 of 1
ஒப்பிடுவது ஏன் ஒர்க்அவுட் ஆவதில்லை ?
மேற்கண்ட ஆங்கில தலைப்பிற்காக, தமிழ் நெஞ்சங்கள் பொறுப்பார்களாக!
என் பெரியம்மா மகனும், நானும், ஒரு காலகட்டத்தில், ஒரே வீட்டில் வளர்ந்தோம். அவர் கணக்கில் புலி; அடியேன் புளி! எனவே, அடிக்கடி எங்களை பற்றிய ஒப்பீடு நிகழும்.
இப்படி ஒப்பீடு நிகழ்ந்த போதெல்லாம், எனக்குள் நன்மை நிகழ்ந்ததா என்றால், இல்லை. மாறாக, வேறு இரு விஷயங்கள் வளர்ந்தன. என் ஒன்று விட்ட சகோதரன் மீது, எனக்கு பொறாமையும், கடுப்புமே உருவாயின. இதோடு விட்டதா... ஒப்பிட்டு பேசிய பெரியம்மா மீது, கோபம் வளர்ந்தது.
பசுமரத்தாணியாய் பதிந்து இருக்க வேண்டிய இந்த ஒப்பீட்டின் பலன், இந்த இளம் வயதிலேயே, 'ஒர்க் கவுட்' ஆகவில்லை என்கிற போது, எதையும் நிராகரிக்கிற மனம் உருவாகிவிட்ட வளர்ந்த பருவத்தில், எப்படி இந்த ஒப்பீட்டு முறை வேலை செய்யும்?
ஆம்... ஒப்பிடும் முறை, எக்காலத்திலும், வேலை செய்வது இல்லை. ஒரே கருப்பையில் தோன்றிய இரட்டை குழந்தைகள் கூட ஒப்பிட தகுதியற்றவர்களே! பார்ப்பதற்கு அச்சு அசலாக இருக்கும் இவர்களுக்குள் கூட, பெற்றோரால் வேறுபாடு காண முடிகிற போது, மனம் எவ்வளவு கோணல் கோணும்; நீளம், அகலம் வேறுபாடு எவ்வளவு காணும்!
ஒரு வீட்டின் இரு மாப்பிள்ளைகள் அல்லது மருமகள்கள் ஒப்பிடத்தக்கவர்கள் அல்லர்; ஒரு நிறுவனத்தின் இரு ஊழியர்களும் ஒப்பிடப்பட முடியாதவர்களே; ஒரு வீட்டின் இரு குடித்தனக்காரர்களை ஒப்பிடுவதும் அறிவீனமே!
ஒரே படகில் பயணம் செய்பவர்கள் கூட, ஒன்றாகி விட மாட்டார்கள். 'தாயும், மகளும் ஒன்று என்றாலும், வாயும், வயிறும் வேறு' என்கிற பழமொழி, இக்கருத்திற்கு வலு சேர்க்கிற போது, எதற்கு இனி ஒப்பீடு!
ஒப்பீடுகள், ஒப்பிடப்படுபவர்களை கோபத்திற்கும், வருத்தத்திற்கும் உள்ளாக்குகின்றன. இந்த ஒப்பீட்டில், தர்க்கமே இல்லை என்றே ஒப்பிடப்படும் ஒவ்வொருவரும் கருதுகின்றனர்.
ஒப்பிடுவதை பொறுத்தவரை, குறிப்பாக, பெண்கள் ரொம்பவே கடுப்பாவது நிஜம்!
யாரோடும் தாம் ஒப்பிடப்படுவதை, இவ்வுலகம் விரும்பவில்லை என்பதால், ஒப்பிடுவதற்கு இனி, முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.
ஒவ்வொரு மனிதனும், தான் வளர்கிற, வளர்க்கப்படுகிற சூழலால், களங்களால், படித்த படிப்பால், கற்(காத)ற கல்வியால், பொருளாதர ஏற்றத்தாழ்வுகளால், பெற்ற அனுபவங்களால் மற்றும் வாழ்வில் பார்க்கும் காட்சிகளால், மிக வித்தியாசமான மனநிலைகளில் அமர்ந்து விடுகின்றனர்.
கடைசி வரைக்கும், தாங்கள் நம்புவதையே சரி என, வாதிடுகின்றனர். இதன்படியே, வாழ்க்கை பார்வைகளை அமைத்துக் கொள்கின்றனர்.
எனவே, சிறு ஒற்றுமைகளுக்காக, தாங்கள் பிறரோடு ஒப்பிடப்படும்போது, அது சற்றும் சரியில்லை என்று மறுத்து ஒதுக்குகின்றனர்; எனவே, ஒப்பிட்டு திருத்த முயல்வதை விட்டுவிட்டு, அவரை தனித்துவம் வாய்ந்த தனி மனிதராக ஏற்று, 'உங்களிடத்தில் இன்னின்ன மாற்றங்களை எதிர்பார்க்கிறேன்...' என்று கூறினால், நாம் கூறுவதில் நியாயம் தேடுகின்றனர்.
ஒப்பீட்டு பேசும் போது, முரண்படுவது போலவே, நம் கோரிக்கைகளிலும் முரண்பட்டு, அடியோடு எல்லாவற்றையும் நிராகரிக்கும் ஆபத்து நிகழ்வதால், ஒப்பிடுவதை, இனியேனும் கைவிட முயற்சிப்போமே!
லேனா தமிழ்வாணன்
என் பெரியம்மா மகனும், நானும், ஒரு காலகட்டத்தில், ஒரே வீட்டில் வளர்ந்தோம். அவர் கணக்கில் புலி; அடியேன் புளி! எனவே, அடிக்கடி எங்களை பற்றிய ஒப்பீடு நிகழும்.
இப்படி ஒப்பீடு நிகழ்ந்த போதெல்லாம், எனக்குள் நன்மை நிகழ்ந்ததா என்றால், இல்லை. மாறாக, வேறு இரு விஷயங்கள் வளர்ந்தன. என் ஒன்று விட்ட சகோதரன் மீது, எனக்கு பொறாமையும், கடுப்புமே உருவாயின. இதோடு விட்டதா... ஒப்பிட்டு பேசிய பெரியம்மா மீது, கோபம் வளர்ந்தது.
பசுமரத்தாணியாய் பதிந்து இருக்க வேண்டிய இந்த ஒப்பீட்டின் பலன், இந்த இளம் வயதிலேயே, 'ஒர்க் கவுட்' ஆகவில்லை என்கிற போது, எதையும் நிராகரிக்கிற மனம் உருவாகிவிட்ட வளர்ந்த பருவத்தில், எப்படி இந்த ஒப்பீட்டு முறை வேலை செய்யும்?
ஆம்... ஒப்பிடும் முறை, எக்காலத்திலும், வேலை செய்வது இல்லை. ஒரே கருப்பையில் தோன்றிய இரட்டை குழந்தைகள் கூட ஒப்பிட தகுதியற்றவர்களே! பார்ப்பதற்கு அச்சு அசலாக இருக்கும் இவர்களுக்குள் கூட, பெற்றோரால் வேறுபாடு காண முடிகிற போது, மனம் எவ்வளவு கோணல் கோணும்; நீளம், அகலம் வேறுபாடு எவ்வளவு காணும்!
ஒரு வீட்டின் இரு மாப்பிள்ளைகள் அல்லது மருமகள்கள் ஒப்பிடத்தக்கவர்கள் அல்லர்; ஒரு நிறுவனத்தின் இரு ஊழியர்களும் ஒப்பிடப்பட முடியாதவர்களே; ஒரு வீட்டின் இரு குடித்தனக்காரர்களை ஒப்பிடுவதும் அறிவீனமே!
ஒரே படகில் பயணம் செய்பவர்கள் கூட, ஒன்றாகி விட மாட்டார்கள். 'தாயும், மகளும் ஒன்று என்றாலும், வாயும், வயிறும் வேறு' என்கிற பழமொழி, இக்கருத்திற்கு வலு சேர்க்கிற போது, எதற்கு இனி ஒப்பீடு!
ஒப்பீடுகள், ஒப்பிடப்படுபவர்களை கோபத்திற்கும், வருத்தத்திற்கும் உள்ளாக்குகின்றன. இந்த ஒப்பீட்டில், தர்க்கமே இல்லை என்றே ஒப்பிடப்படும் ஒவ்வொருவரும் கருதுகின்றனர்.
ஒப்பிடுவதை பொறுத்தவரை, குறிப்பாக, பெண்கள் ரொம்பவே கடுப்பாவது நிஜம்!
யாரோடும் தாம் ஒப்பிடப்படுவதை, இவ்வுலகம் விரும்பவில்லை என்பதால், ஒப்பிடுவதற்கு இனி, முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.
ஒவ்வொரு மனிதனும், தான் வளர்கிற, வளர்க்கப்படுகிற சூழலால், களங்களால், படித்த படிப்பால், கற்(காத)ற கல்வியால், பொருளாதர ஏற்றத்தாழ்வுகளால், பெற்ற அனுபவங்களால் மற்றும் வாழ்வில் பார்க்கும் காட்சிகளால், மிக வித்தியாசமான மனநிலைகளில் அமர்ந்து விடுகின்றனர்.
கடைசி வரைக்கும், தாங்கள் நம்புவதையே சரி என, வாதிடுகின்றனர். இதன்படியே, வாழ்க்கை பார்வைகளை அமைத்துக் கொள்கின்றனர்.
எனவே, சிறு ஒற்றுமைகளுக்காக, தாங்கள் பிறரோடு ஒப்பிடப்படும்போது, அது சற்றும் சரியில்லை என்று மறுத்து ஒதுக்குகின்றனர்; எனவே, ஒப்பிட்டு திருத்த முயல்வதை விட்டுவிட்டு, அவரை தனித்துவம் வாய்ந்த தனி மனிதராக ஏற்று, 'உங்களிடத்தில் இன்னின்ன மாற்றங்களை எதிர்பார்க்கிறேன்...' என்று கூறினால், நாம் கூறுவதில் நியாயம் தேடுகின்றனர்.
ஒப்பீட்டு பேசும் போது, முரண்படுவது போலவே, நம் கோரிக்கைகளிலும் முரண்பட்டு, அடியோடு எல்லாவற்றையும் நிராகரிக்கும் ஆபத்து நிகழ்வதால், ஒப்பிடுவதை, இனியேனும் கைவிட முயற்சிப்போமே!
லேனா தமிழ்வாணன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஒப்பிடுவது ஏன் ஒர்க்அவுட் ஆவதில்லை ?
ஒப்பிடுவதை பொறுத்தவரை, குறிப்பாக, பெண்கள் ரொம்பவே கடுப்பாவது நிஜம்!
-
Re: ஒப்பிடுவது ஏன் ஒர்க்அவுட் ஆவதில்லை ?
மேற்கோள் செய்த பதிவு: 1180525krishnaamma wrote:
ஒப்பீட்டு பேசும் போது, முரண்படுவது போலவே, நம் கோரிக்கைகளிலும் முரண்பட்டு, அடியோடு எல்லாவற்றையும் நிராகரிக்கும் ஆபத்து நிகழ்வதால், ஒப்பிடுவதை, இனியேனும் கைவிட முயற்சிப்போமே!
லேனா தமிழ்வாணன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|