புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
91 Posts - 61%
heezulia
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
1 Post - 1%
viyasan
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
1 Post - 1%
eraeravi
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
283 Posts - 45%
heezulia
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
19 Posts - 3%
prajai
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_m10வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 16, 2015 6:16 am

நல்லாத்தூர் என்ற கிராமத்தில் வடிவேலன் என்பவன் வசித்துவந்தான். வயதான தாயாரும் மனைவியும் உடன் வசித்து வந்தனர். வடிவேலனின் மனைவிக்கு மாமியாரைக் கண்டாலே ஆகாது. சதா கரித்துக் கொட்டுவாள். வடிவேலன் ஒரு வாயில்லா பூச்சி. மனைவியை எதிர்த்து ஒரு வார்த்தை பேச மாட்டான்.

   ஒரு நாள் வடிவேலனிடம் அவன் மனைவி, "இந்த கிழத்துக்கு வடித்துக் கொட்ட என்னால் ஆகாது. பேசாமல் கொண்டுபோய் நம்ம ஊரை அடுத்திருக்கும் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடுங்கள்!"என்றாள்.

   வடிவேலன் முதல் முறையாக வாய் திறந்து, "பாவம்! அவர்கள் என்ன செய்தார்கள்? கண் வேறு தெரியாது! நீ போட்டதை சாப்பிட்டுவிட்டு ஒரு மூலையில் விழுந்துகிடக்கிறார்கள்! அவரைப் போய் காட்டில் விடச் சொல்கிறாயே?"என்று கேட்டான்.

  அவனது மனைவியோ மிகவும் மூர்க்கமாக, "நான் சொல்வதை கேட்பதாக இருந்தால் இந்த வீட்டில் இருப்பேன்! இல்லையென்றால் என் அம்மா வீட்டிற்கு போய்விடுவேன்! நீங்களும் உங்கள் அம்மாவும் எப்படியோ இங்கே இருந்து கொள்ளுங்கள்" என்றாள்.

   இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த கண் தெரியாத தாய், வடிவேலனை கூப்பிட்டு, "வேலா! என் காலம் முடிந்துவிட்டது! நீங்கள் வாழ வேண்டியவர்கள்! என்னால் நீங்கள் பிரிய வேண்டாம்! என்னை கொண்டுபோய் காட்டில் விட்டுவிடு!"என்று கண்ணீருடன் கூறினாள்.

   வேறு வழியின்றி வடிவேலன், தாயைக் கூட்டிக்கொண்டு காட்டிற்கு சென்றான். காட்டினுள் வெகு தூரம் சென்ற பின் ஓர் பாழடைந்த மாளிகை ஒன்று தென்பட்டது. அங்கே தன் தாயை உட்கார வைத்துவிட்டு உண்பதற்கு கொஞ்சம் உணவுகளை கொடுத்துவிட்டு, "அம்மா! என்னை மன்னித்துவிடு! என் மனைவியை அடக்க வழியில்லாமல் உன்னை இங்கே கொண்டுவிட்டேனே!"என்று அழுதான்.

    அவன் தாய் அவனை தேற்றி, "மகனே! அழாதே! அவரவர் விதியை யாரால் மாற்றமுடியும்? நான் இங்கேயே மடிய வேண்டும் என்று விதி இருந்தால் அதன்படி நடக்கட்டும்! நீ போய்வா!" என்று வழி அனுப்பினாள்.
   பின்னர் கண் தெரியாத அந்த அம்மாள் அங்கிருந்த ஒரு தூணின் மறைவில் ஒடுங்கிப் படுத்துக் கொண்டார். 

நேரம் கடந்தது. நள்ளிரவு நேரத்தில் அந்த மண்டபத்தில் வசிக்கும் இரண்டு பூதங்கள் அங்கே வந்தன. அவை இரண்டும் அந்த மண்டபத்தின் படியில் அமர்ந்து கொண்டன.
   "எனக்கு ஒரு ரகசியம் தெரியும்!" என்றது முதல் பூதம்!
"என்ன என்ன சொல்லு?"என்றது இரண்டாவது பூதம்.

   "இந்த மண்டபத்தின் முன்னே இருக்கிற செடியில் இருக்கிற இலைகளை பறித்து கசக்கி கண்ணில் விட்டால் கண்பார்வை கிடைக்கும். அரியவகை மூலிகை இது!"என்றது முதல் பூதம்.

   "அப்படியா! இது யார்க்கும் தெரியாது போயிற்று! இல்லாவிட்டால் இந்த ஊர் ராஜகுமாரியின் பார்வைக்கோளாறை சரி பண்ணி நல்ல சன்மானம் வாங்கி கொண்டிருப்பார்களே!" என்றது இரண்டாவது பூதம்.
   ”ஆமாம் ஆமாம் அந்த ராஜகுமாரி வாழ்க்கை முழுக்க பார்வையில்லாமல்தான் இருக்க போகிறாள்!” என்று சிரித்தது முதல் பூதம்

  ”சரி சரி! பேசியது போதும்” என்று சொல்லிவிட்டு இரண்டு பூதங்களும் கிளம்பி விட்டன.

   பொழுதுவிடிந்ததும் அந்த அம்மாள் மெல்ல தட்டுத் தடுமாறி வெளியே வந்தாள். அங்கே தடவி தடவி எதிரே இருந்த செடியை கண்டுபிடித்து அதன் இலைகளை பறித்து கசக்கி கண்ணில் விட்டுக் கொண்டாள். 

சற்று நேரத்தில் அவள் கண்களில் ஒளி பிறந்தது. நல்ல பார்வை கிடைத்தது. அருகே இருந்த செடியில் இருந்து கொஞ்சம் இலைகளை பறித்துக் கொண்டாள். அந்த ஊரின் அரண்மனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
    “மன்னா! ராஜகுமாரியின் கண்களை நான் குணப்படுத்துகிறேன்! பார்வை கிடைக்கச் செய்கிறேன்!”சொல்லும் மூதாட்டியை வியப்பாக பார்த்தான் மன்னன்.

   “பெரிய பெரிய வைத்தியர்கள் எல்லாம் பார்த்துவிட்டார்கள்! நீ என்ன செய்ய போகிறாய்?”

    “ஏதோ எனக்கு தெரிந்த வைத்தியம் செய்கிறேன் மன்னா! நான் வைத்திருக்கும் மூலிகை அபூர்வமானது! கண்டிப்பாக பார்வை கிடைக்கும்.”
    “சரி! முயன்று பாருங்கள்!”

  கிழவி அந்தப் புரம் சென்றாள். ராஜகுமாரியின் கண்களில் பச்சிலையை கசக்கி சாறு பிழிந்தாள். சற்று நேரத்தில் கண் திறந்த ராஜ குமாரி!  “அப்பா! என்னால் பார்க்க முடிகிறது!”என்று தந்தையைக் கட்டிக் கொண்டாள்.
   “பெரிய பெரிய வைத்தியர்கள் குணப்படுத்த முடியாததை நீங்கள் குணப்படுத்தி விட்டீர்கள்! நீங்கள் யார்?”
    “வயதான அனாதை! பிள்ளையும் மருமகளும் கைவிட்ட ஏழை நான்.”

    “பரிதாபம்! சரி நீங்கள் தங்க ஒரு வீடு ஒதுக்கி தருகிறேன்! உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கச் செய்கிறேன்.” என்ற மன்னன். அந்த அம்மாவிற்கு ஒரு வீட்டை ஒதுக்கி தந்து சகல வசதிகளையும் செய்து கொடுத்தான்.

  அவர் அந்த வீட்டில் தங்கிக் கொண்டு தன்னிடம் இருந்த மூலிகை மூலம் கண்பார்வை இழந்தோரை குணப்படுத்தி வந்தாள்.

    இந்த செய்தி வடிவேலன் மனைவிக்கு எட்டியது. அவளுக்கு பொறாமை தீ புகைந்தது. நாம் துரத்திவிட்ட கிழவி வசதியாக வாழ்வதா? என்று புகைந்தாள்.

   கணவனை அழைத்து, போய் அம்மாவை அழைத்துவாருங்கள்! இனி நம்முடனே இருக்கட்டும்! அப்படி வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள் என்றால் காட்டில் என்ன நடந்தது என்றாவது தெரிந்து வாருங்கள்! என்று சொல்லி அனுப்பினாள்.

   வடிவேலனும் தாயின் வீட்டிற்கு வந்து,  “அம்மா! என் மனைவி திருந்தி விட்டாள் தங்களை அழைத்துவரும்படி கூறினாள்” என்றான். மருமகளின் குணம் அறிந்த அந்த அம்மாள் ”வடிவேலா! இனி நான் அங்கு வருவதற்கு இல்லை! வேறு ஏதாவது இருந்தால் பேசு!” என்றார்.

    “சரி அம்மா! உங்களுக்கு எப்படி திடீரென கண் வைத்தியம் செய்யும் திறமை வந்தது?”
   ”அது ரகசியம்!”

 “என்னிடம் கூடவா சொல்ல மாட்டீர்கள்?”
  “ உன்னிடம் சொன்னால் உலகத்துக்கே சொன்ன மாதிரி ஆகிவிடுமே?”
   ”நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்! சொல்லும்மா!”

   “நீதான் காரணம்! நீ என்னை அந்த மண்டபத்தில் விட்டுவிட்டு வந்தாயா?” அப்புறம்…. நடந்ததை சொல்லி முடித்தார் அவர்.

   வடிவேலன் விடைபெற்று மனைவியிடம் வந்து அம்மா சொன்னதை அப்படியே சொல்லி முடிக்க,  “அப்படியா சங்கதி! பூதங்கள் தான் இந்த ரகசியத்தை சொல்லுச்சா!”

    “இதோ பாருங்கள்! உங்கள் அம்மா வைத்தியம் செய்வது போல எங்கள் அம்மாவும் வைத்தியம் செய்ய வேண்டும்! அரசரிடம் பரிசு வாங்க வேண்டும். இப்போதே என் அம்மாவை அந்த மண்டபத்தில் கொண்டு போய் விடுங்கள்! விடிகாலையில் மீண்டும் அழைத்து வாருங்கள்” என்றாள்.

   வடிவேலனும் தன் மாமியாரை அழைத்து சென்று அந்த மண்டபத்தில் விட்டான். வழக்கம் போல அன்றும் அந்த இரண்டு பூதங்கள் நள்ளிரவில் வந்தன.

    “நண்பா! நம் ரகசியத்தை யாரோ அறிந்து கொண்டார்கள். அந்த ராஜ குமாரிக்கு பார்வை திரும்பி விட்டது! அது மட்டுமில்லாமல் நிறைய பேருக்கு பார்வை வரவழைத்து விட்டார்கள்.”

   “ஆம் நண்பா! அன்றே எனக்கு சந்தேகம்! இங்கே மனித வாடை வீசுவது போல் ஓர் நினைவு!”
  ”நினைவு இல்லை நண்பா! மனித வாடைதான் வீசுகிறது! அதோ பார் யாரோ மண்டபத்தில் படுத்திருப்பது போல தெரியவில்லை!”

    “ஆம்! யாரங்கே!” பூதம் குரல் கொடுக்க

மாமியார் எழுந்தார்! ”பூதங்களே வந்து விட்டீர்களா? சொல்லுங்கள்! ரகசியத்தை சொல்லுங்கள்!”
  பூதங்கள் சிரித்தன!

  “நீதானா! எங்கள் ரகசியங்களை தேடி வந்தது! உனக்கு ரகசியம் வேண்டுமா?”என்றன.
    “ஆம்! ஆம்! சொல்லுங்கள்!”

 “விடிந்தால் கழுதையாக போ! இதுதான் ரகசியம்! எங்கள் ரகசியத்தையா திருடுகிறாய்? உனக்கு இதுதான் சரியான தண்டனை!”என்று சாபம் கொடுத்த பூதங்கள் பறந்து சென்றன.

  விடியற்காலையில் வந்த வடிவேலன் மாமியாரை கூட்டிக் கொண்டு நடந்தான். பொழுது பொல பொலவென விடிய விடிய மாமியார் கொஞ்சம் கொஞ்சமாக கழுதையாக மாறலானாள்.
   வீடு வந்து சேர்ந்தான்.

 “என்னங்க! எங்க அம்மாவை கூட்டி வரச் சொன்னா கழுதையை கூட்டி வந்திருக்கீங்களே?”
   ”ம்.. இதுதான் உங்க அம்மா!”

   “என்னங்க சொல்றீங்க?”
   “வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!” என்றான் வடிவேலன்.
  “ஐயோ! அம்மா!”என்று தலையில் அடித்துக் கொண்டு அழலானாள் அவன் மனைவி.

நீதி: கெடுவான் கேடு நினைப்பான்.

 நன்றி தளிர் சுரேஷ்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 11:33 am

கார்த்திக் செயராம் wrote:
நீதி: கெடுவான் கேடு நினைப்பான்.
நன்றி தளிர் சுரேஷ்
மேற்கோள் செய்த பதிவு: 1180739
அருமை கார்த்தி நல்ல கதை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2015 11:40 am

வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  103459460 வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  3838410834
-
வர வர மாமியார் கயிதை போல ஆனார்
என்பதே சரியான பழமொழியாம்...

-
இந்த பழமொழியில் கயிதை என்பது காலப்
போக்கில் மாறி கழுதை என்று ஆகி விட்டது.

கயிதை என்றால் ஊமத்தம் பூச்செடியில் உள்ள
காய்.(ஊமத்தங்காய்).

இதில் ஊமத்தம்பூ பூத்து நாளடைவில் விஷத்
தன்மை கொண்டதாக அதாவது ஊமத்தங்காய்
ஆக மாறுவதையே அப்படி சொல்கிறோம்.
-
-----------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 16, 2015 2:09 pm

பூதங்கள் சிரித்தன!
-
வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  S8yWGOQS16u6FknkeVqC+bootham

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 8:14 pm

ayyasamy ram wrote:
இந்த பழமொழியில் கயிதை என்பது காலப்
போக்கில் மாறி கழுதை என்று ஆகி விட்டது.
கயிதை என்றால் ஊமத்தம் பூச்செடியில் உள்ள
காய்.(ஊமத்தங்காய்).
மேற்கோள் செய்த பதிவு: 1180835
அப்படியா ஐயா,நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 10:08 pm

ayyasamy ram wrote:வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  103459460 வர வர மாமியா கழுதைப் போல ஆனாள்!”  3838410834
-
வர வர மாமியார் கயிதை போல ஆனார்
என்பதே சரியான பழமொழியாம்...

-
இந்த பழமொழியில் கயிதை என்பது காலப்
போக்கில் மாறி கழுதை என்று ஆகி விட்டது.

கயிதை என்றால் ஊமத்தம் பூச்செடியில் உள்ள
காய்.(ஊமத்தங்காய்).

இதில் ஊமத்தம்பூ பூத்து நாளடைவில் விஷத்
தன்மை கொண்டதாக அதாவது ஊமத்தங்காய்
ஆக மாறுவதையே அப்படி சொல்கிறோம்.
-
-----------------------
நல்ல விவரம் ராம் அண்ணா புன்னகை..........நன்றி !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 16, 2015 10:16 pm

நல்ல கதை கார்த்திக் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக