ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவும் , ஒத்தையடிப்பாதையும்

3 posters

Go down

அம்மாவும் , ஒத்தையடிப்பாதையும் Empty அம்மாவும் , ஒத்தையடிப்பாதையும்

Post by கார்த்திக் செயராம் Sat Dec 12, 2015 6:46 pm

அம்மா , அம்மா கால் வலிக்குதும்மா! தூக்கிக்கம்மா!" அந்த சிறுவனின் வயது எட்டு. அம்மாவுக்கு பையனை தூக்க ஆசைதான். முயற்சித்தாள்.
"முடியலடா? இன்னும் கொஞ்ச தூரந்தான் ஊரு வந்துரும்பா" என்றாள்.

எப்போதும் தன் அப்பா ஊரிலிருந்து அம்மா ஊருக்கு , அந்த ஒத்தையடிப்பாதையில் தான் செல்வான். இயற்கை, தன் அழகை வழியெல்லாம், பச்சைப்பசேல் என்று வயல் வெளியாய் பறப்பிநிற்கும். தென்னை மரங்கள் கம்பீரமாய் , தலையசைத்து வரவேற்கும்.

அந்த அழகான சிறிய வாய்க்கால் வரப்பு ஓரம் , நடக்கும்போது அம்மா நிலக்கடலைச் செடியை , கொத்தாகப் பிடித்து , அதன் வேரில் உள்ள கடலையோடு , மண்ணைத்தட்டி , நிலக் கடலையை ஒவ்வொன்றாக ஊட்டும்போது , கால்வலி காணாமல் போகும்.
"அம்மா , அம்மா ! அங்க பாரேன் ஆட்டுக்குட்டி! " குறுக்கே வந்த ஆட்டுக்கூட்டத்திலுள்ள , துள்ளிக்குதிக்கும் ஆட்டுக்குட்டியை பார்த்ததும் , கால்வலி பஞ்சாய்ப் பறந்து போகும்.
"கால் வலிக்குதும்மா !" சிறு கற்கள் ரப்பர் செருப்புக்கும் காலுக்கும் இடையில் புகுந்து உறுத்தும்போது, அம்மா அதை அழகாகத் தட்டும்வரை ,அந்த ஒத்தயடிப்பாதையின் சுடுமண் காலைச்சுடும் . கால் நாட்டியமாடும்.

அதோ அங்கே புளிய மரம்!பார்க்கும்போதே அவனுக்கு நாக்கில் எச்சில் ஊறும்.
"அம்மா! எனக்கு புளியங்காய் வேணும்," என்பான் . என்றுமே யாருக்குமே எதையும் இல்லை என்று சொல்லாத அம்மா, தனக்கு பிடிக்காத, புளியங்காயை தன் மகனுக்கு தன் உயரத்தையும் , கால் வலியையும் பொருட்படுத்தாமல் ,குதித்து எட்டிப்பறித்துக் கொடுப்பாள் . அவன் அந்த பிஞ்சுப் புளியங்காயை ஒடித்து சுவைக்கும்போது, ஒத்தயடிப்பாதையில் அவனோடு வந்த கால்வலி மறைந்து , புளிச்சுவை நாக்கைச்சுளற்ற வைக்கும்.

"இன்னும் கொஞ்ச தூரந்தான். நம்ம பெரியம்மா வீடு வந்துரும்! "என்று கூறிய அம்மா ,தன் கைப்பயை எடுத்து, பொரி உருண்டையைக் கொடுத்தாள் . பொரி உருண்டையைக் 
கொறிக்கும்போது அதன் சுவையும், கண்கவர் வயல்வெளியின் காட்சியும், அவனை பல நிமிடங்கள் கால் வலியை மறக்கச்செய்யும்.

பெரியம்மா வீடு வந்தாகி விட்டது. அவர்கள் வீட்டுத்திண்னையில் ஆட்டுக்குட்டியை பார்க்க ஒரு பரவசம். இது அவனின் அடுத்த இரண்டு நாள் விளையாட்டுத்தோழன் .

புட்டிப்பாலை குழந்தைக்கு ஊட்டித்தான் அவன் இதுவரை பார்த்திருக்கிறான். ஆனால் ,
தாய் ஆடு காட்டில் மேய்வதால், ஆட்டுக்குட்டிக்குக்கு பெரியம்மா புட்டியில் , தாயின் வாஞ்சையோடு பாலூட்டுவது , அவனின் மனத்தில் ,இரக்கத்தையம் அன்பையும் ஊட்டியது.

இரண்டு நாளும் , இரண்டே நிமிடத்தில் கழிந்ததில் அவனுக்கு வருத்தம்.
"அம்மா போலாமாப்பா? "என்று பெரியம்மா கொடுத்த கனமான பலகாரப் பையுடன், அழைத்தபோது, அவனின் மனம் கனத்தது.

கனத்த இதயத்தோடு பெரியம்மாவையும் , ஆட்டுக்குட்டியையும் விட்டுவிட்டு, மீண்டும் அந்த ஒத்தயடிப்பாதையின் விளிம்பில் , அம்மாவின் கையைப் பிடித்து நடக்க ஆரம்பித்தான், திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே!

அவனுக்கு இப்போது நாற்பது வயதுக்கு மேல். சென்ற முறை ஊருக்குச் சென்றபோது 
அம்மா இல்லை. அந்த ஒத்தயடிப்பாதையாவது இருக்குமா என்று , தேடினான்.
கண்ணில் தட்டுப்பட்டதென்னவோ, வறண்ட பிளாட்டுபோட்ட நிலங்களும் , ஒரு டீக்கடையுந்தான்.

கனத்த இதயத்தோடு , டீக்கடையின் பெஞ்சில் , அண்ணே, ஒரு ....டீ..என்றவாறு அமர்ந்தான்....!!!


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

அம்மாவும் , ஒத்தையடிப்பாதையும் Empty Re: அம்மாவும் , ஒத்தையடிப்பாதையும்

Post by krishnaamma Sat Dec 12, 2015 10:58 pm

அருமையான கதை......ம்ம்....இப்போ எல்லாம் எங்கு பார்த்தாலும் கன்கரீட் கட்டிடங்கள் தான் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அம்மாவும் , ஒத்தையடிப்பாதையும் Empty Re: அம்மாவும் , ஒத்தையடிப்பாதையும்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 9:21 am

கார்த்திக் செயராம் wrote:
எப்போதும் தன் அப்பா ஊரிலிருந்து அம்மா ஊருக்கு , அந்த ஒத்தையடிப்பாதையில் தான் செல்வான். இயற்கை, தன் அழகை வழியெல்லாம், பச்சைப்பசேல் என்று வயல் வெளியாய் பறப்பிநிற்கும். தென்னை மரங்கள் கம்பீரமாய் , தலையசைத்து வரவேற்கும்.
அவனுக்கு இப்போது நாற்பது வயதுக்கு மேல். சென்ற முறை ஊருக்குச்
சென்றபோது அம்மா இல்லை. அந்த ஒத்தயடிப்பாதையாவது இருக்குமா என்று ,
தேடினான்.கண்ணில் தட்டுப்பட்டதென்னவோ, வறண்ட பிளாட்டுபோட்ட நிலங்களும் ,
ஒரு டீக்கடையுந்தான்.கனத்த இதயத்தோடு , டீக்கடையின் பெஞ்சில் , அண்ணே, ஒரு ....டீ..என்றவாறு அமர்ந்தான்....!!!
மேற்கோள் செய்த பதிவு: 1180000
இன்று பலரின் அனுபவம் இது தான். நான் என் கிராமத்தை பசுமையாகத்தான் பார்த்தேன்
இன்றோ ஒரே கான்கிரேட் கட்டிடங்கள் பொருளாதார வளர்ச்சியின் உச்சம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அம்மாவும் , ஒத்தையடிப்பாதையும் Empty Re: அம்மாவும் , ஒத்தையடிப்பாதையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum