ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!

Go down

சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  Empty சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!

Post by ayyasamy ram Thu Dec 10, 2015 7:48 pm

புதுடெல்லி:
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும்
அவரது மகன் ராகுல் காந்தி ஆகிய இருவரும் விசாரணை நீதிமன்றத்தில்
நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
நிலையில், இவ்வழக்கில் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்
இங்கே....
-
சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  OBZT02GRhagROC4MKblA+sonia-Rahul600a
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!  Empty Re: சோனியா, ராகுலை மிரட்டும் நேஷனல் ஹெரால்டு வழக்கின் 10 விஷயங்கள்!

Post by ayyasamy ram Thu Dec 10, 2015 7:48 pm

1) நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் வருகிற 19-ம் தேதியன்று டெல்லி விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என டெலி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு செய்தி தாள் நிறுவனத்ததிற்கு சொந்தமான சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்திக்கொள்ள முயற்சித்தார்கள் என்பது இவர்கள் மீதான குற்றச்சாட்டு.

2) இது தொடர்பான வழக்கை பா.ஜனதா தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி நீதிமனன்றத்தில் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் 2014 ஜூன் மாதம் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகி நேரில் ஆஜராக தடை உத்தரவு கோரினர். ஆனால் அவர்களது மனுவை கடந்த திங்கட்கிழமை நிராகரித்த உயர் நீதிமன்றம், சம்மனுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

3) முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்ட The Associated Journals Limited என்ற தாய் நிறுவனம் மற்றும் அதன் சொத்துக்கள், உடமைகள் ஆகியவை Young Indian என்ற கம்பெனியால் கையகப்படுத்தப்பட்டது. இந்த கம்பெனியில் சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் நான்கில் மூன்று மடங்கு பங்குகள் உள்ளன.

4) நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான 5000 கோடி ரூபாய் சொத்துக்களை கையகப்படுத்தும் நோக்கிலேயே சோனியா, ராகுல் ஆகிய இருவரும் இந்த பங்கு பரிவர்த்தனையை மேற்கொண்டார்கள் என்பது சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு.

5) கடந்த 2010 நவம்பரில் கம்பெனிகள் சட்டம் 25 வது பிரிவின் கீழ் 5 லட்சம் ரூபாய் முதலீட்டுடன் young Indian கம்பெனி, ஆதாயம் ஈட்டாத கம்பெனியாக பதிவு செய்யப்பட்டது. இந்த கம்பெனியில் சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் தலா 38 சதவீத பங்குகளையும், மீதமுள்ள பங்குகளை மோதிலால் வோரா, ஆஸ்கர் ஃபெர்னாண்டஸ், சாம் பிட்ரோடா மற்றும் சுமன் துபே ஆகியோரும் வைத்துள்ளனர். இந்நிலையில் young Indian கம்பெனி ஒரு அறக்கட்டளை போன்றது என்றும், அதன் இயக்குநர்கள் அக்கம்பெனியிலிருந்து எந்த இலாபமும் ஈட்டுவதில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

6) நேஷனல் ஹெரால்டு பத்திரிகை கடைசியாக 2008-ம் ஆண்டு அச்சுக்கு சென்றது. அந்த நேரத்தில் அதன் parent company 90 கோடி ரூபாய் கடன் வைத்திருந்தது.

7) அதன் பின்னர் பல மாதங்கள் கழித்து young Indian கம்பெனி நிர்வாக இயக்குநர்கள் கூடி, 'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகையின் கடனை தங்கள் கம்பெனி ஏற்பது என தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால் கடன் பெரிய தொகையாக இருந்தபோதிலும், Young Indian கம்பெனியின் இயக்குநர்கள் காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களாக இருந்தபடியால், அந்த தொகையை காங்கிரஸ் கட்சியிடமிருந்து கடனாக பெறுவது சாத்தியமானது என்று சுவாமி குற்றம் சாட்டி இருந்தார். மேலும் வோரா Associated journals நிறுவனத்தின் தலைமை இயக்குனராகவும், காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் இருந்தார்.

8) காங்கிரஸ் கட்சியின் நோக்கங்களுடன் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை ஒத்துப்போனதால், கடன் வழங்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால் பா.ஜனதா தலைவர்களோ, அரசியல் கட்சி என்பதால் வருமான வரி விலக்கு பெறும் காங்கிரஸ் கட்சி, தனது பணத்தை வர்த்தக நோக்கத்திற்கு திருப்பிவிட முடியாது என கூறினார்கள்.

9) இது தொடர்பாக நீதிமன்றத்தில் சுவாமி தாக்கல் செய்த மனுவில், மேலும் கூடுதலாக 50 லட்சம் ரூபாய்க்கு Associated Journals நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையும் Young Indian கம்பெனி வாங்கியதாக குற்றம் சாட்டி இருந்தார்.

10) மேற்கூறிய இந்த முடிவுகள் மூலம் Associated journals நிறுவனத்திற்கு சொந்தமாக டெல்லி, லக்னோ, போபால், இந்தூர், மும்பை, பாஞ்ச்குலா, பாட்னா மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடங்கள், நிலங்களை வெறும் 50 லட்சம் ரூபாயில் Young Indian கம்பெனி கையகப்படுத்தியது என்றும், உதாரணத்திற்கு சில சொத்துக்கள் கடனை அடைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளன என்றும் சுவாமி கூறியுள்ளார்.
-
விகடன்.காம்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum