Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் நடப்பது காலாவதியான ஆட்சியா?- ஜெ.-க்கு விஜயகாந்த் சரமாரி கேள்வி
3 posters
Page 1 of 1
தமிழகத்தில் நடப்பது காலாவதியான ஆட்சியா?- ஜெ.-க்கு விஜயகாந்த் சரமாரி கேள்வி
பாதித்த பிறகு நிவாரணம் வழங்குவதை விட, பாதிப்பே இல்லாமல் செய்வதுதான் மக்கள் நலனை விரும்பும் அரசுக்கு அடையாளமாகும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிமுக, திமுக ஆட்சியில் சீர்மிகு சென்னையாக்குகிறேன், சிங்கார சென்னையாக்குகிறேன் என்று வார்த்தை ஜாலம் பேசி, உலக நாடுகளிடம் கையேந்தி பெற்ற நிதியெல்லாம் வீணாகிப்போய், இன்று தமிழகம் சுமார் 4 லட்சம் கோடிக்கு மேல் கடனில் சிக்கித்தவிப்பதுதான் மிச்சம்.
இரண்டு ஆட்சியிலும் கூவம் ஆறு, அடையார் ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை முழுமையாக தூர்வாரப்பட்டதாகவோ, சுத்தம் செய்யப்பட்டதாகவோ தெரியவில்லை.
ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை சென்னைவாழ் மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்திய மழை வெள்ளம் செய்துள்ளது. மூன்று ஆறுகளையும் சுத்தப்படுத்தி, கரையோரமிருந்த ஆக்கிரமிப்புகளை கபளீகரம் செய்துள்ளது.
சோகமான நிலையில் இயற்கை கொடுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் தடுக்கவேண்டிய பொறுப்பும், கடைமையும் அதிமுக அரசுக்கு இருக்கிறது.
சென்னை மாநகரத்திற்குள் அரசுக்கு சொந்தமான பல இடங்கள் உபயோகமற்று இருக்கிறது. ஆற்றங்கரையோரம் வசித்த ஏழை மக்களை அந்த இடத்திற்கு மாற்றம் செய்து, அவர்களுக்கு அரசு சார்பில் வீடுகளை கட்டிக் கொடுக்கவேண்டும்.
மேலும் சென்னையை சுற்றி ஓடுகின்ற ஆறுகளில் சேறுகளும், சகதிகளும் சுமார் ஐந்து முதல் பத்தடி வரை தேங்கியுள்ளன. அவற்றை போர்க்கால அடிப்படையில் தூர்வாருதல் மூலம் அகற்றி, ஆற்றின் இரு கரையோரமும் தடுப்புச் சுவர்களையும், ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளையும் அமைத்து, அதில் கழிவுநீர் கலப்பதையும் தடுக்கவேண்டும்.
இதைச் செய்வதால் வரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் மக்களை காப்பாற்ற முடியும். சென்னையின் குடிநீர் தேவையும் தீரும். பசியோடு இருப்பவருக்கு மீனை உணவாக கொடுப்பதைவிட, மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பதே அவருக்கு செய்யும் உதவி என்பார்கள். அதுபோல பாதித்த பிறகு நிவாரணம் வழங்குவதை விட, பாதிப்பே இல்லாமல் செய்வதுதான் மக்கள் நலனை விரும்பும் அரசுக்கு அடையாளமாகும்.
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து, போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை.
நிவாரண பணிகளில் விநியோகம் செய்யும் முறை சீராக இல்லை. பல இடங்களுக்கு நிவாரண உதவிகள் இன்னும் போய்ச்சேரவில்லை. எனவே உடனடியாக சீர்படுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னைக்கு கப்பலில் வந்துள்ள நிவாரண பொருட்களை எடுத்துச்செல்வதற்கு ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், தமிழகத்திற்கு உதவி செய்ய வந்துள்ள இராணுவத்தினரை ஒருங்கிணைத்திடவோ வழிகாட்டிடவோ ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் செய்திகள் வருகின்றன.
இவ்வளவு மோசமான நிர்வாக சீர்கேட்டை தமிழகம் பார்த்ததில்லை. முதலமைச்சர் - அமைச்சர், மேயர் - கவுன்சிலர் என ஒருவருக்கு ஒருவர் தகவல் தொடர்பில்லாமல் (COMMUNICATION GAP) இருப்பதாகவும், அதனால் அதிகாரிகள் செய்வதறியாது திணறுவதன் வெளிப்பாடே இந்த நிலைக்கு காரணமென மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
பல்வேறு துன்பங்களை மக்கள் அனுபவித்து வரும் இந்த வேளையில்கூட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவோ, அமைச்சர்களோ நிவாரண பணிகளில் மெத்தனமாக இருந்துகொண்டு, மக்களிடத்தில் பேசமறுத்து, மௌனம் காப்பது ஏன்?
சென்னை மேயரும் பேச மறுக்கிறார், மேயருக்கு அதிகாரம் இல்லையா? மேயருக்கு பதிலாக வேறு நபர் அதிகாரத்தில் இருக்கிறாரா? இவர்கள் அனைவருமே மௌனமாக இருந்துவிட்டால், அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிடும் என்று நினைத்துவிட்டார்களா? அப்படியானால் அதிமுக ஆட்சி முடிந்துபோன ஆட்சியா? செயலிழந்த ஆட்சியா? காலாவதியான ஆட்சியா?
தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இதற்காவது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பதில் சொல்லவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழ் தி இந்து காம்
Re: தமிழகத்தில் நடப்பது காலாவதியான ஆட்சியா?- ஜெ.-க்கு விஜயகாந்த் சரமாரி கேள்வி
விஜயகாந்த் தானாக இந்த அறிக்கைதயார் பண்ணினாரா இல்லை யாராவது எழுதி கொடுத்தா என்று தெரியிவில்லை , இருந்தாலும் மிக அருமையான அறிக்கை.
எந்த வித சதி / மத / அரசியல் நெருக்கடிக்கும் இடம் கொடுக்காமல் இதை கடுமையான முறையில் அமல்படுத்தவேண்டும்.
இரண்டு ஆட்சியிலும் கூவம் ஆறு, அடையார் ஆறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவை முழுமையாக தூர்வாரப்பட்டதாகவோ, சுத்தம் செய்யப்பட்டதாகவோ தெரியவில்லை.
ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை சென்னைவாழ் மக்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்திய மழை வெள்ளம் செய்துள்ளது. மூன்று ஆறுகளையும் சுத்தப்படுத்தி, கரையோரமிருந்த ஆக்கிரமிப்புகளை கபளீகரம் செய்துள்ளது.
சோகமான நிலையில் இயற்கை கொடுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் தடுக்கவேண்டிய பொறுப்பும், கடைமையும் அதிமுக அரசுக்கு இருக்கிறது.
சென்னை மாநகரத்திற்குள் அரசுக்கு சொந்தமான பல இடங்கள் உபயோகமற்று இருக்கிறது. ஆற்றங்கரையோரம் வசித்த ஏழை மக்களை அந்த இடத்திற்கு மாற்றம் செய்து, அவர்களுக்கு அரசு சார்பில் வீடுகளை கட்டிக் கொடுக்கவேண்டும்.
மேலும் சென்னையை சுற்றி ஓடுகின்ற ஆறுகளில் சேறுகளும், சகதிகளும் சுமார் ஐந்து முதல் பத்தடி வரை தேங்கியுள்ளன. அவற்றை போர்க்கால அடிப்படையில் தூர்வாருதல் மூலம் அகற்றி, ஆற்றின் இரு கரையோரமும் தடுப்புச் சுவர்களையும், ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளையும் அமைத்து, அதில் கழிவுநீர் கலப்பதையும் தடுக்கவேண்டும்.
எந்த வித சதி / மத / அரசியல் நெருக்கடிக்கும் இடம் கொடுக்காமல் இதை கடுமையான முறையில் அமல்படுத்தவேண்டும்.
Re: தமிழகத்தில் நடப்பது காலாவதியான ஆட்சியா?- ஜெ.-க்கு விஜயகாந்த் சரமாரி கேள்வி
எல்லா தலைவர்களும் எழுதிக் கொடுத்த அறிக்கையைத்தான் படிக்கிறார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Similar topics
» உள்ளாட்சி இடைத்தேர்தல்: ஜெ.-க்கு விஜயகாந்த் சரமாரி கேள்வி
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
» சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி !
» தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி: ராமதாஸ்
» இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? -உயர்நீதிமன்றம்
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
» சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி !
» தமிழகத்தில் நடப்பது ஹிட்லர் ஆட்சி: ராமதாஸ்
» இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? -உயர்நீதிமன்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|