புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகை பயமுறுத்தும் குட்டிப்பையன்... எல் நினோவைப் பற்றிய 10 தகவல்கள்!
Page 1 of 1 •
-
சென்னையின் பெருமழைக்கு முன்பும் சரி, பிறகும் சரி எல் நினோ
(El Nino) என்ற பெயர் அதிகமாக அடிபடத் துவங்கியிருக்கிறது.
அதிலும் ஐ.நா சபையின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு எல்
நினோவைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
-
இதோ, எல் நினோவை பற்றிய பத்து தகவல்கள்...
-
1. 'எல் நினோ' என்பது ஸ்பானிய மொழி வார்த்தை.
'குட்டிப் பையன் அல்லது சிறுவன்' என்பது இதன் பொருள்.
டிசம்பர் மாதத்தை ஒட்டி அதாவது கிறிஸ்துமசை ஒட்டி நிகழும்
வளிமண்டல மாற்ற நிகழ்வாதலால் குட்டிப் பையனைப்
பொதுவாக 'குழந்தை ஏசு' என்ற பொருள்படும்படியும்
அழைக்கிறார்கள்.
-
பசுபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதியின் மேற்பரப்பில் நடை
பெறும் வெப்பநிலை மாறுபாடு மற்றும் இதன் உப விளைவாக
உலகின் பெரும்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றங்கள்
ஆகியவற்றின் ஒட்டுமொத்தத் தொகுப்பே 'எல் நினோ.'
-
2. சுருக்கமாக எல் நினோ என அழைக்கப்பட்டாலும்,
'எல் நினோ தெற்கத்திய அலைவு'
(El Nino Southern Oscillation – ENSO) என முழுமையாக
அழைக்கப்படுவதே சரியானது.
கிழக்கு பசுபிக் பெருங்கடலில் எல் நினோ நிகழ்வு ஏற்படும் போது
வழக்கமாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றின்
திசையானது அதற்கு நேர்மாறாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி
திசை மாறுகிறது, காற்று வீசும் திசையின் இந்த ஊசலாட்டத்தின்
காரணமாகவே 'எல் நினோ தெற்கத்திய அலைவு' என்று அழைக்கப்
படுகிறது.
3. இத்தகைய காற்றின் திசைமாற்றத்தின் காரணமாக பசிபிக்
பெருங்கடலின் காலநிலை முற்றிலுமாக மாற்றமடைகிறது.
வழக்கமான ஈரப்பதம் மற்றும் மித வெப்பம் கொண்ட பசிபிக்கின்
மேற்குப் பகுதியானது எல் நினோவிற்குப் பிறகு ஈரப்பதம் இல்லாமல்
குறைந்த மழையும் வறண்ட நிலையும் கொண்டதாக மாறுகிறது.
-
இதேபோல எல் நினோ நிகழ்வால் வழக்கமாக வறண்ட குளிர் மற்றும்
குறைந்த மழையைக் கொண்ட பசிபிக்கின் கிழக்குப் பகுதியானது
ஈரப்பதமும் மித வெப்பமும் அதிக மழையும் கொண்டதாக
மாற்றமடைகிறது.
-
4. எல் நினோ நிகழ்வைப் பற்றிய முறையான அறிவியல்
ரீதியான விளக்கம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு முன்பாகவே
மனிதனின் பட்டறிவின் மூலமாக இந்நிகழ்வு கவனிக்கப்பட்டே
வந்தது. பெரு நாட்டின் கடல் பகுதி மீனவர்களும்
கப்பலோட்டிகளும் சில ஆண்டுகள் இடைவெளியில் கடலில்
நீரோட்டம் வழக்கத்தை விட வெப்பமடைவதையும், மீன்களின்
அளவு குறைந்து வருவதையும் கண்டறிந்தனர்.
இத்தகைய நிகழ்வுகளை அடுத்து வானிலையில் மாற்றம்
அடைவதையும் கவனித்தே வந்தனர்.
-
-
5. தெற்கத்திய அலைவோட்டம் பற்றி அறிவியல் ரீதியான
விளக்கத்தை முதன் முதலாக அளித்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த
'சர் கில்பர்ட் வாக்கர்'. 1923 -ம் ஆண்டு அவர் இதை கண்டறிந்தார்.
1904 -ம் ஆண்டு இந்திய வானவியல் ஆராய்ச்சி மையங்களின்
தலைமை இயக்குநராக பணிபுரிந்த அவர் இந்திய வானிலை
ஆராய்ச்சியில், தான் பயின்ற கணிதம் மற்றும் புள்ளியியலை
பொருத்தி ஆய்வுகள் மேற்கொண்டார்.
-
இந்திய பருவ கால மழைகளை ஆராய்ந்ததில் சில குறிப்பிட்ட
நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வதை அவர் கண்டறிந்தார். பதினைந்து
ஆண்டுகள் இந்திய வானிலை மாற்றங்கள் மற்றும் பசிபிக்
பிராந்திய வானிலையைக் கண்காணித்து வந்ததில் பசிபிக் மற்றும்
இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் வளிமண்டல அழுத்தத்தில்
ஏற்படும் ஊசலாட்டம் போன்ற நிகழ்வு தெற்காசியா, இந்தோனேசியா,
ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கப் பகுதிகளின் வானிலையில்
மாற்றம் ஏற்படுத்துவதைக் கண்டறிந்தார்.
இந்த நிகழ்வுகளையே 'எல் நினோ தெற்கு அலைவு' என்று அழைத்தார்.
-
-
6. எல் நினோவைப் பொறுத்த வரை, முன்கூட்டியே நம்மால் அதை
துல்லியமாக இதுவரை கணிக்க முடிந்ததில்லை. இரண்டு முதல் ஐந்து
ஆண்டு களுக்கு ஒரு முறை இந்நிகழ்வு ஏற்படுகிறது.
இந்த கால இடைவெளியில் எல் நினோ நிகழ்வு சில வாரங்கள் முதல்
மாதம் வரை நீடிக்கிறது.
-
சில சமயங்களில் எல் நினோ நிகழ்வானது மூன்று ஆண்டு முதல் ஏழு
ஆண்டு வரையிலான கால இடைவெளியில் காணப்படுகிறது. இத்தகைய
சமயங்களில் சில மாதங்கள் வரை கூட எல் நினோ நிகழ்வு தொடர்ந்து
நடைபெறும்.
-
7. எல் நினோ நிகழ்வின் விளைவாக தென் அமெரிக்காவை ஒட்டிய கடல்
பகுதிகளில் முக்கியமாக பெரு நாட்டின் கடல் பகுதிகளில் கடல் நீரின்
வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதனால், மீன்களின் உணவூட்டப்
பொருட் கள் குளிர்ச்சியான நீரின் அடிப்பகுதியில் தங்கிவிடுவதால்
மேற்பகுதியின் வெப்பநீரில் ஊட்டப்பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படுகிறது,
இதனால் மீன்கள் மடிகின்றன. இதனால் இக்கடல் பகுதிகளில் எல் நினோ
நிகழ்வுக் காலத்தில் மீன்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படும்.
-
8. 1982 மற்றும் 1983 ம் ஆண்டு ஏற்பட்ட எல் நினோ நிகழ்வின் விளைவாக
உலகம் முழுக்க 2000க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். பொருளாதார
ரீதியாகவும் ஆயிரம் கோடிக்கும் மேலான இழப்பு ஏற்பட்டது.
1990-1995 -ம் ஆண்டு வரை மிக நீண்ட எல் நினோ நிகழ்வு ஏற்பட்டது.
இக்காலப்பகுதியில் மிகப்பெரும் வெள்ளம், புயல் போன்றவை சில
பகுதிகளிலும் பஞ்சம், காட்டுத்தீ போன்றவை சில பகுதிகளிலும் நிகழ்ந்தது.
ஆயிரம் ஆண்டுகாலத்தின் பெரும் பேரழிவாக இது கருதப்படுகிறது.
-
1997-1998 -ம் ஆண்டு எல் நினோ நிகழப்போவதை முன்கூட்டியே நம்மால்
கணிக்க முடிந்தது என்றாலும், உலகம் முழுவதும் ஏற்பட்ட 2000க்கும்
மேற்பட்ட உயிரிழப்பை தடுக்க முடியவில்லை.
-
9. எல் நினோ நிகழ்வால் உலகின் பல பகுதிகளில் பெரு மழை, வறட்சி
போன்றவை நிலவி பெரும் சேதத்தை ஏற்படுத்தினாலும் எல் நினோ நிகழ்வால்
சில நன்மைகளும் இருக்கின்றன. வளி மண்டலத்தின் உயரத்தில் வேகமாக
கிழக்கு நோக்கி வீசும் 'ஜெட் காற்றோட்டங்கள்' இக்காலப் பகுதியில்
பெரும்பாலான புயல்களை வழி நடத்துவதாக இருக்கின்றன.
-
எல் நினோ நிகழ்வால் இந்த ஜெட் காற்றோட்டங்கள் மாற்றம் பெறுகின்றன.
இதனால் பெரும் புயல்கள் வலுவிழக்கின்றன.
சில பகுதிகளில் வானிலை மாற்றங்களில் நல்ல விளைவை ஏற்படுத்துகின்றன.
-
-
10. எல் நினோ நிகழ்விற்கு அப்படியே எதிர்மாறானது லா நினா ஆகும்.
எல் நினோ எவ்வாறு சிறுவன் எனப் பொருள் கொண்டதோ அதே போல
லா நினா என்றால் ' சிறுமி' என்று பொருள் ஆகும். லா நினா நிகழ்வால் தென்
அமெரிக்க கடல் பகுதியில் வழக்கத்துக்கு மாறாக அதிக வறட்சியும்
குளிர்ச்சியும் ஒருங்கே நிகழும். மேற்கு பசுபிக் கடல் பகுதி மிதவெப்பமாகவும்
அதிக ஈரப்பதமும் மற்றும் அதிக மழையும் இருக்கும்.
-
பொதுவாக எல் நினோ வை அடுத்து லா நினா நிகழும்.
ஆனால், எல்லா நேரங்களில் சிறுவனை அடுத்து சிறுமி வரமாட்டாள்.
-
-----------------------------------------
- இனியன் (மாணவப் பத்திரிகையாளர்)
விகடன்.காம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
சென்னையில் பெய்த கன மழைக்கும் எல் நினோவுக்கும் சம்பந்தமில்லை என்பது மாதிரியான செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், நேரடியாக எல் நினோ தாக்கம் இல்லாவிட்டாலும் தமிழகத்தின் வானிலையில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தை எல் நினோவின் பாதிப்பு மேலும் அதிகரித்துவிட்டதாக நாஸா தெரிவித்துள்ளது.
அது என்ன எல் நினோ:
பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில் உள்ள வான் பரப்பிலும், வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் தான் எல் நினோ. El Niண்o-Southern Oscillation (ENSO) என்பது இதன் விரிவாக்கம். எல் நினோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் குட்டிப் பையன் என்று அர்த்தம்.
லா நினா..:
எல் நினோவுக்கு எதிர்மறையாக இதே கடல்- வான் பகுதியில் ஏற்படும் இன்னொரு மாற்றம் லா நினா. அதாவது கடலின் சராசரி வெப்ப நிலை சரியும் போது ஏற்படும் விளைவு இது. லா நினா என்பது குட்டிப் பெண்.
இந்த இரு வெப்ப நிலை மாற்றங்களும், இப்போது தான் ஏற்படும் என்று உறுதியாக சொல்வதற்கு இல்லை. சராசரியாக 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை எல் நினோவும் லா நினாவும் நிகழ்கிறது. இந்த வெப்ப மாற்றம் 9 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை, சில நேரங்கள் சில வருடங்கள் வரை கூட நீடிக்கும். லா நினாவை விட எல் நினோ தான் அடிக்கடி உருவாகிறது.
சர்வதேச அளவில் நேரத்தை கணக்கிட உதவும், டேட் லைன் பகுதிக்கு 120 டிகிரி மேற்கில் பசிபிக் கடலின் இந்த மாற்றங்கள் நிகழும்போதெல்லாம் கடல் பகுதி உள்பட, உலகெங்கும் தரைப் பகுதிகளிலும் வானிலையில் பெரும் மாற்றங்கள் உருவாகின்றன.
400 வருடங்களுக்கு முன்பே... எல் நினோ உருவாகும்போதெல்லாம் கடுமையான மழையும், தாங்க முடியாத வறட்சியும் என எதிர்மறையான தட்ப வெப்பத்தை பல பகுதிகளில் உருவாக்குகிறது. லா நினா காலத்தில் உலகின் வட மேற்கு பகுதிகளில் குளிர்காலம் தாங்க முடியாத அளவுக்கு குளிருடன் இருக்கும். அதே நேரத்தில் தென் கிழக்கு பகுதிகளில் குளிர் வழக்கத்தைவிட குறையும்.
இந்த எல் நினோ விவகாரம் 400 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. தென் அமெரிக்க மீனவர்கள் கடல் பகுதியின் வெப்பம் அளவுக்கு அதிகமாக இருப்பதை அப்போதே கண்டுபிடித்தனர். இப்போது உலகின் பல நாடுகளையும் சேர்ந்த அதி நவீன செயற்கைக் கோள்கள் இந்த மாற்றத்தை மிகத் துல்லியமாக கணக்கிட்டு வருகின்றன. இவை தரும் தகவல்களை ஒருங்கிணைப்பது நாஸா. இந்தப் பணியில் உள்ள நாடுகள்- செயற்கைக் கோள்கள் படம் கீழே..
இஸ்ரோவும் நாஸாவும் சேர்ந்து...
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தனது Global Precipitation Measurement (GPM) mission திட்டத்தின் கீழ் வரும் இஸ்ரோவின் செயற்கைக் கோள்கள் உள்பட உலகின் டாப் 12 வானிலை ஆய்வு செயற்கைக் கோள்கள் தந்த டேட்டாவை வைத்து கடந்த நவம்பர் 17ம் தேதி ஒரு விவரத்தை வெளியிட்டது. அதில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உலகெங்கும் நிலவிய கடல் பகுதி வெப்பத்தின் அளவு தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் படம் கீழே..
இதில் தமிழகத்தை சுற்றியுள்ள வங்கக் கடல், அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றில் வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட மிக மிக அதிகமாக, அதாவது ரெக்கார்ட் அளவில் இருப்பது தெரியவந்தது. இது போன்ற பல விவரங்களை நாஸாவும் இந்திய வானிலை ஆய்வு மையமும் நிச்சயம் பகிர்ந்து கொண்டிருக்கும். இதனால் தான் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என எச்சரித்தோம் என இஸ்ரோ கூட கூறுகிறது.
இந் நிலையில் கடந்த டிசம்பர் 1 முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் பெய்த மழையின் உக்கிரத்தை காட்டும் இன்னொரு அனிமேஷனையும் நாஸா வெளியிட்டுள்ளது. அது கீழே..
இதன்படி 48 மணி நேரத்தில் 500 மி.மீ வரை, அதாவது 20 இன்ச் அளவுக்கு இங்கே மழை கொட்டித் தீர்த்திருப்பதை நாஸாவின் பல செயற்கைக் கோள்கள் காட்டுகின்றன. இது குறித்து நாஸாவின் கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் சென்டர் விஞ்ஞானிகள் கூறுகையில், தமிழகத்தில் பெய்த இந்த பெரு மழைக்கு மிகத் தீவிரமான வட கிழக்கு பருவமே காரணம். இந்த பருவ காலத்தில், நாட்டின் வட கிழக்கில் இருந்து, குறிப்பாக வங்கக் கடலில் இருந்து ஆவியான நீருடன் சூடான காற்றை தென் மேற்கு நோக்கி வீசும். இதனால் நாட்டின் உள் பகுதிகளில் வான் பகுதிகள் காய்ந்து போய், காற்றளவின் அழுத்தம் குறையும். இந்த அழுத்தம் குறைவான பகுதிக்குள் மேலும் காற்று வந்து சேரும்போது அந்தக் காற்று, ஏற்கனவே வந்து சேர்ந்த நீராவியை குளிர வைத்து, புயலாக மாறி கன மழையைக் கொட்டும். இது தான் வட கிழக்குப் பருவ மழை.
ஆனால், இந்த ஆண்டு எல் நினோ காரணமாகவும் தமிழகத்தை சுற்றிய கடல் பகுதி வெப்பம் மிக மிக அதிகமாக இருந்ததாலும் பருவ மழையின் அளவும் பெரும் அளவு அதிகரித்துவிட்டது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த மாதிரியான தகவல்கள் எல்லாம் கிடைத்தவுடன் மேற்கு நாடுகளில் முன்னெச்சரிக்கை என்று சொல்வார்களே, அந்த ஒரு நடவடிக்கையில் ஒட்டு மொத்த அரசு எந்திரமும் குதிக்கும், முடிந்தவரை சேதத்தை தவிர்க்கும்.
நன்றி தமிழ் ஒன் இந்தியா
அது என்ன எல் நினோ:
பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில் உள்ள வான் பரப்பிலும், வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் தான் எல் நினோ. El Niண்o-Southern Oscillation (ENSO) என்பது இதன் விரிவாக்கம். எல் நினோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் குட்டிப் பையன் என்று அர்த்தம்.
லா நினா..:
எல் நினோவுக்கு எதிர்மறையாக இதே கடல்- வான் பகுதியில் ஏற்படும் இன்னொரு மாற்றம் லா நினா. அதாவது கடலின் சராசரி வெப்ப நிலை சரியும் போது ஏற்படும் விளைவு இது. லா நினா என்பது குட்டிப் பெண்.
இந்த இரு வெப்ப நிலை மாற்றங்களும், இப்போது தான் ஏற்படும் என்று உறுதியாக சொல்வதற்கு இல்லை. சராசரியாக 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை எல் நினோவும் லா நினாவும் நிகழ்கிறது. இந்த வெப்ப மாற்றம் 9 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை, சில நேரங்கள் சில வருடங்கள் வரை கூட நீடிக்கும். லா நினாவை விட எல் நினோ தான் அடிக்கடி உருவாகிறது.
சர்வதேச அளவில் நேரத்தை கணக்கிட உதவும், டேட் லைன் பகுதிக்கு 120 டிகிரி மேற்கில் பசிபிக் கடலின் இந்த மாற்றங்கள் நிகழும்போதெல்லாம் கடல் பகுதி உள்பட, உலகெங்கும் தரைப் பகுதிகளிலும் வானிலையில் பெரும் மாற்றங்கள் உருவாகின்றன.
400 வருடங்களுக்கு முன்பே... எல் நினோ உருவாகும்போதெல்லாம் கடுமையான மழையும், தாங்க முடியாத வறட்சியும் என எதிர்மறையான தட்ப வெப்பத்தை பல பகுதிகளில் உருவாக்குகிறது. லா நினா காலத்தில் உலகின் வட மேற்கு பகுதிகளில் குளிர்காலம் தாங்க முடியாத அளவுக்கு குளிருடன் இருக்கும். அதே நேரத்தில் தென் கிழக்கு பகுதிகளில் குளிர் வழக்கத்தைவிட குறையும்.
இந்த எல் நினோ விவகாரம் 400 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. தென் அமெரிக்க மீனவர்கள் கடல் பகுதியின் வெப்பம் அளவுக்கு அதிகமாக இருப்பதை அப்போதே கண்டுபிடித்தனர். இப்போது உலகின் பல நாடுகளையும் சேர்ந்த அதி நவீன செயற்கைக் கோள்கள் இந்த மாற்றத்தை மிகத் துல்லியமாக கணக்கிட்டு வருகின்றன. இவை தரும் தகவல்களை ஒருங்கிணைப்பது நாஸா. இந்தப் பணியில் உள்ள நாடுகள்- செயற்கைக் கோள்கள் படம் கீழே..
இஸ்ரோவும் நாஸாவும் சேர்ந்து...
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா தனது Global Precipitation Measurement (GPM) mission திட்டத்தின் கீழ் வரும் இஸ்ரோவின் செயற்கைக் கோள்கள் உள்பட உலகின் டாப் 12 வானிலை ஆய்வு செயற்கைக் கோள்கள் தந்த டேட்டாவை வைத்து கடந்த நவம்பர் 17ம் தேதி ஒரு விவரத்தை வெளியிட்டது. அதில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் உலகெங்கும் நிலவிய கடல் பகுதி வெப்பத்தின் அளவு தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் படம் கீழே..
இதில் தமிழகத்தை சுற்றியுள்ள வங்கக் கடல், அரபிக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றில் வெப்பத்தின் அளவு வழக்கத்தை விட மிக மிக அதிகமாக, அதாவது ரெக்கார்ட் அளவில் இருப்பது தெரியவந்தது. இது போன்ற பல விவரங்களை நாஸாவும் இந்திய வானிலை ஆய்வு மையமும் நிச்சயம் பகிர்ந்து கொண்டிருக்கும். இதனால் தான் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என எச்சரித்தோம் என இஸ்ரோ கூட கூறுகிறது.
இந் நிலையில் கடந்த டிசம்பர் 1 முதல் 2ம் தேதி வரை தமிழகத்தில் பெய்த மழையின் உக்கிரத்தை காட்டும் இன்னொரு அனிமேஷனையும் நாஸா வெளியிட்டுள்ளது. அது கீழே..
இதன்படி 48 மணி நேரத்தில் 500 மி.மீ வரை, அதாவது 20 இன்ச் அளவுக்கு இங்கே மழை கொட்டித் தீர்த்திருப்பதை நாஸாவின் பல செயற்கைக் கோள்கள் காட்டுகின்றன. இது குறித்து நாஸாவின் கோடார்ட் ஸ்பேஸ் பிளைட் சென்டர் விஞ்ஞானிகள் கூறுகையில், தமிழகத்தில் பெய்த இந்த பெரு மழைக்கு மிகத் தீவிரமான வட கிழக்கு பருவமே காரணம். இந்த பருவ காலத்தில், நாட்டின் வட கிழக்கில் இருந்து, குறிப்பாக வங்கக் கடலில் இருந்து ஆவியான நீருடன் சூடான காற்றை தென் மேற்கு நோக்கி வீசும். இதனால் நாட்டின் உள் பகுதிகளில் வான் பகுதிகள் காய்ந்து போய், காற்றளவின் அழுத்தம் குறையும். இந்த அழுத்தம் குறைவான பகுதிக்குள் மேலும் காற்று வந்து சேரும்போது அந்தக் காற்று, ஏற்கனவே வந்து சேர்ந்த நீராவியை குளிர வைத்து, புயலாக மாறி கன மழையைக் கொட்டும். இது தான் வட கிழக்குப் பருவ மழை.
ஆனால், இந்த ஆண்டு எல் நினோ காரணமாகவும் தமிழகத்தை சுற்றிய கடல் பகுதி வெப்பம் மிக மிக அதிகமாக இருந்ததாலும் பருவ மழையின் அளவும் பெரும் அளவு அதிகரித்துவிட்டது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்த மாதிரியான தகவல்கள் எல்லாம் கிடைத்தவுடன் மேற்கு நாடுகளில் முன்னெச்சரிக்கை என்று சொல்வார்களே, அந்த ஒரு நடவடிக்கையில் ஒட்டு மொத்த அரசு எந்திரமும் குதிக்கும், முடிந்தவரை சேதத்தை தவிர்க்கும்.
நன்றி தமிழ் ஒன் இந்தியா
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்லத் தகவல் சேகரிப்பு /பகிர்வு .
நன்றி ayyasami ram / கார்த்திக் செயராம் .
ரமணியன்
நன்றி ayyasami ram / கார்த்திக் செயராம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பதிவு, நன்றி ..............இருவருக்கும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|