ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை யமகவந்தாதி யுரை

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மதுரை யமகவந்தாதி யுரை - Page 2 Empty மதுரை யமகவந்தாதி யுரை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 8:57 pm

First topic message reminder :

மதுரை யமகவந்தாதி யுரை-1


மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர்

மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய்

மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற

மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே

இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் தன்பக்கத்தே சேர்ந்திருக்கப்பெற்ற யானை முகமுள்ள சித்தி
விநாக்கடவுளுடைய சிறப்புப்பொருந்திய திருவடிகளே சகாயமாக வரும்

நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Tue Dec 08, 2015 9:22 pm; edited 4 times in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


மதுரை யமகவந்தாதி யுரை - Page 2 Empty Re: மதுரை யமகவந்தாதி யுரை

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 6:32 pm

மதுரை யமகவந்தாதி யுரை-9

தந்தனத் தானத்த மால்காட்டுந் தையலர் சற்சிதமி

தந்தனத் தானத்த னாதிய ரின்பிற் றயங்கமயல்

தந்தனத் தானத்த நின்னடிப் போதிணை தாதனத்த

தந்தனத் தானத்த வென்றாடுங் கூடலிற் சங்கரனே

தங்கள் மார்பகங்களால் (யாவரும்) இச்சிக்கும்படி மயக்குகின்ற மாதர்களது விருப்பம் நிறைந்து,பிரமா விஷ்ணு முதலிய தேவர்கள் காமத்திலழுந்துபடி மயக்கத்தைக் கொடுத்த மன்மதனுடைய மைத்துனராகிய முருக்ககடவுளுக்குப் பிதாவே, தனத்த தந்தனத் தானத்த வென்னுந் தாளத்துடன் மதுரையில் நிர்த்தனஞ் செய்தருளிய சிவபிரானே, உம்முடைய உபயபாதாரவிந்தங்களையும் அடியேனுக்குச் கொடுத்தருள வேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை யமகவந்தாதி யுரை - Page 2 Empty Re: மதுரை யமகவந்தாதி யுரை

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 8:39 pm

மதுரை யமகவந்தாதி யுரை-10

சங்கந் தரங்கத் தமுதங் கடைந்திடச் சார்ந்தெழுநஞ்

சங்கந் தரங்கத் தகூடற் றலத்திற் றருக்கடைந்த

சங்கந் தரங்கத் தவஞ்சலென் றாண்டரு டற்பரநே

சங்கந் தரங்கத் தனாக்குவ நின்னடி தந்தருளே

சங்குகள் நிறைந்த திருப்பாற்கடலை யடைந்து (தேவர்களுக்காக) அமுதங்
கடைந்திடும்பொழுது எழுந்து வந்த விஷத்தைத் திருக்கண்டத்தி லடக்கியருளிய
கர்த்தரே,  மதுரையிற் (கல்வியால்) அபயாஸ்தங் கொடுத்துக் காப்பாற்றிய
ஆன்மாக்களிடத்திற் பிரியமுள்ள கடவுளே, அன்புள்ள குமாரராகிய முருகக்
கடவுளை கைலாயத்திலே(பிரணவத்தைத் சொல்லாயாகவென்று) குரு
ஸ்தானத்தில் வைத்து கேட்டவரே, உம்முடைய பாதாரவிந்த தெரிசனை
அடியேனுக்குச் கொடுத்தருள்வீராக.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை யமகவந்தாதி யுரை - Page 2 Empty Re: மதுரை யமகவந்தாதி யுரை

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 8:43 pm

மதுரை யமகவந்தாதி யுரை-11

தந்திக் குவளை யிடைவிழி யார்புடை சாரமயல்

தந்திக் குவளை  யனங்கனை மாய்த்தவன் றாண்மலரைத்

தந்திக் குவளை  யிடங்கற்செற் றான்முடி தன்னில்வனி

தந்திக் குவளை  யணிந்தே மதுரையிற் சாத்தின்னே.

நூலுக்கும் இந்த நீலோற்பலத்துக்கு நிகர்த்த மருங்குலும் கண்களுமுடைய
மாதர்களது சேனைகள் பக்கத்திலே நெருங்க மயக்கத்தைக் கொடுத்துக்
கருப்புவில்லையும் வளைத்துத் (தன்பேரிற் கணை தொடுத்த) அங்கசனை
நெற்றிக் கண்ணால் மாய்த்தவராகிய சிவபெருமானது பாதாரவிந்தங்களை,
யானையைக் கொல்லவாரம்பித்த முதலையைச் சங்கரித்த மஹாவிஷ்ணுவானவர்,
விரைவுடன் நாடோறுங் (தனக்கு) ஆதரவாகிய கங்கணமென்று சென்னியின் மேல்
அலங்கரிப்பாய் மதுரையிற் சூட்டிக்கொண்டார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை யமகவந்தாதி யுரை - Page 2 Empty Re: மதுரை யமகவந்தாதி யுரை

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 8:48 pm

மதுரை யமகவந்தாதி யுரை-12

தினந்தா வரத்தை நிலையென நம்பித் திரிந்தலைந்தேந்

தினந்தா வரத்தை தவிர்த்திலங் கூடற் றிருநகரத்

தினந்தா வரத்தை யெடுத்தயின் றான்பணி தேவனைவாழ்த்

தினந்தா வரத்தை யடைந்திடர்க் கேவிடை செப்புவையே

மனமே! நாடோறும் (அநித்தியமான) சரீரத்தை நித்தியமென்று
நிக்ஷயித்து மாறுபட்டு அலைவாகிச் சுமந்தோம், வலிமையாகிய
துன்பத்தை நீக்கினோமில்லை,அழகிய பூமியை எடுத்தருந்திய
மஹாவிஷ்ணு பூசிக்கப்பெற்ற மதுரை மாநகரத்தின்
கண்ணெழுந்தருளிய சிவபொருமானை ஸ்தௌத்தியஞ் செய்து,
கெடாத வரங்களைப் பெற்று துன்பம் தானாகவே விலகிக்
கொள்ளும்படி அதற்கு மறுபொழி சொல்வாயாக
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை யமகவந்தாதி யுரை - Page 2 Empty Re: மதுரை யமகவந்தாதி யுரை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 6:13 pm

மதுரை யமகவந்தாதி யுரை-13

வையம் பரவந் திருக்கல்குற் பாவையர் மாட்டுமயல்

வையம் பரவந் திருத்திகொள் வோமிந்த வாரிதிசூழ்

வையம் பரவந் திருவால வாயில் வளர்ந்திடுதே

வையம் பரவந் திருவெந்நெஞ் சத்தென வாழ்த்திடவே

சமுத்திரஞ் சூழ்ந்த இவ்வுலகமெல்லாம், துதிக்கின்ற அழகிய தெய்வீகம்
பொருந்திய மதுரையில் எழுந்தருளிய சிவபிரானை, அழகிய பரமசிவனே
அடியேங்கள் மனாலயத்தில் வந்திருக்கவேண்டுமென வணங்கப்
பெறுவோமானால்- திருத்தி கொள்வோம்,கூர்மை பொருந்திய அம்புக்கும்
அரவபடத்துக்கும் நிகர்த்த விழிகளையும் நிதம்பத்தையும் உடைய
மாதர்களிடத்து இச்சைகொள்ளோம்,விரியக்கூடிய மனரம்மியத்தை
அடைவோம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை யமகவந்தாதி யுரை - Page 2 Empty Re: மதுரை யமகவந்தாதி யுரை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 6:17 pm

மதுரை யமகவந்தாதி யுரை-14

திடவா ரணத்தங்க மேலா னமணர் சினத்துவிட்ட

திடவா ரணத்தங்கஞ் செற்றான் மதுரையிற் றேவனச்சோ

திடவா ரணத்தங்கந் தாவுந் தனத்துமை செல்வன்றுதித்

திடவா ரணத்தங் கரியறி யானென்றன் சிந்தையனே.


உண்மையான வேதங்களின் அழகிய முடியின் மேலுள்ளவரும், சமணர்களாற்
கோபித்துவிடப்பட்ட வலிமை பொருந்திய யானையினுடலைக் கிழித்து
மாய்த்தவரும், மதுரையில் எழுந்தருளிய தேவரும்,நன்னிமித்தமாக கச்சுப்
பொருந்துகின்றதும் தேமற்பரவுகின்றதுமான மார்புகளையுடைய உமாதேவி
யாருக்கு நாயகரும், திருக்கரத்திற் சங்கு இருக்கப் பெற்ற விஷ்ணு வணங்குவதற்கு
அரியவரும் ஆகிய சிவபெருமான்,அடியேனுள்ளத்தில் வீற்றிப்பவர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை யமகவந்தாதி யுரை - Page 2 Empty Re: மதுரை யமகவந்தாதி யுரை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 6:21 pm

மதுரை யமகவந்தாதி யுரை-15

அயனந்தி யேழ்பரி யாதவன் சந்திர னண்டர்பிரான்

அயனந்தி யங்குங் கரன்போற்றுங் கூட லமர்ந்தவெந்தம்

அயனந்தி யானநின் பாதத்திற் சேர வருளியின்னும்

அயனந்தி ரும்ப வராதருள் வாயுன் னடைக்கலமே


நந்திகேஸ்வரரும் சப்தபுரவிகளையுடைய சூரியனும் சந்திரனும்
தேவர்களுக்கரசனாகிய இந்திரனும் பிரமாவும் சங்கு பிரகாசிக்கின்ற
திருக்கரங்களையுடைய விஷ்ணுவும் பக்கத்திலே நின்று வணங்கப்படுகின்ற
மதுரையில் எழுந்தருளிய எங்களுடைய பிதாவாகிய சிவபெருமானே, எங்களுடைய
தியானம் உம்முடைய திருவடிகளிற் சேரும்படி கருணை செய்து, பிறவித்துன்பம்
இனிமேலும் மாறிமாறி வராமல் அருள் செய்ய வேண்டும் (உங்கள்) உம்முடைய அடைக்கலம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை யமகவந்தாதி யுரை - Page 2 Empty Re: மதுரை யமகவந்தாதி யுரை

Post by Dr.S.Soundarapandian Fri Dec 18, 2015 7:12 pm

மதுரை யமகவந்தாதி யுரை - Page 2 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மதுரை யமகவந்தாதி யுரை - Page 2 Empty Re: மதுரை யமகவந்தாதி யுரை

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 8:10 pm

Dr.S.Soundarapandian wrote:மதுரை யமகவந்தாதி யுரை - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1181410
நன்றி ஐயா. இந்த மதுரை யமகவந்தாதி யுரை முதுகுளத்தூர் பீ.ஆறுமுகப் பிள்ளை
அவர்கள் எழுதியது இது 1899 வருட பதிப்பு ,தங்களுடைய பின்னோட்டம் எனக்கு கட்டாயம்
தேவை. இதை படித்து தற்கால நடைமுறைக்கு ஏற்ப இதை பதிவு செய்கிறேன்.
இதன் உரையை கண்டுபிடித்து எழுதுவதே கஷ்டமாக உள்ளது.
தங்களின் ஒத்துழைப்பு பிழையை திருத்தி கொள்ள உதவும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை யமகவந்தாதி யுரை - Page 2 Empty Re: மதுரை யமகவந்தாதி யுரை

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 11:19 am

மதுரை யமகவந்தாதி யுரை-16

கலக்கந் தரத்தன வார்குழற் பாவையர் காதல்விட்ட

கலக்கந் தரத்தமர் மைவிடத் தாய்செய் கனிவுடன்பு

கலக்கந் தரத்தந் திரமறிந் தாயெனைக் காத்தருள்வாய்

கலக்கந் தரத்தண்டன் சாருமுன் கூடற் கனிபங்கனே.

திருக்கண்டத்திலே அமரும் படி கறுப்பு விஷத்தை வைத்தவரே, முருகக்கடவுள்
அந்த பிரணவப்பொருளை அன்புடன் சொல்லக் கேட்டவரே, மதுரையில்
எழுந்தருளிய உமாதேவியார் வாழப் பெற்ற வாம பாகத்தையுடையவரே,
மலைக்கும் அம்மேகத்துக்கும் நிகர்த்த ஸ்தனங்களையும் நீண்ட கூந்தலையுடைய
மாதர்களிடத்துள்ள மயக்கம் என்னை விட்டு நீங்கும்படி செயவீராக,
அச்சத்தை கொடுக்கக் கூற்றுவன் வருமுன்னரே அடியேனைக்
காப்பாற்றி அருள் செயவீராக.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மதுரை யமகவந்தாதி யுரை - Page 2 Empty Re: மதுரை யமகவந்தாதி யுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
»  மதுரை யமகவந்தாதி நூல் வேண்டும்
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
»  மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum