ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) என்னும் ஹிந்து அமைப்பு

Go down

request ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) என்னும் ஹிந்து அமைப்பு

Post by HARIKRISH Sun Dec 06, 2015 12:21 am

:வணக்கம்: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) என்னும் ஹிந்து அமைப்பே உலகத்தின் ஆகப் பெரிய தன்னார்வு சேவை நிறுவனமாகும் (Voluntary service organization). போர்க்களமாகட்டும், இயற்கை சீற்றமாகட்டும் அங்கே எவ்வித வேறுபாடும் இல்லாமல் துன்புறுவோருக்கு ஸ்வயம்சேவகர்கள் சேவை செய்வார்கள். ’சங்க பரிவாரம்’ என அழைக்கப்படும் சங்க குடும்பம் இன்று தேசிய வாழ்க்கையின் பலதுறைகளில் தொண்டாற்றுகிறது. ஹிந்து ஒற்றுமை, சாதிய எதிர்ப்பு, சமுதாய நல்லிணக்கம், கிராம முன்னேற்றம், தேசிய ஒருமைப்பாடு என சங்கம் செயல்படாத துறையே இல்லை எனலாம். இந்த அமைப்பின் அகில பாரத தலைவர் ‘சர்சங்கசாலக்’ என்று அழைக்கப் படுகிறார்.

சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆறாவது அகில பாரத தலைவராக அண்மையில் பொறுப்பேற்றிருக்கும் திரு. மோகன்ஜி பாகவத் சென்னை வந்திருந்தார். தமது இடைவெளியற்ற நிகழ்ச்சி நிரல்களுக்கு இடையே விஜயபாரதம் வார இதழின் ஆசிரியர் நா.சடகோபன் மற்றும் தமிழ்ஹிந்து.காம் சார்பில் அரவிந்தன் நீலகண்டன் ஆகியோர் அவருடன் ஒரு கலந்துரையாடலில் ஈடுபட நேரம் அளித்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சென்னை தலைமையகத்தில் 15-மே-2010 அன்று நடந்த கலந்துரையாடலில் இருந்து சில பகுதிகள் –

நீங்கள் சர்சங்கசாலக்காக பொறுப்பேற்றதும் முதன் முறையாக சென்ற இடம் டாக்டர் அம்பேத்கரின் தீக்ஷாபூமியாக அமைந்திருந்தது…

அது மிகவும் இயல்பான விஷயம்தான். பாபாசாகேப் அம்பேத்கர் சங்கத்தின் அதிகாரிகள் பயிற்சி முகாமுக்கு வருகை தந்திருக்கிறார். அங்கு சாதியம் சற்றும் இல்லாத நிலையைப் பாராட்டியிருக்கிறார். அதே போல, அம்பேத்கர் பௌத்த மார்க்கத்துக்கு மாறிய போது குருஜி கோல்வல்கர் (ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர்) “சங்கரரின் கூர்த்த மதியும் புத்தரின் கருணை நிறைந்த இதயமும் நமக்கு தேவை” என்று தேச மக்களுக்கு சுவாமி விவேகானந்தர் கூறியதை நினைவுறுத்தினார். மேலும் அம்பேத்கரின் தேர்தல் ஏஜெண்டாக பணிபுரிந்தவர் திரு.தத்தோபந்த் தெங்கடி (பாரதிய மஸ்தூர் சங்கத்தின் நிறுவனர்) ஆவார்.

ஆனால் சிலர் அம்பேத்கரை ஹிந்துமத விரோதியாக பார்க்கிறார்களே…

இதோ பாருங்கள்… அம்பேத்கருக்கு சங்க ஹிந்துக்களின் நல்ல நோக்கங்கள் குறித்து தெளிவான புரிதல் இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அக்கால கட்டத்தில் பெருமளவு ஹிந்து சமுதாயம் தலித்துகளுக்கு உரிய நீதியை கொடுக்கும் மனநிலையில் இல்லை என்பதையும் அவர் புரிந்திருந்தார். இந்த நிலையை சங்கம் நிச்சயமாக காலப் போக்கில் மாற்றிவிடும், சாதியமற்ற ஹிந்து சமுதாயத்தை அது உருவாக்கும் என்பதில் அவருக்கு ஐயமில்லை. ஆனால் அன்றைய காலகட்டத்தில் சங்கத்துக்கு அதைச் செய்யக் கூடிய அதிகாரமோ சக்தியோ இல்லை என்பதை அவர் தெரிந்து வைத்திருந்தார். சங்கம் அதைச் செய்து முடிக்கும் காலம் வரை தலித்துகள் பொறுமையாக அநீதிகளை சகித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை என அவர் கருதினார். எனவே அவர் பௌத்த தருமத்துக்கு மாறினார்.

mohanbhagwat_jpg_1089fஆனால் அவர் ஏன் பௌத்த தருமத்துக்கு மாறினார்? ஏனென்றால் அது பாரத கலாச்சாரத்தில் வேர் கொண்டிருந்த ஒரு தருமம். அதனை ஹிந்து பண்பாட்டின் பிரிக்கமுடியாத அங்கமாக அம்பேத்கர் கருதினார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அன்னிய மதங்களுக்கும் மார்க்சியம் போன்ற அன்னிய சித்தாந்தங்களுக்கும் ஈர்க்கப்படாமலிருப்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள அவர் விரும்பினார். திரு தத்தோபந்த் தெங்கடியிடம் அம்பேத்கர் வெளிப்படையாகவே கூறினார்: “கோல்வால்கர் தாழ்த்தப்படாத மக்களை மார்க்சியம் ஈர்த்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார். நான் நம் சமுதாயத்தின் தாழ்த்தப்பட்ட மக்களை மார்க்சியம் ஈர்த்துவிடாமல் பெரும் தடைச்சுவராக இருக்கிறேன்”.  (ஆனால் நாம் குருஜி கோல்வால்கரை சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்காக பாடுபட்டவராக பார்க்கவில்லை. அவர் ஹிந்து சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களுக்குமாக பாடுபட்டவர் என்றே கருதுகிறோம், அதுவே உண்மையும் கூட)

இந்தியா டுடே பத்திரிகையில் நீங்கள் உங்கள் உரைகளில் மகாத்மா காந்தியை பாராட்டியதாக செய்தி வந்தது…

ஓ… இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? சங்கத்தில் காந்திஜி குறித்து ‘கண்டுபிடித்தது’ நான் இல்லை. குருஜி கோல்வல்கர் மகாத்மா காந்தி குறித்து ஒரு பெரிய பேருரையே நிகழ்த்தியுள்ளார். நான் பிராந்த பிரச்சாரக்காக (முழுநேர ஊழியர்) ஆவதற்கு முன்னரே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் காலை பிரார்த்தனையில் மகாத்மா காந்தியின் பெயர் இடம் பெற்றுவிட்டது. கிராம முன்னேற்றம், சுதேசி மற்றும் பசுப் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் காந்திஜியின் பார்வையும் சங்க சிந்தனையும் செயல்பாடும் ஒத்திசைவு கொண்டதாக உள்ளது. எனவே எவருக்காவது நான் காந்திஜி குறித்து உரையாற்றியது ஆச்சரியம் தந்ததென்றால், அது அவர்களுக்கு சங்கத்தின் வரலாற்றைக் குறித்தும் தத்துவத்தைக் குறித்தும் உள்ள அறியாமையையேக் காட்டுகிறது.

அம்பேத்கரையும் காந்தியையும் விரோதியாக காட்டக்கூடியவர்கள் சிலர் இருக்கிறார்கள். இந்த இரண்டு தலைவர்களையும் நீங்கள் எவ்விதம் சமரசத்துடன் நோக்குகிறீர்கள்?

gandhi_and_ambedkarஅனைத்து மாபெரும் தேசிய தலைவர்களுக்குமே அவர்களிடையே (கருத்து/நிலைப்பாட்டு) வேறுபாடுகள் இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் அனைவருமே சமுதாயத்தின் நலனையையும் தேசத்தின் நலனையுமே மிகவும் மதித்தவர்கள். இந்த பார்வையில் நாம் அவர்களை அணுகும் போது ஒற்றுமைக்கான பல அம்சங்களை, அவர்களிடையே ஒத்திசைவு கொண்ட பல விஷயங்களை நாம் காணமுடியும். நம்முடைய  தேச நிர்மாணப் பணிக்கு அவர்களிடமிருந்து நல்ல பாடங்களையும் கற்றுக்கொள்ள முடியும். இதுதான் எப்போதுமே தேசத்தலைவர்களைப் பொறுத்தவரையில் சங்கத்தின் அணுகுமுறையாக அமைந்திருக்கிறது.

தலித்துகளை தேசிய நீரோட்டத்திலிருந்தும் ஹிந்து பண்பாட்டிலிருந்தும் அப்புறப்படுத்த ஒரு வலிமையான இயக்கம் செயல்படுகிறது. இதனை எதிர்கொள்ள சங்கம் என்ன செய்கிறது?

மீனாட்சிபுரம் மதமாற்றக் காலம் முதலே சங்கம் தமிழ்நாட்டின் தலித்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. சங்க ஷாகாக்கள் தோன்றிய பிறகு தீண்டாமை மறைந்து விட்ட பல கிராமங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இன்னும் சொன்னால், அவ்வாறு சங்க ஷாகாக்களால் தீண்டாமையும் சாதியமும் அகன்று விட்ட இரண்டு கிராமங்களுக்கு அண்மையில்  “சமூக நல்லிணக்கம் கொண்ட கிராமங்கள்” என்ற தமிழ்நாடு அரசு விருது கூட கிடைத்தது.  தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்கும் மோதல் ஏற்பட்ட இடங்களில் சமாதான முயற்சிகள் செய்ய சங்க ஸ்வயம் சேவகர்கள் அழைக்கப் பட்டுள்ளனர். தென்னகத்தில் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது கேரளத்திலும் சங்கம் தலித்துகளின் மேம்பாட்டுக்கு தீவிரமாக செயல்படுகிறது. அண்மையில் குருவாயூர் கோவிலில் கூட சங்கம் இதை செய்தது.

சங்கத்துக்கு தெளிவான பார்வை இருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் இருக்கும் நீர்வளங்கள், வாழ்விடங்கள், வழிபாட்டுத் தலங்கள், சுகாதார அமைப்புகள், மயானங்கள் ஆகியவை அனைத்து ஹிந்துக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இப்பார்வையை செயல்படுத்த நம் சக்திக்கு தகுந்த அளவில் எல்லா இடங்களிலும் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

janmashtami_15_jpg_595g
Women dressing her child as Krishna on Janmashtami, Hyderabad.
நீங்கள் எப்போதும் ஹிந்துத்துவம், ஹிந்து தன்மை குறித்து பேசுகிறீர்கள். ஹிந்து என்று நீங்கள் யாரை வரையறை செய்கிறீர்கள்? மத சிறுபான்மையினர் ஹிந்துக்களா ஹிந்துக்கள் அல்லாதவரா?

இந்த தேசத்தைத் தங்கள் மூதாதையர் தேசமாகவும் புண்ணியபூமியாகவும் கருதும் அனைவரும் ஹிந்துக்களே. இந்த தேசம் போற்றி பாதுகாத்து வந்த தார்மிக மதிப்பீடுகளையும்,  பண்பாட்டையும் பின்பற்றும் எவரும், அவர்களது வழிபாட்டு முறைகள் எவையாக இருந்தாலும் ஹிந்துக்களே. தங்களைத் தாங்களே மதச்சிறுபான்மையினர் என அன்னியப்படுத்திக் கொண்டவர்கள் தங்கள் சுய அடையாளத்தைக் குறித்த இந்த உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் எல்லோரும் பாபரின் வழித்தோன்றல்களோ, டேவிட்டின் சந்ததிகளோ அல்ல. அவர்கள் ராமரின், கிருஷ்ணரின், பரதனின் சந்ததிகள்தாம். இந்த மூன்று விஷயங்களும் யாருக்கு பொருந்துகிறதோ அவர்கள் அனைவரும் தேசிய உணர்தலில் ஹிந்துக்களே ஆவர்.

தற்போது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் முக்கியமானவையாக உள்ளன. சங்கம் சுற்றுப்புற சூழல் பிரச்சினைகள் குறித்து, குறிப்பாக உலக வெப்பமயமாதல் போன்ற விஷயங்களில் என்ன நிலைப்பாடு கொண்டதாக உள்ளது?

நமது பண்பாடும், தார்மிக மதிப்பீடுகளும், நம் வாழ்க்கை முறையும் சுற்றுப்புறச் சூழல் உணர்வு கொண்டவையாக, சுற்றுப்புற சூழலை நன்றாக வைத்துக்கொள்ள உகந்தவையாகவே உள்ளன. நாம் இயற்கையை வணங்குபவர்கள். அனைத்து இயற்கையும் தெய்வீகத்தால் நிரம்பியது என்பது நமது தரிசனம். பசு பாதுகாப்பு இந்த இயற்கையின் இறைத்தன்மையுடன் இணைந்ததே ஆகும். சுற்றுச்சூழல் குறித்த ஒரு தெளிவான நல்ல  நிலைப்பாடு என்பது அறிவியல் பூர்வமானதாக இருக்க வேண்டும். அதற்கு நமக்கு பரிசோதனைகளின் அடிப்படையிலான மாதிரிகள் (models) தேவை. சங்கமும் சங்கம் சார்ந்த அமைப்புகளும் அத்தகைய பரிசோதனைகளை தேசம் முழுவதும் செய்து வருகிறார்கள்.

பாரதம் போன்ற பரந்து விரிந்த, பன்மையான சூழ்நிலைகள் வேறுபட்ட தட்பவெப்ப சூழல்கள் இருக்கும் தேசத்தில் ஒரே மாதிரியை எல்லா இடங்களுக்கும் பொருத்திவிட முடியாது. அந்தந்த பிராந்தியங்களில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் அந்தந்த இடங்களுக்கு சூழலியல் நிலைபாடுகள் உருவாக்கப்பட வேண்டும். நான் சொன்னது போல பல இடங்களில் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. சித்திரகூடத்தில், கேரளாவிலும் கர்நாடகாவிலும் பல கிராமங்களில் இவை நடைபெறுகின்றன. இப்பரிசோதனைகள் மூலம் கிடைக்கும் உள்ளீடுகள் (inputs) அடிப்படையில் பிராந்திய சூழலியலுக்கு உகந்த மாதிரிகள் உருவாக்கப்பட்டு அதன் விளைவாக உருவாக்கப்படும் சூழலியல் பாதுகாப்பு நிலைபாடுகள் தெளிவான நல்ல தன்மை கொண்டவையாகவும் வளங்குன்றா வளர்ச்சிக்கு (sustainable development) துணை செய்பவையாகவும் அமையும்.

அறிவியல் ஆன்மிகம் இவற்றைப் பொறுத்தவரையில் பாரதத்துக்கு உலகப் பண்பாடுகளின் மத்தியில் ஒரு தனிச்சிறப்பான இடம் இருக்கிறது. இந்த விஷயத்தில் அறிவியல், ஆன்மிகம், பாரதப் பண்பாடு இவற்றின் ஒத்திசைவு குறித்து சங்கத்தின் பார்வை என்னவாக இருக்கிறது?

ஹிந்துக்களைப் பொறுத்தவரையில் அறிவியலும் ஆன்மிகமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல. அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். உபநிடதம் கூறுகிறது – “(அக-வளர்ச்சியை புறக்கணித்து) புற-அறிவியலை மட்டுமே தேடுவோர் பெரும் இருளில் விழுவார்கள். ஆனால் புற-அறிவியலை புறக்கணித்து அகஞானத்தை மட்டுமே நாடுவோரோ அதைவிடப் பெரிய காரிருளில் மூழ்குவர். ”

சமுதாய வாழ்க்கைக்கு கூறப்பட்டதாகும் இது. வீடு பேற்றை மட்டுமே நாடுவோருக்கு, மற்ற புருஷார்த்தங்களான பொருளிலும் இன்பத்திலும் நாட்டமில்லாதவர்களுக்கு (ஆத்மார்த்த வித்யா எனப்படும்) அக ஞானம் மட்டுமே போதுமானது. ஆனால் சமுதாயத்தில் வாழ்பவர்களுக்கு அப்படியல்ல. ஆனால் அவர்களுக்கும் இறுதி நோக்கம் வீடுபேறு எனும் மோட்சம் எனும் முக்திதான். எனவே காம-அர்த்த தேடலுடன் மோட்சத்தையும் அவர்கள் அடைவதற்கான ஒரு ஒழுங்குபடுத்தும் தத்துவமாக தர்மம் அமைகிறது.

bharat_mata_abanindranath
Bharatmata, the famed painting by Abanindranath Tagore
பிரித்தே பார்க்கும் தன்மை கொண்ட மேற்கத்திய பண்பாடு போன்று இல்லாமல், ஒன்றுப்படுத்திப் பார்க்கும்  இத்தகைய  நமது பார்வையே அறிவியல் தொழில்நுட்பம் குறித்த ஒரு முழுமையான அறிதலை நமக்குத் தந்துள்ளது. இதுதான் ஹிந்து தத்துவம். உலகம் உய்வடைய இதுதான் சரியான அணுகுமுறை.

ஆனால் உலகம் இதனைக் கேட்க, இந்த பார்வையை ஏற்றுக்கொள்ள, ஹிந்துக்கள் சக்தி பெற வேண்டும். ஏனென்றால், சக்தி உடையவர்களின் குரல்தான் மதிக்கப்படும். என்னதான் உயர்ந்த தத்துவம் இருந்தாலும் நடைமுறையில் அதன் விளைவுகள் தெரிந்தால்தான் உலகம் அதனை ஏற்கும். நம் தேசம் உலக நலத்தைப் பேணும் அறிவியலாளர்களை அதிக அளவில் உருவாக்கவேண்டும். இவ்வாறு ஹிந்து தத்துவத்தை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படி நடைமுறைப்படுத்தினால்தான், ஹிந்து சமுதாயம் சக்தியுடன் ஆரோக்கியமான சமுதாயமாக விளங்கினால்தான் பாரத அன்னையின் குரல் உலகத்தில் ஓங்கி ஒலிக்கும். அப்போதுதான் அவள் ஜகத்குருவாக முடியும். ஆகவே அத்தகைய வலிமை மிக்க ஹிந்து சமுதாயத்தை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.
HARIKRISH
HARIKRISH
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 06/12/2015

https://web.facebook.com/profile.php?id=100007678201189

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum