ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!

5 posters

Go down

மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்! Empty மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!

Post by krishnaamma Thu Dec 03, 2015 8:58 am

மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!



நம் தேச தந்தையிடம், நான் வியந்த விஷயங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று, கோட்சே இவரை சுட்டதும், இவர், 'ஹே ராம்... ஹே ராம்...' என்று, உயிர் போகிற அவதியில் கூட, உச்சரித்த வார்த்தைகள்.

ஓர் எறும்பு, சுள்ௌன்று கடித்தால் கூட, 'சே... சனியன்...' என்று, உடனே, அதைப் பிடித்து, நசுக்கி கொன்று, உரு தெரியாமல் ஆக்கி, தரையில் தேய்க்கும் மனித இனத்தின் மத்தியில், உயிர்போகும் வலியிலும், இப்படி ஒருவரால் பிரதிபலிக்க முடியும் என்றால், அவரது பண்பு நலன்களில், குறையே இருக்க முடியாது அல்லவா?


'மன்னிக்க தெரிந்த மனிதனின் உள்ளம், மாணிக்க கோயிலடா...' என்று பாடினார், ஒரு திரை கவிஞர்.


'பழிக்குப் பழி' என்று ஒரு பழமொழி உண்டு. தாக்கம் ஒன்றை தனக்கு ஏற்படுத்தினால் பதிலுக்கு, 'சும்மா விட மாட்டேன் உன்னை!' என்று மென்மையாகவும், 'பழிக்குப் பழி; குத்திற்கு குத்து; வெட்டிற்கு வெட்டு' என்று கடுமையாகவும் இதற்கு பொருள் கொள்ளலாம்.


'சாரி... மன்னிக்கவும்' என்று பிறரிடம் கூறினால், முன்பெல்லாம் வந்த பிரதிபலிப்பு வேறு. இப்போது வரும் பதில் வேறு. 'அப்படி சொல்லாதீர்கள்...' என்று முன்பு கூறியவர்கள், இப்போது என்ன சொல்கின்றனர் தெரியுமா? 'சரி, பரவாயில்லை...' என்கின்றனர்.


இதனால், மனித மனங்களின் உள்ளே ஊறி வந்த ஈரம், இப்போது மெல்ல காய்ந்து வருகிறதோ என்று கூட, எண்ணத் தோன்றுகிறது.


திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும், 'உனக்கு கெடுதல் செய்தவனை சும்மா விடாதே...' என்கிற பண்பாட்டையே(?) அதிகம் போதிப்பதாக நான் உணருகிறேன். இதன் காரணமாக, 'மன்னிப்பாவது கின்னிப்பாவது...' என்கிற மனநிலை, மனித மனங்களின் நடுவே விதைக்கப்பட்டு வருகிறதோ என்று ஐயப்பட வேண்டியிருக்கிறது.


ஒரு மேடையில், முதலில் பேசிய ஒருவர், தனக்கு பின்னால் பேச இருந்த ஒரு பேச்சாளரை, தேவையில்லாமல் வம்பிற்கு இழுத்ததோடு, வீண் விமர்சனமும் செய்தார்.


'போச்சு! அடுத்த பேச்சாளர் பேசும்போது, இது பெரிய மேடை சண்டையாக வர போகிறது...' என்று விழா ஏற்பாட்டாளர்கள் பயந்து விட, 'பார்வையாளர்கள் ஒரு சுவையான வாக்கு வாதத்திற்கு நாம் தயாராக வேண்டியது தான்...' என்று காதுகளை தீட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். நடந்ததோ வேறு...


'என் மீது கொண்ட அக்கறையின் காரணமாக, சகோதரர் பல விஷயங்களை பேசினார். அவற்றில் எது உண்மையோ அதை திருத்திக் கொள்கிறேன்...' என்று பேசி, அனைவர் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட பண்பாளராகி விட்டார். இதை, ஒரு நாகரிக மன்னிப்பாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது.


'எத்தகைய தவறையும், மன்னிக்கும் மிக உயர்ந்த நீதிமன்றம், தாயின் உள்ளம் தான்...' என்று எங்கோ படித்தது, நினைவிற்கு வருகிறது. ஆனால், இந்த உயர்ந்த கோவில் கூட, இன்று சிதிலமடைந்து வருவதை செய்தித்தாள்களில் காண்கிறோம்.


தண்டித்து இன்புறுகிறவர்களின் மகிழ்ச்சியை, இறுதியான மகிழ்ச்சி என்று கூறிவிட முடியவில்லை. காரணம், இந்த செயலுக்கு மட்டும் மறு விளைவு உண்டு. 'வெட்டினவனை வெட்டு...' என்று சட்டத்தை, காவல் துறையை நம்பாத கூட்டங்கள் கொக்கரிக்க, இந்த பின்னணியே காரணம். ஆனால், மன்னிப்பு என்பது, கோப்பை கட்டி பரணில் போட்டு விடுகிற, ரியாக் ஷனற்ற ஆக் ஷன்.


பழி வாங்குவதிலும், தண்டிப்பதிலும் சுகம் காணும் மனிதர்கள், 'மன்னிப்பதில் தான், அதிக சுகம் இருக்கிறது...' என்பதை அறியாதவர்கள் என்றே, கூற வேண்டும். ஒரு சில முறை முயன்று பார்க்கட்டும், இவர்கள் சுகம் கண்டு விடுவர்.


நமக்கு பாதிப்பு ஏற்படுத்தியவர்களை, இரண்டாக பிரித்து கொள்ள வேண்டும். முதலாமவர்கள் வேண்டுமென்றே நம்மை பாதிக்க செய்தவர்கள்; இவர்கள் உள் நோக்கம் உடையவர்கள்.
இரண்டாமவர்கள், எவ்வித உள்நோக்கமும் இல்லாதவர்கள்; வேறு வகையில் கூறினால், வேண்டுமென்றே தவறு செய்யாதவர்கள். இப்பிரிவினர் அவசியம் மன்னிக்கப்பட வேண்டியவர்கள். 


முதலாமவர்களை, மன்னிப்பது கடினம் தான். இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கே நம்பிக்கை இராது, நாம் மன்னிப்போம் என்று! இவர்களுக்கு நாம் இனிய அதிர்ச்சி கொடுக்கலாம். இதுவும் ஒரு வகையில் தண்டனை தான்.


மாறாக, அவர்களும் பாதிப்பு அடைய வேண்டும் என, நாம் நடந்து கொண்டால், அது, பழிவாங்கும் கணக்கிற்கல்லவா மாற்றப்பட்டு விடும்!

லேனா தமிழ்வாணன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்! Empty Re: மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 9:01 pm

அருமை அம்மா,நன்றி.
krishnaamma wrote:மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!

நம் தேச தந்தையிடம், நான் வியந்த விஷயங்கள் பலப்பல. அவற்றுள் ஒன்று, கோட்சே இவரை சுட்டதும், இவர், 'ஹே ராம்... ஹே ராம்...' என்று, உயிர் போகிற அவதியில் கூட, உச்சரித்த வார்த்தைகள்.

லேனா தமிழ்வாணன்
மேற்கோள் செய்த பதிவு: 1178253
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்! Empty Re: மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!

Post by krishnaamma Thu Dec 03, 2015 9:08 pm

நன்றி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்! Empty Re: மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 04, 2015 11:23 am

krishnaamma wrote:நன்றி ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1178413
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்! Empty Re: மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!

Post by ayyasamy ram Fri Dec 04, 2015 11:52 am

மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்! Empty Re: மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!

Post by சசி Sat Dec 05, 2015 8:31 am

அருமையான பதிவு அம்மா!! 
மன்னிப்பின் மகத்துவம் குறைந்து விட்டது! 
Sorry என்ற வார்த்தையை எளிதாக பயன்படுத்த துவங்கிவிட்டோம். மன்னிப்பு என்ற வார்த்தையை தமிழில் கேட்க சொல்லுங்கள் பார்க்கலாம், நான் அதற்கு தயாராக இல்லை என்பது தான் பதில்.


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்! Empty Re: மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!

Post by Hari Prasath Sat Dec 05, 2015 7:00 pm

மிக அருமை அம்மா



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்! Empty Re: மன்னிக்க கூடியவையும், முடியாதவையும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum