ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம்

3 posters

Go down

சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Empty சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம்

Post by ayyasamy ram Tue Dec 01, 2015 4:20 am

சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் K1uxUrSTQUmZWHCAiSlQ+Tamil_News_large_1399584
--
அஹமது நகர்:
மஹாராஷ்டிரா மாநிலம், அஹமது நகரில் உள்ள கோவிலில்,
பெண் ஒருவர் நுழைந்து பூஜை செய்ததால் களங்கம்
ஏற்பட்டதாகக் கூறி, சனி பகவான் சிலையை கழுவி, பரிகாரம்
செய்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்
தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு உள்ளது.
இம்மாநிலத்தின் அஹமது நகர் மாவட்டத்தில், 4,000 பேர் வசிக்கும்
கிராமம், சிங்னாபூர்; இங்கு, புகழ்பெற்ற சனி பகவான் கோவில்
உள்ளது.

தண்டிப்பார்:


இக்கிராமத்தில் உள்ள வீடுகளில் கதவுகள் இருக்காது;
நுழைவாயிலில் வாசக்கால் சட்டம் மட்டுமே இருக்கும்;
இங்குள்ள காவல் நிலையத்துக்கும் கதவுகள் கிடையாது.
'திருடு, கொள்ளையில் ஈடுபடுவோரை, சனி பகவான்
கடுமையாக தண்டிப்பார்' என, இப்பகுதி மக்கள் உறுதியாக
நம்புவதே இதற்கு காரணம்.

இங்குள்ள சனி பகவான் கோவிலில், 'பெண்கள் யாரும்
நுழையக் கூடாது' என்ற விதிமுறை, நீண்ட நெடுங்காலமாக
பின்பற்றப்பட்டு வருகிறது. இரு நாட்களுக்கு முன், சனி
பகவானை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்
.அப்போது, பெண் ஒருவர், தடுப்புகளை தாண்டி கோவில் க
ருவறைக்குள் நுழைந்து, சனி பகவானுக்கு பூஜை செய்தார்.

பாலாபிஷேகம்:


அங்கிருந்த பக்தர்கள் சுதாரிக்கும் முன், கோவிலில் இருந்து
அப்பெண் வெளியேறி விட்டதாகக் கூறப்படுகிறது.
பெண் பூஜை செய்ததால் களங்கம் ஏற்பட்டதாக கருதிய
கோவில் நிர்வாகம், சனி பகவான் சிலையை கழுவி சுத்தம்
செய்து, பாலாபிஷேகம் செய்தது.

கோவில் அறக்கட்டளை தலைவர் சாய்ராம் பங்கர் கூறுகையில்,
''பக்தர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், சனி பகவான்
சிலையை கழுவி, பாலாபிஷேகம் செய்து
பரிகாரம் செய்தோம்; இதில் தவறில்லை,'' என்றார்.

கோவில் உள்ள பகுதியைச் சேர்ந்த பல பெண்களும்,
சனி பகவானுக்கு, பெண் பூஜை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து,
உள்ளூர், 'டிவி'யில் கருத்து கூறினர்.
இதற்கிடையில், கோவிலில் நுழைந்து பூஜை செய்த பெண்ணுக்கு,
அரசியல் தலைவர்களும் பகுத்தறிவுவாதிகளும் ஆதரவு
தெரிவித்துள்ளனர்.
-
---------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Empty Re: சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம்

Post by ayyasamy ram Tue Dec 01, 2015 4:21 am



முடிவு செய்ய நாம் யார்?

-
கடவுள், அனைவரையும் சமமாகவே படைத்தார்.
கடவுளுக்கு, இப்படித் தான் பூஜை செய்ய வேண்டும் என்றோ,
யார் பூஜை செய்ய தகுதி பெற்றவர் என்றோ முடிவு செய்ய நாம் யார்?
ஒரு பெண் மாதவிடாய் காலத்தில் இருந்தால், கோவிலுக்குள் வரக்
கூடாது என, எந்த கடவுளும் சொல்லவில்லை.
-
சந்திரா அய்யங்கார்
உள்துறை முன்னாள் கூடுதல் செயலர் - மஹாராஷ்டிரா
-
---------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Empty Re: சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம்

Post by ayyasamy ram Tue Dec 01, 2015 4:22 am


பத்தாம் பசலித்தனம்:
-

ஒரு பெண் நுழைந்ததால், கோவில் களங்கமாகி விட்டதா என்பதை,
நிபுணர்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும். பெண் பூஜை செய்ததால்,
களங்கமாகி விட்டதாகக் கூறி பரிகாரம் செய்தவர்கள்,
அக்கோவிலின் பராமரிப்பாளர்கள் மட்டுமே.
-
அப்பெண்ணை, கோவிலுக்குள் நுழையக் கூடாதென தடுக்க,
அவர்களுக்கு உரிமை கிடையாது. பத்தாம் பசலித்தனமான
இதுபோன்ற கட்டுப்பாடுகள், 500 ஆண்டுகளுக்கு முன் உருவானவை.
-
---------------------------------
நிர்மலா சமந்த் பிரபாவல்கர்
தேசிய பெண்கள் கமிஷன் முன்னாள் உறுப்பினர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Empty Re: சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Dec 01, 2015 10:21 am

பெண்களை இழிவு படுத்தியது தவறு,மன்னிக்க முடியாதது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Empty Re: சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம்

Post by mbalasaravanan Tue Dec 01, 2015 12:23 pm

அய்யா தவறு என்பது எதிலிருந்து வருகிறது இதில் என்று தெரியவில்லை , ஆனால் பெரும்பாலான கோவில்களில் பெண்கள் பூஜை செய்வதில்லை காரணம் அவர்களின் விலக்கு காரணம் அதனால் அவர்களால் தொடர்ந்து பூஜை செய்ய முடியாது என்பதே காரணம் தவறாக புரிதலே பிரச்னைக்கு காரணம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Empty Re: சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum