புதிய பதிவுகள்
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_m10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10 
43 Posts - 45%
heezulia
தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_m10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_m10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_m10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_m10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_m10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_m10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10 
43 Posts - 45%
heezulia
தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_m10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10 
43 Posts - 45%
mohamed nizamudeen
தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_m10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_m10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_m10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_m10தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun 27 Dec 2015 - 16:26

கே.ஜே. யேசுதாஸ் அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த கர்நாடக இசை கலைஞரும் ஆவார். தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் “கான கந்தர்வன்” என அழைக்கப்படுகிறார். திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, அரேபிய மொழி, லத்தீன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள இவருக்கு, இந்திய அரசின் உயரிய விருதான “பத்ம பூஷன்” மற்றும் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது. மேலும், எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில், ஏழு முறை “தேசிய விருதுகளையும்”, நாற்பதுக்கும் மேற்பட்ட கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில விருதுகளையும் பெற்று சாதனைப் படைத்துள்ளார். அற்புதமான தெய்வீகக் குரலால் இசையுலகில் புகழ்பெற்று விளங்கும் கே.ஜே. யேசுதாஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை விரிவாகக் காண்போம்.



பிறப்பு: ஜனவரி 10,  1940

இடம்:  கொச்சி, கேரளா மாநிலம், இந்தியா

பணி: கர்நாடக இசைக் கலைஞர், பாடகர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

கட்டசேரி யோசப் யேசுதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட கே. ஜே. யேசுதாஸ் அவர்கள், 1940  ஆம் ஆண்டு ஜனவரி 10  ஆம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள “கொச்சி” என்ற இடத்தில் ஆகஸ்டைன் யோசப்புக்கும், அலைசுகுட்டிக்கும் மகனாக லத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மலையாள செவ்விசைக் கலைஞர் மற்றும் நடிகரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

ஐந்து வயதிலேயே பாடும் திறமையை வளர்த்துக்கொண்ட யேசுதாஸ் அவர்களுக்கு, இசையின் ஆரம்பப் பாடல்களை அவருடைய தந்தை கற்றுக் கொடுத்தார். தன்னுடைய தந்தையிடமே இசைப் பயிற்சிப்பெற்று வளர்ந்த அவர், பிறகு ஆர்.எல்.வி. மியூசிக் அகாடமியில் இசைப் பயிற்சிப்பெற்றார். உயர் கல்விக்காக திருவனந்தபுரத்திலுள்ள சுவாதித்திருநாள் இசைக்கல்லூரியில் சேர்ந்த யேசுதாஸ் அவர்கள், நிதிப் பற்றாக்குறையால் பாதியிலேயே வெளியேறினார். ஆனால், அக்கல்லூரியில் பயின்ற கொஞ்ச காலத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர் மற்றும் செம்மை வைத்தியநாத பாகவதர் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

திரைப்படத்துறையில் யேசுதாஸின் பயணம்

1960 ஆம் ஆண்டு தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய யேசுதாஸ் அவர்கள், கே. எஸ். ஆண்டனி இயக்கத்தில் வெளிவந்த “கால்ப்பாடுகள்” என்ற மலையாளத் திரைப்படத்தில் முதல் பாடலைப் பாடினார். அந்தப் பாடல் அவருக்கு ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல், மேலும் பல திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் பெற்றுத் தந்தது. வெகு விரைவில், தமிழ் திரைப்படத் துறையில் கால்பதித்த அவர், 1964 ஆம் ஆண்டு எஸ். பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த “பொம்மை” என்ற திரைப்படத்தில் முதன் முதலாக “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு 1970ல் இந்தித் திரைப்படத்துறையில் “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். ஆனால், அவர் பாடி வெளிவந்த முதல் படம், இந்திப் படமான “சோட்டி சி பாத்” என்பதாகும். அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, அரேபிய மொழி, லத்தீன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி சாதனைப் படைத்தார். இதைத்தவிர, சமயப் பாடல்களையும், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார்.


வெற்றிப் பயணம்

1972 ஆம் ஆண்டு கே. எஸ். சேதுமாதேவன் இயக்கத்தில் வெளிவந்த ‘அச்சனும் பப்பையும்’ (மலையாளம்) என்ற திரைப்படத்தில் ‘மனுஷ்யன் மதங்களே’ என்ற பாடலுக்காக இவருக்கு, சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்காக ‘தேசிய விருது’ வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே ‘காயத்ரி’ (மலையாளம்) என்ற திரைப்படத்தில் ‘பத்மதீர்த்தமே உணரு’ என்ற பாடலுக்காக ‘தேசிய விருதை’ வென்றார். அதைத் தொடர்ந்து, 1976ல் ‘சிட்சோர்’ (இந்தி) திரைப்படத்தில் “பாஷி கொரி தேரா காவோன் படா” பாடலுக்கும், 1982ல் ‘மேகசந்தேசம்’ (தெலுங்கு) திரைப்படத்தில் ‘ஆகாச தேசனா ஆஷதா மாசனா’ என்ற பாடலுக்கும், 1987ல் ‘உன்னிகேலே ஒரு கதா பறையம்’ (மலையாளம்) திரைப்படத்தில் ‘உன்னிகேலே ஒரு கதா பறையம்’ என்ற பாடலுக்கும், 1991ல் பாரதம் (மலையாளம்) திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும், 1993ல் ‘சோபனம்’ திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும் ‘தேசிய விருதினை’ வென்று சாதனைப் படைத்தார்.

தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ்

தொடக்கத்தில் ஒரு சில பாடல்களைத் தமிழ் திரைப்படங்களில் பாடியிருந்தாலும், 1974 ஆம் ஆண்டு,  ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் “விழியே கதையெழுது” என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது. பிறகு எம். ஜி. ஆர் நடித்த “பல்லாண்டு வாழ்க” திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாடி, தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். அதில் “போய் வா நதியலையே” மற்றும் “ஒன்றே குலமென்று பாடுவோம்” பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது எனலாம். மேலும் ‘நீதிக்கு தலைவணங்கு’ திரைப்படத்தில், “இந்த பச்சைக்கிளிகொரு”, ‘டாக்டர் சிவா’ திரைப்படத்தில் “மலரே குறிஞ்சி மலரே”, ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தில் “தெய்வம் தந்த வீடு” பாடல்கள் யேசுதாஸை தமிழில் மிகவும் பிரபலமாக்கியது.

‘தண்ணித் தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்’, ‘நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்’, ‘பூவே செம்பூவே’, ‘தென்பாண்டி தமிழே’, ‘ஆராரிரோ பாடியதாரோ’, ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’, ‘பூங்காற்று புதிதானது’, ‘ராஜ ராஜ சோழன் நான்’, ‘செந்தாலும் பூவில்’, ‘கல்யாண தேன்நிலா’, ‘அதிசய ராகம்’ போன்ற பாடல்கள் இன்றளவும் இசை ரசிகர்கள் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.



இல்லற வாழ்க்கை

யேசுதாஸ் அவர்கள், பிரபா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ‘வினோத், விஜய் மற்றும் விஷால்’ என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இவருடைய இரண்டாவது மகனான விஜய் யேசுதாஸ் தமது தந்தையைப் பின்பற்றி திரைப்படப் பாடகராக விளங்கி வருகிறார்.

விருதுகளும், மரியாதைகளும்

1975 – “பத்ம ஸ்ரீ” விருது.
அண்ணாமலை பல்கலைக்கழகம்(1989), கேரளா பல்கலைக்கழகம்(2003), மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்(2009) மூலமாக ‘கௌரவ டாக்டர் பட்டம்’.
1992 – இசைப்பேரரிஞர் விருது.
1992 – சங்கீத் நாடக அகாடமி விருது.
2002 – “பத்ம பூஷன்” விருது.
2003 – வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருது.
1972ல் ‘மனுஷ்யன் மதங்களே’ என்ற பாடலுக்கும், ‘பத்மதீர்த்தமே உணரு’ என்ற பாடலுக்கும், 1976ல் கொரி தேரா காவோன் படா” பாடலுக்கும், 1982ல் ‘ஆகாச தேசனா ஆஷதா மாசனா’ என்ற பாடலுக்கும், 1987ல் ‘உன்னிகேலே ஒரு கதா பறையம்’ என்ற பாடலுக்கும், 1991ல் ‘பாரதம்’ (மலையாளம்) திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும், 1993ல் ‘சோபனம்’ திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும் ‘தேசிய விருதினை’ வென்றார்.
இதைத் தவிர, நாற்பதுக்கும் மேற்பட்ட கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில விருதுகளையும், ஃபிலிம்பேர் விருதுகளையும், வனிதா திரைப்பட விருதுகளையும், மேலும் ‘சங்கீத சிகரம்’, ‘சங்கீத சக்ரவர்த்தி’, ‘சங்கீத ராஜா’, ‘சங்கீத ரத்னா’, ‘கான கந்தர்வா’ என எண்ணிலடங்கா விருதுகளை வென்று சாதனைப் படைத்தார். ‘மொழிகளுக்கும், எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது இசை மட்டுமே! அந்த வகையில் யேசுதாஸ் அவர்களின் தெய்வீகக் குரலில் ஒலித்த அத்தனைப் பாடல்களும், என்றென்றும் இசை ரசிகர்களின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.

நன்றி தனுஷா
நன்றி விக்கிபீடியா
நன்றி தமிழ்கல்சர்.காம்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக