ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செட்டில்மென்ட்

2 posters

Go down

செட்டில்மென்ட் Empty செட்டில்மென்ட்

Post by ayyasamy ram Thu Nov 26, 2015 7:03 am

செட்டில்மென்ட் GRyv7QP3Qh2rSY9u4KEw+10
-
உலக மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள், மூன்றில் இரண்டு பங்கு பணி செய்கிறார்கள். அதற்கு ஊதியமாக நூற்றில் பத்து சதவிகிதமே பெற்று கொள்கிறார்கள். அதிலும் சொத்துரிமை நூறில் ஒரு சதவிகிதம்தான்…’
– இது ஐ.நா. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் வெளியிட்ட தகவல்.
-
நம் நாடு மட்டும் அல்ல. உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் சொத்துரிமை என்று வரும் பொழுது ஆண்களின் கை ஓங்கியே இருக்கிறது. இந்த சமுதாயத்தில் பெண்கள் முன்னேற்ற பாதையை நோக்கி செல்ல தடையாக இருக்கும் காரணங்களில் ஒன்று பெண்களின் பொருளாதார நிலை. இன்று பல இடர்பாடுகளை களைந்து, போராடி, சொத்துரிமையை சட்ட ரீதியாக பெற்ற நிலையிலும்!!!

சட்டமே பெண்ணுக்கான உரிமையை தந்தாலும் இந்த சமுதாயம் தர மறுக்கிறது என்பதே உண்மை.ஆதிமனிதன் இன்று நாகரிக மனிதனாக மாறி வலம் வர பல விதங்களில் நம் பெண்ணினமே காரணமாக இருந்திருக்கிறது. கல்லை கருவிகளாக்கி வேட்டையாடி, அதே கல்லால் நெருப்பை மூட்டி இயற்கை உணவை இதமாக, பதமாக உணவாக்கி வன விலங்குகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விவசாயம் செய்ய தொடங்கி மனித இனத்தின் இன்றைய வளர்ச்சிக்கு வித்தாக, வேராக விளங்கியது பெண்ணினம் என்றால் மறுப்பதற்கு இல்லை.

இவ்வாறாக நிலபுலன்களை தன் ஆளுமையின் கீழ் கொண்டு வருகின்ற ஆண், காலம் செல்லச் செல்ல தன் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டு பெண்களை வெறும் அடுப்பங்கரை ராணிகளாகவும், அந்தப்புரத்து அலங்காரப் பொருளாகவும் ஆக்கி விட்டார்கள். பல போராட்டங்களுக்கு பின்னர், பல திறமைகளை தன்னுள் கொண்டு இன்று பல்வேறு தளங்களில் சகலகலாவல்லிகளாக இருக்கும் பெண்கள் சொத்துரிமை என்று வரும் பொழுது இன்னும் பின்தங்கி தான் இருக்கிறார்கள்.குழந்தைத் திருமணம், கைம்பெண் நிலை, மறும் மணம் மறுக்கப்பட்டது, உடன்கட்டை ஏறுவது இவை எல்லாம், சொத்துரிமை கைமாறுவதை தடுக்க நடைபெற்ற அவலங்கள்.

சில சமுதாயங்களில் இன்றும் இறந்த சகோதரனின் மனைவியை தன் தாரத்துக்கு இணையாக நடக்கக்கூடிய நிலையும் இருக்கிறது. அது போலவே சொந்தபந்தங்களுக்குள்ளே நடைபெற்ற திருமணங்களும் சொத்துரிமையின் அடிப்படையிலேயே நடந்தேறுகின்றன. மருத்துவ விஞ்ஞானம் அதனை எதிர்க்கும் நிலையிலும் இந்த அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மனிதன் தன்னுடைய எல்லா செயல்களுக்கும் பொருளாதார நிலையை ஒரு அடித்தளமாக அமைத்து செயல்படுகிறான். பெண்களுக்கு எதிராக நடைபெறும் பல கொடுமைகளுக்கும் பொருள் ஆசையே அடிப்படை.

நம் நாட்டைப் பொறுத்தவரை Personal news என்று சொல்லக்கூடிய திருமண சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள் போன்றவை பொதுவான சிவில் சட்டம் (Common civil code) இல்லாத காரணத்தால் அவர் அவர்கள் பின்பற்றும் மதத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. கடந்த 2005ல் இந்து வாரிசுரிமை சட்டம் திருத்தம் செய்யப்பட்டு, இந்துப் பெண்களுக்கு மூதாதையர் சொத்தில் ஆண்களுக்கு நிகரான சம உரிமை கிடைக்கப் பெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 1989ம் ஆண்டு முதலே இந்த உரிமை, சட்டத்திருத்தத்தின் மூலம் நடைமுறையில் உள்ளது.

பெண்களுக்கான சொத்துரிமை அவளுடைய பொருளாதார சுதந்திரத்தில் ஏற்றம் தரும், வரதட்சணைக் கொடுமையில் இருந்து அவளைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் சட்டமாக்கப் பட்டாலும் உண்மைநிலை வேறாக உள்ளது. ஒரு பெண் பிறந்த வீட்டில் தனக்கு இருக்கும் சொத்து உரிமைகளை, தன் உடன்பிறப்புகளுக்கு திருமணத்துக்கு முன்னரோ, பின்னரோ விட்டுக் கொடுக்கும் ஒரு நிலை பல பெண்களின் சகோதரர்கள் இன்று Settlement என்ற பெயரில் தன் சகோதரர்களுக்கு சட்டம் கொடுக்கும் உரிமையைத் தர மறுக்கிறார்கள்.

பெரும்பாலான இந்தியப் பெண்கள் தன் பிறந்த வீட்டு சொத்துரிமையை வழங்கி விட்டுதான் இல்வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். பல கனவுகளை சுமந்துக் கொண்டு திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கிற ஆணும் பெண்ணும் ஏதோ ஒரு காரணத்தால் ‘விவாகரத்து’ என்ற நிலை வரும் பொழுது இன்று நம் நாட்டில் உள்ள விவாகரத்துச் சட்டங்கள் ஒரு சில நாடுகளில் இருப்பது போன்ற பொருளாதார பாதுகாப்பை தருவதில்லை.

விவாகரத்தின் பொழுது ஒரு பெண்ணுக்கான சொத்துரிமையும் பொருளாதாரப் பாதுகாப்பும் அவசியம் என்ற எண்ணத்தினால் கடந்த சில ஆண்டுகளாக சட்ட ரீதியான முன்னேற்றம் ஏற்பட்டு 2013ம் ஆண்டு ராஜ்ய சபாவில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டு ஏற்று கொள்ளப்பட்ட நிலையில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாமல் தேர்தல் வந்ததால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அந்த மசோதாவில் எந்தவித முன்னேற்றமும் ஏற்றப்படவில்லை. மேலும், இந்த சட்டத் திருத்தம் இந்து திருமணச்சட்டம் மற்றும் சிறப்பு திருமணச் சட்டத்துக்கு மட்டுமே பரிசீலிக்கப்பட்டது.

விவாகரத்தில் இந்தியப் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்…

‘விவாகரத்து’ இன்றும் சமூகத்தில் ஒரு பெண்ணை வித்தி யாசமான, தாழ்வான பார்வை பார்க்க வைக்கும் நிலை. மறுமணம் என்பது அவ்வளவு எளிதான ஒரு செயல் அல்ல.பெரும்பாலும் குழந்தைகள் தாயின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் விடப்படும் நிலை. பொருளாதார ரீதியாக பெரும்பாலான பெண்கள் திருமணத்தின் போது கணவனை சார்ந்திருந்த நிலை.

போதிய பொருளாதார பாதுகாப்பு அற்ற நிலை (வேலை செய்து பொருளீட்டும் பெண்ணுக்கும்). நம் நாட்டு சட்டம் பெண்களுக்கு விவாகரத்தின் மூலம் எந்த ஒரு பொருளாதார பாதுகாப்பையும் கொடுக்காத நிலை. பல நேரங்களில் பிறந்த வீடும் புகுந்த வீடும் கைவிட்ட ஆதரவு அற்ற நிலை. குழந்தைகளின் எதிர்காலம். ஒரு பெண் திருமண உறவில் தன் கணவனுக்கு உற்ற துணையாக, அவள் குழந்தைகளின் தாயாக, வீட்டின் நிர்வாகியாக, குடும்பத் தலைவியாக ஆற்றும் பணியினால் கணவன் பொருளீட்ட ஏதுவாகிறது. பல நாடுகளில் விவாகரத்தின் பொழுது மனைவிக்கு சொத்தை சரிசமமாக பகிர்ந்து தர அவர்களின் சட்டம் பரிந்துரை செய்கிறது.

நம் நாட்டைப் பொறுத்தவரை பெண்களுக்கான சட்டமோ அல்லது சட்டத்திருத்தமோ வரும் பொழுது பல எதிர்ப்புக் குரல்கள் ஒலிப்பதை கேட்கிறோம். அதுவே இந்த சட்டத்திருத்தத்துக்கும் பொருந்தும்.பெண்களுக்கான எந்தவொரு சட்டமோ சட்டத்திருத்தமோ முழுமையான பலன் கொடுக்க வேண்டும் என்றால் அதனைப் பயன்படுத்தும் பெண்கள் தேவையிருப்பின் மட்டுமே அதனை கையில் எடுக்க வேண்டும். தவறாகப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

விவாகரத்தின் பொழுது சொத்துரிமைச் சட்டம் ஆக்கப்பட்டால்…தேவையில்லாத விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை குறையும். பெண்களுக்கான பொருளாதார பாதுகாப்பு தரும். குழந்தைகளுக்கான எதிர்காலம் கேள்விக்குறி ஆவதை ஓரளவுக்கு தடுக்கலாம்.இனி எதிர்காலத்தில் தூசி தட்டப்பட்டு மீண்டும் மசோதா பரிந்துரைக்கப்பட்டால் கண்டிப்பாக, தெளிவாக ஆண்களுக்கு சார்பாகவோ அல்லது பெண்களுக்கு சார்பாகவோ அல்லாமல் ஒரு நடுநிலைமையோடு, குடும்ப அமைப்பை சீர்குலைக்காமல், திருமண பந்தம் நிலுவையில் இருந்த வருடங்கள், அந்த பந்தத்தின் மூலம் பிறந்த குழந்தைகள், இருதரப்பினரின் பொருளாதார நிலை, அதில் இருவரின் பங்களிப்பு, மேலும் இருதரப்பினருக்கும் பொதுத்தன்மையுடைய சட்டமாக பரிந்துரைக்கப்பட்டால் மட்டுமே ஒரு சரியான சட்டமாக அமையும்.

உலகளவில் பெண்ணின் நிலை உயர வேண்டும் என்றால், ஆண்களுக்கு நிகரான ஒரு சமுதாய அங்கீகாரம் கிடைக்கப் பெற வேண்டும் என்றால் பொருளாதார ரீதியான சட்ட உரிமையை மட்டும் நிறைவேற்றுதல் நிறைவு பெறாது, ஒரு சட்ட உரிமை சமுதாய அங்கீகாரம் பெற்றால் மட்டுமே சமநீதி அமையும்.

பெண்களுக்கான சொத்துரிமை அவளுடைய பொருளாதார சுதந்திரத்தில் ஏற்றம் தரும், வரதட்சணைக் கொடுமையில் இருந்து அவளைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் சட்டமாக்கப் பட்டாலும் உண்மைநிலை வேறாக உள்ளது. பெரும்பாலான இந்தியப் பெண்கள் பிறந்த வீட்டுச் சொத்துரிமையை வழங்கி விட்டுதான், இல்வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள்.

எழுத்து வடிவம்: சாஹா
குங்குமம் தோழி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செட்டில்மென்ட் Empty Re: செட்டில்மென்ட்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 26, 2015 4:03 pm

ayyasamy ram wrote:
பெண்களுக்கான சொத்துரிமை அவளுடைய பொருளாதார சுதந்திரத்தில் ஏற்றம் தரும், வரதட்சணைக் கொடுமையில் இருந்து அவளைக் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் சட்டமாக்கப் பட்டாலும் உண்மைநிலை வேறாக உள்ளது. பெரும்பாலான இந்தியப் பெண்கள் பிறந்த வீட்டுச் சொத்துரிமையை வழங்கி விட்டுதான், இல்வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள்.

எழுத்து வடிவம்: சாஹா
குங்குமம் தோழி
மேற்கோள் செய்த பதிவு: 1176886
பெண்கள் சொத்துரிமை போராட்டம் பல குடும்பங்களில் சகோதர,சகோதரியிடம் பகைமையைத் தான் வளர்த்து உள்ளது. அன்பான குடும்பம் சொத்து பிரச்சனையால் சிக்கி சீரழிந்து அல்லல்ப் பட்டு அழிகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum