ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Today at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் கை வேல்

2 posters

Go down

முருகன் கை வேல் Empty முருகன் கை வேல்

Post by ayyasamy ram Thu Nov 26, 2015 5:23 am

முருகன் கை வேல் Yxl5eiFQuOTKWsSu4lo9+images
-
முருகன் கை வேலின் செயல்கள் பற்றி ஒரு புலவர் இப்படிப்
பாடுகிறார்:

அன்பர் பயம் கெடுக்கும்; அத்தி கிரியைத் துளைக்கும்;

இன்ப வள்ளி கண்ணுக்கு எதிராகும்; மின் பரந்த

வாகு தோளில் ஏறி மீறி வாகுசாரி ஓடி ஆடி

வேக சூரன் மார்பிடந்த வேல்!

“முருகப்பெருமானின் கை வேலானது ஒளியுடைய வீரவாகுவின்
தோள்களிலே அமர்ந்து, பின் அங்கிருந்து மேலே மேலே உயர்ந்து,
அழகாக இடமாகவும், வலமாகவும் சென்று வாயு வேகம் கொண்ட
சூரபன்மனின் மார்பைப் பிளந்த வேலானது அடியார்களின்
மனத் துன்பத்தை ஒழிக்கும். அந்தக் கிரௌஞ்ச மலையைத்
துளைத்துப் பிளக்கும். இன்பக்கொடியைப் போன்ற, முருகனுக்கு
வேல் தந்த அன்னை பார்வதி தேவியின் முன் சென்று நிலைபெறும்’
என்கிறார்.

அது மட்டுமா? ஆறுமுகம் என்றளவில் அச்சம் தவிர்க்கும் வேலின்
வல்லமை பற்றி இன்னொரு புலவர் பாடுகிறார்.

ஆறுமுகம் என்றளவில் அச்சம் தவிர்க்குமே;

வேறு வினை வந்தால் விலக்குமே – கூறுபுகழ்

மாரிஒத்த சூரபன்மன் மார்பிளக்க வேதொடுத்த

வீரசக்தி யான் மிகுத்த வேல்!

எல்லோராலும் போற்றிக் கூறப்படும் புகழையுடைய இடியைப்
போன்ற சூரபன்மனின் அகன்ற மார்பைப் பிளந்திடுமாறு வீசிய
வீரம் மிக்க வேலானது, “ஆறுமுகம்’ என்று சொன்னாலே நமது
அச்சத்தை நீக்கும். நம் நலனுக்கு மாறான தீவினைகள் துன்பம்
தர வந்தால் அவற்றையெல்லாம் விலக்கிவிடும்’ என்கிறார்.

வாழ்வுக்கு வித்தான வேலின் திறத்தைப் பற்றி மற்றொரு புலவர்,
“இடிபோன்று “தடபட’ என்ற ஒலியுண்டாகுமாறு கடலின் அலைமீது
செலுத்த, கடலைக்கூட தூளாக ஆகும்படிச் செய்யும் வன்மையுடைய
முருகப்பெருமானின் வேலானது தன்னை வழிபடும் அடியாரின்
முன் செய்த தீவினையைப் போக்க வல்லது.
உள்ளத்தில் அறிவொளியை உண்டாக்கி, நல்ல வாழ்க்கைக்கு
அடிப்படையாக இருந்து அதனை வளரச் செய்யும் பெரும் பேற்றை
அளிப்பது முருகனின் வேல்’ என்கிறார்.

இப்படிப் புலவர் பெருமக்களால் போற்றப்படுகின்ற முருகப்
பெருமானின் கை வேல், சூரபன்மனைச் சம்ஹாரம் செய்து பெருமை
சேர்த்தது. இப்படி திருச்செந்தூர் பதியில் நடைபெறும் ஈடு இணை
இல்லாத கந்த சஷ்டி விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
கண்டுகளிக்கும்போது மழை பொழியலாமா?

“கூடாது’ என்று மற்றொரு புலவர் பாடியுள்ளார். பக்தர்கள் மழை
பொழிவதற்கு திருவருளை வேண்டுவது போன்று, அதே திருவருளை
மழையை நிறுத்துவதற்கும் வேண்டுவது அவர்களது பக்தியின்
ஈடுபாடாகும்.

முன்பெல்லாம் “கந்த சஷ்டி’ அன்று வேல் வாங்கும்போது,
அந்த ஊரில் மழை பொழிவது வழக்கம். ஆறுமுகக் கடவுளைக்
காண்பதற்கு இடையூறாக இருக்கின்ற மழையை நிறுத்த வேண்டும்.
அதற்கும் அவனை வணங்குதலே வழியாகும். செந்தில் ஆண்டவன்
திருவிழாவான கந்த சஷ்டி நடந்த சமயம் மழை பெய்தது.
பக்தர்களின் குரலாக நின்றார் பக்தியுள்ள புலவர் ஒருவர். மழை
நிற்க வேண்டி மனமுருகி இப்பாடலைப் பாடினார்.

வந்து மழை பொழியும் வானே, வெஞ்சூர் தடிந்த

கந்தர் திருவிழாக் காலத்தில் தொந்தரையாம்

நீர்த்துளியை யூற்றிவிடல் நேர்த்தியல;

– மாற்றிவிடு; நேரான

கீர்த்தி வரும் நாட்டில் இதைக்கேள்!

தக்க காலத்தில் தோன்றி மழையைப் பொழியும் மேகமே!
கொடிய அசுரனான சூரபன்மனை வென்ற முருகப்பெருமானின்
திவ்வியமான “கந்த சஷ்டி’ விழா நடைபெறும் இக்காலத்தில்
தொந்தரவு தரும் நீர்த்துளியை ஊற்றாதே! தாரை தாரையாகப்
பொழியும் மழையை மாற்றிவிடு. வேறு எங்காவது போய் இதே
மழை பொழியட்டும்.
இதனால் அருள் வடிவான கந்தப் பெருமானால் உனக்குக் கீர்த்தி
உண்டாகும். உனக்குப் புகழை உண்டாக்கக்கூடிய என் பேச்சைக்
கேள்!” என்கிறார் புலவர்.

மேற்குறித்த பாடல்கள் எல்லாம் “தனிப்பாடல்’ திரட்டு தொகுப்பில்
உள்ளவை. இந்தப் பாடல்களையெல்லாம் இன்னார் பாடினார்கள்
என்ற குறிப்பு இல்லை. இவற்றை “பல புலவர்கள் பாடிய பாடல்கள்’
என்ற அளவிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.

—————————————–
டி.எம். இரத்தினவேல்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முருகன் கை வேல் Empty Re: முருகன் கை வேல்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 26, 2015 1:34 pm

முருகன் கை வேல் 3838410834 முருகன் கை வேல் 103459460 முருகன் கை வேல் 1571444738
ayyasamy ram wrote:
அன்பர் பயம் கெடுக்கும்; அத்தி கிரியைத் துளைக்கும்;

இன்ப வள்ளி கண்ணுக்கு எதிராகும்; மின் பரந்த

வாகு தோளில் ஏறி மீறி வாகுசாரி ஓடி ஆடி

வேக சூரன் மார்பிடந்த வேல்!

டி.எம். இரத்தினவேல்
மேற்கோள் செய்த பதிவு: 1176877
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum