ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் என்னும் பெருஞ்செல்வம்

2 posters

Go down

பெண் என்னும் பெருஞ்செல்வம் Empty பெண் என்னும் பெருஞ்செல்வம்

Post by ayyasamy ram Wed Nov 25, 2015 8:57 pm

பெண் என்னும் பெருஞ்செல்வம் MxcJU9HDQTOstlpzyHzm+45
-


இன்று உலகில் பல்லாயிரம் கோடி மக்கள் வாழ்கிறார்கள்.
இவர்கள் அனைவரையும் ஈன்றெடுத்த பெருமை யாருக்கு
உள்ளது?

பெண்களுக்கல்லவா இப்பெருமை வாய்க்கப் பெற்றுள்ளது.
ஆக, உலகத்தையே உருவாக்க வல்ல இப்பெண்களின் நிலை
இப்போது எப்படி உள்ளது?

பெரும்பாலான குடும்பங்களில் ஊதியம் வாங்காத வேலைக்
காரியாக இருக்கிறார்கள். பெண்களே பெண்களை இழிவு
படுத்தும் மூடநிலை இன்றும் தொடர்கிறது. மாதர் தம்
இனத்தையே இழிவு படுத்துகிறார்களே என்று நொந்து மனம்
வெந்து

மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்

என்று நெருப்பைக் குழைத்து எழுதுகிறான் பாரதி,

அனைத்து நிலையிலும் சம உரிமை தராத துருப்பிடித்த
அரசியலமைப்புச் சட்டங்கள்தாம் இன்னும் நடைமுறையில்
இருக்கின்றன. இப்படிப் பலரும் பலவும் காரணமாக, பெண்மை
என்னும் பெருஞ்செல்வம் மெல்ல அழிந்து வருகிறதோ என்னும்
அச்சம் ஏற்படுகிறது.

நமது மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்த
புள்ளி விவரங்கள் பெண்களின் எண்ணிக்கை சரிந்து வருவதைச்
சுட்டிக் காட்டுகிறது.

சாதிக் கொடுமையால் காதல் மொட்டுகள் கருகிப் போவது
காலம் காலமாக இருக்கின்ற ஒன்றுதான் என்றாலும் இக் காலத்தில்
மிகுதியாக உள்ளது. இச் சிக்கலில் மிகுதியும் பாதிக்கப்படுவோர்
பெண்களே. கௌரவக் கொலை என்ற பெயரில் இளம்பெண்கள்
கொல்லப்படுவதாக நாளும் செய்தி வருகின்றன.

இந்த அவலங்களுக்கெல்லாம் அடிப்படையான காரணம் என்ன?

பெண்ணைப் பற்றியும், பெண்மையைப் பற்றியும் சமுதாயத்தில்
சரியான புரிதல் இல்லை என்பதுதான்.

இவற்றுக்கெல்லாம் என்னதான் தீர்வு?

பெண்கள் எதிர்கொள்ளும் எல்லா சிக்கல்களுக்கும் ஒரே மாமருந்து
கல்விதான். மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம்
பள்ளிக்கல்வியை முடிக்க வேண்டும். தொடர்ந்து ஏதேனும் ஒரு
பாடப் பிரிவில் பட்டயம் அல்லது பட்டம் பெற வேண்டும். இந்த
இலக்கை அடையும் முன் காதல் அல்லது திருமணம் செய்வது
அறவே கூடாது.

கணவனால் கைவிடப்படல், பிள்ளைகளின் பாராமுகம் போன்ற
அசாதாரண சூழல் ஏற்படும்போது பொருளாதார தற்சார்புடன்
மானத்துடன் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு தான் கற்ற கல்வி
மட்டுமே உதவும்..

முடிந்தவரை பெண்குழந்தைகளை பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும்
வரை பெற்றோர் தம்முடன் வைத்துப் படிக்க வைக்க வேண்டும்.
விடுதியில் விடுதல் சிறப்பன்று. வளரிளம் பருவத்தில் தாய் அன்றாடம்
தரும் அன்பும் அரவணைப்பும் அவ்வப்போது தந்தை காட்டும்
கனிவுடன் கூடிய கண்டிப்பும் பெண்ணுக்கு மிக முக்கியமாகும்..

இந்தச் சமயத்தில் விருந்தோம்பல், கொடுத்து மகிழ்தல் போன்ற நல்ல
குடிமரபுகளும், கற்பொழுக்கம் நேர்மை போன்ற குடிப்பெருமைகளும்
பெண் குழந்தையிடத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும் பார்த்துப்
பழகல் என்ற முறையில் அம்மாவிடமிருந்து வீட்டுப் பராமரிப்பு,
சமையல் போன்ற வாழ்வியல் திறன்களைக் கற்றுக் கொள்வதும்
இக் காலக்கட்டத்தில்தான் நிகழும். உளவியலில் முதுஅறிவியல் பட்டம்
பெற்ற உளவியல் ஆலோசகர் என்ற முறையில் இக் கருத்தை
வலியுறுத்துகிறோம்.

ஆங்கிலக் கல்வி, வெளிநாட்டு வேலை போன்றவை காரணமாக
நம் கலாசாரத்தில் உள்ள நல்ல மரபுகளைப் பெண்கள் மறந்து விடுதல்
கூடாது. குறிப்பாக நம் உணவு மரபுகளை மீட்டெடுத்துக் கடைப்
பிடித்தாலே உடல் உரம் பெற்று உற்சாகமாக வாழமுடியும். உடல்
நலமிக்கப் பெண்கள்தாம் குடும்பத்தின் மிகநல்ல சொத்தாவார்.

என்னதான் பணிச்சுமை இருந்தாலும் நல்ல நூல்களைத் தேடிப்
பிடித்துப் படிக்க வேண்டும். குறிப்பாக, திரு.வி.கல்யாண சுந்தரனார்
எழுதியுள்ள பெண்ணின் பெருமை என்னும் நூலை பெண்கள் படிக்க
வேண்டும், ஆண்களும் படிக்க வேண்டும்.

உடல் ஓம்பாமையால் வரும் பல நோய்கள் பெண்களைப்
பாதிக்கின்றன. எனவே, தவப் பயிற்சியும் உடற்பயிற்சியும் பெண்களின்
அன்றாடப் பணிகளின் அங்கமாக அமைய வேண்டும்.

பிறந்த ஊரைப் பிரிந்து, பெற்றோரைப் பிரிந்து, புகுந்த வீட்டில் பதியம்
போடப்படும் அந்த இளஞ்செடியை புகுந்த வீட்டில் உள்ள அனைவரும்
போற்றி வளர்க்க வேண்டும.

தன் மனைவி சாரதா தேவியைத் தெய்வ நிலைக்கு உயர்த்தி ஆராதனை
செய்த மாமனிதர் இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார்.

பெண் என்பவள் தூய இன்ப ஊற்று அன்பின் வற்றா இருப்பு முதலில்
மழலை பேசி மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறாள். பின்னர் கல்வியில் சிறந்து
களிப்படையச் செய்கிறாள். மனைவி என்னும் பொறுப்பேற்று மணி
விளக்காய்த் திகழ்கிறாள். தாய் என்னும் நிலையில் தியாகத் திருவுருவாய்
விளங்குகிறாள்.

பின்னர் வயது முதிர்ந்த பாட்டியாகி, வணங்குவோரையெல்லாம்
வாழ்த்துகிறாள் குடும்பத்தின் பாரம்பரியம் மற்றும் அனுபவப்
புதையலாய்த் திகழ்கிறாள்.

செலவைக் குறைத்துச் சிறுகச் சிறுகச் சேமித்து வைப்பதில் பெண்கள்
வல்லவர்கள். இன்றைக்கும் பல குடும்பங்களில் புயலில் சிக்கிய
கப்பல்போல குடும்பம் தடுமாறும்போது நங்கூரமாக இருந்து கரை
சேர்ப்பவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்க
முடியாது.

எனவே, பெண் என்பவள் வீட்டின் சொத்து நாட்டின் சொத்து
குடும்பத்தின் ஆணிவேர் அவளே. அத்தகைய பெண் என்னும் பெருஞ்
செல்வத்தைப் போற்றிப் பாதுகாப்போம்.

———————————————-
அ. கோவிந்தராஜு, கரூர்.
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெண் என்னும் பெருஞ்செல்வம் Empty Re: பெண் என்னும் பெருஞ்செல்வம்

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 26, 2015 10:17 am

பெண்மை போற்றுவோம். பெண் என்னும் பெருஞ்செல்வம் 3838410834  பெண் என்னும் பெருஞ்செல்வம் 3838410834  பெண் என்னும் பெருஞ்செல்வம் 1571444738
ayyasamy ram wrote:
மாதர் தம்மை இழிவு செய்யும்
மடமையைக் கொளுத்துவோம்

என்று நெருப்பைக் குழைத்து எழுதுகிறான் பாரதி,

பெண்ணைப் பற்றியும், பெண்மையைப் பற்றியும் சமுதாயத்தில்
சரியான புரிதல் இல்லை என்பதுதான்.

எனவே, பெண் என்பவள் வீட்டின் சொத்து நாட்டின் சொத்து
குடும்பத்தின் ஆணிவேர் அவளே. அத்தகைய பெண் என்னும் பெருஞ்
செல்வத்தைப் போற்றிப் பாதுகாப்போம்.
அ. கோவிந்தராஜு, கரூர்.
தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1176838
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» பெண் என்னும் பொக்கிஷம்!
» பெண் என்னும் பாலம்!
» பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
» ஸர்மிளா ஸைய்யித் கவிதைகளில் வெளிப்படும் பெண் இயங்கியல் (சிறகு முளைத்த பெண், ஒவ்வா என்ற கவிதைத்தொகுதிகள் ஊடாக)
» பெண் ஓட்டுநரின் ஆட்டோவில் பயணித்த கனிமொழி: வருவாயில் குடும்பத்தை நிர்வகிக்கும் உறுதியான பெண் என டுவீட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum