ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர்

3 posters

Go down

தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர் Empty தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர்

Post by ராஜா Mon Nov 23, 2015 5:34 pm

குளச்சலை அடுத்த ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 35). இவரது மனைவி ராணி (30). இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டு உள்ளது.

இருவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகளும் உள்ளனர். ரவி அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் சவாரி கிடைக்காத நாட்களில் பெயிண்டிங் வேலைக்கும் செல்வது வழக்கம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது போல ரவி கருங்கல் பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு பெயிண்டிங் வேலைக்கு சென்றார். அப்போது வீட்டு உரிமையாளரின் மனைவியும் அவரது 2 குழந்தைகளும் ரவியுடன் அன்பாக பழகினர்.

பெயிண்டிங் வேலை முடிந்த பின்பும் ரவி, அந்த வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். இதில் வீட்டு உரிமையாளரின் மனைவியுடன் ரவிக்கு நெருக்கம் ஏற்பட்டது.

அப்போது ரவி, அந்த பெண்ணிடம், இன்னும் தனக்கு திருமணம் ஆக வில்லை என கூறினார். இதனால் அந்த பெண், ரவியுடன் அதிக நெருக்கம் காட்டினார். இவர்களின் பழக்கம், அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவரவே, அவர் மனைவி, குழந்தைகளை பிரிந்து சென்றார்.

இந்த தகவலை அந்த பெண், ரவியிடம் கூறி அழுதார். அவர், அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறியதோடு, அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வாக்கு கொடுத்தார்.

அதனை நம்பி அந்த பெண், குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்தார். அவருக்கு ரவி தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்து தங்க வைத்தார். அங்கு அந்த பெண்ணுடன் ரவி ரகசியமாக குடும்பம் நடத்த தொடங்கினார். மாதத்தில் பல நாட்கள் அவர் மனைவி ராணியை சந்திப்பதில்லை. இதனால் ராணி சந்தேகம் அடைந்தார். அவர் ரவியின் நடவடிக்கைகளை கண்காணிக்க தொடங்கினார்.

இது தெரியவந்ததும் ரவி, கள்ளக்காதலியை பிரிந்து மனைவி ராணியுடன் தங்க தொடங்கினார். கள்ளக்காதலி வீட்டுக்கு செல்வதை தவிர்த்தார். அவருடன் பேசுவதையும் நிறுத்தி கொண்டார்.

ரவியை காணாமல் திகைத்த கள்ளக்காதலி அவரது விலாசத்தை தேடி ரீத்தாபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கே வந்து விட்டார். அங்கு சென்ற பின்புதான் ரவிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருப்பதை அறிந்து கொண்ட அந்த பெண், தான் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்டார்.

உடனே அவர் ராணியிடம் சென்று ரவி தன்னை எப்படியெல்லாம் ஏமாற்றினார் என்று கூறியதோடு, அவரோடு தான் குடும்பம் நடத்தி வந்ததையும் போட்டு உடைத்தார். கணவர் கைவிட்டதால் இனி ரவி தான் தனக்கு துணை என்று கூறியதோடு, அவரை என் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் ராணியை எச்சரித்தார்.

இதை கேட்டு பதறி போன ராணி, குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் புகாரை தெளிவாக கேட்டு உண்மை நிலவரத்தை புரிந்து கொண்டனர். பின்னர் அவர்கள் போலீசாரை அனுப்பி ரவியையும், அவரது கள்ளக்காதலியையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு வைத்து பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ரவி போலீசாரிடம் சபலத்திற்கு ஆட்பட்டு மனைவி, குழந்தைகளை ஏமாற்றி தவறிழைத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். இனி மனைவி, குழந்தைகளுடனே வாழ விரும்புகிறேன் என்று கூறி அழுதார். போலீசார் அவரை சமரசப்படுத்தி ராணியுடன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர்.

அப்போது ரவியின் கள்ளக்காதலியும் கதறி அழுதார். ரவியை நம்பி கணவரை பிரிந்து வந்தேன். இப்போது ரவி இல்லா விட்டால் என் வாழ்க்கை என்னாவது என்று தேம்பி அழுதார். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையை கேட்டிருக்கிறேன். இப்போது அது என் வாழ்வில் நடந்து விட்டதே என்று கதறினார்.

போலீசார் அந்த பெண்ணின் பெற்றோரை தொடர்பு கொண்டு போலீஸ் நிலையம் அழைத்தனர். அவர்கள் வந்ததும், அந்த பெண்ணுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர் Empty Re: தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர்

Post by ராஜா Mon Nov 23, 2015 5:36 pm

சபலத்தால் தடம் மாறுபவர்களுக்கு சரியான படிப்பினையாக அமையும் இது போன்ற செய்திகள்.

அமைதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை சின்னாபின்ன படுத்திகொண்டதும் இல்லாமல் தனது குழநதைகளின் எதிர்காலத்தையும் பாழாக்கியுள்ளார்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர் Empty Re: தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர்

Post by கார்த்திக் செயராம் Mon Nov 23, 2015 6:20 pm

ராஜா wrote:சபலத்தால் தடம் மாறுபவர்களுக்கு சரியான படிப்பினையாக அமையும் இது போன்ற செய்திகள்.

அமைதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை சின்னாபின்ன படுத்திகொண்டதும் இல்லாமல் தனது குழநதைகளின் எதிர்காலத்தையும் பாழாக்கியுள்ளார்.
மேற்கோள் செய்த பதிவு: 1176353

அருமை அருமை தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர் 3838410834 தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர் 1571444738


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர் Empty Re: தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 24, 2015 11:37 am

சபலத்தால் வந்த கொடுமை அபத்தம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர் Empty Re: தாலி கட்டிய மனைவியை ஏமாற்றி 2 குழந்தைகளின் தாயுடன் குடும்பம் நடத்திய டிரைவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum