புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_m10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10 
48 Posts - 51%
heezulia
உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_m10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_m10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_m10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_m10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_m10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10 
48 Posts - 51%
heezulia
உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_m10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_m10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_m10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_m10உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்ணாநோன்பு-சல்லேகனை-வடக்கிருத்தல்


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 18, 2016 8:28 pm

இடையூறுஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால்
கடைதுறத்தல் சல்லே கனை.

என்கிறது ‘அருங்கலச் செப்பு’ என்னும் சமணநூல். பொறுத்துக் கொள்ள இயலாமல் பிறரால் ஏற்படும் தொல்லை, தீராமல் தொடர்ந்து துன்பம் தருகின்ற நோய், தாங்க இயலா முதுமைத் தொல்லை, ஆகியன வரும் பொழுது ‘சல்லேகனை’ என்னும் உண்ணாநோன்புச் செயலால் உயிர்விடலாம் என்கிறது இந்நூல். ‘

இரத்தின கரண்டக சிராவகாசாசரம்’ என்னும் மற்றொரு சமண நூல் பெரும்பஞ்சம் வந்து துயர்ப்படும்பொழுதும் இவ்வுண்ணாநோன்பிருந்து உயிர் நீத்தலை மேற்கொள்ளலாம் என்கிறது.

அதே நேரம் இம்முறையைத் தற்கொலையாகக் கொச்சைப்படுத்தக் கூடாது என்றும் அறவழி உயிர் துறக்கும் உயர்ந்த முறை இது என்றும் நீலகேசி என்னும் சமண நூல் கூறுகிறது.

சமணரின் ‘சல்லேகனை’ உம் தமிழரின் வடக்கிருத்தலும் ஒன்றல்ல.

தமிழரின் வடக்கிருத்தல் என்பது தனக்கு இழுக்கு நேர்ந்த விடத்து, பெருமிதக் குறைபாடாகவோ களங்கமாகவோ மானமிழத்தலாகவோ கருதி அதனைத் தாங்கிக் கொள்ள இயலாமல் வடக்கிருந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விடலாகும். சிக்கலை அல்லது துன்பத்தை எதிர்கொள்ள இயலாமல், என்றில்லாமல் வாழும் வழியிருந்தும் மானக்குறைபாடென எண்ணி உணவு மறுத்து உயிர் துறத்தல் என்பது பெரும் பண்பாகும். எப்படி இருந்தாலும் இரண்டிலுமே பொய்மையோ நடிப்போ இல்லை. தன் துயர் பொறுத்தலும் துணிவும் உள்ளன.

வடக்கிருத்தல் என்பது பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்கவழக்கங்களில் ஒன்றாகும். இதனை ஆடவர் மேற்கொண்டனர். ஊருக்கு வடபால் ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்தவண்ணம் உண்ணாநோன்பிருந்து உயிர் துறப்பதே வடக்கிருத்தல் எனப் பழந்தமிழர் கொண்டிருந்தனர்.

முற்காலத் தமிழகத்தில், போர்களின்போது முதுகிலே புண்பட்டவர்கள், அதை அவமானமாகக் கருதுவர். இதனால், அப் போர்க்களத்திலேயே வடக்கு நோக்கியபடி பட்டினி கிடந்து தமது உயிரைப் போக்கிக் கொள்வது உண்டு. கலைக் களஞ்சியம், வடக்கிருத்தலை 'உத்ரக மனம்' என்றும் ' மகாப் பிரத்தானம்' என்றும் கூறுகிறது. வடக்கிருந்து உயிர் துறந்தோருக்கு நடுகல் இட்டு நினைவுச் சின்னமாக வழிபடுவதும் உண்டு. வடக்கிருத்தல் இக்காலத்தில் வழக்கில் இல்லை.

avatar
Guest
Guest

PostGuest Fri Nov 18, 2016 8:29 pm

உண்ணா நோன்பு-உண்ணாவிரதம்.

இக்காலத்தில், உண்ணா நோன்பு என்பது கோரிக்கையை நிறைவேற்ற மேற்கொள்ளும் போராட்ட முறையாகவும் மாறிவிட்டது. உலக நாடுகள் எங்கும் விடுதலைக்காகவும் உரிமைக்காகவும் உண்ணா நோன்புப் போராட்டத்திலும் சாகும்வரை உண்ணா நோண்புப் போராட்டத்திலும் ஈடுபட்டவர் பலராவர்.

சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும் சோழன் கரிகாற் பெருவளத்தானுக்கும் ’வெண்ணிப் பறந்தலை’ என்னும் இடத்தில் போர் நடைபெற்றது. திருமாவளவன் செலுத்திய நெடுவேல் சேரமான் மார்பில்பட்டு முதுகின் புறத்தே உருவிச் சென்று புண் செய்தது. முதுகில் புண்படுதல் என்பது புறமுதுகிட்டு ஓடுதல் என்னும் வீரக்குறைபாடாகும்.

தமிழ் மக்கள் மார்பில் புண்பட்டு இறப்பதை விரும்பினரேயன்றி, முதுகில் புண் பட்டு வாழ்தலை அன்று. எனவே, முதுகில் புண் ஏற்பட்டு விட்டதை மானக் குறைபாடாக எண்ணிச் சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்து உயிர் நீத்தான்.

உலகில் அனைவரும் மறக்கக்கூடா வடக்கிருத்தல் இணைபிரியா நட்பிற்கு அடையாளமான கோப்பெருஞ்சோழன்- பிசிராந்தையார் வடக்கிருந்த செயலாகும். கோப்பெருஞ்சோழனின் பிள்ளைகள் அரசுரிமைக்காகத் தந்தையாகிய மன்னரை எதிர்த்தனர். அவர்களுடன் போர் தொடுக்க இருந்த மன்னனிடம் புலவர்கள் அறிவுரை கூறி அப்போரைத் தடுத்தனர்.

புலவர்களின் அறிவுரைக்கிணங்க வேந்தனும் போரை நிறுத்தி அரசுரிமையை அவர்களிடமே கொடுத்தான். எனினும் மக்களே தந்தையிடம் போர்தொடுக்க நேர்ந்த சூழலை அவமானமாகக் கருதினான். எனவே, வடக்கிருந்து உண்ணாநோன்பு மேற்கொண்டு உயிர் விட்டான்.

அப்பொழுது அதுவரை வேந்தனை நேரில் கண்டறியாமல் நட்பு பூண்டிருந்த புவலர் பிசிராந்தையார் அங்கு வந்து, மன்னன் இறந்த துயரம் அறிந்து தானும் அவன் வழி வடக்கிருந்து உயிர் துறந்தார்.

நட்புலகில் போற்றப்படவேண்டிய மற்றொன்று மன்னன் பாரி – புலவர் கபிலர் இடையே உள்ள நட்பாகும். மன்னன் பாரி இறந்ததும் அவர் பெண்மக்களைத் திருமணம் செய்வித்த பின் புலவர் கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார்.

சிலப்பதிகாரக் காலத்தில் ,கோவலன் கொலையுண்டதன் தொடர்ச்சியாக – பாண்டிய வேந்தன் மரணம், கோப்பெருந்தேவி மரணம், கண்ணகி இழப்பு, மாதரி எரியுண்டல் எனத் தொடர்ந்து – ஏற்பட்ட மரண அவலங்களால், கவுந்தியடிகள் வடக்கிருந்து உயிர் விட்டார்.
”தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்றம்......................
உண்ணா நோன்போ டுயிர்பதிப் பெயர்த்ததும்..”

என்று சிலப்பதிகாரத்திலுள்ள ‘நீர்ப்படைக் காதை’ ( 79-83) குறிப்பிடுகின்றது.

சமண முனிவர்கள் பல்வேறு காலங்களில் உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்துள்ளனர்.



avatar
Guest
Guest

PostGuest Fri Nov 18, 2016 8:35 pm

உலகில் நடந்த சில உண்ணாவிரதப் போராட்ட்ங்கள்.

இராபர்ட்டு செரார்டு சான்டு என்ற பாபி சாண்டு  என்பவர் ஐரிசு குடியரசுப்படையைச் சேர்ந்த தன்னார்வலர். இவர் சிறையில் இருந்த பொழுதே ஐக்கிய மாநிலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1981இல் வட அயர்லாந்தில் (இ)லிசுபேர்ன் நகரில் உள்ள சிறையில் பிரித்தானிய அரசுக்கெதிராக உண்ணாநோன்பிருந்த சிறைவாசிகளுக்குத் தலைமை வகித்தார். இவரும் இவருடன் உண்ணாநோன்பிருந்த பதின்மரும் இறந்தனர்.

இந்தியாவில் காந்தியடிகள் உண்ணாநோன்புப் போராட்டங்கள் பலவற்றில் ஈடுபட்டவர். ஆங்கிலேயரின் அருள் பார்வை இவர் மீது இருந்தமையால்தான் பல போராட்டங்களை நடத்த முடிந்தது.இல்லையேல் ஏதேனும் ஒரு போராட்டத்திலேயே இவர் உயிர் பிரிந்திருக்கும்.

சதீந்திராநாத்து தாசு என்ற யதின்தாசு இலாகூர் சிறையில் உண்ணாநோன்பிருந்து 63 ஆவது நாளில் உயிரிழந்தார்.

பகத்துசிங்கு  பிரித்தானிய சிறைவாசிகளுக்கும் இந்தியச் சிறைவாசிகளுக்கும் சமஉரிமை இருக்க வேண்டும் என்று 116 நாள் உண்ணாநோன்பிருந்துள்ளார்.

இந்திய விடுதலைக்குப் பின்னரான உண்ணாநோன்புப் போராட்டமெனில், தெலுங்கு மக்களுக்கான தனி மாநிலம் வேண்டி உண்ணாநோன்பிருந்து திச.16, 1952 இல் உயிர்துறந்த பொட்டி சிரீராமுலுவைக் கூறலாம்.

சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும், இந்தியா முழுவதும் மதுவிலக்கு முதலான 12 வேண்டுகைகளுக்காக 76 நாட்கள் உண்ணா நோன்பிருந்து (27.07.1956 -13.10.1956) அன்று உயிர் துறந்த சங்கரலிங்கனாரையும் நம்மால் மறக்க இயலாது.

ஈழத்தில் பல்கலைக்கழக மாணவன் மாவீரன் திலீபன், நீர்கூட அருந்தாமல் உண்ணாநோன்பிருந்து, உயர்ந்த இலட்சியத்திற்காக செப்.26, 1987 இல் உயிரிழந்தார்.

மணிப்பூரில், இராணுவத்திற்கு வழங்கப்பட்ட  ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை (AFSPA) நீக்கக்கோரி, 2000 ஆண்டில் இருந்து 16 ஆண்டுகளுக்கு மேல் உண்ணவிரதம் இருந்த  இரோம் சர்மிளா வையும் மறந்து விட முடியாது.
…………………..
இப்பொழுது உண்ணாநோன்பு, அடையாள உண்ணா நோன்பு, தொடர் உண்ணாநோன்பு, சாகும்வரை உண்ணாநோன்பு எனப் பலவகை உணவு மறுப்புப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

அண்மைக்காலங்களில் அரசியல் கட்சிகள்நடத்தும் உண்ணாநோன்புப் போராட்டங்கள் மக்களின் கேலிக்குள்ளாகி வருகின்றன. உணவு உட்கொண்டபின் உண்ணா நோன்புப் பந்தலுக்கு வருதல் அல்லது போராட்டப் பந்தலுக்குப் பின்னர் மறைவிடம் சென்று உணவு உண்ணல், அல்லது இடையிடையே வந்து சென்றுவிட்டு உண்ணாநோன்பை நாடகமாக்குதல் அல்லது இரண்டு உணவு நேரத்திற்கு இடையே உள்ள கால அளவை உண்ணா நோன்பாகக் காட்டுதல் போன்ற அவலங்கள் மேடையேறி வருகின்றன.

இவற்றிலெல்லாம் மிகவும் மோசமாகவும் மக்களின் ஏளனத்திற்கும் வெறுப்பிற்கும் உள்ளாகி வருவன, திராவிடக் கட்சிகளின் உண்ணாவிரத நாடகம் ஆகும்.
…..............
உண்ணா நோன்பு என்பது பெருமிதம் கொள்வோர் இழுக்கைத் துடைக்கும் ஈகச் செயலாகும்!
உண்ணாநோன்பு என்பது தங்கள் இலக்கை அடைவதற்காகப் போராளிகள் உயிர்க்கொடைபுரியும் மறச் செயலாகும்!
உண்ணா நோன்பு என்பது தங்களின் இன்னலைக்களைய – தங்கள் முறையீட்டை வெற்றியாக மாற்ற நிகழ்த்தும் ஓர் அறவழிப் போராட்ட முறையாகும்!

எனவே, உண்ணா நோன்பைக் கொச்சைப்படுத்தாதீர்!
போலிப் போராட்டம் மூலம் உங்களை இழிவு படுத்திக் கொள்ளாதீர்கள்!

நன்றி-விக்கிபீடியா, இணையம்.)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 5:55 pm

நல்ல பகிர்வு மூர்த்தி.....அருமை அருமை !............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
உண்ணா நோன்பைக் கொச்சைப்படுத்தாதீர்!
போலிப் போராட்டம் மூலம் உங்களை இழிவு படுத்திக் கொள்ளாதீர்கள்!


ரொம்ப சரியாக சொல்லி இருக்கிறீர்கள் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக