Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடைக்கானல் வரை....!
+9
K.Senthil kumar
ayyasamy ram
M.Jagadeesan
பழ.முத்துராமலிங்கம்
ayyamperumal
ஜாஹீதாபானு
ராஜா
Hari Prasath
விமந்தனி
13 posters
Page 10 of 12
Page 10 of 12 • 1, 2, 3 ... 9, 10, 11, 12
கொடைக்கானல் வரை....!
First topic message reminder :
அன்பான உறவுகளுக்கு வணக்கம்!
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
//இதோ இது தான் கிருஷ்ணர் இந்திரலோகத்தில் இருந்து பாமாவுக்கு கொண்டுவந்து கொடுத்த பாரிஜாத மலர் செடி...//
பவழ மல்லியைத்தான் அப்படி சொல்லுவா விமந்தினி .....இதுவரை தான் இன்று படித்தேன்.........படித்ததே நான் போய் வந்தது போல டயர்டாக இருக்கு..so கொஞ்சம் ரெஸ்ட் இப்போ...........மீதி பின்னுட்டம் நாளை.............
.
.
.
அருமையான கட்டுரை.....கூட போடும் படங்களும் புகை படங்களும் சூப்பர்
பவழ மல்லியைத்தான் அப்படி சொல்லுவா விமந்தினி .....இதுவரை தான் இன்று படித்தேன்.........படித்ததே நான் போய் வந்தது போல டயர்டாக இருக்கு..so கொஞ்சம் ரெஸ்ட் இப்போ...........மீதி பின்னுட்டம் நாளை.............
.
.
.
அருமையான கட்டுரை.....கூட போடும் படங்களும் புகை படங்களும் சூப்பர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
இங்கிருந்தே தேயிலை தோட்டங்கள் ஆரம்பித்து விட்டது. தேயிலை தோட்டங்கள் பார்க்க, பார்க்க மனதில் பரவசத்தை ஏற்படுத்தியது.
எங்கு பார்த்தாலும், கண்ணுக்கு எட்டியவரை தேயிலை தோட்டங்களே மலையெங்கும் நிரம்பி வழிந்தது.
பச்சை பசேலென்ற மரகத பச்சை விரிப்பில் விழி மூடாது மனம் அந்த அழகில் லயித்து போயிற்று
எங்கு பார்த்தாலும், கண்ணுக்கு எட்டியவரை தேயிலை தோட்டங்களே மலையெங்கும் நிரம்பி வழிந்தது.
பச்சை பசேலென்ற மரகத பச்சை விரிப்பில் விழி மூடாது மனம் அந்த அழகில் லயித்து போயிற்று
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
வால்பாறை;
கோவை மாவட்டத்தின் ஒரே கோடை வாசஸ்தலமாக உள்ளது வால்பாறை. 7வது சொர்க்கம் என்று மாவட்ட நிர்வாகத்தால் பெயர் சூட்டப்பட்ட வால்பாறையில் அடர்ந்த காடுகள், வானுயர்ந்த மரங்கள், எங்கு பார்த்தாலும் தேயி, காபி தோட்டங்கள், ஆங்காங்கே வெள்ளி கம்பியை நீட்டியது போல் ஒலைடி வரும் அருவிகள், ஆற்று தண்ணீரை சேமிக்கும் பிரமாண்ட அணைகள் என்று வால்பாறை சுற்றுலா ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.
வால்பாறை என்ற ஒரு இடம் இருப்பது 1880ம் ஆண்டு காரல்மார்க்ஸ் என்ற ஆங்கிலேயரால் வெளி உலகுக்கு தெரிய வந்தது.
1920ல் காட்டு பகுதிகளில் வசித்து வந்த ஆதிவாசிகளின் உதவியுடன் புதர் காடுகளை அகற்றி நடை பாதைகள் ரோடுகளாக மாற்றப்பட்டன, மேலும் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு தேயிலை பயிரிடப்பட்டது.
வால்பாறை மலைப்பகுதியில் அரியவகை மூலிகைகளும் ஆட்களே நுழைய முடியாத அடர்ந்த காடுகளும், நீர்வீழ்ச்சிகளும், பள்ளத்தாக்குகள், பசுமை படர்ந்த புல்வெளிகளும் உள்ளது.
இது ஆனைமலை புலிகள் காப்பகமாக வால்பாறைக்கு சேர்க்கிறது. மற்ற மலைவாசல் ஸ்தலங்களைவிடவும் வால்பாறையில் இயற்கை எழில் அமைதியாக கொட்டிக்கிடக்கிறது.
கோவை மாவட்டத்தின் ஒரே கோடை வாசஸ்தலமாக உள்ளது வால்பாறை. 7வது சொர்க்கம் என்று மாவட்ட நிர்வாகத்தால் பெயர் சூட்டப்பட்ட வால்பாறையில் அடர்ந்த காடுகள், வானுயர்ந்த மரங்கள், எங்கு பார்த்தாலும் தேயி, காபி தோட்டங்கள், ஆங்காங்கே வெள்ளி கம்பியை நீட்டியது போல் ஒலைடி வரும் அருவிகள், ஆற்று தண்ணீரை சேமிக்கும் பிரமாண்ட அணைகள் என்று வால்பாறை சுற்றுலா ஸ்தலமாக திகழ்ந்து வருகிறது.
வால்பாறை என்ற ஒரு இடம் இருப்பது 1880ம் ஆண்டு காரல்மார்க்ஸ் என்ற ஆங்கிலேயரால் வெளி உலகுக்கு தெரிய வந்தது.
1920ல் காட்டு பகுதிகளில் வசித்து வந்த ஆதிவாசிகளின் உதவியுடன் புதர் காடுகளை அகற்றி நடை பாதைகள் ரோடுகளாக மாற்றப்பட்டன, மேலும் வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு தேயிலை பயிரிடப்பட்டது.
வால்பாறை மலைப்பகுதியில் அரியவகை மூலிகைகளும் ஆட்களே நுழைய முடியாத அடர்ந்த காடுகளும், நீர்வீழ்ச்சிகளும், பள்ளத்தாக்குகள், பசுமை படர்ந்த புல்வெளிகளும் உள்ளது.
இது ஆனைமலை புலிகள் காப்பகமாக வால்பாறைக்கு சேர்க்கிறது. மற்ற மலைவாசல் ஸ்தலங்களைவிடவும் வால்பாறையில் இயற்கை எழில் அமைதியாக கொட்டிக்கிடக்கிறது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
வால்பாறை நகரத்தை அடைந்து விட்டோம். அன்றிரவு அங்கு தங்குவதாய் திட்டம். ஆனால் எங்கள் துரதிர்ஷ்டம் அடுத்தடுத்து வந்த நான்கு நாட்கள் லீவில் விடுதிகளும் நிரம்பி வழிந்தது. அதனால் எங்களுக்கு அறைகள் ஏதும் கிடைக்கவில்லை.
ஒரு நாள் தங்கி சோலையாறு ஆணை மற்றும் அதிரப்பள்ளி அருவி பார்க்கலாம் என்றிருந்தோம். தங்கும் அறை கிடைக்காததினால், நல்லமுடி பூஞ்சோலை (பள்ளத்தாக்கு) மட்டும் பார்த்துவிட்டு வால்பாறையை விட்டு கிளம்ப முடிவு செய்தோம்.
மணி பத்தரை தான் ஆகியிருந்ததால் நல்லமுடி பார்த்துவிட்டு மதியத்திற்கு மேல் சாப்பிட்டுவிட்டு கீழிறங்க சரியாக இருக்கும் என்று நினைத்து எங்கள் பயணத்தை துவக்கினோம்.
வேறு வானம் இருண்டு கொண்டு வந்தது, இப்பவோ. அப்பவோ மழை மழை பெய்வது போல.
ஒரு நாள் தங்கி சோலையாறு ஆணை மற்றும் அதிரப்பள்ளி அருவி பார்க்கலாம் என்றிருந்தோம். தங்கும் அறை கிடைக்காததினால், நல்லமுடி பூஞ்சோலை (பள்ளத்தாக்கு) மட்டும் பார்த்துவிட்டு வால்பாறையை விட்டு கிளம்ப முடிவு செய்தோம்.
மணி பத்தரை தான் ஆகியிருந்ததால் நல்லமுடி பார்த்துவிட்டு மதியத்திற்கு மேல் சாப்பிட்டுவிட்டு கீழிறங்க சரியாக இருக்கும் என்று நினைத்து எங்கள் பயணத்தை துவக்கினோம்.
வேறு வானம் இருண்டு கொண்டு வந்தது, இப்பவோ. அப்பவோ மழை மழை பெய்வது போல.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
நல்லமுடி வந்துவிட்டது.
வாகனங்களை இங்கேயே நிறுத்திவிட்டு உள்ளே சற்று தொலைவு நடக்கவேண்டுமாம்.
சற்று தொலைவு தானே என்று பார்த்தால்...... அம்மாடியோவ்...! இங்கிருந்து பார்த்தால்.... எனக்கு இப்போதே மூச்சு வாங்கியது.
சேருமிடமே தெரியவில்லை. அதிலும் மிகவும் நெட்டாக இருந்தது. அவ்வளவு தூரம் போகமுடியுமா என்னால் என்று சந்தேகமாய் இருந்தது. ஆனா, வரலன்னு சொன்னா நிச்சயமா விடப்போறதில்ல.... அதனால் எப்படியாவது மெதுவாக உருட்டிக்கொண்டு போய்வந்து விடலாம் என்று முடிவு செய்து அம்மாவையும், மாமனாரையும் மட்டும் இங்கேயே இருக்கச்சொல்லி விட்டு நாங்கள் மூவரும் கிளம்பினோம்.
வாகனங்களை இங்கேயே நிறுத்திவிட்டு உள்ளே சற்று தொலைவு நடக்கவேண்டுமாம்.
சற்று தொலைவு தானே என்று பார்த்தால்...... அம்மாடியோவ்...! இங்கிருந்து பார்த்தால்.... எனக்கு இப்போதே மூச்சு வாங்கியது.
சேருமிடமே தெரியவில்லை. அதிலும் மிகவும் நெட்டாக இருந்தது. அவ்வளவு தூரம் போகமுடியுமா என்னால் என்று சந்தேகமாய் இருந்தது. ஆனா, வரலன்னு சொன்னா நிச்சயமா விடப்போறதில்ல.... அதனால் எப்படியாவது மெதுவாக உருட்டிக்கொண்டு போய்வந்து விடலாம் என்று முடிவு செய்து அம்மாவையும், மாமனாரையும் மட்டும் இங்கேயே இருக்கச்சொல்லி விட்டு நாங்கள் மூவரும் கிளம்பினோம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
ஏற முடியுமா என்று நான் பயந்த அளவிற்கு சிரமமாக இல்லை. பள்ளத்தாக்கு கிட்டத்தில் மட்டும் பாதை உயர்ந்து இருந்ததால் சற்று சிரமமாய் இருந்தது.
இது ஒரு அழகான பள்ளத்தாக்கு. பனி சூழ்ந்திருந்ததால் சற்றே புகை மண்டலமாவே தெரிந்தது. ஆங்காங்கே விழும் அருவிகள் இங்கிருந்து பார்க்க வெள்ளிக்கம்பிகளாய் நீண்டிருந்தது.
அங்கு நிலவிய சீதோஷணம் மற்றும் காட்சி விருந்துகள்..... வார்த்தைகளாய் சொல்லமுடியாது. உடலுக்கும், கண்ணுக்கும் மிக, மிக இதமாக இருந்தது.
மொத்தத்தில் மிக அழகான பிரதேசம்.
கண் குளிர, குளிர ரசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். உடன் வந்தவர்கள் அனைவருமே போய்விட்டார்கள்.
அம்பு குறியிடப்பட்டுள்ள இடம் தான் வாகனங்கள் நிறுத்தியுள்ள இடம்.
அங்கு தான் நாங்கள் செல்லவேண்டும்.
வழியில் ஆங்கங்கு யானைகள் வந்து சென்றதன் அடையாளமாக அதன் எச்சம் மிச்சமிருந்தது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கூட மூன்று குட்டியானைகள் உள்பட பதினொரு யானைகள் இங்கே முகாமிட்டு இருந்ததாம். நியுசில் பார்த்தேன்.
என்னை விட்டு,விட்டு அப்பாவும், பெண்ணும் எவ்வளவு தூரத்தில் போகிறார்கள் பாருங்கள். திடீர்ன்னு யானை, கீணை வந்தால் என் நிலைமை....????? என்னால ஓடக்கூட முடியாது.......
இது ஒரு அழகான பள்ளத்தாக்கு. பனி சூழ்ந்திருந்ததால் சற்றே புகை மண்டலமாவே தெரிந்தது. ஆங்காங்கே விழும் அருவிகள் இங்கிருந்து பார்க்க வெள்ளிக்கம்பிகளாய் நீண்டிருந்தது.
அங்கு நிலவிய சீதோஷணம் மற்றும் காட்சி விருந்துகள்..... வார்த்தைகளாய் சொல்லமுடியாது. உடலுக்கும், கண்ணுக்கும் மிக, மிக இதமாக இருந்தது.
மொத்தத்தில் மிக அழகான பிரதேசம்.
கண் குளிர, குளிர ரசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். உடன் வந்தவர்கள் அனைவருமே போய்விட்டார்கள்.
அம்பு குறியிடப்பட்டுள்ள இடம் தான் வாகனங்கள் நிறுத்தியுள்ள இடம்.
அங்கு தான் நாங்கள் செல்லவேண்டும்.
வழியில் ஆங்கங்கு யானைகள் வந்து சென்றதன் அடையாளமாக அதன் எச்சம் மிச்சமிருந்தது. நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் கூட மூன்று குட்டியானைகள் உள்பட பதினொரு யானைகள் இங்கே முகாமிட்டு இருந்ததாம். நியுசில் பார்த்தேன்.
என்னை விட்டு,விட்டு அப்பாவும், பெண்ணும் எவ்வளவு தூரத்தில் போகிறார்கள் பாருங்கள். திடீர்ன்னு யானை, கீணை வந்தால் என் நிலைமை....????? என்னால ஓடக்கூட முடியாது.......
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
ஒரு வழியாக வாகனங்கள் நிறுத்துமிடம் வந்து சேர்ந்து வால்பாறை நோக்கி கிளம்பினோம்.
அது மதிய உணவு இடைவேளையானதால் வழியில் அங்காங்கே தேயிலை தோட்டத்தொழிலார்கள் உணவருந்திக்கொண்டிருந்தார்கள்.
இடையில் தென்பட்ட சில வித்தியாசமான பெயருடைய ஊர்கள். நல்லகாத்து, ரொட்டிக்கடை போன்றவை.
வால்பாறை வந்தடைந்ததும் மதிய உணவை லக்ஷ்மி செட்டிநாடு ஓட்டலில் முடித்துக்கொண்டு வால்பாறையிலிருந்து கீழிறங்கினோம்.
கொடைக்கானலில் வாங்கிய சோப் வாட்டர் பபுள் வால்பாறையில் பறப்பதை பாருங்கள்.
அது மதிய உணவு இடைவேளையானதால் வழியில் அங்காங்கே தேயிலை தோட்டத்தொழிலார்கள் உணவருந்திக்கொண்டிருந்தார்கள்.
இடையில் தென்பட்ட சில வித்தியாசமான பெயருடைய ஊர்கள். நல்லகாத்து, ரொட்டிக்கடை போன்றவை.
வால்பாறை வந்தடைந்ததும் மதிய உணவை லக்ஷ்மி செட்டிநாடு ஓட்டலில் முடித்துக்கொண்டு வால்பாறையிலிருந்து கீழிறங்கினோம்.
கொடைக்கானலில் வாங்கிய சோப் வாட்டர் பபுள் வால்பாறையில் பறப்பதை பாருங்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
இங்கே சிங்கவால் குரங்குகள் மிக அதிக அளவில் காணப்படுகிறது. அப்படி இருக்கும் இடங்களில் எல்லாம் காட்டிலாக்காவை சேர்ந்தவர்கள் வரும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி, சிங்கவால் குரங்குகளை காட்டுகிறார்கள். இங்கிருக்கும் மொத்த சிங்கவால் குரங்குகளின் எண்ணிக்கையே இரு நூறுகள் தான் இருக்கும் என்கிறார்கள்.
படவுதவி-இணையம்.
நாட்டுக்குரங்கு எங்கு வேண்டுமானலும் வாழும், ஆனால் சிங்கவால் குரங்கு அப்படி இல்லை. அவை வாழ தனித்தன்மை வாய்ந்த மழைகாடுகள் அல்லது சோலைக்காடுகள் தேவை. இங்குதான் ஆண்டு முழுவதும் அவற்றிற்கு தேவையான உணவு கிடைக்கும்.
ஒருகாலத்தில் சிங்கவால் குரங்குகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியெங்கும் பரவி இருந்தன. தோட்டப்பயிர்களுக்காக அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதால் தற்போது மஹராஷ்டிரா மற்றும் கோவா பகுதிகளில் இவை முற்றிலுமாக அற்றுப்போய்விட்டது.
எஞ்சியுள்ள இக்குரங்குகளின் எண்ணிக்கை தோட்டப்பயிர்கள் மற்றும் மனிதர்களால் சூழப்பட்ட காட்டுப்பகுதிகளிலேயே வாழ்கிறது. இச்சிறிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குரங்குகளும் வெகுவாக வேட்டையாடப்படுகின்றன.
மேற்குத்தொடர்ச்சி மலைபகுதிகளைத் தவிர உலகில் வேறெங்கும் இச்சிங்கவால் குரங்குகள் காணப்படுவது இல்லை.
இங்கும் சுமார் 3500 முதல் 4000 சிங்கவால் குரங்குகளே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவை மிகவும் கூச்சசுபாவம் உள்ளவை. சில வேளைகளில் மனிதர்களை கண்ட மாத்திரத்தில் ஓடிச்சென்று விடும்.
தலையைச் சுற்றி பிடரியுடன், சிறிய வாலின் நுனியில் குஞ்சம் போன்ற அமைப்பை வைத்து நீண்ட வாலைக் கொண்ட இதனை இனம் பிரித்து அறியலாம். இதனாலேயெ ஆங்கிலத்தில் Lion-tailed Monkey என்று பெயர். இதன் தமிழாக்கமே சிங்கவால் குரங்கு, ஆனால் இதனை மலைவாழ் மக்கள் சோலைமந்தி என்றழைக்கின்றனர்.
மஞ்சள் வட்டத்திற்குள் இருப்பது சிங்கவால் குரங்கு.
அவை ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்திற்கு செல்ல இடையில் கயிற்று பாலம் பாருங்கள்.
வழியில் தென்பட்ட அழகான இடங்களையெல்லாம் வண்டியை நிறுத்தி, இறங்கி பார்த்துக்கொண்டே வந்தோம்.
படவுதவி-இணையம்.
நாட்டுக்குரங்கு எங்கு வேண்டுமானலும் வாழும், ஆனால் சிங்கவால் குரங்கு அப்படி இல்லை. அவை வாழ தனித்தன்மை வாய்ந்த மழைகாடுகள் அல்லது சோலைக்காடுகள் தேவை. இங்குதான் ஆண்டு முழுவதும் அவற்றிற்கு தேவையான உணவு கிடைக்கும்.
ஒருகாலத்தில் சிங்கவால் குரங்குகள் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியெங்கும் பரவி இருந்தன. தோட்டப்பயிர்களுக்காக அவற்றின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதால் தற்போது மஹராஷ்டிரா மற்றும் கோவா பகுதிகளில் இவை முற்றிலுமாக அற்றுப்போய்விட்டது.
எஞ்சியுள்ள இக்குரங்குகளின் எண்ணிக்கை தோட்டப்பயிர்கள் மற்றும் மனிதர்களால் சூழப்பட்ட காட்டுப்பகுதிகளிலேயே வாழ்கிறது. இச்சிறிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட குரங்குகளும் வெகுவாக வேட்டையாடப்படுகின்றன.
மேற்குத்தொடர்ச்சி மலைபகுதிகளைத் தவிர உலகில் வேறெங்கும் இச்சிங்கவால் குரங்குகள் காணப்படுவது இல்லை.
இங்கும் சுமார் 3500 முதல் 4000 சிங்கவால் குரங்குகளே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இவை மிகவும் கூச்சசுபாவம் உள்ளவை. சில வேளைகளில் மனிதர்களை கண்ட மாத்திரத்தில் ஓடிச்சென்று விடும்.
தலையைச் சுற்றி பிடரியுடன், சிறிய வாலின் நுனியில் குஞ்சம் போன்ற அமைப்பை வைத்து நீண்ட வாலைக் கொண்ட இதனை இனம் பிரித்து அறியலாம். இதனாலேயெ ஆங்கிலத்தில் Lion-tailed Monkey என்று பெயர். இதன் தமிழாக்கமே சிங்கவால் குரங்கு, ஆனால் இதனை மலைவாழ் மக்கள் சோலைமந்தி என்றழைக்கின்றனர்.
மஞ்சள் வட்டத்திற்குள் இருப்பது சிங்கவால் குரங்கு.
அவை ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்திற்கு செல்ல இடையில் கயிற்று பாலம் பாருங்கள்.
வழியில் தென்பட்ட அழகான இடங்களையெல்லாம் வண்டியை நிறுத்தி, இறங்கி பார்த்துக்கொண்டே வந்தோம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
அடுத்து,
குரங்கு அருவி.
வால்பாறை மலையின் துவக்கத்திலேயே இந்த மங்க்கி பால்ஸ் உள்ளது. பெரிய அருவி இல்லையென்றாலும் குளித்து ஆனந்தம் கொள்ளும் அனுபவத்தை தரக்கூடிய வகையில் தான் இருந்தது.
வழியில் இருக்கும் தகவல் பலகைகள் ‘குரங்குகளுக்கு எக்காரணம் கொண்டும் உணவளிக்க கூடாது’ என்று உறுதியாக அறிவுருத்திக்கொண்டு வந்தது.
அங்கே சில படங்கள்.
அங்கே ஒரு தகவல் பலகை என்னை ஈர்த்தது மட்டுமல்லாமல் மனதை கொஞ்சம் சங்கடப்படுத்தவும் செய்தது.
அந்த பலகையில் இருந்த வாசகம் இது தான். குரங்குகளே நம்மிடம் சொல்வது போல.....
“உணவு கொடுத்து என்னை ஊனமாக்காதே!
உன் வாகனத்தின் பின்னே என்னை அலைய விடாதே!!”
குரங்கு அருவி.
வால்பாறை மலையின் துவக்கத்திலேயே இந்த மங்க்கி பால்ஸ் உள்ளது. பெரிய அருவி இல்லையென்றாலும் குளித்து ஆனந்தம் கொள்ளும் அனுபவத்தை தரக்கூடிய வகையில் தான் இருந்தது.
வழியில் இருக்கும் தகவல் பலகைகள் ‘குரங்குகளுக்கு எக்காரணம் கொண்டும் உணவளிக்க கூடாது’ என்று உறுதியாக அறிவுருத்திக்கொண்டு வந்தது.
அங்கே சில படங்கள்.
அங்கே ஒரு தகவல் பலகை என்னை ஈர்த்தது மட்டுமல்லாமல் மனதை கொஞ்சம் சங்கடப்படுத்தவும் செய்தது.
அந்த பலகையில் இருந்த வாசகம் இது தான். குரங்குகளே நம்மிடம் சொல்வது போல.....
“உணவு கொடுத்து என்னை ஊனமாக்காதே!
உன் வாகனத்தின் பின்னே என்னை அலைய விடாதே!!”
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 10 of 12 • 1, 2, 3 ... 9, 10, 11, 12
Similar topics
» கொடைக்கானல் போண்டாதான் இருக்கு!
» கோடை விழாவுக்கு தயாராகிறது கொடைக்கானல்
» யானைகள் அட்டகாசத்தால் கொடைக்கானல் விவசாயிகள் பாதிப்பு
» கொடைக்கானல் - யுனிலீவர் பாதரசம் கழிவு - பாதிப்பு
» கொடைக்கானல் பங்களாவில் புதைக்கப்பட்ட சடலம் தோண்டி எடுப்பு
» கோடை விழாவுக்கு தயாராகிறது கொடைக்கானல்
» யானைகள் அட்டகாசத்தால் கொடைக்கானல் விவசாயிகள் பாதிப்பு
» கொடைக்கானல் - யுனிலீவர் பாதரசம் கழிவு - பாதிப்பு
» கொடைக்கானல் பங்களாவில் புதைக்கப்பட்ட சடலம் தோண்டி எடுப்பு
Page 10 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|