Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொடைக்கானல் வரை....!
+9
K.Senthil kumar
ayyasamy ram
M.Jagadeesan
பழ.முத்துராமலிங்கம்
ayyamperumal
ஜாஹீதாபானு
ராஜா
Hari Prasath
விமந்தனி
13 posters
Page 4 of 12
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
கொடைக்கானல் வரை....!
First topic message reminder :
அன்பான உறவுகளுக்கு வணக்கம்!
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
உங்களுக்காக –
இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை!
‘பழனி – கொடைக்கானல்’ சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
ஆனால்.......
நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது.
என் பார்வையில், இந்த இனிய பயண அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும் ஒரு அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. மறுமுறை பயணிக்கும் அனுபவம் போல...........
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
மலையின் உச்சி வருவதற்குள், இயற்கை வரைந்த இந்த ஓவியத்தின் வரலாறு நீங்கள் அறிந்தது என்றாலும், என் வாயிலாக சில விவரங்கள்......
(இந்த படம் 2007 - செப்டம்பரில் சென்ற போது எடுத்தது. இந்த முறை இங்கு போகவில்லை)
பொதுவாக இந்த மலைக் கூட்டங்களை பழனி மலைகள் என்று அழைப்பார்கள். தமிழ்நாட்டில் மலைகளின் இளவரசியாக உள்ள கோடை வாசத்தலம் கொடைக்கானல் ஆகும்
கொடைக்கானல் மலையில் முதலில் குடியேறியவர்கள் பலையர் பழங்குடி மக்கள். இந்த இடம் கிறிஸ்துவ காலத்து இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள், லெப்டினென்டு பி.எஸ்.வார்ட் கட்டுப்பாட்டில், இங்கு முதன் முதலில் அடியெடுத்து வைத்தது 1821-ஆம் வருடம்.
அவர் இப்பகுதியை நில ஆய்வு செய்து, இந்தியாவில் அரசுப் பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என கருதி, 1845இல் இங்கு பங்களாக்கள் அமைத்தார். அவர்களால் இந்நகரம் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர்.
பின்னர் 20-ஆம் நூற்றாண்டில் படிப்படியாக 1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது. பல இந்திய பிரஜைகள் இங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் அனுபவித்து வந்த கோடை வாசத்தலம் தற்போது அனைவரும் சென்று வரும் சுற்றுலா இடமாக மாறியுள்ளது.
கொடைக்கானல் மலையில் முதலில் குடியேறியவர்கள் பலையர் பழங்குடி மக்கள். இந்த இடம் கிறிஸ்துவ காலத்து இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள், லெப்டினென்டு பி.எஸ்.வார்ட் கட்டுப்பாட்டில், இங்கு முதன் முதலில் அடியெடுத்து வைத்தது 1821-ஆம் வருடம்.
அவர் இப்பகுதியை நில ஆய்வு செய்து, இந்தியாவில் அரசுப் பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என கருதி, 1845இல் இங்கு பங்களாக்கள் அமைத்தார். அவர்களால் இந்நகரம் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டது. போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர்.
பின்னர் 20-ஆம் நூற்றாண்டில் படிப்படியாக 1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது. பல இந்திய பிரஜைகள் இங்கு குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் அனுபவித்து வந்த கோடை வாசத்தலம் தற்போது அனைவரும் சென்று வரும் சுற்றுலா இடமாக மாறியுள்ளது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
வழியில் பழநி வியு பார்க்கும் இடம் வந்தது. இறங்கி பார்த்தோம். பனியின் அக்ரமிப்பால் ஒன்றும் தெரியவில்லை.
வழியில் குட்டி, குட்டி நீர்வீழ்ச்சிகள் எங்களை கடந்து சென்றது.
வழியெங்கும் மரம், செடி, கொடிகள், பூக்கள் என சமீபத்திய மழையினாலும் பனியினாலும் கழுவி விட்டது போல் கண்ணுக்கு பளிச் என்றிருந்தது.
ஆச்சு.... கொடைக்கானல் வந்தாச்சு.... வெகு அமர்க்களமாய் சில்வர் பால்ஸ் வரவேற்பு கொடுத்தது.
சில்வர் பால்ஸ் நீர்வீழ்ச்சி:
சுற்றுலா பயணிகளை முதன்மையாக கவரும் தன்மையுடையது. இந்த சில்வர் பால்ஸ் 180 அடி உயரத்திலிருந்து வேகமாக வரும் இத்தண்ணீர் அடுக்கடுக்கான பாறைகளில் பட்டு கொட்டுவதைப் பார்க்கும் எவரையும் கவர்ந்து இழுத்துவிடும். கண்ணாடிப்போல் தெள்ள தெளிவாக தெரியும் இந்நீரில் பல வகையான கனிமங்கள் கலந்துள்ளது.
கொடைக்கானல் ஏரியிலிருக்கும் அதிகப்படியான நீர் கீழ் நோக்கி பாய்ந்து வந்து அருவியாக கொட்டுகிறது.கொடைகானலிலிருந்து 8 கீ.மி தொலைவில் உள்ளது.
இந்தசில்வர் பால்ஸ் அருவியில் குளித்தால் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இயற்கை அழகை ரசிப்பவர் எவராயினும் இங்கே மணிகணக்கில் உட்கார்ந்து பார்த்து பரவசம் அடையாமல் செல்லமாட்டார்கள்.
நாங்களும், மணிக்கணக்கில் உட்காரவில்லை என்றாலும் சற்று நேரம் அதன் அழகில் லயித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
சுற்றுலா பயணிகளை முதன்மையாக கவரும் தன்மையுடையது. இந்த சில்வர் பால்ஸ் 180 அடி உயரத்திலிருந்து வேகமாக வரும் இத்தண்ணீர் அடுக்கடுக்கான பாறைகளில் பட்டு கொட்டுவதைப் பார்க்கும் எவரையும் கவர்ந்து இழுத்துவிடும். கண்ணாடிப்போல் தெள்ள தெளிவாக தெரியும் இந்நீரில் பல வகையான கனிமங்கள் கலந்துள்ளது.
கொடைக்கானல் ஏரியிலிருக்கும் அதிகப்படியான நீர் கீழ் நோக்கி பாய்ந்து வந்து அருவியாக கொட்டுகிறது.கொடைகானலிலிருந்து 8 கீ.மி தொலைவில் உள்ளது.
இந்தசில்வர் பால்ஸ் அருவியில் குளித்தால் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். இயற்கை அழகை ரசிப்பவர் எவராயினும் இங்கே மணிகணக்கில் உட்கார்ந்து பார்த்து பரவசம் அடையாமல் செல்லமாட்டார்கள்.
நாங்களும், மணிக்கணக்கில் உட்காரவில்லை என்றாலும் சற்று நேரம் அதன் அழகில் லயித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
அடுத்து குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு கிளம்பினோம்.
குறிஞ்சி ஆண்டவருக்கு ஒரு அர்ச்சனையுடன், இங்கும் முருகனை ராஜ அலங்காரத்துடனே தரிசித்தோம்.
குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் இருந்து மலையின் தோற்றம்.
‘குறிஞ்சி மலர்‘ மலர்களிலேயே தனிச்சிறப்பு பெற்றது. குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றனவாம். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூத்துக் குலுங்கும் தனிச் சிறப்பைப் பெற்ற மலரின் பெயரையே தன்னோடு கொண்டு, முருகப்பெருமான் அருள்பாலிக்கும் திருக்கோயிலே குறிஞ்சி ஆண்டவர் கோயில்.
குறிஞ்சிமலர் பூத்துக்குலுங்கும் பருவத்தில், அந்த மலர்களைக் கொண்டே குறிஞ்சி ஆண்டவருக்கு செய்யப்படும் அலங்காரம் கண்கொள்ளாக் காட்சி ஆகும். அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்று பெயர் எற்பட்டதாம்.
குறிஞ்சிமலர் பூத்துக்குலுங்கும் பருவத்தில், அந்த மலர்களைக் கொண்டே குறிஞ்சி ஆண்டவருக்கு செய்யப்படும் அலங்காரம் கண்கொள்ளாக் காட்சி ஆகும். அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்று பெயர் எற்பட்டதாம்.
கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்ததாக தகவல். ஆக, இன்னும் அடுத்த மூன்று வருடங்களில் மறுபடியும் வரணும் குறிஞ்சிப்பூவை பார்க்க. நான் குறிஞ்சிப்பூவை பார்த்ததில்லை. எப்படியாவது பார்த்துவிடனும்.
குறிஞ்சி ஆண்டவருக்கு ஒரு அர்ச்சனையுடன், இங்கும் முருகனை ராஜ அலங்காரத்துடனே தரிசித்தோம்.
குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் இருந்து மலையின் தோற்றம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
அடுத்தது...?
படகு சவாரி தான்....!
படகு சவாரி தான்....!
படகு சவாரி என்பதே ஒரு சுகானுபவம் தான். அதையும் கொஞ்சநேரம் அனுபவித்து விட்டு, விமந்தனி ஆசை பட்டு கேட்ட, ஏரியில் மலர்ந்திருந்த அல்லி மலர்களுடன் எங்கள் படகு சவாரி முடிந்தது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
அதற்குள் மதிய உணவு வேளை வந்து விட்டது. எந்த நேரமும் மழை வந்துவிடும் போல் இருந்தது. இன்னும் பிரையன்ட் பூங்கா பார்த்துவிட்டு மழை வருவதற்குள்ளும், இருட்டுவதற்குள்ளும் கீழிறங்க வேண்டும்.
எனவே, அங்கு இருந்த சிறு உணவு விடுதிகள் ஒன்றில் எங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டு பூங்காவிற்கு கிளம்பினோம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
இந்த பிரையன்ட் பூங்கா நன்று பராமரிக்கப்பட்டு வரும் தாவரப் பூங்காவாகும்.
இந்த பூங்காவை திட்டமிட்டு 1908-ல் கட்டிமுடித்த எச்.டி. பிரையண்ட் என்ற காட்டிலாகா அதிகாரியின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது. 1857-லிருந்து இங்கு ஒரு யூக்கலிப்டஸ் மரம் ஒன்றும் உள்ளது.
நான் ரசித்த சில அழகான ரோஜாக்கள் உங்கள் பார்வைக்கு.
ஊப்ஸ்....! காமிரா நின்று விட்டது. உடன் வர மறுக்கிறது. சார்ஜ் காலி.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
ஹும்..... போன் காமிரா வைத்து மானேஜ் செய்யவேண்டியது தான்.
அடுத்து கண்ணாடி மாளிகையுனுள்ளே சில காட்சி விருந்து.
கண்ணாடி மாளிகையின் உள்ளே லிங்க வடிவில் ஒரு செடியும், அதன் நேர் எதிரே நந்தியாரும் பாருங்கள்.
இந்த பூவை பாருங்கள் பிளாஸ்டிக் பூவோ என்று ஒரு கணம் அய்யம் கொள்ள வைக்கிறது.
மேலும் சில படங்கள்....
அதற்குள் மழையும் தூர ஆரம்பித்து விட்டது. அதனால் நாங்களும் கிளம்பியாச்சு....
விடுதிக்கு வந்து சேர்ந்தும் ஆச்சு.
அடுத்து கண்ணாடி மாளிகையுனுள்ளே சில காட்சி விருந்து.
கண்ணாடி மாளிகையின் உள்ளே லிங்க வடிவில் ஒரு செடியும், அதன் நேர் எதிரே நந்தியாரும் பாருங்கள்.
இந்த பூவை பாருங்கள் பிளாஸ்டிக் பூவோ என்று ஒரு கணம் அய்யம் கொள்ள வைக்கிறது.
இதோ இது தான் கிருஷ்ணர் இந்திரலோகத்தில் இருந்து பாமாவுக்கு கொண்டுவந்து கொடுத்த பாரிஜாத மலர் செடி...
மேலும் சில படங்கள்....
அதற்குள் மழையும் தூர ஆரம்பித்து விட்டது. அதனால் நாங்களும் கிளம்பியாச்சு....
விடுதிக்கு வந்து சேர்ந்தும் ஆச்சு.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: கொடைக்கானல் வரை....!
ஆஹா !
அக்டோபர் 24 இல் எழுதிய படி , வராமல் வந்து , பார்க்காமல் அவசரமாகப் பார்த்து , அரைகுறை பார்வையால் ,
ஒரு நன்மை . இப்போதுதான் 2 நாட்களாக ஈகரையில் மும்முரம் . (வீட்டில் முணுமுணுப்பும் ஆரம்பம் ).
என்ன நன்மையா ?
முழுமையாக ஒரு விளக்கமாக , கொஞ்சும் இயற்கை அழகை ,மிஞ்சும் வகையில் ஒரு சுற்றுலா பதிவை
,இடை விடாது , மூச்சு விடாமல் படித்து அடைந்த சுகம் , கோக்கர்ஸ் வாக்கில் நடந்த மாதிரியும் ,
சில்வர் cascade சாரலில் நனைந்த மாதிரியும் இருந்தது . இல்லை என்றால் , நீங்கள் விட்டு விட்டு பதிவிட
ஒரே சஸ்பென்சில் , என்னம்மா இப்பிடி பண்ணறீங்களே அம்மா , என்று கதறி இருப்பேன் .
இந்த அருமையான குளு குளு கட்டுரை படித்து எந்தன் கோடை அனுபவங்களை ஆசைப் போட்டேன் .,
கோடைக்கு இரு வழிகள் உண்டு .என நினைக்கிறேன் .
திண்டுக்கல் வழி .
பழனி வழி -சத்திய மங்கலத்தில் இருந்து கிளம்பி , பழனி / கோடை .
கசவனம் சித்தர் நிகழ்ச்சி , புல்லரிக்க வைத்தது .
ஈகரை சுற்றுலா மந்திரியே ! மேலும் மேலும் பற்பல ஸ்தலங்கள் சென்று ,
பரவசப்படுத்தவும் .
ஈகரை பதிவர் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு பண்ணலாமே
ரமணியன் -
அக்டோபர் 24 இல் எழுதிய படி , வராமல் வந்து , பார்க்காமல் அவசரமாகப் பார்த்து , அரைகுறை பார்வையால் ,
ஒரு நன்மை . இப்போதுதான் 2 நாட்களாக ஈகரையில் மும்முரம் . (வீட்டில் முணுமுணுப்பும் ஆரம்பம் ).
என்ன நன்மையா ?
முழுமையாக ஒரு விளக்கமாக , கொஞ்சும் இயற்கை அழகை ,மிஞ்சும் வகையில் ஒரு சுற்றுலா பதிவை
,இடை விடாது , மூச்சு விடாமல் படித்து அடைந்த சுகம் , கோக்கர்ஸ் வாக்கில் நடந்த மாதிரியும் ,
சில்வர் cascade சாரலில் நனைந்த மாதிரியும் இருந்தது . இல்லை என்றால் , நீங்கள் விட்டு விட்டு பதிவிட
ஒரே சஸ்பென்சில் , என்னம்மா இப்பிடி பண்ணறீங்களே அம்மா , என்று கதறி இருப்பேன் .
இந்த அருமையான குளு குளு கட்டுரை படித்து எந்தன் கோடை அனுபவங்களை ஆசைப் போட்டேன் .,
கோடைக்கு இரு வழிகள் உண்டு .என நினைக்கிறேன் .
திண்டுக்கல் வழி .
பழனி வழி -சத்திய மங்கலத்தில் இருந்து கிளம்பி , பழனி / கோடை .
கசவனம் சித்தர் நிகழ்ச்சி , புல்லரிக்க வைத்தது .
ஈகரை சுற்றுலா மந்திரியே ! மேலும் மேலும் பற்பல ஸ்தலங்கள் சென்று ,
பரவசப்படுத்தவும் .
ஈகரை பதிவர் சுற்றுலா ஒன்றை ஏற்பாடு பண்ணலாமே
ரமணியன் -
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010
Re: கொடைக்கானல் வரை....!
அருமையான கட்டுரை அக்கா .... சிறந்த எழுத்தாளர் என்பதை நிறுபிச்சிட்டிங்க ... ஆனா ஏன் ஒளிஞ்சிட்டுருக்கிங்கனு தெரியல ....
உங்கள் பயணக் கட்டுரை பற்றி நேத்து தான் நினைத்தேன் . அக்கா இன்னும் எழுதி முடிக்கலயானு? இங்க வந்து பார்த்தா முதலில் இது தான் கண்ணில் பட்டது...
படிக்க படிக்க நானும் உங்க பக்கத்துல உட்கார்ந்து வருவது போல உணர்வு வருது....
இன்னும் இருக்கா இல்லை முற்றுமா?
உங்கள் பயணக் கட்டுரை பற்றி நேத்து தான் நினைத்தேன் . அக்கா இன்னும் எழுதி முடிக்கலயானு? இங்க வந்து பார்த்தா முதலில் இது தான் கண்ணில் பட்டது...
படிக்க படிக்க நானும் உங்க பக்கத்துல உட்கார்ந்து வருவது போல உணர்வு வருது....
இன்னும் இருக்கா இல்லை முற்றுமா?
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 4 of 12 • 1, 2, 3, 4, 5 ... 10, 11, 12
Similar topics
» கொடைக்கானல் போண்டாதான் இருக்கு!
» கோடை விழாவுக்கு தயாராகிறது கொடைக்கானல்
» யானைகள் அட்டகாசத்தால் கொடைக்கானல் விவசாயிகள் பாதிப்பு
» கொடைக்கானல் - யுனிலீவர் பாதரசம் கழிவு - பாதிப்பு
» கொடைக்கானல் அழகை ரசிக்க ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகம்
» கோடை விழாவுக்கு தயாராகிறது கொடைக்கானல்
» யானைகள் அட்டகாசத்தால் கொடைக்கானல் விவசாயிகள் பாதிப்பு
» கொடைக்கானல் - யுனிலீவர் பாதரசம் கழிவு - பாதிப்பு
» கொடைக்கானல் அழகை ரசிக்க ஹெலிகாப்டர் சுற்றுலா அறிமுகம்
Page 4 of 12
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|