புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
10 Posts - 6%
prajai
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
21 Posts - 5%
prajai
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
குறி - சிற்றிதழ் !  I_vote_lcapகுறி - சிற்றிதழ் !  I_voting_barகுறி - சிற்றிதழ் !  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறி - சிற்றிதழ் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Tue Nov 10, 2015 3:55 pm

தமிழ் கூறும் நல்லுலகில் சிற்றிதழ்களுக்கான களம் இன்னமும் ஆக்கமுடன் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. மிகுந்த சிரமங்களுக்கிடையே தான் ஒவ்வொரு சிற்றிதழின் இதழும் வெளிவருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி 'எனும் சிற்றிதழின் நிலையும் அதுவே. ஆனால் ஒவ்வொரு இதழும் அதற்கான பக்கங்களைத் தேடிக்கொள்கின்றன. சற்றும் பரிச்சயமில்லாத விசயங்களை வெளிக்கொண்டு வருவதே சிற்றதழ்களின் ஆகப்பெரும் பணியாக இருக்கிறது. வாசித்தவரையில் குறி இதழ்களில் குறைந்தபட்சம் ஒரு விசயமாவது பரிச்சயமில்லாததாக இருக்கும். இந்த வகையில் சிற்றிதழ்களுக்கு நமது தொடர்ந்த ஆதரவு தேவைப்படுகிறது.

சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு இதழ் குறித்த ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்களும் ,பொருளாதார வளமும் தான் முக்கியமானதாக இருக்கின்றன . மிகுந்த நெருக்கடிக்கிடையே கொண்டு வரப்பட்ட இதழானது எந்த அளவிற்கு சென்று சேர்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமல் அடுத்த இதழைக் கொண்டு வருவது மிகவும் சிரமம். எந்தக் கலைப்படைப்பாக இருந்தாலும் விமர்சனமும் மக்களின் ஆதரவும் கண்டிப்பாகத் தேவை. இதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு பொருளாதாரமும் முக்கியமான தேவையாக இருக்கிறது.சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கும் , இடையில் நின்று போவதற்கும் இந்த இரண்டு காரணங்கள் தான் முக்கியமானதாக இருக்கக்கூடும். வேறு காரணங்களும் இருக்கலாம்.

குறி சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதா ,வேண்டாமா என்ற குழப்பமான தயக்கத்திலேயே இதழாசிரியர், மணிகண்டன் இருக்கிறார். இதற்கு அவர் குறிப்பிடும் முதல் காரணம் , முன்பு கொண்டுவந்த இதழ் பற்றிய பின்னூட்டம் கிடைக்கப் பெறாததே." போதிய ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் குறி இதழ் தொடர்ச்சியாக வெளிவருவதற்கு முயற்சி செய்வேன் " என்று குறிப்பிட்டார் .
ஒவ்வொரு இதழும் குறிப்பிட்ட விசயங்களை மட்டும் முன்னிலைப் படுத்தாமல் ஒரு கலவையாகவே இருக்கிறது .' எந்த ஒரு எழுத்தும் அதற்கான இடத்தைத் தேடிக் கொள்ளும் ' என்று சொல்வார்கள் . குறி சிற்றிதழில் வெளிவந்த படைப்புகள் அவ்வாறாக இடத்தைத் தேடிக் கொண்டவை தான். இதன்படி குறி சிற்றிதழும் அதற்கான இடத்தைத் தேடிக் கொள்ளும் நமது ஆதரவு இருந்தால் .

குறி சிற்றிதழ் 11 வது இதழ் பற்றி ஒரு பார்வை :

இந்த இதழிலும் பெண்ணியம் ,LGBT , சாதிய எதிர்ப்பு , இயற்கை , நவீனம் ,கவிதைகள் என்று கலவையான விசயங்கள் இடம் பெற்றுள்ளன . மற்ற இதழ்களில் இல்லாத சுதந்திரம் சிற்றிதழ்களில் இருப்பதை மறுக்க முடியாது . அதனால் தான் மற்ற இதழ்களில் வெளியிட இன்னும் தயங்கும் LGBT வகைமையச் சேர்ந்த படைப்புகளை இரண்டாவது முறையாக குறி வெளியிட்டுள்ளது . இதழ் 10 ல் அபிலாஷ் எழுதிய சிறுகதை ஒன்று வெளிவந்தது . இதழ் 11 ல் ஆர்த்தி வேந்தன் எழுதிய கட்டுரை வெளிவந்திருக்கிறது .' இந்தியாவின் பிரிடா காலோ ' என்ற தலைப்பில் அம்ரித்தா ஷெர் கில் பற்றி எழுதிய கட்டுரையிது . குறைந்த வயதில் இம்மண்ணை விட்டு மறைந்த ஒரு தனித்த படைப்பாளியின் வரலாறு அது .

செ.லிட்டில் பிளவர் என்பவர் , 'ஆண்டாள் பிரியதர்ஷினியின் பெண்கள் ' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் . ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதி வெளியிட்ட 'வேடிக்கை மனிதர்கள்' என்ற தொகுப்பில் உள்ள மூன்று கதைகளில் இடம்பெற்ற பெண்களைப் பற்றி விவாதித்து இருக்கிறார் .

புலியூர் முருகேசன், ' கருந்துளையின் இரண்டு வழிகள்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் . புனைவின் வழியே சாதிய கொடுமைகளை பதிவு செய்திருக்கிறார் .

ச.முகமது அலி , 'இயற்கை வழிபாடு' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் . ' இயற்கை விவசாயம் ' என்ற வார்த்தையில் உள்ள முரண் பற்றி பதிவு செய்திருக்கிறார் . இயல்பாக தானாக நடப்பது தானே இயற்கை . விவசாயம் என்பதே இயற்கைக்கு எதிரானது தானே . அப்படி இருக்கும் போது இயற்கை விவசாயம் என்பது முரண் தானே . அதை கேள்வி கேட்டிருக்கிறார் . மாற்று கருத்துகள் இருந்தாலும் தற்போது விவாதிக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது .

அசோக் எழுதியிருக்கும் ' மீரா ' எனும் சிறுகதை நவீன வாழ்வின் ஒரு பகுதியைப் பதிவு செய்திருக்கிறது . சுவாரசியமான சிறுகதை .

இந்த இதழில் பல கவிதைகள் உள்ளன . கவிதைகள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாததால் அவற்றை விட்டுவிட்டேன்.

தொடர்புக்கு :

குறி சிற்றிதழ் ,
SBK வளாகம் ,
சந்தை சாலை ,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

இதழாசிரியர் மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Nov 10, 2015 4:12 pm

குறி - சிற்றிதழ் !  1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 4:35 pm

seltoday wrote:தமிழ் கூறும் நல்லுலகில் சிற்றிதழ்களுக்கான களம் இன்னமும் ஆக்கமுடன் இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. மிகுந்த சிரமங்களுக்கிடையே தான் ஒவ்வொரு சிற்றிதழின் இதழும் வெளிவருகிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி 'எனும் சிற்றிதழின் நிலையும் அதுவே. ஆனால் ஒவ்வொரு இதழும் அதற்கான பக்கங்களைத் தேடிக்கொள்கின்றன. சற்றும் பரிச்சயமில்லாத விசயங்களை வெளிக்கொண்டு வருவதே சிற்றதழ்களின் ஆகப்பெரும் பணியாக இருக்கிறது. வாசித்தவரையில் குறி இதழ்களில் குறைந்தபட்சம் ஒரு விசயமாவது பரிச்சயமில்லாததாக இருக்கும். இந்த வகையில் சிற்றிதழ்களுக்கு நமது தொடர்ந்த ஆதரவு தேவைப்படுகிறது.

சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு இதழ் குறித்த ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்களும் ,பொருளாதார வளமும் தான் முக்கியமானதாக இருக்கின்றன . மிகுந்த நெருக்கடிக்கிடையே கொண்டு வரப்பட்ட இதழானது எந்த அளவிற்கு சென்று சேர்ந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளாமல் அடுத்த இதழைக் கொண்டு வருவது மிகவும் சிரமம். எந்தக் கலைப்படைப்பாக இருந்தாலும் விமர்சனமும் மக்களின் ஆதரவும் கண்டிப்பாகத் தேவை. இதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு பொருளாதாரமும் முக்கியமான தேவையாக இருக்கிறது.சிற்றிதழ்கள் தொடர்ந்து வெளிவருவதற்கும் , இடையில் நின்று போவதற்கும் இந்த இரண்டு காரணங்கள் தான் முக்கியமானதாக இருக்கக்கூடும். வேறு காரணங்களும் இருக்கலாம்.

குறி சிற்றிதழைத் தொடர்ந்து நடத்துவதா ,வேண்டாமா என்ற குழப்பமான தயக்கத்திலேயே இதழாசிரியர், மணிகண்டன் இருக்கிறார். இதற்கு அவர் குறிப்பிடும் முதல் காரணம் , முன்பு கொண்டுவந்த இதழ் பற்றிய பின்னூட்டம் கிடைக்கப் பெறாததே." போதிய ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் குறி இதழ் தொடர்ச்சியாக வெளிவருவதற்கு முயற்சி செய்வேன் " என்று குறிப்பிட்டார் .
ஒவ்வொரு இதழும் குறிப்பிட்ட விசயங்களை மட்டும் முன்னிலைப் படுத்தாமல் ஒரு கலவையாகவே இருக்கிறது .' எந்த ஒரு எழுத்தும் அதற்கான இடத்தைத் தேடிக் கொள்ளும் ' என்று சொல்வார்கள் . குறி சிற்றிதழில் வெளிவந்த படைப்புகள் அவ்வாறாக இடத்தைத் தேடிக் கொண்டவை தான். இதன்படி குறி சிற்றிதழும் அதற்கான இடத்தைத் தேடிக் கொள்ளும் நமது ஆதரவு இருந்தால் .

குறி சிற்றிதழ் 11 வது இதழ் பற்றி ஒரு பார்வை :

இந்த இதழிலும் பெண்ணியம் ,LGBT , சாதிய எதிர்ப்பு , இயற்கை , நவீனம் ,கவிதைகள் என்று கலவையான விசயங்கள் இடம் பெற்றுள்ளன . மற்ற இதழ்களில் இல்லாத சுதந்திரம் சிற்றிதழ்களில் இருப்பதை மறுக்க முடியாது . அதனால் தான் மற்ற இதழ்களில் வெளியிட இன்னும் தயங்கும் LGBT வகைமையச் சேர்ந்த படைப்புகளை இரண்டாவது முறையாக குறி வெளியிட்டுள்ளது . இதழ் 10 ல் அபிலாஷ் எழுதிய சிறுகதை ஒன்று வெளிவந்தது . இதழ் 11 ல் ஆர்த்தி வேந்தன் எழுதிய கட்டுரை வெளிவந்திருக்கிறது .' இந்தியாவின் பிரிடா காலோ ' என்ற தலைப்பில் அம்ரித்தா ஷெர் கில் பற்றி எழுதிய கட்டுரையிது . குறைந்த வயதில் இம்மண்ணை விட்டு மறைந்த ஒரு தனித்த படைப்பாளியின் வரலாறு அது .

செ.லிட்டில் பிளவர் என்பவர் , 'ஆண்டாள் பிரியதர்ஷினியின் பெண்கள் ' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் . ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதி வெளியிட்ட 'வேடிக்கை மனிதர்கள்' என்ற தொகுப்பில் உள்ள மூன்று கதைகளில் இடம்பெற்ற பெண்களைப் பற்றி விவாதித்து இருக்கிறார் .

புலியூர் முருகேசன், ' கருந்துளையின் இரண்டு வழிகள்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் . புனைவின் வழியே சாதிய கொடுமைகளை பதிவு செய்திருக்கிறார் .

ச.முகமது அலி , 'இயற்கை வழிபாடு' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் . ' இயற்கை விவசாயம் ' என்ற வார்த்தையில் உள்ள முரண் பற்றி பதிவு செய்திருக்கிறார் . இயல்பாக தானாக நடப்பது தானே இயற்கை . விவசாயம் என்பதே இயற்கைக்கு எதிரானது தானே . அப்படி இருக்கும் போது இயற்கை விவசாயம் என்பது முரண் தானே . அதை கேள்வி கேட்டிருக்கிறார் . மாற்று கருத்துகள் இருந்தாலும் தற்போது விவாதிக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது .

அசோக் எழுதியிருக்கும் ' மீரா ' எனும் சிறுகதை நவீன வாழ்வின் ஒரு பகுதியைப் பதிவு செய்திருக்கிறது . சுவாரசியமான சிறுகதை .

இந்த இதழில் பல கவிதைகள் உள்ளன . கவிதைகள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாததால் அவற்றை விட்டுவிட்டேன்.

தொடர்புக்கு :

குறி சிற்றிதழ் ,
SBK வளாகம் ,
சந்தை சாலை ,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

இதழாசிரியர் மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1173998
இந்த சிற்றிதழ் வளர்ச்சியடைய வாழ்ந்துகிறேன் தங்களின் பதிவுக்கு நன்றி.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 10, 2015 7:31 pm

இந்த இதழில் வந்த கவிதைகளில் ஒன்று..
--
1.விசித்திரி

நதியின் மேல் விழுகின்ற
மழைத்துளிகள் பருகி வளர்ந்த
அச்செடி
தன் விசித்திர பெயரின் அர்த்தங்களை
யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை.
-
நதியில் நீராடும் பேரானந்த கணங்களிலும்
தன் மேல் வந்தமரும் நீர்ப்பறவைகளுடனான
உரையாடலின்போதும் புதிர் நிரம்பிய
பெயரின் காரணத்தை மறைத்துக்கொண்டது.
-
அனல் நிறைந்த கடுங்கோடையொன்றில்
மீன்களின் பசிக்கு உணவாகியபோது
அதன் விசித்திர பெயரும் உணவுடன்
கலந்து கரைந்தது.
-
நதிக்கரையில் ஒதுங்கிய மீன்களை
பொறுக்கி சென்றவள்
மறுநாளின் அதிகாலையில்
தன் பெயர் விசித்திரி என்றாள்
உடலெங்கும் வளர்ந்த புதர்ச்செடியுடன்.
-
------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 10, 2015 7:34 pm

2.மழையில் நனையும் வயலின்

சொட்ட சொட்ட நனைந்தபடி
இசையால் ஓவியங்கள்
வரைந்துகொண்டிருந்தான் அவன்.
-
இசைக்கம்பிகளில் நகர்ந்து வரும்
துளியொன்றை அசைவின்றி
பார்க்கிறாள் யுவதியொருத்தி.
-
மெல்ல அருகில் வருமவள்
தன் சிறுவிரல் நகத்தில் வயலின் சிந்தும்
துளியை பெற்றுக்கொள்கிறாள்.
கண்கள் திறந்தவனின் முன்பு
துளியுடன் நிற்கிறாள்.
-
மீண்டும் இசைக்கிறான்
வயலினாக அவளும் துளியாக
அவனும் பிணைந்து இசையாகிறார்கள்.
பழுதடைந்த அந்த வயோதிக வயலின்
யாருமின்றி இசைத்துக்கொண்டே இருக்கிறது
இதைப்போன்று ஆயிரம் கதைகளை.
-
----------------------------------

-நிலாரசிகன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக