புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:17 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:09 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 2:30 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Mon Jul 15, 2024 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Mon Jul 15, 2024 4:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
44 Posts - 47%
heezulia
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
29 Posts - 31%
Dr.S.Soundarapandian
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
4 Posts - 4%
kavithasankar
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
prajai
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Rutu
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
raajmithun
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
232 Posts - 43%
heezulia
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
217 Posts - 40%
Dr.S.Soundarapandian
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
24 Posts - 4%
i6appar
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
16 Posts - 3%
T.N.Balasubramanian
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
13 Posts - 2%
Anthony raj
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
13 Posts - 2%
prajai
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
6 Posts - 1%
kavithasankar
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_m10தீபாவளி கொண்டாடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி கொண்டாடுவது எப்படி?


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 08, 2015 8:26 am

தீபாவளி கொண்டாடுவது எப்படி? IrvwkmHxS4inlQDTSjIO+diwali

தீ + ஆவளி = தீபாவளி.

தீ என்பது தீபம்; ஆவளி என்றால் வரிசை. நாமாவளி என்பது நாமங்களின் வரிசை என்பது போல தீபாவளி என்றது தீபங்களின் வரிசையைக் குறிக்கும். இத் தீப வழிபாடு சிவ விரதங்கள் எட்டில் ஒன்று.

உலகமெல்லாம் ஒடுங்கும் லய நிலையில் பிரளயத்தில் என்ன ஆகிறது தெரியுமா? அரைப்பக்குவத்தில் அல்லது முக்கால் பக்குவத்தில் உள்ள உயிர்களை சிவபெருமான் தூசுத் தட்டி அப்படியே தன் திருவடியில் சேர்த்து முடிந்த முத்தியைக் கொடுத்து விடுவான். அவர்களுக்குத்தான் பிரளயாகலர் என்று பெயர். பிரளய காலத்தில் இரு மலங்களின் கட்டுக்களில் இருந்து நீக்கப்படுபவர்கள் என்பது அதன் பொருள். அவர்கள் ஏற்கனவே மாயா மலக்கட்டுகளிலிருந்து நீங்கியவர்களாக பக்குவம் ஏறி இருப்பார்கள்.

ஆகவே பிரளயத்தில் பல உயிர்கள் முத்தி அடைகின்றன. அதில் நமது முன்னோர்களில் சிலரும் அடங்கலாம் அல்லவா? அதற்கு வாய்ப்பு உண்டுதானே! எனவே அவர்கள் பெற்ற முத்தியொளிச் சேர்க்கையைக் குறித்தே பல அகல்களில் தீபம் ஏற்றி வரிசையாக வீட்டில் வைத்து அவற்றை வணங்குகின்றோம். அதுதான் தீபாவளி என்று ஆயிற்று. இதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

குளித்தல்:
கங்கையில் மூழ்குவது, இராமேச்சுவரத்தில் மூழ்குவது பிதிர்கள் ஆகிய முன்னோர்க்கு செய்யும் கடன் என்பது இன்றும் கண்கூடு. என்றைக்கோ இறந்த நம் முன்னோர்களுக்கு எல்லாம் கங்கையில் ஒரு சேர நீரொழுக்கி (தர்ப்பணம் செய்து) நீர்க்கடன் ஆற்றுவது இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். அது போல இந்த தீபாவளி நாள் நமது முன்னோர்கள் முத்தி பெற்ற நன்னாள் என்பதால் அன்றைய முழுக்கை அதை நினைவுபடுத்தி குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்து சீயக்காய் பயன்படுத்திக் குளிக்கவேண்டும்

குளிக்கும்போது வாளி நிறைய நீர் நிரப்பி அதில் கைவிரலால் "ஓம்" என்று எழுத வேண்டும். அதில் கையை விரித்து நீரின் மேல் வைத்து "7 முறை ஓம்" சொல்ல வேண்டும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? M7rSKgs3Tz2FsoIhRv1x+padhaga

குவளையில் நீரை முகந்து பின் வரும் பாடலைப் பாடி, தலையில் ஊற்றிக் குளிக்கவும்.

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.


குளித்து முடித்தவுடன் ஒரு குவளை நீரை எடுத்து, அந்த நீரில் "ஓம் சிவாயநம" எழுதி தியானித்து இறையுணர்வுடன் தலையில் ஊற்றிக் கொள்க. இது சிறப்பு நாளில் மட்டுமல்லாமல் தினமுமே செய்யலாம். தலைக்கு ஊற்றிக் கொள்ள முடியாதவர்கள் உடம்பினுக்கு மட்டுமே செய்யலாம்.

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 08, 2015 2:08 pm

2) தீபாவளி பூசைக்குத் தேவையான சமையல், பலகாரங்கள் தயாரானவுடன் பூசை அறைக்கு வரவும்.
கடவுள் படங்களைத் (சிலைகளை) துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரிக்கவும்

தீபாவளி கொண்டாடுவது எப்படி? GQpdOFuET2WlQ7lHjvF7+2202150757lord-shiva-deco-painting-500x500

3) முன்னோர்களின் படங்கள் மற்றும் நடுவீடுகளை அலங்கரிக்கவும்
தீபாவளி கொண்டாடுவது எப்படி? GivfyvcPQYS8SAeEQkPI+naduveedu


4) சிவபெருமான் படத்திற்கு முன்னர் நடுநாயகமாக ஒரு குத்துவிளக்கை வைக்கவும். தேவையான அளவு அகல் விளக்குகளை எடுத்துக்கொள்ளவும். குத்துவிளக்கு மற்றும் அகல் விளக்குகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து தயாராக வைக்கவும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? H8Gws0XvSjKlHwrIt3nK+kuthu_vilakku

தீபாவளி கொண்டாடுவது எப்படி? NPeVTPAR92qxc785WZgQ+agalvilakku

5) பூசைக் கருவிகளையும் மஞ்சள் குங்குமம் வைத்து தயார்படுத்தவும்
பூசைக்கருவிகளாவன: ஊதுபத்தி தாங்கி, ஒற்றைத் தீபம், கற்பூரப்பேரொளி காட்ட உதவும் கருவி, பூசைமணி

தீபாவளி கொண்டாடுவது எப்படி? Abqa8HiJSaisLZDAdV1p+voothupathi

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 70qrFFKAToimClyflXSA+otraideepam

தீபாவளி கொண்டாடுவது எப்படி? BEfXTNKlS7OxO3Wo1VJC+thoobakkaal

தீபாவளி கொண்டாடுவது எப்படி? ODj4UKANRwqwni13Q9xF+pujabell

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 08, 2015 11:18 pm

7) புதுத்துணிகளுக்கு மஞ்சள் குங்குமம் வைக்கவும். பழங்கள், மலர்கள், வெற்றிலைப்பாக்கு, தேங்காய், படையல் இவற்றை பரப்பி வைக்கவும்.

8) பஞ்சபாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் சிறிதளவு மஞ்சளரிசி, சந்தனம், பூ, அருகம்புல் இடவும்.

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 54B5eZk8SmaVrGgDSDRh+panjapaathram

உள்ளங்கையால் மூடி 7 முறை ஓம் சிவாயநம ஓதவும்.

பிறகு இந்த அருள்நீரை எடுத்து, பூசைப் பொருட்களின் மீது தெளிக்கவும்.
புதுத்துணிகளின் மீது தெளித்து வீட்டுப் பெரியவர்கள் எடுத்துக் கொடுக்க அதை அணிந்து வரவும்

9) “ஓம்” என்று 3 முறை ஏற்றி இறக்கி ஓதுக.

10) “எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வலான்றனையே ஏத்து”   2 முறை ஓதுக.

11) மோதகக்குட்டு இயற்றி பாடுக.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.



12) பின்வரும் மந்திரப்பாடல் பாடி குத்துவிளக்கை விளக்கேற்றுக.
“விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே”



13) சிவபெருமான் எழுந்தருள பின்வரும் பாடல் பாடுக.
“சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன் தனையான்
பவனெனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால்
இவனெனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே”



14) பஞ்சபாத்திரத்தில் உள்ள நீரை உருத்திரிணியால் 3 முறை எடுத்து தரையில் விடுக.

15) ஓம் சால உயர்ந்த சாம்பிராணி ஏலப்புகை சூழ்ந்து ஏத்தினன் போற்றி– என்ற மந்திரம் சொல்லி சாம்பிராணி, ஊதுவத்தி புகை காட்டுக

16) ஓம் உய்யும் வகை தந்து அருளிட ஒருதிரி நெய்யிடு தீபம் நேர்ந்தனன் போற்றி” – என்ற மந்திரம் சொல்லி ஒற்றைச் சுடர் காட்டுக.

17) “ஓம் அப்பம் மோதகம் அமுது பல வகைகள் இப்பொழுது இங்கு படைத்தனன் போற்றி, வாழை மா பலா மணிதிகழ் மாதுளை ஏழை அளித்தேன் ஏற்க போற்றி” – என்ற மந்திரம் சொல்லி அமுது படைக்க. பின்னர் பஞ்சபாத்திரத்தில் இருந்து சிறிது நீர் எடுத்து விடுக.

16) பெருங்கற்பூர தீபமெடுத்தேன் திருமங்கலம் தந்தருள்க போற்றி” – என்ற மந்திரம் சொல்லி கற்பூரப்பேரொளி காட்டுக.

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Nov 09, 2015 7:19 am

17) பல அகல்களை எடுத்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். குத்து விளக்கைச் சுற்றி அழகு ததும்பும் கோலங்களை இடவும். அகல் ஒன்றை எடுத்து…

சிவமே பொருளென்று தேற்றி – என்னை
சிவவெளிக்கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமாக்கி கொண்டது பாரீர் – திருச்
சிற்றம்பலத்தே திருநட ஜோதி”

ஜோதியுள் ஜோதியுள் ஜோதி – சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி


மந்திரப்பாடலைப்பாடி குத்துவிளக்கு தீபத்தில் இந்த அகல் விளக்கை ஏற்றவும்.

18) இதைப்போன்றே அனைத்து அகல்விளக்குகளிலும் ஒளியை ஏற்றி அழகாக குத்துவிளக்கைச் சுற்றி அலங்காரமாக அமைக்கவும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? LOUcTk9RSuuktYnHkXTN+deepam

19) ஒவ்வொரு அகல்முன்பாக சிறிது பூக்களை “சிவனருள் பெற்ற முன்னோர்களே எழுந்தருள்க” என்று சொல்லிக்கொண்டே போடவும்.

20) பஞ்சபாத்திரத்தில் உள்ள நீரை உருத்திரிணியால் 3 முறை எடுத்து தரையில் விடுக.

21) ஓம் சால உயர்ந்த சாம்பிராணி ஏலப்புகை சூழ்ந்து ஏத்தினன் போற்றி– என்ற மந்திரம் சொல்லி சாம்பிராணி, ஊதுவத்தி புகை காட்டுக

22) “ஓம் உய்யும் வகை தந்து அருளிட ஒருதிரி நெய்யிடு தீபம் நேர்ந்தனன் போற்றி” – என்ற மந்திரம் சொல்லி ஒற்றைச் சுடர் காட்டுக.

23) “ஓம் அப்பம் மோதகம் அமுது பல வகைகள் இப்பொழுது இங்கு படைத்தனன் போற்றி, வாழை மா பலா மணிதிகழ் மாதுளை ஏழை அளித்தேன் ஏற்க போற்றி”– என்ற மந்திரம் சொல்லி அமுது படைக்க. பின்னர் பஞ்சபாத்திரத்தில் இருந்து சிறிது நீர் எடுத்து விடுக.

24) ‘சிவபுராணம்’ ஓதுக
( நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் ......)

25)  “மந்திரம் ஓதி கற்பூரப்பேரொளி காட்டுக:
“அறிவொடு வழிபடும் அடியவர் குழுமிய செறிதரு கலசையில் வருதரு சிவனே“
“ஓம் பெருங்கற்பூர தீபம் எடுத்தேன் திருமங்களம் தந்தருள்க போற்றி”.
– என்ற மந்திரம் சொல்லி கற்பூரப்பேரொளி காட்டுக.

26) சிறிது திருநீறு எடுத்து கற்பூரப்பேரொளியில் காட்டி சாமி முன்னராக 'ஓம்' போடவும். திருநீறு எடுக்கும்போது நந்தி முத்திரையால் எடுக்கவும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? 9Jud5y3TROKtVQhOaxoa+nandimudra
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Uu7zoTdyRnWy165VyFsf+nandimudrai

27) அனைவரும் கடவுளின் முன் வீழ்ந்து வணங்குக.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? JVbblEiGQdqIKMoUoYUx+namaskaram

28) வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் வீழ்ந்து வணங்கி அவர்களிடம் திருநீறு பூசி விடச் சொல்க.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? UqVZssq1SvGW7N2KX8Nc+kumbidu

29) கணவரின் காலில் மனைவி வீழ்ந்து கும்பிட்டு திருநீறு குங்குமம் அணிவிக்கச் சொல்க.

30) காகத்திற்கு படையல் இட்டு வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் உணவு அருந்தவும். (காகம் நம் முன்னோர்கள் கிடையாது. நம்மைச் சார்ந்து உள்ள ஓர் உயிரினம் என்பதால் உணவு இடுகிறோம்)

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 09, 2015 9:11 am

சாமி wrote:தீபாவளி கொண்டாடுவது எப்படி? IrvwkmHxS4inlQDTSjIO+diwali

தீ + ஆவளி = தீபாவளி.

தீ என்பது தீபம்; ஆவளி என்றால் வரிசை. நாமாவளி என்பது நாமங்களின் வரிசை என்பது போல தீபாவளி என்றது தீபங்களின் வரிசையைக் குறிக்கும். இத் தீப வழிபாடு சிவ விரதங்கள் எட்டில் ஒன்று.

உலகமெல்லாம் ஒடுங்கும் லய நிலையில் பிரளயத்தில் என்ன ஆகிறது தெரியுமா? அரைப்பக்குவத்தில் அல்லது முக்கால் பக்குவத்தில் உள்ள உயிர்களை சிவபெருமான் தூசுத் தட்டி அப்படியே தன் திருவடியில் சேர்த்து முடிந்த முத்தியைக் கொடுத்து விடுவான். அவர்களுக்குத்தான் பிரளயாகலர் என்று பெயர். பிரளய காலத்தில் இரு மலங்களின் கட்டுக்களில் இருந்து நீக்கப்படுபவர்கள் என்பது அதன் பொருள். அவர்கள் ஏற்கனவே மாயா மலக்கட்டுகளிலிருந்து நீங்கியவர்களாக பக்குவம் ஏறி இருப்பார்கள்.

ஆகவே பிரளயத்தில் பல உயிர்கள் முத்தி அடைகின்றன. அதில் நமது முன்னோர்களில் சிலரும் அடங்கலாம் அல்லவா? அதற்கு வாய்ப்பு உண்டுதானே! எனவே அவர்கள் பெற்ற முத்தியொளிச் சேர்க்கையைக் குறித்தே பல அகல்களில் தீபம் ஏற்றி வரிசையாக வீட்டில் வைத்து அவற்றை வணங்குகின்றோம். அதுதான் தீபாவளி என்று ஆயிற்று. இதை எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

குளித்தல்:
கங்கையில் மூழ்குவது, இராமேச்சுவரத்தில் மூழ்குவது பிதிர்கள் ஆகிய முன்னோர்க்கு செய்யும் கடன் என்பது இன்றும் கண்கூடு. என்றைக்கோ இறந்த நம் முன்னோர்களுக்கு எல்லாம் கங்கையில் ஒரு சேர நீரொழுக்கி (தர்ப்பணம் செய்து) நீர்க்கடன் ஆற்றுவது இன்றைக்கும் நாம் பார்க்கிறோம். அது போல இந்த தீபாவளி நாள் நமது முன்னோர்கள் முத்தி பெற்ற நன்னாள் என்பதால் அன்றைய முழுக்கை அதை நினைவுபடுத்தி குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்து சீயக்காய் பயன்படுத்திக் குளிக்கவேண்டும்

குளிக்கும்போது வாளி நிறைய நீர் நிரப்பி அதில் கைவிரலால் "ஓம்" என்று எழுத வேண்டும். அதில் கையை விரித்து நீரின் மேல் வைத்து "7 முறை ஓம்" சொல்ல வேண்டும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? M7rSKgs3Tz2FsoIhRv1x+padhaga

குவளையில் நீரை முகந்து பின் வரும் பாடலைப் பாடி, தலையில் ஊற்றிக் குளிக்கவும்.

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.


குளித்து முடித்தவுடன் ஒரு குவளை நீரை எடுத்து, அந்த நீரில் "ஓம் சிவாயநம" எழுதி தியானித்து இறையுணர்வுடன் தலையில் ஊற்றிக் கொள்க. இது சிறப்பு நாளில் மட்டுமல்லாமல் தினமுமே செய்யலாம். தலைக்கு ஊற்றிக் கொள்ள முடியாதவர்கள் உடம்பினுக்கு மட்டுமே செய்யலாம்.

(தொடரும்)
மேற்கோள் செய்த பதிவு: 1173520
தீபாவளிக்கு எத்தனையோ விளக்கங்கள் அற்புதம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 09, 2015 9:14 am

சாமி wrote:2) தீபாவளி பூசைக்குத் தேவையான சமையல், பலகாரங்கள் தயாரானவுடன் பூசை அறைக்கு வரவும்.
கடவுள் படங்களைத் (சிலைகளை) துடைத்து மஞ்சள் குங்குமம் வைத்து அலங்கரிக்கவும்

தீபாவளி கொண்டாடுவது எப்படி? GQpdOFuET2WlQ7lHjvF7+2202150757lord-shiva-deco-painting-500x500

3) முன்னோர்களின் படங்கள் மற்றும் நடுவீடுகளை அலங்கரிக்கவும்
தீபாவளி கொண்டாடுவது எப்படி? GivfyvcPQYS8SAeEQkPI+naduveedu


4) சிவபெருமான் படத்திற்கு முன்னர் நடுநாயகமாக ஒரு குத்துவிளக்கை வைக்கவும். தேவையான அளவு அகல் விளக்குகளை எடுத்துக்கொள்ளவும். குத்துவிளக்கு மற்றும் அகல் விளக்குகளுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து தயாராக வைக்கவும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? H8Gws0XvSjKlHwrIt3nK+kuthu_vilakku

தீபாவளி கொண்டாடுவது எப்படி? NPeVTPAR92qxc785WZgQ+agalvilakku

5) பூசைக் கருவிகளையும் மஞ்சள் குங்குமம் வைத்து தயார்படுத்தவும்
பூசைக்கருவிகளாவன: ஊதுபத்தி தாங்கி, ஒற்றைத் தீபம், கற்பூரப்பேரொளி காட்ட உதவும் கருவி, பூசைமணி

தீபாவளி கொண்டாடுவது எப்படி? Abqa8HiJSaisLZDAdV1p+voothupathi

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 70qrFFKAToimClyflXSA+otraideepam

தீபாவளி கொண்டாடுவது எப்படி? BEfXTNKlS7OxO3Wo1VJC+thoobakkaal

தீபாவளி கொண்டாடுவது எப்படி? ODj4UKANRwqwni13Q9xF+pujabell

(தொடரும்)
மேற்கோள் செய்த பதிவு: 1173554
தீபாவளி கொண்டாடுவது எப்படி? 3838410834 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 103459460 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 09, 2015 9:17 am

சாமி wrote:17) பல அகல்களை எடுத்து தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும். குத்து விளக்கைச் சுற்றி அழகு ததும்பும் கோலங்களை இடவும். அகல் ஒன்றை எடுத்து…

சிவமே பொருளென்று தேற்றி – என்னை
சிவவெளிக்கேறும் சிகரத்தில் ஏற்றிச்
சிவமாக்கி கொண்டது பாரீர் – திருச்
சிற்றம்பலத்தே திருநட ஜோதி”

ஜோதியுள் ஜோதியுள் ஜோதி – சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுள் ஜோதி
ஜோதியுள் ஜோதியுள் ஜோதி


மந்திரப்பாடலைப்பாடி குத்துவிளக்கு தீபத்தில் இந்த அகல் விளக்கை ஏற்றவும்.

18) இதைப்போன்றே அனைத்து அகல்விளக்குகளிலும் ஒளியை ஏற்றி அழகாக குத்துவிளக்கைச் சுற்றி அலங்காரமாக அமைக்கவும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? LOUcTk9RSuuktYnHkXTN+deepam

19) ஒவ்வொரு அகல்முன்பாக சிறிது பூக்களை “சிவனருள் பெற்ற முன்னோர்களே எழுந்தருள்க” என்று சொல்லிக்கொண்டே போடவும்.

20) பஞ்சபாத்திரத்தில் உள்ள நீரை உருத்திரிணியால் 3 முறை எடுத்து தரையில் விடுக.

21) ஓம் சால உயர்ந்த சாம்பிராணி ஏலப்புகை சூழ்ந்து ஏத்தினன் போற்றி– என்ற மந்திரம் சொல்லி சாம்பிராணி, ஊதுவத்தி புகை காட்டுக

22) “ஓம் உய்யும் வகை தந்து அருளிட ஒருதிரி நெய்யிடு தீபம் நேர்ந்தனன் போற்றி” – என்ற மந்திரம் சொல்லி ஒற்றைச் சுடர் காட்டுக.

23) “ஓம் அப்பம் மோதகம் அமுது பல வகைகள் இப்பொழுது இங்கு படைத்தனன் போற்றி, வாழை மா பலா மணிதிகழ் மாதுளை ஏழை அளித்தேன் ஏற்க போற்றி”– என்ற மந்திரம் சொல்லி அமுது படைக்க. பின்னர் பஞ்சபாத்திரத்தில் இருந்து சிறிது நீர் எடுத்து விடுக.

24) ‘சிவபுராணம்’ ஓதுக
( நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் ......)

25)  “மந்திரம் ஓதி கற்பூரப்பேரொளி காட்டுக:
“அறிவொடு வழிபடும் அடியவர் குழுமிய செறிதரு கலசையில் வருதரு சிவனே“
“ஓம் பெருங்கற்பூர தீபம் எடுத்தேன் திருமங்களம் தந்தருள்க போற்றி”.
– என்ற மந்திரம் சொல்லி கற்பூரப்பேரொளி காட்டுக.

26) சிறிது திருநீறு எடுத்து கற்பூரப்பேரொளியில் காட்டி சாமி முன்னராக 'ஓம்' போடவும். திருநீறு எடுக்கும்போது நந்தி முத்திரையால் எடுக்கவும்.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? 9Jud5y3TROKtVQhOaxoa+nandimudra
தீபாவளி கொண்டாடுவது எப்படி? Uu7zoTdyRnWy165VyFsf+nandimudrai

27) அனைவரும் கடவுளின் முன் வீழ்ந்து வணங்குக.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? JVbblEiGQdqIKMoUoYUx+namaskaram

28) வீட்டில் உள்ள பெரியவர்களின் காலில் வீழ்ந்து வணங்கி அவர்களிடம் திருநீறு பூசி விடச் சொல்க.
தீபாவளி கொண்டாடுவது எப்படி? UqVZssq1SvGW7N2KX8Nc+kumbidu

29) கணவரின் காலில் மனைவி வீழ்ந்து கும்பிட்டு திருநீறு குங்குமம் அணிவிக்கச் சொல்க.

30) காகத்திற்கு படையல் இட்டு வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் உணவு அருந்தவும். (காகம் நம் முன்னோர்கள் கிடையாது. நம்மைச் சார்ந்து உள்ள ஓர் உயிரினம் என்பதால் உணவு இடுகிறோம்)
மேற்கோள் செய்த பதிவு: 1173768
தீபாவளி கொண்டாடுவது எப்படி? 3838410834 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 3838410834 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 103459460 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 09, 2015 9:19 am

சாமி wrote:7) புதுத்துணிகளுக்கு மஞ்சள் குங்குமம் வைக்கவும். பழங்கள், மலர்கள், வெற்றிலைப்பாக்கு, தேங்காய், படையல் இவற்றை பரப்பி வைக்கவும்.

8) பஞ்சபாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் சிறிதளவு மஞ்சளரிசி, சந்தனம், பூ, அருகம்புல் இடவும்.

தீபாவளி கொண்டாடுவது எப்படி? 54B5eZk8SmaVrGgDSDRh+panjapaathram

உள்ளங்கையால் மூடி 7 முறை ஓம் சிவாயநம ஓதவும்.

பிறகு இந்த அருள்நீரை எடுத்து, பூசைப் பொருட்களின் மீது தெளிக்கவும்.
புதுத்துணிகளின் மீது தெளித்து வீட்டுப் பெரியவர்கள் எடுத்துக் கொடுக்க அதை அணிந்து வரவும்

9) “ஓம்” என்று 3 முறை ஏற்றி இறக்கி ஓதுக.

10) “எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வலான்றனையே ஏத்து”   2 முறை ஓதுக.

11) மோதகக்குட்டு இயற்றி பாடுக.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம் கை.



12) பின்வரும் மந்திரப்பாடல் பாடி குத்துவிளக்கை விளக்கேற்றுக.
“விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே”



13) சிவபெருமான் எழுந்தருள பின்வரும் பாடல் பாடுக.
“சிவனெனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான்
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன் தனையான்
பவனெனும் நாமம் பிடித்துத் திரிந்து பன்னாள் அழைத்தால்
இவனெனைப் பன்னாள் அழைப்பொழியான் என்று எதிர்ப்படுமே”



14) பஞ்சபாத்திரத்தில் உள்ள நீரை உருத்திரிணியால் 3 முறை எடுத்து தரையில் விடுக.

15) ஓம் சால உயர்ந்த சாம்பிராணி ஏலப்புகை சூழ்ந்து ஏத்தினன் போற்றி– என்ற மந்திரம் சொல்லி சாம்பிராணி, ஊதுவத்தி புகை காட்டுக

16) ஓம் உய்யும் வகை தந்து அருளிட ஒருதிரி நெய்யிடு தீபம் நேர்ந்தனன் போற்றி” – என்ற மந்திரம் சொல்லி ஒற்றைச் சுடர் காட்டுக.

17) “ஓம் அப்பம் மோதகம் அமுது பல வகைகள் இப்பொழுது இங்கு படைத்தனன் போற்றி, வாழை மா பலா மணிதிகழ் மாதுளை ஏழை அளித்தேன் ஏற்க போற்றி” – என்ற மந்திரம் சொல்லி அமுது படைக்க. பின்னர் பஞ்சபாத்திரத்தில் இருந்து சிறிது நீர் எடுத்து விடுக.

16) பெருங்கற்பூர தீபமெடுத்தேன் திருமங்கலம் தந்தருள்க போற்றி” – என்ற மந்திரம் சொல்லி கற்பூரப்பேரொளி காட்டுக.

(தொடரும்)
மேற்கோள் செய்த பதிவு: 1173738 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 3838410834 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 3838410834 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 103459460 தீபாவளி கொண்டாடுவது எப்படி? 1571444738

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Nov 09, 2015 12:50 pm

நல்ல தெளிவான பதிவு நன்றி

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Nov 09, 2015 7:26 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
சாமி wrote:
தீ + ஆவளி = தீபாவளி. தீ என்பது தீபம்; ஆவளி என்றால் வரிசை. நாமாவளி என்பது நாமங்களின் வரிசை என்பது போல தீபாவளி என்றது தீபங்களின் வரிசையைக் குறிக்கும். இத் தீப வழிபாடு சிவ விரதங்கள் எட்டில் ஒன்று.
மேற்கோள் செய்த பதிவு: 1173520
தீபாவளிக்கு எத்தனையோ விளக்கங்கள் அற்புதம்.
மேற்கோள் செய்த பதிவு: 1173799

நன்றி ஐயா!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக