புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Poll_c10நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Poll_m10நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Poll_c10நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Poll_m10நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Poll_c10 
3 Posts - 8%
heezulia
நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Poll_c10நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Poll_m10நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Poll_c10நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Poll_m10நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Poll_c10நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Poll_m10நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Nov 06, 2015 11:24 am

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள்
படக்கூடாது" - இது நல்லதா ?

கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி
வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக்
கூடியவை.
அவற்றை வலிமை மற்றும் தைரியம்
ஆகியவற்றின் சின்னமாகக்
கருதுகின்றோம்.
ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச
சக்திகளும், வலிமையும், தைரியமும்
பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை
கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக்
கொள்ளப்படுபவை தான்.

குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக,
பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள்
பலவீனமாகவே இருக்கின்றன.
அவை அப்படியே சுகமாகவும்,
பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால்
வலிமையாகவும், சுதந்திரமாகவும்
மாறுவது சாத்தியமல்ல.

எனவே
குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய
உணவளித்து, பாதுகாப்பாக
வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள்
பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி
விடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும்
படுக்கையினைக் கலைத்து சிறு
குச்சிகளின் கூர்மையான பகுதிகள்
வெளிப்படும்படி செய்து கூட்டை
சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து
விடுகின்றது.

பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து
இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத்
தூண்டுகின்றது.

தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத
கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை
வந்து நிற்கின்றது.

அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின்
வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும்
உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து
மலைத்து நிற்கின்றது.

அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப்
பயணிக்க தைரியமற்று பலவீனமாக
நிற்கின்றது.

அது ஒவ்வொரு குஞ்சும் தன்
வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு
முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.

அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே
தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே
பாதுகாப்பாகத் தங்கி விட
முடிவெடுக்கலாம்.

ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும்
பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய
இடமல்ல.

சுயமாகப் பறப்பதும்
இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப்
பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை
அறியும்.
அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில்
என்ன செய்வதென்று அறியாமல் வெளியே
எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும்

அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக்
குஞ்சின் உணர்வுகளை லட்சியம்
செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து
வெளியே தள்ளி விடுகிறது.

அந்த எதிர்பாராத தருணத்தில்
கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப்
பறக்க முயற்சி செய்கின்றது.

முதல் முறையிலேயே கற்று விடும்
கலையல்ல அது.
குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க
முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும்
நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன்
குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது.

குஞ்சு
மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக
இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது.

அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன்
குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப்
பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக்
கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு
விடுகிறது.
மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப்
பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக்
குஞ்சு உள்ளாகிறது.

இப்படியே குஞ்சை வெளியே தள்ளி
விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல
முறை நடக்கும்
இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின்
சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று
வெளியில் பறக்கும் கலையையும்
விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக்
கொள்கிறது.

அது சுதந்திரமாக,
ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப்
பறக்க ஆரம்பிக்கிறது.
கழுகுக் குஞ்சு முதல் முறையாக
கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின்
பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி
நிற்கும்
அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை
முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த
சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும்,
தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு
தன் வாழ்நாளில் என்றென்றைக்கும்
கண்டிருக்க முடியாது.

பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை
விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய
போது அது ஒருவிதக் கொடூரச்
செயலாகத் தோன்றினாலும்
பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும்
யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப்
பேருதவி என்பதை மறுக்க முடியாது
ஒவ்வொரு புதிய சூழ்நிலையும்
யாருக்கும் ஒருவித பதட்டத்தையும்,
பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால்
அந்தக் காரணத்திற்காகவே அந்த
சூழ்நிலைகளையும், அனுபவத்தையும்
மறுப்பது வாழ்வின் பொருளையே
மறுப்பது போலத் தான்.

கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான்
அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம்.

ஆனால் கப்பலை உருவாக்குவது அதை
துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல.
கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி
வைப்பதில் இல்லை.

கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல,
மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.

தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில்
முதல் முதலில் தள்ளப்பட்டதை
எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என்
குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப்
பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக்
கொள்வேன்" என்று நினைக்குமானால்
அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே
கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.

ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு
செய்ததாக சரித்திரம் இல்லை
அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல
பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட
கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது"
என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை
இன்று நாம் நிறையவே பார்க்கிறோம்.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில்
கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது
பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு
குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம்
இருந்ததில்லை.

அதற்கான அவசியம்
இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.

ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு
குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக
நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க
வேண்டும் என்பதில் குறியாக
இருக்கிறார்கள்.

அதில் தவறில்லை. ஆனால்
தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள்
குழந்தைகள் படக்கூடாது என்று
நினைக்கும் போது பாசமிகுதியால்
அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின்
பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத்
தவறி விடுகிறார்கள்.

அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம்
செல்ல பல மைல்கள் நடந்தேன்.

அதனால் நீயும்
நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும்
என்று சொல்லவில்லை. வசதிகளும்,
வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக்
காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத்
தான் இருக்கும்.
இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின்
பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது
அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை
பிள்ளைகள் படத் தேவையில்லைதான்.

ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான
அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது'
என்று நினைப்பது அந்தப் பிள்ளையின்
உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும்
செயலே ஆகும்.

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில
கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு
அவசியமானவையே.

அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும்
போது தான் அவன் வலிமை அடைகிறான்.
அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப்
பெற்றோர் நினைப்பது அவனுக்கு
வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.

சில கஷ்டங்கள் பிள்ளைகள்படும் போது
பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக
இருக்கலாம்.
ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது
வாழ்க்கை அல்ல,
வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல,
அது சாத்தியமும் அல்ல.


avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Fri Nov 06, 2015 12:53 pm

கார்த்திக் செயராம் wrote:சில கஷ்டங்கள் பிள்ளைகள்படும் போது
பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக
இருக்கலாம்.
ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது
வாழ்க்கை அல்ல,
வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல,
அது சாத்தியமும் அல்ல.

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Nov 06, 2015 2:46 pm

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? 103459460



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Nov 07, 2015 1:09 pm

தன்னால் இயலாமை என்ற சூழ்நிலையில் தன் குழந்தையும் அதே சூழ்நிலையை அனுபவித்துவிடக்கூடாது என்ற மனப்பான்மை அனைவரிடத்திலும் உண்டு அது முன்னொரு காலம்.......

இந்த காலத்தில் குழந்தை பெறுவது ஒரு கடமை அந்த குழந்தையை வளர்ப்பதோ வீட்டு வேலைக்காரிதான் இதிலிருந்து தெரிகிறதா இந்த பதிவின் தலைப்புக்கு விடை




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 07, 2015 1:54 pm

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள்
படக்கூடாது" - இது நல்லதா ?

கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!

நல்ல கட்டுரை ,
சில சந்தர்ப்பங்களில் "நான் பட்ட கஷ்டங்கள் எனது குழந்தைகள் படக்கூடாது" என்று மட்டுமல்ல எனக்கு பிறகு வரும் யாரும் படகூடாது என்பதற்காக எளிமையான வழியை உருவாக்கும் குணமுள்ளவன் நான்.

அதே நேரத்தில் சில சூழ்நிலைகளை நமது குழந்தைகள் தாமாக கையாள தெரிந்துகொள்ள வேண்டும், என்னும் எண்ணமுடையவன். அதுபோன்ற விஷயங்களில் ஆரம்பத்தில் நம்முடைய மேற்பார்வையில் அவர்கள் தனியாக செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும். [பிறகு சிறகடித்து பறக்க ஆரம்பித்துவிடுவார்கள் புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 07, 2015 6:32 pm

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? 103459460

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Nov 07, 2015 9:24 pm

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" - இது நல்லதா ? 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக