புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
10 Posts - 43%
ayyasamy ram
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
9 Posts - 39%
Guna.D
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
1 Post - 4%
mruthun
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
85 Posts - 51%
ayyasamy ram
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
54 Posts - 33%
mohamed nizamudeen
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
கீதை 18 : பக்குவ யோகம் I_vote_lcapகீதை 18 : பக்குவ யோகம் I_voting_barகீதை 18 : பக்குவ யோகம் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கீதை 18 : பக்குவ யோகம்


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Tue Nov 03, 2015 10:18 pm

கீதை 18 : 1 அர்ச்சுனர் கேட்டார் : வலிமையான புயங்களை உடையவரே ; புலன்களை ஆள்பவரே ; மாயாவியான கேசியை கொன்றவரே . துறவறத்தின் உட்பொருளையும் பல்வேறு தியாகங்களின் நுட்பங்களையும் உணர்ந்துகொள்ள விரும்புகிறேன்

கீதை 18 : 2 யுகபுருஷன் கிரிஷ்ணர் கூறினார் ; ஆசைகளின் வேட்கைகளால் உந்தப்படும் செயல்களை செய்யாதிருத்தல் சந்நியாசம் என்பர் சான்றோர் . மேலும் அனுபவசாலிகள் தங்கள் செயல்கள் அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டு அதன் பலன்களில் அக்கறை அற்று இருந்துவிடுகிறார்களே அதுவே தியாகம் எனப்படும்

கீதை 18 : 3 கர்மங்கள் அனைத்தையும் தோஷமாக கருதி தியாகம் செய்வதை துறவறம் என சிலரும் ; இருப்பினும் அதில் யாகம் தானம் மற்றும் யோகாப்பிசியங்கள் மட்டும் கைவிடலாகாது என்று சிலரும் கூறுகின்றனர்

கீதை 18 : 4 உண்மையில் மிகச்சிறந்த ஆத்மாக்களையும் யாகம் தானம் மற்றும் யோகாப்பிசியங்கள் மென்மேலும் தூய்மைப்படுத்துகின்றன. யாகம் தானம் மற்றும் யோகாப்பிசியங்கள் மட்டும் அல்ல கர்மங்கள் எவையுமே துறக்கப்படலாகாது .

கீதை 18 : 5 கர்மங்கள் அனைத்துமே கடமையாக கருதப்பட்டு செய்யப்படவேண்டும் . அவற்றின் பலன் விளைவுகளில் பற்றுதலை துறந்து விடவேண்டும் என்பதே எனது முடிவான அபிப்ராயம் .
அர்ச்சுனர் துறவறம் பற்றிய சந்தேகங்களை இங்கு கேட்கத்தொடங்குகிறார் . ரிஷிகேசவ் என்ற வார்த்தையால் அவர் ஸ்ரீகிரிஷ்ணரை விளிக்கிறார்

ரிஷி என்றால் ஆள்கிறவர் கேசம் என்றால் புலன்கள் . மனிதனை இச்சைகளில் வேட்கை அடையச்செய்து வாட்டிவதைக்கும் புலன்களை அடக்கி ஆளும் வல்லமை உள்ளவராம் ஸ்ரீகிரிஷ்ணர்
அடியேனுக்கும் ரிஷிகேஷ் செல்லும் ஒரு வாய்ப்பு கிடைத்தது . அங்கு தூய்மையான கங்கையை கடந்து அனேக ஆசிரமங்கள் சாந்தம் தழுவி நிற்கின்றன . அனேக சாதுக்கள் வயதானவர்கள் துறவறமாக கூட்டம் கூட்டமாக வாழ்கிறார்கள் . ஆசிரம ஒழுங்குகளின் படியாக அவர்களின் வாழ்க்கை பிரார்த்தனையோடும் சேவையோடும் சென்றுகொண்டிருக்கிறது . கடமைகள் அனைத்தும் முடிந்துவிட்டால் இப்படி நாமும் கூட இருந்துவிடலாமே என ஏக்கமாக இருந்தது

எப்படியோ இந்தோ மங்கோலிய இனமான திராவிடர்களுக்கு ரிஷிகேஷ் என்பது துறவற வாழ்க்கைக்கு பன்னெடுங்காலமாக பயன்பட்டு வந்துள்ளது

ஆனால் எது துறவறம் என்பதைக்குறித்து பரமாத்மாவுக்கும் பக்குவம் பெற்ற ஆத்மாவான அர்ச்சுனருக்கும் இங்கு விசாரம் தொடங்குகிறது . பாருங்கள் அர்ச்சுனர் அப்போதுதான் 12 வருட வனவாசமும் 1 வருட அஞ்ஞாதவாசமும் முடித்துவிட்டு வந்திருக்கிறார் . இந்த நிலையிலேயே அவருக்கு அனேக மனைவிகள் அருளப்பட்டு அந்த குடும்பங்கள் அனைத்தும் பிள்ளை குட்டிகளோடு செவ்வனே ஓடிக்கொண்டுதான் இருந்தன

முந்தய பிறவியில் ராமரோ மனைவியோடு வனவாசம் செய்தார் என்றால் அவர்களைக்காக்க தன் இளம் மனைவியை பிரிந்து இலக்குமணன் வனவாசம் செய்தாரல்லவா அதன் பரிசாக இப்பிறவியில் பல மனைவிகளும் குடும்பங்களும் அருளப்பட்டன . பெரிய குடுமி ; ஆனாலும் வனவாசம் . இறைவன் நாடினால் துறவறத்திலும் இல்லறமும் இல்லறத்திலும் துறவறமும் நடக்கும் . இங்கு நான் துறவறம் என்பதை உலக வழக்கத்தின் படியாக வனவாசம் என்பதைப்போல குறித்துள்ளேன் . ஆனால் உண்மையான துறவறம் என்பது வேறு . அது உலகத்தின் பார்வையின் படியாக அல்ல என்பதை அனுபவத்தால் அர்ச்சுனரும் கொஞ்சம் புரிந்துவைத்திருந்ததாலேயே இக்கேள்வியை எழுப்பி அது சரிதானா என்பதை தெளிவு பெற விரும்பினார்

ஸ்ரீகிரிஷ்ணரும் ரெண்டே ரெண்டு சூத்திரங்களை எளிதாக முன்வைத்து பதில் சொன்னார் . உலகத்தில் நாம் சரீரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் . அதில் உள்ள ஐம்புலன்களும் தங்களால் அனுபவிக்க முடியுமான இச்சைகளை ஆங்காங்கே சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் வெளிப்படுத்திக்கொண்டேதான் இருக்கும் . அது வெறும் இந்திரியம் . நல்லது கெட்டது நியாய அநியாயம் சமுக நியதி ஒழுங்கு கடவுளின் நியதி ஆத்மசுத்தி பற்றியெல்லாம் அந்த இந்திரியங்கள் கவலைப்படவேண்டிய அவசியமில்லை
அந்த இந்திரியங்கள் மூலமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஆத்மா மட்டுமே அவைகளை சமப்படுத்தி ஆண்டுகொள்ள வேண்டும் . நிர்வகிக்க வேண்டும் . ரிஷிகேஷவனாக இருக்க வேண்டிய ஆத்மா உடல் இச்சித்துவிட்டது சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமைகிறது என்பதற்காக புலன்களின் பின்னால் ஓடலாகாது அனுபவிப்போம் என்று கிளம்பிவிடலாகாது . அதை அனுபவித்துவிட முடியுமென்றாலும் எதற்காக ஆத்மாவில் இன்னும் இன்னும் வாசனைகளை பதிவுகளை கூட்டுக்கொண்டே செல்லவேண்டும் ?
நமது இன்ப நுகர்ச்சிகள் அனைத்தும் பதிவுகளாக சம்ஸ்காரங்களாக ஆத்மாவில் குவிந்துகொண்டே இருக்கும் வரை ஆத்மசுத்தி என்பதோ ஆத்மா கடைத்தேறுவதோ சாத்தியமே இல்லாத ஒன்று . உடல் இச்சித்துவிட்டது ஆத்மாவும் ஆசைப்பட்டு அல்லாடுகிறது என்றிருக்கும் வரை பிறவிகள் நீள்வதை தவிர்க்கவே முடியாது

இச்சைகள் எழுந்தாலும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வாய்த்தாலும் அதை அனுபவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது முடிந்தளவு அதை அவசியமற்றதாக மாற்றிக்கொள்வோம் என பயிற்சி செய்துகொண்டே வருவதுதான் புலன்களை சமப்படுத்துவது .

அப்படியே தொடரும்போது ஒருபிறவியில் அந்த இச்சையால் இயல்பாகவே பாதிப்பு இல்லாத ஒரு நிலையை ஆத்மா அடையும் . அதுவே முக்தி . அந்தப்பதிவுகள் தூய்மை அடையும்போது இயல்பாகவே ஆத்மா அதனை கடந்து விடுகிறது ஒவ்வொரு ஆசையாக நாம் கடரும் போதும் நம் ஆத்மாவில் ஒரு முக்தி விளைந்துவிடும் எதுவும் இயல்பாக உள்ளே விளைந்து நாம் பக்குவப்படும்வரை அளவு முறையோடு அனுபவித்தே கடரமுடியும்
இருக்கிற இடத்திலேயே இருக்கிற சரீரத்திலேயே ரிஷிகேஷவனாக நாம் முயலவேண்டும் . எல்லாவற்றையும் விட்டுவிட்டு வம்பாக ரிஷிகேஷில் போய் உட்கார்ந்துகொள்வதால் ஆத்மாவுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை . அப்படி வம்பாக ஒரு ஆசிரமத்தில் இளம் துறவியாக இருப்பவர்கள் பலர் மீண்டும் அடுத்த பிறவியில் இல்லறவாசிகளாகவே வாழ்கிறார்கள் . இல்லறத்தில் துறவறம் என்ற மனசமநிலையை கற்று ஒவ்வொன்றும் அவசியமில்லாமல் போகும்போது மட்டுமே சித்தியை நாம் நெருங்கமுடியும்
பல முக்திக்கு பின்பே ஆத்மா முழுமை என்ற சித்தியை அடைகிறது . அதுவரை அது பூமியில் பிறந்துதான் ஆகவேண்டும்

இந்திரியங்களின் வேட்கைக்காக செயல்படாத வாழ்வே துறவு . ஒவ்வொன்றாக துறக்கவேண்டும் .
வாழ்வில் நம் மீது சுமரும் கடமைகள் அனைத்தையும் கடமைக்காக கடமை கர்மத்திற்காக கர்மம் செயலுக்காக செயல் என முடிந்தளவு நேர்த்தியாக செய்துவிட்டு அதை இறைவனுக்கு அர்ப்பணம் செய்துவிட்டு என்ன பலன் என சிந்திக்காது இருக்கவேண்டும் . சோர்வோ சலிப்போ அலட்டலோ இருக்காது சமப்படவேண்டும்

நாம் சலிப்பதெல்லாம் நம் உள்ளிருக்கும் கடவுள் வெறுப்பு என்ற குணத்தின் பின்னணி. நம் ஆதிதகப்பன் சிவன் ஆரம்பத்தில் தவறு செய்து சபிக்கப்பட்டு ; சபிக்கப்பட்ட இந்த பூமிக்கு அனுப்பப்பட்டார் . அதன் பிறகு அவரும் படாதபாடுகள் பட்டே சித்தியடைந்து வைரவனாகி ருத்ரனாக பரலோகில் நுழைந்தார்
பரலோகத்திலிருந்து சஞ்சலம் நிறைந்த பூமிக்கு துரத்திவிடப்பட்டதன் வெறுப்பு கடவுள் வெறுப்பு ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆழமாக மறைந்துகிடைக்கிறது . அது சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சலிப்பாக வெளிப்படுகிறது . என்ன நடந்தாலும் எதை செய்தாலும் இறைவனிடமே வேண்டி இறைவனிடமே ஒப்புபித்துவிட்டு நிம்மதியாக இருக்கும் மனநிலையை அருளும்படி நாம்தான் மன்றாடிக்கொள்ளவேண்டும் . இல்லாவிட்டால் இறைவா இறைவா என சொல்லிக்கொண்டே இறைவனுடன் மனஸ்தாபம் என்ற கலங்கத்திலேயே நாம் வாழவேண்டியதுதான்

இந்தப்பாவத்திலிருந்து தப்பவேண்டுமானால் அனுபவசாலிகள் தங்கள் கர்மங்கள் யாவற்றையும் செய்துவிட்டு அதை உடனடியாக அர்ப்பணம் செய்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார்களாம் . அப்படிப்பட்ட கர்மயோகிகளை எந்தப்பாவமும் பற்றுவதில்லை . இந்த உபதேசம் நடந்துகொண்டிருக்கும் போதே அப்படிப்பட்ட நபராக பீஷ்மர் எதிரிலேயே இருந்தார் . அவர் மரணிக்கும் முன்பு அவரிடம் உபதேசமும் ஆசிர்வாதமும் பெற்றுக்கொள்ளும்படியாக பாண்டவர்களை கிரிஷ்ணர் அழைத்துசென்றார் . அப்போது அவர் விஷ்ணு சகஸ்ரநாமம் உபதேசித்தார் . ஆயிரம் நாமங்களின் மூலமாக பரமாத்மாவின் ஆயிரம் குணாதிசயங்களை சித்தரித்து அனைத்தையும் இறைவன் பரமாத்மா மூலமாக பரமாத்மாவிற்குள்ளேயே செய்கிறார் நாம் கருவி மட்டுமே பரமாத்மாவில் நின்று நிலைக்கிற ஒரு ஜீவாத்மா ஆகவே நாம் கடமையை செய்தோம் என அவனிடம் ஒப்படைத்துவிட்டால் எந்தக்கர்மமும் நம்மை பற்றாது என்பதே அந்த உபதேசத்தின் சாரம்

இப்படி பலன் விளைவுகளில் பற்றை துறந்து சகலத்தையும் இறைவனுக்கு அர்ப்பனித்தாலே தியாகமாகும் .
தியாகம் என்பதைவிட புத்திசாலித்தனம் என்றே சொல்லவேண்டும் . ஏனென்றால் எந்த புண்ணியங்களும் எனக்கில்லை என மறுத்துவிட்டால் நிச்சயமாக பாவங்களும் என்னை பற்றாது . எந்த நற்செயலுக்கும் ஆன புகழ்சியை நான் அர்ப்பனித்துவிட்டால் எந்த அவமானங்களாலும் நான் கூனி குறுகாத மனநிலையை அவரே தந்துவிடுவார் . நிஸ்காமியகர்மம் என்கிறார்களே அது பெரும் பாதுகாப்பான கோட்டை
இந்தப்பூமியில் நாம் இருக்கும் வரை எதை இறைவனின் சித்தப்படியாக செய்தோம் அல்லது சுயத்திலே செய்து பாவத்தை வளர்த்துக்கொண்டோம் என்று குழம்பாதபடி நாமே செய்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பனித்துவிடுவது மிக உத்தமம் அவர் நம்மை தீமைகளின் பக்கம் செல்லாதபடி தடுத்துக்கொள்வார் .
சிலர் பல பிறவிகளாக வளர்ந்து பக்குவம் அடைந்து இறைவனின் கருவிகளாக அடிமைகளாக மாறி தங்களை இறைவனுக்கு அர்ப்பணித்த சமயங்களில் அவர்களை இறைவன் தனது இறைதூதராக மகா குருவினர்களாக பயன்படுத்தியுமுள்ளார்

முழுமை அடையும் நேரம் ராஜயோகம் சித்திக்கும் என்பார்கள் ராஜாவைப்போல பொன்னும் பொருளும் புகழ் பாடும் சீடர்கள் கூட்டமுமாக இருக்கும் . ஆனால் அவைகளால் மயக்கமுறாத முழுசரணாகதி அடைந்த அடியவர்களுக்கே அத்தகைய ராஜயோகம் சித்திக்கும் .

அப்படியிருக்க இந்த தியாகம் என்ற வார்த்தை இங்கு ஏன் வந்தது என்றால் அந்தக்காலத்திலும் சரி இப்போதும் சரி சிலர் இறைத்தொண்டு செய்ய வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டு சந்நியாசி ஆனதாக சொல்லிக்கொண்டுள்ளனர் . அது தியாகமே அல்ல மடாதிபதிகள் தங்கள் மடங்களை காக்க சந்நியாசம் மேற்கொள்கிறார்களே தவிர அந்த சந்நியாசத்தால் அவர் முழுமை அடையமுடியாது . மீண்டும் அவர் அடுத்த பிறவியில் கிரகஸ்தன் ஆகியே தீரும்

ஆகவே தியாகம் என்ற வார்த்தையை உலக வார்த்தையாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள் . அதிலும் அடுத்த சுலோகத்தில் அவர்களின் அறியாமை கண்டிக்கப்படுகிறது

அவர்கள் சொல்கிறார்களாம் தாங்கள் சந்நியாசிகள் என்று எந்த செயலையும் தள்ளிவைத்து விடுகிறார்களாம் . தங்கள் மடத்தின் பேரால் அவர்கள் கடும் விரதங்களை கடைப்பிடித்து பொதுமக்களை விட உயர்வானவர்களாக காட்டிக்கொள்ளும் நிலைக்கு ஆளாகிறார்கள் ; அதில் சிலரோ இருப்பினும் யாகம் தானம் மற்றும் யோகாப்பிசியங்கள் மட்டும் கைவிடலாகாது என்று விதிவிலக்கு உள்ளதாக அறிவித்து அவைகளை மட்டும் செய்கிறார்களாம் .

யுகபுருஷனோ எதையும் கைவிடலாகாது என்கிறார் . அன்றாட வாழ்வில் நம் மனநிலையில்தான் அர்ப்பணமும் துறவும் அடங்கியிருக்கிறது . பூசாரிகள் மடாதிபதிகள் தங்கள் உடலை தீட்டில்லாமல் காக்கிறோம் என்று ஒதுக்கிவைத்துக்கொள்வதால் எந்த பரிசுத்தமும் வந்துவிடாது . அவர்கள் தங்களை பரிசுத்தமாக காத்துக்கொள்கிறோம் என்ற பெயரில் மாபெரும் தீண்டாமை கொடுமைகள் வரை போய் பெரும் பாவத்தை சம்பாதித்துக்கொண்டார்கள்

ஆகவே உடலால் பரிசுத்தம் வரவே வராது ; அது மனதில் வரவேண்டியது . கோவிலுக்குள் நுழையும் போது ஒரு உடல் சுத்தம் போதுமானது அதற்கு குர்ஆனில் சுட்டப்பட்ட வழி உள்ளது . கைகால் அலம்பி முகத்தை கழுவி தண்ணீரை தலையில் தடவிக்கொண்டால் போதுமானது . நாம் கர்ப்பகிரகம் வரை தாரளமாக செல்லலாம் . கடவுளை தூய்மையாக காப்பாற்ற யாரையும் தொடாமல் இருக்கிறேன் என்ற அஞ்ஞானத்தை கடைபிடித்து மனிதர்களை அவமதிக்கலாகாது .

அடுத்து எவ்வளவு உயர்ந்த ஆத்மாவாக இருந்தாலும் யாகம் தானம் மற்றும் யோகாப்பிசியங்கள் பிரார்த்தனை என்று பயிற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும்

ஆன்மீகவாழ்வில் உள்ளோர் பலர் இறைவனைப்பற்றி பேசுவதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் அளவு தியானம் பிரார்த்தனை செய்வதற்கு நேரம் ஒதுக்குவதில்லை . அது பெரும் பின்னடைவை உண்டாக்கி விடுகிறது . டயருக்கு அவ்வப்போது காற்றை நிரப்புவதுபோல அப்பியாசங்கள் நம் ஆன்மாவில் ஆன்ம பலத்தை நிரப்புபவை . அதிலும் கூட்டு பிரார்த்தனை மிகவும் உன்னதமானது .

வீட்டிலே தனித்து தியானம் செய்வதைக்காட்டிலும் பலர் பிராத்தனை செய்கின்ற கோவிலில் அமர்ந்து தியானம் செய்யுங்கள் என்பதை சமரசவேதம் வலியுறுத்துகிறது

நீங்கள் எங்கும் எந்தக்கோவிலுக்கும் போங்கள் அங்குள்ள மூர்த்தம் ஒரு குருவைப்போன்றதே . இந்த பூமியிலுள்ள எந்த கோவிலும் ஆவாகானப்படுத்தப்பட்டிருப்பவை நான்கு அதிதேவர்களுக்கு கீழான தேவர்களே . எந்த மார்க்கங்களும் நான்கு அதிதேவர்களுக்கு கீழான குருகுலங்களே .
அங்குள்ள மூர்த்தங்கள் ஆகம விதிகளாலும் பூஜை புனஸ்காரங்களாலும் கும்பத்தின் மூலமாக பரவெளியோடும் ஏக இறைவனோடும் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன .

ஆகவே அந்த மூர்த்தங்களை குருவாக வைத்து கடவுளை தியானித்து கடவுளிடம் வேண்டுங்கள் மார்க்கபேதங்கள் எதுவும் கிடையாது அன்றாடம் ஒரு கோவிலில் ஏக இறைவனை தியானித்து கலியுக முடிவை துரிதப்படுத்துங்கள் எதையும் ஒதுக்காதிருங்கள் எல்லாமும் இறைவனால் அருளப்பட்டவையே . மனிதர்களே அவற்றில் கலியுகத்தின் நிமித்தம் பேதத்தை கலந்துகொண்டார்கள் .

மேலும் ஸ்ரீகிரிஷ்ணர் அர்ப்பணங்கள் மூன்று வகையாக வியாக்கியானப்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கிறார் . அவற்றை அடுத்து காண்போம்

கீதை 18 : 6 பரதவர்களில் சிறந்தோனே ; தியாகத்தின் உன்னத இலக்கு எதுவாக இருக்கவேண்டும் என்பதை இப்போது என்னிடமிருந்து கற்றுக்கொள் . மனிதர்களில் புலியைப்போன்றவனே ; தியாகங்கள் மூன்று வகையாக அப்பியாசப்படுகின்றன

கீதை 18 : 7 நம் மேல் சுமரும் கடமைகளை என்றுமே துறக்கலாகாது . தகுதியுடைய செயல்களை தடுமாற்றத்தால் ஒருவன் துறந்தால் அந்த துறவு தமோ குணத்தால் செய்யப்படுபவை ஆகும் .


நாம் அருள்பணியில் இருப்பதால் சில காரியங்களை செய்யலாமா செய்யக்கூடாதா என தடுமாற்றம் அடைந்து தீட்டு என விலகி செல்லலாகாது . விபத்தில் உதவுவது வியாதியஸ்தர்களை கைதூக்கி விடுவது போன்ற காலத்தால் செய்யும் உதவிகளை பலர் புறக்கணிக்கின்றனர் இதை தமோகுணம் என்கிறார் யுகபுருஷன் கிரிஷ்ணர் . அவரது அடுத்த இயேசு அவதாரத்திலும் பூசாரிகளின் இந்த போக்கை கடுமையாக கண்டித்துள்ளார்

லூக்கா
10 25. அப்பொழுது உபன்யாசகன் ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
26. அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
27. அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கடவுளிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழுஆத்துமாவோடும், உன் முழுப்பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்வாயாக, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் அடுத்தனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
28. அவர் அவனை நேரக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.
29. அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் அடுத்தவன் யார் என்று கேட்டான்.
30. இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.
31. அப்பொழுது தற்செயலாய் ஒரு சன்னியாசி அந்த வழியே வந்து, அவனைக்கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
32. அந்தப்படியே ஒரு பூசாரியும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான்.
33. பின்பு சமான்யன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி,
34. கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
35. மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான்.
36. இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் அடுத்தவனாயிருந்தான் ? உனக்கு எப்படித்தோன்றுகிறது என்றார்.
37. அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார்.


பரிசுத்தம் கடவுளை காப்பாற்ற பரிசுத்தம் என்ற பெயரில் மனிதர்களை தீண்டாமல் இருக்கிறோம் என்று மனித சம்பிரதாயமாக சிலர் ஆரம்பித்து அதன் பலனை எவ்வளவு கேவலப்பட வேண்டுமோ அவ்வளவு கேவலப்பட்டார்கள் . கர்ப்பகிரகத்தில் நுழையும்போது மட்டும் கைகால் கழுவி தண்ணீரை தெளித்துக்கொண்டால் போதுமானது . மனிதர்களை தொடமாட்டோம் என்பதெல்லாம் இறைவனுக்கு விரோதமானது . தமோகுண வகைப்பட்ட துறவு என்ற அலட்டல் ஆகும் .

கீதை 18 : 8 துயரம் நிறைந்தவை என்பதாலோ உடலுக்கு அசெளகரியம் விளைவிக்கும் என்பதாலோ சுமரும் கடமைகளை துறப்பவன் ரஜோ குணத்தால் துறந்தவனாவான் . இது துறவின் பலனை கொடுக்காது

இன்னும் சிலர் வாழ்வின் பிரச்சினைகளை ஓரங்கட்டுவதற்காக ஏதாவது ஒரு மடத்தில் பிரம்மச்சாரியாகி விடுகிறார்கள் . தாங்கள் சந்நியாசி ஆகிவிட்டதால் உற்றார் உறவிணர் பெற்றோர் பராமரிப்பு என்ற கடமையிலிருந்து விதிவிலக்கு பெற்றுக்கொண்டதாக தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள் . இது ரஜோகுணமாகும்

கீதை 18 : 9 ஓ அர்ச்சுனா தன் மேல் சுமரும் கடமைக்காக கடமை செய்து விட்டு எவனொருவன் அதனை மறந்துவிடுகிரானோ அதன் பலன் விளைவுகளை கடவுளுக்கு அர்ப்பணித்துவிடுகிரானோ அவனது துறவு சத்வகுணத்தால் செய்யப்படுபவை ஆகும் .

ஆன்மீக வட்டாரத்தில் பரவலாக உள்ள ஒரு குறை -ஞானப்பெருமை செய்த செயல்களை விளம்பரப்படுத்திக்கொள்வது . சத்சங்கம் என்ற பெயரால் சீடர்கள் எனக்கு இது தெரியும் அது தெரியும் என்று புளகாங்கிதமாக பேசி பொழுதை போக்குவதை கூட்டங்கள் பயிற்சி வகுப்புகளில் காணமுடிகிறது . இப்படி ஞானசம்பாசனை செய்துகொண்டிருப்பதும் ஒரு வேண்டாத சுயமாகத்தான் வளர்ந்ந்துகொண்டே இருக்கும்

ஆனால் செய்த செயல்களையும் அவற்றின் விளைவுகளையும் அடுத்த கணமே கடவுளுக்கு அர்ப்பணித்துவிட்டு மறந்துவிடுகிறவனே சிறந்த பக்தன் யோகி . அவைகளை மறக்காவிட்டால் அவற்றைப்பற்றிய எண்ணம் சுயபெருமையாக வளர்ந்து அலட்டல் வந்துவிடும் .

யாராவது நம்மைப்பற்றி பேசினால் கூட யாரோ அடுத்தவரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் போல இருப்பதும் ஒரு யோகமாகும் . எப்போதும் எதையும் கற்றுக்கொள்கிற கிரகிக்கிற மனநிலையோடு இருக்கவேண்டும்


கீதை 18 : 10 சத்வ குணத்தில் நிலைத்திருக்கும் யோகிகள் அமங்களமான செயல்களுக்கு விலகி ஓடுவதில்லை ; மங்களமான செயல்களுக்கு விரும்பி மகிழ்வதுமில்லை ; சந்தேகப்பட்டு தங்களை ஒதுக்கிக்கொள்வதுமில்லை .

கீதை 18 : 11 ஸ்துல சரீரத்தில் இருப்பவன் எல்லா செயல்களையும் துறப்பது நிச்சயம் சாத்தியம் அல்ல . ஆனால் செயலின் பலன்விளைவுகளை யாரேனும் முற்றிலும் அர்ப்பணித்தால் அவனே உண்மையான துறவி ஆவான் .

இங்கு ஒரு முக்கியமான விபரம் சுட்டப்படுகிறது . யார் நற்காரியங்களையும் புண்ணியங்களையும் இறைவன் நம்மை கருவியாக வைத்து செய்துகொண்டார் என்ற மனநிலையோடு இருக்கிறார்களோ அதுவே அர்ப்பணத்தின் இன்னொரு அம்சம் . அததகைய மனநிலையில் உள்ளவன் ஏதாவது அறியாமையால் பாவங்கள் செய்தாலும் அதுவும் அவனைப்பொருத்த அளவில் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யப்படும் ; அதை இறைவன் சீர்செய்வார் என்பதாகும் . உலக வாழ்வில் பாவங்களை குறைக்கவே சமப்படுத்தவே பிறவி நீள்கிறது . அப்படியாயின் இப்பிறவியில் வரும் துன்பங்கள் சோதனைகள் கர்மங்களை குறைக்க ஒரே வழி சுமரும் கடமைகள் அனைத்தையும் இறைவன் மீது பாரத்தைப்போட்டு அவருக்காக அவரின் ஏவுதலால் செய்வதாக செய்து அர்ப்பணித்து விட்டு நான் செய்தேன் என்பதை மறந்துவிடுவதாகும் . அவனை பாவங்கள் பற்றாது .

கீதை 18 : 12 இவ்வாறு அர்ப்பணம் செய்யாதவர்கள் பாவங்கள் ; புண்ணியங்கள் இவ்விரண்டும் கலந்தவை என மூன்று வகையான பதிவுகளை ஆத்மாவில் சுமந்தவர்களாக மரணிக்கிறார்கள் . ஆனால் அர்ப்பணித்தவர்களையோ அவை பற்றுவதில்லை .
ஆக துறவு என்பது உலக வாழ்வில் இருந்துகொண்டே மனதால் செயல்கள் அனைத்தையும் கடவுளுக்காக என்று செய்து ஒப்புவித்து விடுவதாகும் என்கிறார் ஸ்ரீகிரிஷ்ணர் .


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 04, 2015 8:00 am

கீதையில் உள்ள உபதேசத்தை இயேசு அவர்கள் அருளுரையுடன் பொருத்தி குறிப்பிட்ட கருத்துக்கு நன்றி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக