புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
52 Posts - 61%
heezulia
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
1 Post - 1%
viyasan
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
244 Posts - 43%
heezulia
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
13 Posts - 2%
prajai
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_m10 இறுதி வரை உறுதி வேண்டும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறுதி வரை உறுதி வேண்டும்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 01, 2015 5:34 am

 இறுதி வரை உறுதி வேண்டும்! YRdd9eTnerRwJUH0zAfQ+helth
-
கடந்த வாரம் மூத்த நண்பர்கள் மூவரோடு கோல்ஃப் ஆடிக்
கொண்டிருந்தேன். மூவருமே 70 வயதைத் தாண்டியவர்கள்.
3 மணி நேரம் எனக்கு இணையாக ஆடிய அவர்களின் உடல்
மற்றும் மன வலிமையைக் கண்டு ஆச்சரியம் தெரிவித்தேன்
-
அந்த மூவரும் இணைந்து, குழந்தைகளால் கைவிடப்பட்ட,
ஒதுக்கித் தள்ளிய, அடித்து துரத்திய, வயோதிக
பெற்றோருக்காக ‘இலவச முதியோர் இல்லம்’ அமைத்து,
மாபெரும் சேவையை செவ்வனே செய்து வருகிறார்கள்
என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது!

எனது ஆச்சரியம் கண்ட அவர்களில் ஒருவர், ஒரு நீதிக் கதையோடு
ஆரம்பித்தார்... ‘‘தலைசிறந்த, ஒழுக்கம் வாய்ந்த, படிப்பறிந்த,
பணக்கார பெற்றோர் தங்களின் குழந்தைகளை சீரும் சிறப்புமாக
வளர்த்து ஆளாக்குகிறார்கள்.

அனைத்துச் செல்வங்களையும் வழங்கி, திருமணம் செய்து வைத்து,
சொத்துகள் அனைத்தையும் எல்லோருக்கும் சமமாக பிரித்து
கொடுத்து, பேரப்பிள்ளைகளைப் பார்த்து சந்தோஷம் அடைகிறார்கள்.
இனி தங்கள் இருவரையும் பிள்ளைகள் பார்த்துக் கொள்வார்கள்
என்ற நம்பிக்கை வந்த போதுதான் வயது முதிர்வு சைத்தானின்
தாண்டவம் தொடங்கியது.

நோய்கள் வந்தன. உடல்நலம் குன்றியது. இனி பெற்றோரால்
பயன் இல்லை என்று தெரிந்து கொண்ட பிள்ளைகளோ,
அவர்களை வைத்து காப்பாற்ற ஆர்வம் காட்டாமல், வெறுத்து
ஒதுக்கி, ஒரு சிறிய வீட்டில் தனியே விட்டு விட்டனர்.

கடைசியில் பெற்றோர் இருவரும் உடல் நொந்து, மனம் வெந்து,
வெம்பி இறந்து விட்டனர். அவர்களின் அடக்கம் முடிந்த பின்,
‘சனியன்களின் தொல்லை தீர்ந்தது’ என பிள்ளைகள்
சந்தோஷமாக இருக்கும் வேளையில், அந்த சிறிய வீட்டில் இருந்த
தாத்தா-பாட்டியின் பொருட்களை பேரப்பிள்ளைகள் சேகரிக்கத்
தொடங்கினார்கள்.

‘ஏன் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள்’
எனக் கேட்ட போது, குழந்தைகள் நிதானமாக கூறினார்கள்...
‘நீங்கள் தாத்தா-பாட்டியை ஒதுக்கி, தனியே வாழ வைத்தது
போல, நாளை உங்களையும் நாங்கள் தனியே விடும் போது,
இதையெல்லாம் கொடுக்கத்தான்!’- என்று’’
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 01, 2015 5:35 am

-
இந்த நீதிக் கதையை முடித்துவிட்டு, முதியோர் இல்லத்தில்,
கொடுமைகள் பல கண்ட ஒரு பெற்றோர் எழுதிய உருக்கமான
கடிதத்தையும் கொடுத்தார். அதன் சாராம்சம்...
-
‘எங்களது பேரன்புக்குரிய பிள்ளைகளே!
நாங்கள் இருவரும் முதுமை அடைந்த பிறகு, முடிகள் பஞ்சு போல
வெளுத்து, விழுந்து, பார்வை மங்கி, பல் எல்லாம் கொட்டி, தோல்
சுருங்கி, அருவெறுப்பான தோற்றத்தோடு, கை, கால், உடல்,
மனவலிமை அனைத்தையும் இழந்து, ஒவ்வொரு நோயாக
எங்களை துவம்சம் செய்ததே... எங்களின் வயோதிகத்தை,
முதுமையின் முடிவை, குழந்தைகளாகிய நீங்கள் பொறுமையாக,
அன்பாக, இயற்கையின் உண்மையாக புரிந்து கொள்வீர்கள் என
நம்பிய எங்கள் நம்பிக்கை சுக்கு நூறாகி விட்டதே!
-
இப்போது வேளாவேளைக்கு முன்பு போல பசி வருவதில்லை.
அப்படி பசி வந்த நேரங்களில், நாங்கள் சாப்பிடும் போது கைகள்
நடுங்கி சிதறும் போதும், கழிவறைக்குப் போக முடியாமல்,
குளிக்கக்கூட தெம்பு இல்லாமல், உடை உடுத்த வலுவிழந்த போதும்,
உடை உடலில் நிற்காது விழுந்த போதும், நீங்கள் எங்களை திட்டி,
கத்திய வார்த்தைகள், இன்றும் காது கேட்காத காதில் ரீங்காரமிடுகிறது.

இதே நிலையில் நீங்கள் குழந்தையாக இருந்த காலகட்டத்தில்,
பேசத் தெரியாத உங்களை பேச வைத்தோம். சாப்பிடத் தெரியாத
உங்களை நிலவைக் காட்டி, இயற்கையைக் காட்டி, பஸ், கார்களை,
சைக்கிள்களை காட்டி ஒவ்வொரு வேளைக்கும் 2 மணி நேரம்
பொறுமையாக ஊட்டினோம்.

குளிக்க முடியாத, தெரியாத உங்களை வெதுவெது நீரில் குளிக்க
வைத்து, விதவிதமான உடைகள் உடுத்தி, பவுடர் அடித்து திருஷ்டிப்
பொட்டு வைத்து அழகு பார்த்தோம்.

உங்களுக்கு நலக்குறைவுகள் வரும் போது, அதிகாலை, மதியம்,
மாலை, நடு இரவு என எந்நேரமானாலும் டாக்டர்களிடம் ஓடி
பணத்தை இறைத்து உயிர் காத்தோம். உயர் கல்வி அளித்தோம்.

உங்களது அனைத்து உரிமைகளுக்காகவும் உண்ணாமல்,
உறங்காமல் உங்களின் முன்னேற்றம் ஒன்றே எங்களின் குறிக்
கோளாக கருதி, எங்களை உங்களுக்காக அர்ப்பணித்ததை
கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க கூடாதா?

உங்கள் குடும்ப வாழ்க்கையில், குழந்தை வளர்ப்பில் ஏதாவது
தவறு இருந்தாலோ, தினசரி வாழ்க்கையின் அணுகுமுறையில்
தவறுகள் செய்யும் போது, ‘இது பின்னால் பேரழிவை ஏற்படுத்துமே’
என பயந்து, அறிவுரை செய்தோம்...

‘வயசான காலத்தில், சும்மா தொண தொணத்து சொன்னதையே
சொல்லிக்கிட்டு எங்கள் உயிரை வாங்குகிறீர்கள்... எங்கேயாவது
போய் தொலைய வேண்டியதுதானே’ என்கிறீர்கள். நீங்கள்
குழந்தையாக இருந்தபோது, உங்களை தூங்க வைக்கும் நேரம்
சொன்ன கதையையே ஆயிரம் தடவை கேட்ட ஞாபகம் இல்லையா,
எங்களது அருமை குழந்தைகளே!நாங்கள் உங்களிடம்
வேண்டுவதெல்லாம்...

*எங்களை வெறுத்து ஒதுக்காதீர்கள்.

*எங்கள் மேல் கோபம் கொள்ளாதீர்கள்.

*உங்களுக்காகவே வாழ்ந்து, உடல்-மன வலிமை அனைத்தையும்
இழந்து, வாழ மனம் இல்லாமல், மரணத்துக்காகக் காத்திருக்கும்
வேளையில் ‘இதைச் செய், அதைச் செய்’ என கட்டாயப்படுத்தாதீர்கள்.

*எங்களின் முதுமைக்கு, வயதுக்கு மரியாதை தாருங்கள்.

*நாங்கள் உங்களோடு இருப்பதால் எங்களக் கண்டு கவலையோ,
பரிதாபமோ அடைய வேண்டிய அவசியம் இல்லை. எங்களை
புரிந்து கொண்டாலே போதும்.

*எங்களால் உங்களுக்கு இப்போது தர முடிவதெல்லாம் ஒன்றே
ஒன்றுதான்... அது ‘எங்களின் ஆசீர்வாதங்கள்!’

கடிதத்தை படித்த முடித்து என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து
ஓடியது. எனது கண்ணீரை துடைத்து விட்ட நண்பர் மேலும் கூறிய
சில வார்த்தைகள்...‘50 வயதை நெருங்கும் போதும், 50 வயதை
தாண்டும் போதும், அனைவரும் உடல்நலத்தை அதிக அக்கறையுடனும்
கவனத்தோடும் பேணிக்காக்க வேண்டியது அவசியம்.

உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும் பட்சத்தில், உங்கள் பிள்ளைகள்,
பேரக்குழந்தைகளை பார்த்துக் கொள்ள, பராமரிக்க, பள்ளிக்கு கூட
அனுப்பி பின்பு அழைத்து வர, சமைக்க, வீட்டுவேலைகள் செய்ய, காய்கறி,
மளிகைக்கடை செல்ல, அவர்கள் சினிமா, கல்யாணம், விசேஷம், வெளியூர்
செல்லும் போது வீட்டையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள என
அனைத்து வேலைகளுக்காகவும் உங்களை வீட்டோடு வைத்துக் கொள்வார்கள்.

இதற்காக உங்கள் பிள்ளைகளிடையே ஒரு போட்டியே நடக்கும். உங்கள்
உடல்நலம் நன்றாக இல்லாவிட்டால் திண்ணையோ, வீட்டின் மூலையோ
முதியோர் இல்லமோதான்.அதனால், டாக்டரின் அறிவுரைக்குப் பிறகு
உடற்பயிற்சியை தொடங்காமல், இளமையில் தொடங்கி, நடுவயதில்
தொடர்ந்து, முதுமையில் உடற்பயிற்சியின் பளு அளவினை குறைத்து,
தொடர்ந்து கொண்டே இருந்தால், இறுதி நாள் வரை மகிழ்ச்சியாக
இருக்கலாம்’
எனக்கூறி எனது ஆச்சரியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எனது
வயோதிக நண்பர்!
-
-------------------------------------------------

முனைவர் மு.ஸ்டாலின் நாகராஜன்
குங்குமம்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக