ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை!

5 posters

Go down

ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை! Empty ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை!

Post by ayyasamy ram Sat Oct 24, 2015 11:05 am

ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை! IPIITNvKQAGD9dpGmYUb+12
-
ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை!
கொதிக்கும் ஆண்கள் நல சங்கம்

‘‘இந்தியாவுல பெண்களை விட ஆண்கள் தற்கொலையில்
ஈடுபடுறது ரெண்டு மடங்கு அதிகம். ஒவ்வொரு 5.84 நிமிஷத்துக்கும்
ஒரு ஆண் தற்கொலை செய்துக்கறதா சொல்லுது நேஷனல் க்ரைம்
ரெக்கார்டு பீரோ. காரணம், பெரும்பாலும் குடும்பப் பிரச்னைகள்
தான்.

ஆண்கள் தற்கொலையில மகாராஷ்டிராவுக்கு அடுத்து
ரெண்டாமிடத்துல இருக்கும் மாநிலம் தமிழ்நாடு.
‘குடும்ப வன்முறை…
பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ன்னு கோஷங்களைக் கேட்டுக்
கேட்டே நாம பழகிட்டோம். சொல்லப் போனா, இந்தியாவில்
ஆண்களுக்குத்தான் பாதுகாப்பில்லை’’ – விரல் நுனி
ஆதாரங்களை விவரித்துப் பேசுகிறார் சுரேஷ் ராம்.

அகில இந்திய ஆண்கள் நலச் சங்கத்தின் அமைப்பாளர். சமீபத்தில்
மேனகா காந்தியுடன் இந்த டேட்டாக்களைச் சொல்லித்தான்
பெரும் விவாதத்தைக் கிளப்பி பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது
இந்த அமைப்பு.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை! Empty Re: ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை!

Post by ayyasamy ram Sat Oct 24, 2015 11:08 am

ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை! GVElYECjTeijlZaO3zBt+12a
--
—-
‘‘மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்ங்கற
பதவியில உட்கார்ந்துட்டா ஆண்களைத் திட்டுறது கடமையாகிடுது.
2008ல இதே சீட்ல அமர்ந்திருந்த ரேணுகா சௌத்ரி, குடும்ப வன்முறை
சட்டங்களைப் பத்தி பேசுறப்ப, ‘இது ஆண்கள் துன்பப்படுறதுக்கான
காலம்’னு பெருமையா சொன்னாங்க.

இப்ப ‘எல்லா வன்முறைகளும் ஆண்கள்கிட்ட இருந்துதான்
தொடங்குது’ன்னு திருவாய் மலர்ந்திருக்காங்க மேனகா காந்தி.
தமிழ்நாட்டுல நடக்குற கொலைகள்ல 40 சதவீதத்துக்கு மேற்பட்டவை
பெண்களால் நடக்குதுன்னு புள்ளிவிவரங்கள் சொல்லுது. அப்புறம்
எப்படி வன்முறை எல்லாத்தையும் ஆண்கள் கணக்குல
எழுதினாங்கன்னு தெரியல.

மேனகா காந்தி சொன்ன இன்னொரு திட்டமும் எங்களை எதிர்க்க
வச்சிருக்கு. அதாவது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் பெண்கள் கிட்ட
மென்மையா, அவங்களுக்கு உதவிகரமா நடந்துக்குற பையன்களுக்கு
அவார்டு கொடுக்கப் போறாங்களாம்.

பையன்னா பெண்ணுக்கு உதவி செய்யணும், பாதுகாக்கணும்.
அவளுக்கு எது நடந்தாலும் அதுக்கு இவன்தான் பொறுப்புன்னு சமூகம்
தருது பாருங்க ஒரு பிரஷர்… அது தாங்காமதான் ஆண்கள் தற்கொலை
அதிகரிச்சிருக்கு. பிஞ்சு வயசுலயே அந்த மன அழுத்தத்தை இவங்க
திணிக்கப் பார்க்குறாங்க.

பிரதமர் மோடி கூட ‘உங்கள் தாயும் சகோதரிகளும் வெட்டவெளியில்
மலம் கழிக்கிறார்கள். இது ஒவ்வொரு ஆண்மகனுக்கும் அவமானம்’னு
ஒருதரம் பேசினார். ஏன், ஆண்கள் வெட்டவெளியில் போகலாமா?
அது அவமானம் இல்லையா? கழிப்பறை இல்லாததால சுகாதாரம்
கெட்டுப் போகுது. அதனால வர்ற நோய்கள் ஆண், பெண் ரெண்டு
பேரையும்தான் பாதிக்கும். சுத்தம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை
ஆம்பளை – பொம்பளைன்னு இழுத்துவிட்டு பாலிடிக்ஸ் பண்ணி
ஆதாயம் தேடப் பார்க்குறாங்க இவங்க!’’
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை! Empty Re: ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை!

Post by ayyasamy ram Sat Oct 24, 2015 11:09 am

‘‘இதில் என்னங்க ஆதாயம்?’’

‘‘நிறைய இருக்கு. பெண்களை தனி ஓட்டு வங்கியா பார்க்குறாங்க
அரசியல்வாதிகள். அதோட, இதில் உலக நாடுகளின் சதியெல்லாம்
இருக்கு. இந்தியாவின் குடும்ப அமைப்பு மேல அமெரிக்காவுக்குப்
பொறாமை. அங்கெல்லாம் முதியோருக்காகவும் வேலையில்லா
பட்டதாரிகளுக்காகவும் அரசாங்கம் காசைக் கொட்டி பட்ஜெட் ஒதுக்க
வேண்டியிருக்கு.

ஆனா, இந்தியாவுல ஒவ்வொரு குடும்பமும் ஒரு அரசாங்கம் மாதிரி.
குடும்பத்துல ஒருத்தனுக்கு வேலை கொடுத்தா கூட அந்த வீடே சச்சரவு
இல்லாம வாழும். குடும்ப அமைப்புன்னு ஒண்ணு இருக்குற வரை
இந்தியா உடையாது. பிரச்னைகள் வராது. அரசாங்கத்துக்கு வீண்
செலவுகள் இருக்காது. அதெல்லாம் ஏன்… குடும்பத்துக்கே ஒரு
பைக்தான்னு இருக்குற வரைக்கும் நுகர்வுக் கலாசாரம் கூட இங்கே
வளராது.

அதனாலதான் இந்தியா, சீனா, ஜப்பான் மாதிரியான கிழக்கு நாடுகள்ல
குடும்ப அமைப்பை சிதறடிக்க எல்லா முயற்சிகளையும் அமெரிக்கா
எடுக்குது. சீனாவிலும் ஜப்பானிலும் அதை ஓரளவு சாதிச்சிட்டாங்க.
இந்தியாவில் அவங்க எதிர்பார்த்த அளவுக்கு ரிசல்ட் இல்ல. அந்த
வெறுப்பைத்தான் ஆட்சியாளர்கள் அடிக்கடி இப்படி வெளிப்படுத்துறாங்க!’’

‘‘இத்தனை நாள் பெண்கள் அடிமைகளா இருந்தாங்களே…
‘இனி ஆண்கள் துன்பப்படும் காலம்’ என்பதில் என்ன தப்பு?’’

‘‘பெண்கள் அடிமைகளா இருந்தாங்களா? இதையே நாம மறுசிந்தனை
செய்யணும். ராமாயணம்னா சீதையை தீக்குளிக்கச் சொன்னதை மட்டும்
தான் பார்க்கறோமே தவிர, மனைவி கேட்ட வரத்தால செத்துப் போன
கணவன், சித்தி வார்த்தைக்காக காட்டுக்குப் போன மகன், தங்கச்சியோட
பழிவாங்கலுக்காக வில்லனா மாறின ராவணன்னு அதோட மறுபக்கத்தைப்
பார்க்கிறதில்லை. வாழ்க்கையிலயும் இப்படித்தான்.

அந்தக் காலத்துலயும் எத்தனையோ பெண்கள் குடும்பத்தோட டிசைடிங்
அத்தாரிட்டியா இருந்திருக்காங்க. என்ன… ‘வீட்டுக்குள்ள நான்
பார்த்துக்கறேன்; வெளி வேலைகளை நீ பார்த்துக்கோ’ன்னு
பொறுப்புகளைப் பிரிச்சிக்கிட்டாங்க. வெளியே போய் சம்பாத்தியம்
கொண்டு வர்ற ஆம்பிளையை உசத்தியாவும் பெண்ணை தாழ்வாவும்
நினைச்சது நம்ம தப்பு.

மாசம் முப்பது நாளும் வெளியே சாப்பிடுற இன்றைய தம்பதிகளைக்
கேட்டுப் பாருங்க. வீட்டில் ஒருத்தர் இருந்து சமைச்சுப் போட்டா அது
எவ்வளவு சேமிப்பு… அதுவே பெரிய சம்பாத்தியம்னு சொல்வாங்க!’’

‘‘மோடி பேசுவது அமெரிக்க சதி, சரி… சராசரி ஆண்களே ஆக்ரோஷமா
பெண்ணியம் பேசுறாங்களே! அதுக்கு என்ன காரணம்?’’

‘‘ஆல்ஃபா மேல் சிஸ்டம்னு ஒண்ணு இருக்கு. ஓநாய்கள் கூட்டத்துல
ஆதிக்கம் நிறைஞ்ச ஆண், தன் கூட்டத்தில் இருக்குற எல்லா
பெண்ணோடும் தான்தான் இன்பம் துய்க்கணும்னு நினைக்கும்.

இதனால இளம் ஜோடிகளை சேரவே விடாம பிரிச்சி விட்டுடும்.
இப்படிப் பிரிக்கிற வேலைதான் ஆண்கள் பேசுற ஃபெமினிஸம்.
வேணும்னா பாருங்க…

இளம் பையன்களை விட மிடில் ஏஜ் ஆண்கள்தான் பெண்ணியம்
அதிகம் பேசுவாங்க. கல்யாணம் ஆகிடுச்சு… நம்ம பாலியல் வாழ்க்கை
முடிஞ்சுடுச்சுங்கற உண்மையை ஏத்துக்க முடியாம செய்யிற வேலை
இது!’’

‘‘நீங்க பேசுறது என்ன? ஆணியமா? இல்ல, ஆண் மேலாதிக்கமா?’’

‘‘இது பால் சமத்துவம். ஆணும் பெண்ணும் ஒரே மாதிரி மதிக்கப்
படணும்னு சொல்றோம். ‘அவங்க ஒருத்தருக்கொருத்தர் எதிரி இல்ல…
அன்பா காதலிச்சு வாழப் பிறந்தவங்க… அதுக்கு அனுமதிங்க’ன்னு
கேட்டுக்கறோம். பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் எல்லாம், ஏதோ
மெஷின் கன்னை பெண்கள்கிட்ட கொடுத்து ‘சுட்டுட்டு வா’ன்னு
சொல்ற மாதிரி இருக்கு. உதாரணத்துக்கு, சமீபத்துல டெல்லியில
நடந்த சம்பவம்.

ஜாஸ்லீன் கவுர்னு ஒரு பொண்ணு… ‘ரோட்ல என்கிட்ட தப்பா
நடந்துக்கிட்டான்’னு ஒரு பையன் போட்டோவை நெட்ல போட்ருச்சு.
அவனை தீவிரவாதி மாதிரி எல்லாரும் கரிச்சுக் கொட்ட
ஆரம்பிச்சிட்டாங்க.

அப்புறம் ஸ்பாட்ல ஒரு தம்பதிதான் ‘பையன் மேல தப்பில்ல. இந்தப்
பொண்ணுதான் உன்னை போலீஸ்ல சிக்க வைக்கிறேன்னு அவனை
மிரட்டுச்சு’ன்னு உண்மையைச் சொன்னாங்க. முதல்ல அந்தப்
பையனை ட்விட்டர்ல திட்டின சோனாக்‌ஷி சின்ஹாவே அதுக்கப்புறம்
வருந்தி ட்வீட் பண்ணியிருந்தாங்க.

இந்தத் தலைமுறையை ஏமாத்த முடியாது. நாங்க காலேஜ்கள்ல போய்
பேசும்போது இளம் பெண்களே ஆண்களுக்கு நேருகிற அநியாயங்களை
ஒப்புக்குறாங்க. 2001ம் வருஷத்துல தற்கொலை செய்துக்கிட்ட பெண்கள்
42,310 பேர். அதுவே 2014ல 42,537 பேர்தான். பெரிய வித்தியாசங்கள் இல்ல.

ஆனா, ஆண்களோட தற்கொலை அபாயகரமா அதிகரிச்சிருக்கு. 2001ல
66,850 பேரா இருந்தது, இப்ப 89,129 பேரா வளர்ந்து நிக்குது.

சமூக அழுத்தமும் பெண்களுக்கு சாதகமான சட்டங்கள் தவறா பயன்
படுத்தப்படுறதும்தான் இதுக்குக் காரணம். இதை இந்தத் தலைமுறைப்
பெண்கள் ஏத்துக்கறாங்க. அதனால எதிர்காலம் பத்தின நம்பிக்கை பிரகாசமா
இருக்கு!’’ பெண்களுக்கு ஆதரவான சட்டங்கள் எல்லாம், ஏதோ மெஷின்
கன்னை பெண்கள்கிட்ட கொடுத்து ‘சுட்டுட்டு வா’ன்னு சொல்ற மாதிரி
இருக்கு.

————————————-
– கோகுலவாச நவநீதன்
நன்றி – குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை! Empty Re: ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை!

Post by mbalasaravanan Sat Oct 24, 2015 4:17 pm

ஆமா உண்மையில் ஆண்கள் பாவம் தான்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை! Empty Re: ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை!

Post by Namasivayam Mu Sun Oct 25, 2015 11:37 am

கொலையும் செய்வாள் பத்தினி என்பதில் ஆண்களின் தற்கொலைகளும் அடக்கம்


http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015

http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை! Empty Re: ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை!

Post by காந்தி மதிவாணன் Sun Oct 25, 2015 2:50 pm

முரட்டுத்தனத்திற்கு எதிரான எல்லா சட்டங்களிலும் அதிமுரட்டுத்தனமான கூறுகள் அவசியம் இருக்கும். எல்லா நிகழ்வுகளும் தமது தடையங்களை நேர்மையாய் விட்டுச்செல்வதில்லை. குற்றங்கள் அதிகமாகவும் துப்பறிவாளர்கள் பற்றாக்குறையாகவும் உள்ள தேசத்தில் உண்மையை மீளுருவாக்கம் செய்வதில் ஞானமும் வேகமும் உள்ள அளவு இதயத்திற்கு இடம் இல்லை. ஒரு அப்பாவியை அழுத்திப்பார்க்காமல் அப்பாவி என்று நிரூபிக்க முடிவதில்லை. தண்டனைச் சட்டங்கள் குற்றவாளிகளை தண்டிப்பதைவிட, அப்பாவிகளை காப்பதைவிட, பொது மனிதர்களை எதிர்காலத்தில் குற்றம் செய்யாமல் மிரட்டுவதில்தான் பெருவெற்றி பெற்றிருக்கின்றன. செய்யாத குற்றத்திற்காக தண்டிக்கப்படாதிருக்க, ஒரு அப்பாவி பெரும்பாவியாகவோ அல்லது வெகுபுத்திசாலியாகவோ இருக்கவேண்டியிருக்கிறது. பிழைப்பதற்கு வல்லமை என்பது உரிமை மட்டுமல்ல, கடமையும் கூட. நல்லவன் வாழ்வான் என்றில்லை; வாழ்தவனே நல்லவனாகிறான்.
காந்தி மதிவாணன்
காந்தி மதிவாணன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 24/10/2015

Back to top Go down

ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை! Empty Re: ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை!

Post by மாணிக்கம் நடேசன் Sun Oct 25, 2015 7:07 pm

எங்கேயும் ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லீங்கோ. வீட்ல ரொம்ப அடி வாங்குறதும்  நாங்க தாங்கோ.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை! Empty Re: ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum