புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- B.VENKATESANபண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
First topic message reminder :
தோல்வி கண்டு துவளாதே!!!
"முடியாதது"- மூளையில்
ஏறினால்...
முடிந்ததும் "முடியாதது"
ஆகி விடும்!!!
நேற்றைய முயற்சி தன்
முன்னேற்றத்தில் கண்ட
வெற்றியே இன்றைய
தோல்வி!!!
முயற்சியின் தளர்ச்சி
தொடங்கிய இடம் -
தோல்வி!!!
முயற்சியின் வளர்ச்சி
முடிந்த இடம் -
வெற்றி!!!
முதல் முயற்சியில்
கிடைத்த வெற்றியில்
முழு ருசி ஏது???
வெற்றியில் கண்ட
பெருமைக்கு ஏது
தோல்வியில் கண்ட
பொறுமை???!!!
எதிர்பார்ப்பது எல்லாம்
நடந்தால் எதார்த்தம்
இறந்து விடும்!!!
எதிர்பார்ப்பு எதார்த்தமாய்
இருந்துவிட்டால் எல்லாம்
வெற்றியாய் அமைந்து விடும்!!!
போராட்டத்தில் பிறந்த நாம்
போராடாமலே இறப்பதோ???
- பா.வெ.
தோல்வி கண்டு துவளாதே!!!
"முடியாதது"- மூளையில்
ஏறினால்...
முடிந்ததும் "முடியாதது"
ஆகி விடும்!!!
நேற்றைய முயற்சி தன்
முன்னேற்றத்தில் கண்ட
வெற்றியே இன்றைய
தோல்வி!!!
முயற்சியின் தளர்ச்சி
தொடங்கிய இடம் -
தோல்வி!!!
முயற்சியின் வளர்ச்சி
முடிந்த இடம் -
வெற்றி!!!
முதல் முயற்சியில்
கிடைத்த வெற்றியில்
முழு ருசி ஏது???
வெற்றியில் கண்ட
பெருமைக்கு ஏது
தோல்வியில் கண்ட
பொறுமை???!!!
எதிர்பார்ப்பது எல்லாம்
நடந்தால் எதார்த்தம்
இறந்து விடும்!!!
எதிர்பார்ப்பு எதார்த்தமாய்
இருந்துவிட்டால் எல்லாம்
வெற்றியாய் அமைந்து விடும்!!!
போராட்டத்தில் பிறந்த நாம்
போராடாமலே இறப்பதோ???
- பா.வெ.
எண்ணம் போல் வாழ்வு
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- B.VENKATESANபண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
விலைநிலம்
விளைநிலத்தின்
பொருள் தொலைந்தது...
பொருள் தேடலில்...
- விலைநிலம் !!!
விளைநிலத்தின்
பொருள் தொலைந்தது...
பொருள் தேடலில்...
- விலைநிலம் !!!
எண்ணம் போல் வாழ்வு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆம் உண்மை தான்
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- B.VENKATESANபண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
இயந்திர இதயம்
இயந்திரம் இதயமாகி விட்டதால்
இதயம் இயந்திரமாகி விட்ட
காலம் இது !!!
வானளாவிய கட்டிடங்கள்
வாகன நெரிசல்
வார இறுதி சொகுசுகள்
வசதி தேடியே வாழ்வு ...
நாசுக்காக நகர்கிறது
நவீன நகர வாழ்க்கை ...!!!
நாவிற்கடியில்
நற்றமிழைப் புதைத்து விட்டு
நா நுனியில் வேற்று மொழி
தேடிப் பிழைக்கிறது
நாகரிகம் !!!
அன்னையாக மாறிவிட்ட
ஆயாக்கள் மத்தியில்
அலுவல்களில் தொலைந்த
அன்னையின் அன்பைத்
தேடுகின்றன குழந்தைகள் !!!
அன்றாட வாழ்வில்
ஆடம்பரம் சேர்க்க
அல்லல் படும் தந்தையிடம்
அரை நொடி சிரிப்பும்
அரிதாகி விட்டது !!!
அன்னை தந்தை அரவணைப்பு
கானல் நீராகி விட்டது
கணிணி மடியில்
கண்மூடுவோர் மத்தியில் !!!
மடியில் கணிணி வைத்து
கொஞ்சிய வேகம் இன்று
மகப்பேறு மருத்துவரிடம்
கெஞ்சும் சோகம் நன்றோ???
முதியோர் இல்லம் வெளியே;
குழந்தைகள் காப்பகம்
வீட்டிலேயே;
இல்லம் இன்னும் வரவில்லை
இவர்களுக்கு மட்டும் !!!
சவ ஊர்வலம் மறைந்து
ஊர்தியில் வலம் வருகின்றன
சவங்கள்...
சுமக்க ஆளின்றி
சுமையாகிப் போன
இவை உண்மையில்
இப்போது தனிப்பிணம் தான் !!!
அமைதியான வாழ்வில்
அடிப்படைத் தேவை மறைந்து
ஆடம்பரத் தேவையே
அடிப்படை ஆகிவிட்டது !!!
புரிதல் எல்லாம்
பிரிதலில் மட்டுமே
நிகழ்கிறது ...
நீதிமன்ற வளாகம்
நிறைகிறது ...
பிரிதல் அன்யோன்யத்தில் !!!
தனக்கோ பிறர்க்கோ
ஒதுக்காத நேரம் ...
வாழ்வியல் நம்மை ஒதுக்க
நாம் ஒதுக்கிய நேரமே !!!
விஞ்ஞானம் தந்த விரைவுகள்
நேரம் குறையவே...
நெஞ்சில் இருக்கும்
ஈரம் குறையவோ???
மழலை மொழியில் கூட
மயங்காத மனம் தேடும் பணம்
மண்ணுக்குள் போகும் வரை
மன அமைதி தருமோ???
உறவுகள் தொலைத்து
வரவுகள் தேடும் வாழ்வில்
உறவாக வருவது
வெறுமை மட்டுமே !!!
- பா.வெ.
இயந்திரம் இதயமாகி விட்டதால்
இதயம் இயந்திரமாகி விட்ட
காலம் இது !!!
வானளாவிய கட்டிடங்கள்
வாகன நெரிசல்
வார இறுதி சொகுசுகள்
வசதி தேடியே வாழ்வு ...
நாசுக்காக நகர்கிறது
நவீன நகர வாழ்க்கை ...!!!
நாவிற்கடியில்
நற்றமிழைப் புதைத்து விட்டு
நா நுனியில் வேற்று மொழி
தேடிப் பிழைக்கிறது
நாகரிகம் !!!
அன்னையாக மாறிவிட்ட
ஆயாக்கள் மத்தியில்
அலுவல்களில் தொலைந்த
அன்னையின் அன்பைத்
தேடுகின்றன குழந்தைகள் !!!
அன்றாட வாழ்வில்
ஆடம்பரம் சேர்க்க
அல்லல் படும் தந்தையிடம்
அரை நொடி சிரிப்பும்
அரிதாகி விட்டது !!!
அன்னை தந்தை அரவணைப்பு
கானல் நீராகி விட்டது
கணிணி மடியில்
கண்மூடுவோர் மத்தியில் !!!
மடியில் கணிணி வைத்து
கொஞ்சிய வேகம் இன்று
மகப்பேறு மருத்துவரிடம்
கெஞ்சும் சோகம் நன்றோ???
முதியோர் இல்லம் வெளியே;
குழந்தைகள் காப்பகம்
வீட்டிலேயே;
இல்லம் இன்னும் வரவில்லை
இவர்களுக்கு மட்டும் !!!
சவ ஊர்வலம் மறைந்து
ஊர்தியில் வலம் வருகின்றன
சவங்கள்...
சுமக்க ஆளின்றி
சுமையாகிப் போன
இவை உண்மையில்
இப்போது தனிப்பிணம் தான் !!!
அமைதியான வாழ்வில்
அடிப்படைத் தேவை மறைந்து
ஆடம்பரத் தேவையே
அடிப்படை ஆகிவிட்டது !!!
புரிதல் எல்லாம்
பிரிதலில் மட்டுமே
நிகழ்கிறது ...
நீதிமன்ற வளாகம்
நிறைகிறது ...
பிரிதல் அன்யோன்யத்தில் !!!
தனக்கோ பிறர்க்கோ
ஒதுக்காத நேரம் ...
வாழ்வியல் நம்மை ஒதுக்க
நாம் ஒதுக்கிய நேரமே !!!
விஞ்ஞானம் தந்த விரைவுகள்
நேரம் குறையவே...
நெஞ்சில் இருக்கும்
ஈரம் குறையவோ???
மழலை மொழியில் கூட
மயங்காத மனம் தேடும் பணம்
மண்ணுக்குள் போகும் வரை
மன அமைதி தருமோ???
உறவுகள் தொலைத்து
வரவுகள் தேடும் வாழ்வில்
உறவாக வருவது
வெறுமை மட்டுமே !!!
- பா.வெ.
எண்ணம் போல் வாழ்வு
- B.VENKATESANபண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
தமிழ்
தோன்று நிலை தொட வொன்னா
தொன்மை தொட்டதென் தேன்தமிழே!!!
பாட்டனும வன்முப் பாட்டனும் பயின்று
பகிர்ந்த தென் பைந்தமிழே !!!
நாவிற் கினியநற் சுவைபொ திந்ததோர்
"ழ"கரம் சூடியதென் நற்றமிழே !!!
இலக்கணம் வழுவா இலக்கிய மெடுத்து
இயம்பிய தென் இயற்றமிழே !!!
முச்சங்கமும் முன்னிலை நல்கி யதோர்
மூத்த மொழியென் முத்தமிழே !!!
தீராச் சுவையிற் திகட்டா தொரு
பாயின்பம் பகர்வதென் தீந்தமிழே !!!
சென்ற விடமெல்லாஞ் சிறப்பு சேர்
செம்மொ ழியென் செந்தமிழே !!!
தென்னன் புகழ் தன்னைதிக்கு தோறும்
தெளித்த தென் தெளிதமிழே !!!
காலத்தா லழியாக் கடவுள் நிலை
கண்ட தென் கன்னித்தமிழே !!!
நாகரிகம் மெல்லநா வடைத்திடினும் நாளும்
நாவில் நவில்வது நறுந்தமிழே !!!
- பா.வெ.
தோன்று நிலை தொட வொன்னா
தொன்மை தொட்டதென் தேன்தமிழே!!!
பாட்டனும வன்முப் பாட்டனும் பயின்று
பகிர்ந்த தென் பைந்தமிழே !!!
நாவிற் கினியநற் சுவைபொ திந்ததோர்
"ழ"கரம் சூடியதென் நற்றமிழே !!!
இலக்கணம் வழுவா இலக்கிய மெடுத்து
இயம்பிய தென் இயற்றமிழே !!!
முச்சங்கமும் முன்னிலை நல்கி யதோர்
மூத்த மொழியென் முத்தமிழே !!!
தீராச் சுவையிற் திகட்டா தொரு
பாயின்பம் பகர்வதென் தீந்தமிழே !!!
சென்ற விடமெல்லாஞ் சிறப்பு சேர்
செம்மொ ழியென் செந்தமிழே !!!
தென்னன் புகழ் தன்னைதிக்கு தோறும்
தெளித்த தென் தெளிதமிழே !!!
காலத்தா லழியாக் கடவுள் நிலை
கண்ட தென் கன்னித்தமிழே !!!
நாகரிகம் மெல்லநா வடைத்திடினும் நாளும்
நாவில் நவில்வது நறுந்தமிழே !!!
- பா.வெ.
எண்ணம் போல் வாழ்வு
- B.VENKATESANபண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
மீண்டும்...
மீண்டும்...
மனம் தேடுகிறது...
கருவறையில்
கண்மூடி
கண்ட தவம்...
தாய் மடியில்
தவழ்ந்த
தருணங்கள்...
தந்தை விரல்
பிடித்து நடந்த
தடங்கள்...
தாத்தா பாட்டியிடம்
கதை கேட்ட
இரவுகள்...
படிப்பில் மூழ்கிய
பள்ளிப் பருவம்...
கனவுகள் துள்ளிய
கல்லூரி நாட்கள்...
முதல் மாத சம்பளம்
வாங்கிய நிறைவு...
திருமண நிகழ்வுகளில்
அரும்பிய வெட்கம்...
குழந்தையின் சிரிப்பில்
குழைந்த மனம்...
கடனில்லா வாழ்வில்
கணநேர உறக்கம்...
பழுத்தபின்
உதிரத் துடிக்கும்
மனமுதிர்ச்சி...
வளங்கொழிக்கும்
வயல்வெளி இயற்கை...
மனிதம் வாழும்
நாகரிக வாழ்க்கை...
- பா.வெ.
மீண்டும்...
மனம் தேடுகிறது...
கருவறையில்
கண்மூடி
கண்ட தவம்...
தாய் மடியில்
தவழ்ந்த
தருணங்கள்...
தந்தை விரல்
பிடித்து நடந்த
தடங்கள்...
தாத்தா பாட்டியிடம்
கதை கேட்ட
இரவுகள்...
படிப்பில் மூழ்கிய
பள்ளிப் பருவம்...
கனவுகள் துள்ளிய
கல்லூரி நாட்கள்...
முதல் மாத சம்பளம்
வாங்கிய நிறைவு...
திருமண நிகழ்வுகளில்
அரும்பிய வெட்கம்...
குழந்தையின் சிரிப்பில்
குழைந்த மனம்...
கடனில்லா வாழ்வில்
கணநேர உறக்கம்...
பழுத்தபின்
உதிரத் துடிக்கும்
மனமுதிர்ச்சி...
வளங்கொழிக்கும்
வயல்வெளி இயற்கை...
மனிதம் வாழும்
நாகரிக வாழ்க்கை...
- பா.வெ.
எண்ணம் போல் வாழ்வு
- B.VENKATESANபண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
விளை(லை)நிலம்
முப்போகம் வெளஞ்ச பூமி
மூனு கூறா கிடக்குது
மூலைக்கு மூலை கிடைக்குது
கூறுபோட்ட பூமிக்குள்ள
கூரைக்கொட்டாய் முளைக்குது
கூட்டம் கூடி நூறு நூறா
கூவி கூவி விக்குது
வரப்பு கட்டி வந்த
வாய்க்கால் கூட
ஈரம் இல்லாம போச்சுது
தார் ரோடா ஆச்சுது
வயல்வெளி பாட்டு எல்லாம்
விளம்பரமா மாறிப் போச்சுது
விதவிதமா பேசுது
பக்கத்து பூமிக்கு கிடைக்காத தண்ணி
பத்து அடியிலேயே கிடைக்குது
பன்னீர் சுவையில இருக்குது
நெல் வெளஞ்ச பூமி இப்போ
கல் வெளஞ்சு நிக்குது எல்லைக்
கல் வெளஞ்சு நிக்குது
களத்துமேடும் காளைமாடும்
காணமலே போச்சுது
கானல் நீரா ஆச்சுது
வாயக்கட்டி வயித்தக்கட்டி
விளைச்ச பூமி
வீட்டைக்கட்டி விலையைக்கூட்டி
விற்பனையாகுது சாமி
பணத்த தின்னா செரிக்குமா???
பட்டினி சாவுதான் குறையுமா???
- பா.வெ.
முப்போகம் வெளஞ்ச பூமி
மூனு கூறா கிடக்குது
மூலைக்கு மூலை கிடைக்குது
கூறுபோட்ட பூமிக்குள்ள
கூரைக்கொட்டாய் முளைக்குது
கூட்டம் கூடி நூறு நூறா
கூவி கூவி விக்குது
வரப்பு கட்டி வந்த
வாய்க்கால் கூட
ஈரம் இல்லாம போச்சுது
தார் ரோடா ஆச்சுது
வயல்வெளி பாட்டு எல்லாம்
விளம்பரமா மாறிப் போச்சுது
விதவிதமா பேசுது
பக்கத்து பூமிக்கு கிடைக்காத தண்ணி
பத்து அடியிலேயே கிடைக்குது
பன்னீர் சுவையில இருக்குது
நெல் வெளஞ்ச பூமி இப்போ
கல் வெளஞ்சு நிக்குது எல்லைக்
கல் வெளஞ்சு நிக்குது
களத்துமேடும் காளைமாடும்
காணமலே போச்சுது
கானல் நீரா ஆச்சுது
வாயக்கட்டி வயித்தக்கட்டி
விளைச்ச பூமி
வீட்டைக்கட்டி விலையைக்கூட்டி
விற்பனையாகுது சாமி
பணத்த தின்னா செரிக்குமா???
பட்டினி சாவுதான் குறையுமா???
- பா.வெ.
எண்ணம் போல் வாழ்வு
- B.VENKATESANபண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
காதல்
மீண்டும் மீண்டும்
மனம் விழைவது...
மீண்டு வர மறுப்பது...
காதல் அரும்பிய
கணநேரத் துளிகள்...
விரும்பியே தொலைத்த
மனதைத் தேடாத
விருப்பங்கள்...
இதயம் தொலைந்த இடம்
இதுதான் என்றறியாத என்
அறியாமை மிகுந்த நொடிகள்...
கண்களில் தொலைத்த
காதலை இதயத்தில் தேடிய
வெகுளித்தனங்கள்...
உயிர் குடிக்கும் பார்வை கொண்டே
உயிர் கொடுக்கும் காதலின்
முரண்பாட்டுத் துளிகள்...
இணை பிரியா
இதழ் விரிகையில்
இடைநின்ற
புன்னகை வரிகள்...
இதுபோதும் எனக்கு என்று
எப்போதும் கூறாத
தாகங்கள்...
தவிப்புகள்...
இதயம் தன்னை
இடம் மாற்றி
இளைப்பாறிய
பொழுதுகள்...
மறுமுறை வர(ம்) ஏ(வா)ங்கிய
மனக்களவுகள்...
மன்மதக் கனவுகள்...
இதழ் வியர்க்கும் வரை
இதயத்தில் காதல் நிலைக்க
விழையும் வேட்கைகள்...
கடைவிழி வழி மடை திறந்த
காதல் வெள்ளத்தில்
கரைசேர முயலும்
என் காளைத்தனமும்...
உன் கோழைத்தனமும்...
கண்கள் வழி பேசிய
முரண்பாட்டு மௌனங்கள் -
காதல் புதினங்கள்;புனிதங்கள்...
விழி ஈர்ப்பும் இதழ் நீர்ப்பும்
விளையாடிய தருணங்கள்...
படிக்கப் படிக்கப் புரியாத
இதழ் கொண்ட வரிகள்...
தேகப்பிழையில் தோய்த்த
தேடலில் வாய்த்த
அந்திப் பிழைகள்...
தேக மோகத்தில்
வேக வைத்த
வெண்ணிற இரவுகள்...
கற்றைக் கூந்தல்
ஒற்றி எடுத்த
கார்கால நீர்த்துளிகள்...
காலடித் தடங்களைக்
களவாடிய
கடல் அலைகள்...
காதல் பற்றிய தருணம்
காதலைப் பற்றி
காகிதம் தாண்டி எழுதிய
பாத வரிப்பள்ளங்கள்...
நிறைவாக...
நிகழ்வுகள் சுமந்த நினைவுகள்
நின்றாடும் நிகழ்காலம்
நிகழ்ந்த வண்ணமே நீள
யாசித்த பொழுதுகள்...
- பா.வெ.
மீண்டும் மீண்டும்
மனம் விழைவது...
மீண்டு வர மறுப்பது...
காதல் அரும்பிய
கணநேரத் துளிகள்...
விரும்பியே தொலைத்த
மனதைத் தேடாத
விருப்பங்கள்...
இதயம் தொலைந்த இடம்
இதுதான் என்றறியாத என்
அறியாமை மிகுந்த நொடிகள்...
கண்களில் தொலைத்த
காதலை இதயத்தில் தேடிய
வெகுளித்தனங்கள்...
உயிர் குடிக்கும் பார்வை கொண்டே
உயிர் கொடுக்கும் காதலின்
முரண்பாட்டுத் துளிகள்...
இணை பிரியா
இதழ் விரிகையில்
இடைநின்ற
புன்னகை வரிகள்...
இதுபோதும் எனக்கு என்று
எப்போதும் கூறாத
தாகங்கள்...
தவிப்புகள்...
இதயம் தன்னை
இடம் மாற்றி
இளைப்பாறிய
பொழுதுகள்...
மறுமுறை வர(ம்) ஏ(வா)ங்கிய
மனக்களவுகள்...
மன்மதக் கனவுகள்...
இதழ் வியர்க்கும் வரை
இதயத்தில் காதல் நிலைக்க
விழையும் வேட்கைகள்...
கடைவிழி வழி மடை திறந்த
காதல் வெள்ளத்தில்
கரைசேர முயலும்
என் காளைத்தனமும்...
உன் கோழைத்தனமும்...
கண்கள் வழி பேசிய
முரண்பாட்டு மௌனங்கள் -
காதல் புதினங்கள்;புனிதங்கள்...
விழி ஈர்ப்பும் இதழ் நீர்ப்பும்
விளையாடிய தருணங்கள்...
படிக்கப் படிக்கப் புரியாத
இதழ் கொண்ட வரிகள்...
தேகப்பிழையில் தோய்த்த
தேடலில் வாய்த்த
அந்திப் பிழைகள்...
தேக மோகத்தில்
வேக வைத்த
வெண்ணிற இரவுகள்...
கற்றைக் கூந்தல்
ஒற்றி எடுத்த
கார்கால நீர்த்துளிகள்...
காலடித் தடங்களைக்
களவாடிய
கடல் அலைகள்...
காதல் பற்றிய தருணம்
காதலைப் பற்றி
காகிதம் தாண்டி எழுதிய
பாத வரிப்பள்ளங்கள்...
நிறைவாக...
நிகழ்வுகள் சுமந்த நினைவுகள்
நின்றாடும் நிகழ்காலம்
நிகழ்ந்த வண்ணமே நீள
யாசித்த பொழுதுகள்...
- பா.வெ.
எண்ணம் போல் வாழ்வு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
அருமையான கவிதை ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு மணிகளாய் தெரிகின்றன .
வெங்கடேசன் அவர்களே... நன்றி ..நன்றி..
வெங்கடேசன் அவர்களே... நன்றி ..நன்றி..
மெய்பொருள் காண்பது அறிவு
- B.VENKATESANபண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
மிக்க நன்றி தோழரே !!! மிக்க நன்றி !!!
எண்ணம் போல் வாழ்வு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எல்லாமே அருமை பா வெ
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|