ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....

+5
tangam
krishnaamma
சசி
ayyasamy ram
B.VENKATESAN
9 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Empty தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....

Post by B.VENKATESAN Mon Oct 12, 2015 11:09 pm

First topic message reminder :

தோல்வி கண்டு துவளாதே!!!


"முடியாதது"- மூளையில்
ஏறினால்...
முடிந்ததும்  "முடியாதது"
ஆகி விடும்!!!

நேற்றைய முயற்சி தன்
முன்னேற்றத்தில் கண்ட
வெற்றியே இன்றைய
தோல்வி!!!

முயற்சியின் தளர்ச்சி
தொடங்கிய இடம் -
தோல்வி!!!

முயற்சியின் வளர்ச்சி
முடிந்த இடம் -
வெற்றி!!!

முதல் முயற்சியில்
கிடைத்த வெற்றியில்
முழு ருசி ஏது???

வெற்றியில் கண்ட
பெருமைக்கு ஏது
தோல்வியில் கண்ட
பொறுமை???!!!

எதிர்பார்ப்பது எல்லாம்
நடந்தால் எதார்த்தம்
இறந்து விடும்!!!

எதிர்பார்ப்பு எதார்த்தமாய்
இருந்துவிட்டால் எல்லாம்
வெற்றியாய் அமைந்து விடும்!!!

போராட்டத்தில் பிறந்த நாம்
போராடாமலே இறப்பதோ???

                                 - பா.வெ.


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Empty Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....

Post by B.VENKATESAN Sat Oct 24, 2015 11:57 pm

விலைநிலம்

விளைநிலத்தின்
பொருள் தொலைந்தது...
பொருள் தேடலில்...
- விலைநிலம் !!!


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Empty Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....

Post by T.N.Balasubramanian Sun Oct 25, 2015 7:18 am

ஆம் உண்மை தான்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Empty Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....

Post by B.VENKATESAN Wed Nov 18, 2015 3:29 am

இயந்திர இதயம்

இயந்திரம் இதயமாகி விட்டதால்
இதயம் இயந்திரமாகி விட்ட
காலம் இது !!!

வானளாவிய கட்டிடங்கள்
வாகன நெரிசல்
வார இறுதி சொகுசுகள்
வசதி தேடியே வாழ்வு ...
நாசுக்காக நகர்கிறது
நவீன நகர வாழ்க்கை ...!!!

நாவிற்கடியில்
நற்றமிழைப் புதைத்து விட்டு
நா நுனியில் வேற்று மொழி
தேடிப் பிழைக்கிறது
நாகரிகம் !!!

அன்னையாக மாறிவிட்ட
ஆயாக்கள் மத்தியில்
அலுவல்களில் தொலைந்த
அன்னையின் அன்பைத்
தேடுகின்றன குழந்தைகள் !!!

அன்றாட வாழ்வில்
ஆடம்பரம் சேர்க்க
அல்லல் படும் தந்தையிடம்
அரை நொடி சிரிப்பும்
அரிதாகி விட்டது !!!

அன்னை தந்தை அரவணைப்பு
கானல் நீராகி விட்டது
கணிணி மடியில்
கண்மூடுவோர் மத்தியில் !!!

மடியில் கணிணி வைத்து
கொஞ்சிய வேகம் இன்று
மகப்பேறு மருத்துவரிடம்
கெஞ்சும் சோகம் நன்றோ???

முதியோர் இல்லம் வெளியே;
குழந்தைகள் காப்பகம்
வீட்டிலேயே;
இல்லம் இன்னும் வரவில்லை
இவர்களுக்கு மட்டும் !!!

சவ ஊர்வலம் மறைந்து
ஊர்தியில் வலம் வருகின்றன
சவங்கள்...
சுமக்க ஆளின்றி
சுமையாகிப் போன
இவை உண்மையில்
இப்போது தனிப்பிணம் தான் !!!

அமைதியான வாழ்வில்
அடிப்படைத் தேவை மறைந்து
ஆடம்பரத் தேவையே
அடிப்படை ஆகிவிட்டது !!!

புரிதல் எல்லாம்
பிரிதலில் மட்டுமே
நிகழ்கிறது ...
நீதிமன்ற வளாகம்
நிறைகிறது ...
பிரிதல் அன்யோன்யத்தில் !!!

தனக்கோ பிறர்க்கோ
ஒதுக்காத நேரம் ...
வாழ்வியல் நம்மை ஒதுக்க
நாம் ஒதுக்கிய நேரமே !!!

விஞ்ஞானம் தந்த விரைவுகள்
நேரம் குறையவே...
நெஞ்சில் இருக்கும்
ஈரம் குறையவோ???

மழலை மொழியில் கூட
மயங்காத மனம் தேடும் பணம்
மண்ணுக்குள் போகும் வரை
மன அமைதி தருமோ???

உறவுகள் தொலைத்து
வரவுகள் தேடும் வாழ்வில்
உறவாக வருவது
வெறுமை மட்டுமே !!!

- பா.வெ.


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Empty Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....

Post by B.VENKATESAN Wed Nov 18, 2015 3:30 am

தமிழ்

தோன்று நிலை தொட வொன்னா
தொன்மை தொட்டதென் தேன்தமிழே!!!

பாட்டனும வன்முப் பாட்டனும் பயின்று
பகிர்ந்த தென் பைந்தமிழே !!!

நாவிற் கினியநற் சுவைபொ திந்ததோர்
"ழ"கரம் சூடியதென் நற்றமிழே !!!

இலக்கணம் வழுவா இலக்கிய மெடுத்து
இயம்பிய தென் இயற்றமிழே !!!

முச்சங்கமும் முன்னிலை நல்கி யதோர்
மூத்த மொழியென் முத்தமிழே !!!

தீராச் சுவையிற் திகட்டா தொரு
பாயின்பம் பகர்வதென் தீந்தமிழே !!!

சென்ற விடமெல்லாஞ் சிறப்பு சேர்
செம்மொ ழியென் செந்தமிழே !!!

தென்னன் புகழ் தன்னைதிக்கு தோறும்
தெளித்த தென் தெளிதமிழே !!!

காலத்தா லழியாக் கடவுள் நிலை
கண்ட தென் கன்னித்தமிழே !!!

நாகரிகம் மெல்லநா வடைத்திடினும் நாளும்
நாவில் நவில்வது நறுந்தமிழே !!!

- பா.வெ.


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Empty Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....

Post by B.VENKATESAN Wed Nov 18, 2015 3:31 am

மீண்டும்...
மீண்டும்...
மனம் தேடுகிறது...

கருவறையில்
கண்மூடி
கண்ட தவம்...

தாய் மடியில்
தவழ்ந்த
தருணங்கள்...

தந்தை விரல்
பிடித்து நடந்த
தடங்கள்...

தாத்தா பாட்டியிடம்
கதை கேட்ட
இரவுகள்...

படிப்பில் மூழ்கிய
பள்ளிப் பருவம்...

கனவுகள் துள்ளிய
கல்லூரி நாட்கள்...

முதல் மாத சம்பளம்
வாங்கிய நிறைவு...

திருமண நிகழ்வுகளில்
அரும்பிய வெட்கம்...

குழந்தையின் சிரிப்பில்
குழைந்த மனம்...

கடனில்லா வாழ்வில்
கணநேர உறக்கம்...

பழுத்தபின்
உதிரத் துடிக்கும்
மனமுதிர்ச்சி...

வளங்கொழிக்கும்
வயல்வெளி இயற்கை...

மனிதம் வாழும்
நாகரிக வாழ்க்கை...


- பா.வெ.


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Empty Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....

Post by B.VENKATESAN Wed Nov 18, 2015 3:32 am

விளை(லை)நிலம்

முப்போகம் வெளஞ்ச பூமி
மூனு கூறா கிடக்குது
மூலைக்கு மூலை கிடைக்குது

கூறுபோட்ட பூமிக்குள்ள
கூரைக்கொட்டாய் முளைக்குது
கூட்டம் கூடி நூறு நூறா
கூவி கூவி விக்குது

வரப்பு கட்டி வந்த
வாய்க்கால் கூட
ஈரம் இல்லாம போச்சுது
தார் ரோடா ஆச்சுது

வயல்வெளி பாட்டு எல்லாம்
விளம்பரமா மாறிப் போச்சுது
விதவிதமா பேசுது

பக்கத்து பூமிக்கு கிடைக்காத தண்ணி
பத்து அடியிலேயே கிடைக்குது
பன்னீர் சுவையில இருக்குது

நெல் வெளஞ்ச பூமி இப்போ
கல் வெளஞ்சு நிக்குது எல்லைக்
கல் வெளஞ்சு நிக்குது

களத்துமேடும் காளைமாடும்
காணமலே போச்சுது
கானல் நீரா ஆச்சுது

வாயக்கட்டி வயித்தக்கட்டி
விளைச்ச பூமி
வீட்டைக்கட்டி விலையைக்கூட்டி
விற்பனையாகுது சாமி

பணத்த தின்னா செரிக்குமா???
பட்டினி சாவுதான் குறையுமா???

- பா.வெ.


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Empty Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....

Post by B.VENKATESAN Wed Nov 18, 2015 3:33 am

காதல்

மீண்டும் மீண்டும்
மனம் விழைவது...
மீண்டு வர மறுப்பது...

காதல் அரும்பிய
கணநேரத் துளிகள்...

விரும்பியே தொலைத்த
மனதைத் தேடாத
விருப்பங்கள்...

இதயம் தொலைந்த இடம்
இதுதான் என்றறியாத என்
அறியாமை மிகுந்த நொடிகள்...

கண்களில் தொலைத்த
காதலை இதயத்தில் தேடிய
வெகுளித்தனங்கள்...

உயிர் குடிக்கும் பார்வை கொண்டே
உயிர் கொடுக்கும் காதலின்
முரண்பாட்டுத் துளிகள்...

இணை பிரியா
இதழ் விரிகையில்
இடைநின்ற
புன்னகை வரிகள்...

இதுபோதும் எனக்கு என்று
எப்போதும் கூறாத
தாகங்கள்...
தவிப்புகள்...

இதயம் தன்னை
இடம் மாற்றி
இளைப்பாறிய
பொழுதுகள்...

மறுமுறை வர(ம்) ஏ(வா)ங்கிய
மனக்களவுகள்...
மன்மதக் கனவுகள்...

இதழ் வியர்க்கும் வரை
இதயத்தில் காதல் நிலைக்க
விழையும் வேட்கைகள்...

கடைவிழி வழி மடை திறந்த
காதல் வெள்ளத்தில்
கரைசேர முயலும்
என் காளைத்தனமும்...
உன் கோழைத்தனமும்...

கண்கள் வழி பேசிய
முரண்பாட்டு மௌனங்கள் -
காதல் புதினங்கள்;புனிதங்கள்...

விழி ஈர்ப்பும் இதழ் நீர்ப்பும்
விளையாடிய தருணங்கள்...

படிக்கப் படிக்கப் புரியாத
இதழ் கொண்ட வரிகள்...

தேகப்பிழையில் தோய்த்த
தேடலில் வாய்த்த
அந்திப் பிழைகள்...

தேக மோகத்தில்
வேக வைத்த
வெண்ணிற இரவுகள்...

கற்றைக் கூந்தல்
ஒற்றி எடுத்த
கார்கால நீர்த்துளிகள்...

காலடித் தடங்களைக்
களவாடிய
கடல் அலைகள்...

காதல் பற்றிய தருணம்
காதலைப் பற்றி
காகிதம் தாண்டி எழுதிய
பாத வரிப்பள்ளங்கள்...

நிறைவாக...
நிகழ்வுகள் சுமந்த நினைவுகள்
நின்றாடும் நிகழ்காலம்
நிகழ்ந்த வண்ணமே நீள
யாசித்த பொழுதுகள்...

- பா.வெ.


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Empty Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....

Post by K.Senthil kumar Wed Nov 18, 2015 6:09 am

அருமையான கவிதை ஒவ்வொரு வார்த்தைகளும் ஒவ்வொரு மணிகளாய் தெரிகின்றன .
வெங்கடேசன் அவர்களே... நன்றி ..நன்றி.. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

Back to top Go down

தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Empty Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....

Post by B.VENKATESAN Wed Nov 18, 2015 8:32 am

மிக்க நன்றி தோழரே !!! மிக்க நன்றி !!!


எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்


பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

Back to top Go down

தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Empty Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....

Post by T.N.Balasubramanian Wed Nov 18, 2015 8:53 pm

எல்லாமே அருமை பா வெ

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... - Page 4 Empty Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum