Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
+5
tangam
krishnaamma
சசி
ayyasamy ram
B.VENKATESAN
9 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
First topic message reminder :
தோல்வி கண்டு துவளாதே!!!
"முடியாதது"- மூளையில்
ஏறினால்...
முடிந்ததும் "முடியாதது"
ஆகி விடும்!!!
நேற்றைய முயற்சி தன்
முன்னேற்றத்தில் கண்ட
வெற்றியே இன்றைய
தோல்வி!!!
முயற்சியின் தளர்ச்சி
தொடங்கிய இடம் -
தோல்வி!!!
முயற்சியின் வளர்ச்சி
முடிந்த இடம் -
வெற்றி!!!
முதல் முயற்சியில்
கிடைத்த வெற்றியில்
முழு ருசி ஏது???
வெற்றியில் கண்ட
பெருமைக்கு ஏது
தோல்வியில் கண்ட
பொறுமை???!!!
எதிர்பார்ப்பது எல்லாம்
நடந்தால் எதார்த்தம்
இறந்து விடும்!!!
எதிர்பார்ப்பு எதார்த்தமாய்
இருந்துவிட்டால் எல்லாம்
வெற்றியாய் அமைந்து விடும்!!!
போராட்டத்தில் பிறந்த நாம்
போராடாமலே இறப்பதோ???
- பா.வெ.
தோல்வி கண்டு துவளாதே!!!
"முடியாதது"- மூளையில்
ஏறினால்...
முடிந்ததும் "முடியாதது"
ஆகி விடும்!!!
நேற்றைய முயற்சி தன்
முன்னேற்றத்தில் கண்ட
வெற்றியே இன்றைய
தோல்வி!!!
முயற்சியின் தளர்ச்சி
தொடங்கிய இடம் -
தோல்வி!!!
முயற்சியின் வளர்ச்சி
முடிந்த இடம் -
வெற்றி!!!
முதல் முயற்சியில்
கிடைத்த வெற்றியில்
முழு ருசி ஏது???
வெற்றியில் கண்ட
பெருமைக்கு ஏது
தோல்வியில் கண்ட
பொறுமை???!!!
எதிர்பார்ப்பது எல்லாம்
நடந்தால் எதார்த்தம்
இறந்து விடும்!!!
எதிர்பார்ப்பு எதார்த்தமாய்
இருந்துவிட்டால் எல்லாம்
வெற்றியாய் அமைந்து விடும்!!!
போராட்டத்தில் பிறந்த நாம்
போராடாமலே இறப்பதோ???
- பா.வெ.
எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
ஒருதலைக் காதல் - 1
காதல் ஒப்புகை கண்களில் சொட்ட
காதலி நெருங்கினாள் மெல்ல ...
கண்கள் தொடர கைகள் படர
கவிதை ஒன்று மலர்ந்தது!!!
இருவருக்கும் இருந்த நெருக்கம்
இடையில் செல்ல இடமின்றி
இடவலமாய் சென்றது காற்று !!!
விட்டு விட்டு துடித்த இதயம்
விடாது துடித்தது...
விட்டு விடாதே என்று...
விடவில்லை நானும்
விடை பெறவில்லை அவளும் ...
சற்று நேரத்தில் ...
இன்னுமா நீ முழிக்கல...
மணி ஆகுது பாரு...
சீக்கிரம் எழுந்திரி...
- ஒருதலைக் காதல்!!!
- பா.வெ.
காதல் ஒப்புகை கண்களில் சொட்ட
காதலி நெருங்கினாள் மெல்ல ...
கண்கள் தொடர கைகள் படர
கவிதை ஒன்று மலர்ந்தது!!!
இருவருக்கும் இருந்த நெருக்கம்
இடையில் செல்ல இடமின்றி
இடவலமாய் சென்றது காற்று !!!
விட்டு விட்டு துடித்த இதயம்
விடாது துடித்தது...
விட்டு விடாதே என்று...
விடவில்லை நானும்
விடை பெறவில்லை அவளும் ...
சற்று நேரத்தில் ...
இன்னுமா நீ முழிக்கல...
மணி ஆகுது பாரு...
சீக்கிரம் எழுந்திரி...
- ஒருதலைக் காதல்!!!
- பா.வெ.
எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
கவித்துளிகள் - 2
கற்பனை விதையில்
முளைத்த கதை - கவிதை !!!
எதிர்பார்ப்பிற்கும்
எதார்த்தத்திற்கும்
இடையே நின்ற
இடைவெளி - ஏமாற்றம் !!!
வரையறை இல்லாத
நிறைவை நோக்கிய
நிகழ்கால பயணம் - வாழ்க்கை !!!
கரை மோதும் கடல் அலைகள்...
காலம் தரும் - இன்பதுன்பங்கள் !!!
கடல் அலையில் துள்ளி ஆடும்
காகித ஓடம் - இளமை !!!
- பா.வெ.
கற்பனை விதையில்
முளைத்த கதை - கவிதை !!!
எதிர்பார்ப்பிற்கும்
எதார்த்தத்திற்கும்
இடையே நின்ற
இடைவெளி - ஏமாற்றம் !!!
வரையறை இல்லாத
நிறைவை நோக்கிய
நிகழ்கால பயணம் - வாழ்க்கை !!!
கரை மோதும் கடல் அலைகள்...
காலம் தரும் - இன்பதுன்பங்கள் !!!
கடல் அலையில் துள்ளி ஆடும்
காகித ஓடம் - இளமை !!!
- பா.வெ.
எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
கவித்துளிகள் - 3
கைகள் கூடுதல்
கைகூடாத வரை
காதல் இன்பம்
குறைவதில்லை
கனவில்!!! - ஒருதலைக்காதல்!!!
தனிமைக் கடலில்
கற்பனை ஓடம் கொண்டு
கருத்து வலை வீசி
கவிதை மீன் பிடிக்கும்
கலைஞன் - கவிஞன்!!!
கற்பனை வெள்ளத்தை
கருத்துமடை போட்டு
கடந்த நிகழ்வுகள் கொண்டு
கவி விளைக்கும்
வல்லமை - புலமை!!!
எண்ணிய ஆசையை
அடைந்து துய்க்கும் வேளை...
இடைவிடாத எண்ண போராட்டம்
இயல்புநிலை திரும்பும்
சில நொடி இதம் - இன்பம் !!!
கைகள் கூடுதல்
கைகூடாத வரை
காதல் இன்பம்
குறைவதில்லை
கனவில்!!! - ஒருதலைக்காதல்!!!
தனிமைக் கடலில்
கற்பனை ஓடம் கொண்டு
கருத்து வலை வீசி
கவிதை மீன் பிடிக்கும்
கலைஞன் - கவிஞன்!!!
கற்பனை வெள்ளத்தை
கருத்துமடை போட்டு
கடந்த நிகழ்வுகள் கொண்டு
கவி விளைக்கும்
வல்லமை - புலமை!!!
எண்ணிய ஆசையை
அடைந்து துய்க்கும் வேளை...
இடைவிடாத எண்ண போராட்டம்
இயல்புநிலை திரும்பும்
சில நொடி இதம் - இன்பம் !!!
எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
இனி ஏது இவை எல்லாம் ???
கருவறை கண்ட பின்
கல்லறை காணும் வரை
காணும் அனுபவம்
கணக்கற்றதாயினும்...
குழந்தைப் பருவத்தில்
கூடுதல் சுகமே !!!
நடை வண்டி பயிற்சியும்
நரம்பு பையில் புத்தகங்களும்
நுனா தேரும் நுங்கு வண்டியும்
குரங்கு பெடல் மிதிவண்டி காயங்களும்
குண்டுமணி பதித்த
களிமண் பொம்மைகளும்
பஞ்சு தாத்தா பறக்க விட்டதும்
பனம் பழம் சுட்டுத் தின்றதும்
பானைக்குள் மீன் பிடித்ததும்
பெட்டி அடைத்த தொலைக்காட்சி பெட்டியும்
பெட்ருமாஸ் விளக்கு எரிந்த
பெட்டிக் கடைகளும்
பெயிண்ட் அடிக்கப்பட்ட
மாட்டுக் கொம்புகளும்
கண்ணாமூச்சி, கபடி, பம்பரம்,
கோலி, கிட்டிப்புள், குதிரையேற்றம்,
சில்லுக்கோடு, சூட்டுக்காய், பகடை,
பாண்டி, பேபே,பல்லாங்குழி, பரமபதம், டயர் வண்டிப் போட்டி, நண்டூருது நரியூருது, இன்னும் சொல்ல
மறந்த ஏராளமும்
ஐந்து பைசா பத்து பைசா மிட்டாயும்
ஐந்து ரூபாய் திருவிழா கடை சர்பத்தும்
ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தில்
குட்டி போட்ட மயிலிறகும்
பனை மட்டை காத்தாடியும்
பரணி வைத்த மாட்டுத் தொழுவமும்
படச்சுருள் கொண்டு பார்த்த
வேட்டிப் படங்களும்
அம்மியும் திருவையும்
ஆட்டுக்கல் மாவில் சுட்ட தோசையும்
உரலில் குத்திய நெல்லும்
உறியில் கட்டிய தயிறும்
உண்டியல் பணத்தில் வாங்கிய
முதல் இங்க் பேனாவும்
ஊர்புற தொலைக்காட்சியில்
ஒன்றாய் அமர்ந்து ரசித்த
ஒளியும் ஒலியும் ஒணிடா மண்டையும்
ஊஞ்சலாடிய ஆலமர விழுதுகளும்
பசி மறந்து பங்குனி வெயிலில்
ஆடிய ஆட்டமும்
பதனீர் குடிக்க ஓடிய ஓட்டமும்
பக்கத்து வீட்டு சமையல் அன்பும்
பக்கத்து ஊர் வரை சென்று
பிடித்த பட்டாம்பூச்சியும்
பின்ன மரத்தில் ஏறிப் பிடித்த
பொன் வண்டுகளும்
பார்த்து பார்த்து கட்டிய
மணல் வீடுகளும்
கூட்டு வண்டியும் கூட்டாஞ்சோறும்
குரும்பைத் தேரும் கொல்லைப்புற
குப்பைக் குழியும்
கூடை வைத்த குண்டு பல்பும்
கூடை வைத்து குருவி பிடித்ததும்
கூராய் சீவ முயன்ற
பென்சில் காயங்களும்
பூவரச இலையில் செய்த பீப்பியும்
பூதக் கண்ணாடி ஒளியில் எரிந்த சருகும்
பூம்பூம் மாட்டின்
தலையாட்டல் ஒலிகளும்
கல்லு சிலேட்டும் கோவை இலை
அழிப்பானும்
கெண்டியில் சுவைத்த தேனீரும்
கரகாட்டம் மயிலாட்டம்
ஒயிலாட்டம் காண ஓடி வரும்
திருவிழா கூட்டமும்
மரப்பலகையும் மட்பாண்ட சமையலும் மரப்பாச்சி
பொம்மைகளும்
மழைக்கால கப்பலும்
மண்பூசிய வீடுகளும்
மார்கழி மாத தாதர் தாத்தாவும்
விடிய விடிய விழித்து செய்த
தீபாவளி பலகாரமும்
வீடு வீடாய் பகிர்ந்த பரிமாற்றமும்
விறகு அடுப்பு சமையலில்
கண்ட சுவையும்
அனைவரின் அரவணைப்பில்
கிட்டிய அன்பும்
அரைஞாண் கயிற்றில்
கட்டிய கண்டிப்பும்
ஆல் இந்தியா ரேடியோவும்
ஆகாச வானியும்
ஆடிப்பெருக்கில் ஆற்றில்
தேடிய பேரிக்காயும்
வைக்கோல்போர் அருகே
தட்டிய வரட்டியும்
வயல்வெளி பனைமர
தூக்கனாங்குருவிக் கூடும்
ரிப்பன் கட்டிய
ரெட்டை சடையும்
தாத்தா காட்டிய
ரெட்டைவால் குருவியும்
நித்தம் விரும்பிய நிலாச் சோறும்
ரத்தம் அரும்பிய தை மாத பல் ஈறும்
திண்ணையில் சுற்றிய
தேக்கு மர தூண்களும்
தென்னையில் கிடைத்த
புயல்கால குருத்துகளும்
சிமிலி விளக்கும் சுரைக்குடுக்கும்
சில தடவை கேட்ட
ஒப்பாரியும் தாலாட்டும்
நெல் முளை விட்டதும் நெல் கீறி
பல் முளை விட்டதும்
கொல்லையில் அவித்த நெல்லும்
துண்டு போட்டு உடும்பு பிடித்ததும்
தூண்டில் போட்டு பாம்பு மாட்டியதும்
நலம் நாடிய கடிதங்களும்
மனம் வாடிய தந்திகளும்
வாழ்த்து கூறிய பொங்கல்
வாழ்த்து அட்டைகளும்
குதிரிலும் பத்தாயத்திலும்
நிறைந்த நெல்லை அண்டி
வந்த அந்துப் பூச்சிகளும்
மரத்தில் விண்மீன்களைக் காட்டிய
மின்மினிப் பூச்சிகளும்
கொடுக்கா புளியும்
தண்ணீர் கொடுத்தான் பழமும்
குளத்தில் போட்ட
கண் சிவந்த குளியலும்
வாழைச் சருகில் சாப்பிட்ட இட்லியும்
வடகம் காய வைத்த
முற்றம் வைத்த ஓட்டு வீடும்
இரவு நேர தாத்தா பாட்டி கதைகளும்!!!
இதில் சொல்லி விட்ட நிகழ்வுகளும்
சொல்ல விட்ட நிகழ்வுகளும்
ம(றை)றந்து விட்ட மகிழ்ச்சிகளே !!!
இந்த தலைமுறையோடு
முடிந்தது எல்லாம்.!!!
இனி ஏது இவை எல்லாம் ???
- பா.வெ.
கருவறை கண்ட பின்
கல்லறை காணும் வரை
காணும் அனுபவம்
கணக்கற்றதாயினும்...
குழந்தைப் பருவத்தில்
கூடுதல் சுகமே !!!
நடை வண்டி பயிற்சியும்
நரம்பு பையில் புத்தகங்களும்
நுனா தேரும் நுங்கு வண்டியும்
குரங்கு பெடல் மிதிவண்டி காயங்களும்
குண்டுமணி பதித்த
களிமண் பொம்மைகளும்
பஞ்சு தாத்தா பறக்க விட்டதும்
பனம் பழம் சுட்டுத் தின்றதும்
பானைக்குள் மீன் பிடித்ததும்
பெட்டி அடைத்த தொலைக்காட்சி பெட்டியும்
பெட்ருமாஸ் விளக்கு எரிந்த
பெட்டிக் கடைகளும்
பெயிண்ட் அடிக்கப்பட்ட
மாட்டுக் கொம்புகளும்
கண்ணாமூச்சி, கபடி, பம்பரம்,
கோலி, கிட்டிப்புள், குதிரையேற்றம்,
சில்லுக்கோடு, சூட்டுக்காய், பகடை,
பாண்டி, பேபே,பல்லாங்குழி, பரமபதம், டயர் வண்டிப் போட்டி, நண்டூருது நரியூருது, இன்னும் சொல்ல
மறந்த ஏராளமும்
ஐந்து பைசா பத்து பைசா மிட்டாயும்
ஐந்து ரூபாய் திருவிழா கடை சர்பத்தும்
ஐந்தாம் வகுப்பு பாட புத்தகத்தில்
குட்டி போட்ட மயிலிறகும்
பனை மட்டை காத்தாடியும்
பரணி வைத்த மாட்டுத் தொழுவமும்
படச்சுருள் கொண்டு பார்த்த
வேட்டிப் படங்களும்
அம்மியும் திருவையும்
ஆட்டுக்கல் மாவில் சுட்ட தோசையும்
உரலில் குத்திய நெல்லும்
உறியில் கட்டிய தயிறும்
உண்டியல் பணத்தில் வாங்கிய
முதல் இங்க் பேனாவும்
ஊர்புற தொலைக்காட்சியில்
ஒன்றாய் அமர்ந்து ரசித்த
ஒளியும் ஒலியும் ஒணிடா மண்டையும்
ஊஞ்சலாடிய ஆலமர விழுதுகளும்
பசி மறந்து பங்குனி வெயிலில்
ஆடிய ஆட்டமும்
பதனீர் குடிக்க ஓடிய ஓட்டமும்
பக்கத்து வீட்டு சமையல் அன்பும்
பக்கத்து ஊர் வரை சென்று
பிடித்த பட்டாம்பூச்சியும்
பின்ன மரத்தில் ஏறிப் பிடித்த
பொன் வண்டுகளும்
பார்த்து பார்த்து கட்டிய
மணல் வீடுகளும்
கூட்டு வண்டியும் கூட்டாஞ்சோறும்
குரும்பைத் தேரும் கொல்லைப்புற
குப்பைக் குழியும்
கூடை வைத்த குண்டு பல்பும்
கூடை வைத்து குருவி பிடித்ததும்
கூராய் சீவ முயன்ற
பென்சில் காயங்களும்
பூவரச இலையில் செய்த பீப்பியும்
பூதக் கண்ணாடி ஒளியில் எரிந்த சருகும்
பூம்பூம் மாட்டின்
தலையாட்டல் ஒலிகளும்
கல்லு சிலேட்டும் கோவை இலை
அழிப்பானும்
கெண்டியில் சுவைத்த தேனீரும்
கரகாட்டம் மயிலாட்டம்
ஒயிலாட்டம் காண ஓடி வரும்
திருவிழா கூட்டமும்
மரப்பலகையும் மட்பாண்ட சமையலும் மரப்பாச்சி
பொம்மைகளும்
மழைக்கால கப்பலும்
மண்பூசிய வீடுகளும்
மார்கழி மாத தாதர் தாத்தாவும்
விடிய விடிய விழித்து செய்த
தீபாவளி பலகாரமும்
வீடு வீடாய் பகிர்ந்த பரிமாற்றமும்
விறகு அடுப்பு சமையலில்
கண்ட சுவையும்
அனைவரின் அரவணைப்பில்
கிட்டிய அன்பும்
அரைஞாண் கயிற்றில்
கட்டிய கண்டிப்பும்
ஆல் இந்தியா ரேடியோவும்
ஆகாச வானியும்
ஆடிப்பெருக்கில் ஆற்றில்
தேடிய பேரிக்காயும்
வைக்கோல்போர் அருகே
தட்டிய வரட்டியும்
வயல்வெளி பனைமர
தூக்கனாங்குருவிக் கூடும்
ரிப்பன் கட்டிய
ரெட்டை சடையும்
தாத்தா காட்டிய
ரெட்டைவால் குருவியும்
நித்தம் விரும்பிய நிலாச் சோறும்
ரத்தம் அரும்பிய தை மாத பல் ஈறும்
திண்ணையில் சுற்றிய
தேக்கு மர தூண்களும்
தென்னையில் கிடைத்த
புயல்கால குருத்துகளும்
சிமிலி விளக்கும் சுரைக்குடுக்கும்
சில தடவை கேட்ட
ஒப்பாரியும் தாலாட்டும்
நெல் முளை விட்டதும் நெல் கீறி
பல் முளை விட்டதும்
கொல்லையில் அவித்த நெல்லும்
துண்டு போட்டு உடும்பு பிடித்ததும்
தூண்டில் போட்டு பாம்பு மாட்டியதும்
நலம் நாடிய கடிதங்களும்
மனம் வாடிய தந்திகளும்
வாழ்த்து கூறிய பொங்கல்
வாழ்த்து அட்டைகளும்
குதிரிலும் பத்தாயத்திலும்
நிறைந்த நெல்லை அண்டி
வந்த அந்துப் பூச்சிகளும்
மரத்தில் விண்மீன்களைக் காட்டிய
மின்மினிப் பூச்சிகளும்
கொடுக்கா புளியும்
தண்ணீர் கொடுத்தான் பழமும்
குளத்தில் போட்ட
கண் சிவந்த குளியலும்
வாழைச் சருகில் சாப்பிட்ட இட்லியும்
வடகம் காய வைத்த
முற்றம் வைத்த ஓட்டு வீடும்
இரவு நேர தாத்தா பாட்டி கதைகளும்!!!
இதில் சொல்லி விட்ட நிகழ்வுகளும்
சொல்ல விட்ட நிகழ்வுகளும்
ம(றை)றந்து விட்ட மகிழ்ச்சிகளே !!!
இந்த தலைமுறையோடு
முடிந்தது எல்லாம்.!!!
இனி ஏது இவை எல்லாம் ???
- பா.வெ.
எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
கவித்துளிகள்-1
பிரம்மன் படைப்பில் பிறழாத
கவிதை - காதல்!!!
தேகக் கவர்ச்சியில் திரண்ட
உணர்ச்சி - காமம்!!!
எண்ணிரு ராகங்களில் எங்குமில்லா
இசை- மழலை மொழி!!!
நிகழ்வினை- வினையாலணையும் பெயராய் நனவு தொலைத்த
நினைவு-கனவு!!!
எண்ணம் தேய்ந்து எல்லாம் ஓய்ந்து
உலகம் மறந்த இடைவேளை- உறக்கம்!!!
பிரம்மன் படைப்பில் பிறழாத
கவிதை - காதல்!!!
தேகக் கவர்ச்சியில் திரண்ட
உணர்ச்சி - காமம்!!!
எண்ணிரு ராகங்களில் எங்குமில்லா
இசை- மழலை மொழி!!!
நிகழ்வினை- வினையாலணையும் பெயராய் நனவு தொலைத்த
நினைவு-கனவு!!!
எண்ணம் தேய்ந்து எல்லாம் ஓய்ந்து
உலகம் மறந்த இடைவேளை- உறக்கம்!!!
எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
அழகான நாட்கள் !!!
காலம் கூட
கவிதை எழுதுகிறது !!! -
உன்னை என்னில் கண்ட
முதல் நொடி !!!
உன்னைக் கண்ட
முதல் கணம்;
மீண்டும் தர
மறுக்கும் காலம்;
மீட்கும் முயற்சியில்
நான்...
விரும்பியே தொலைகிறேன்
உன்னில்...
விரைவில் மீட்டுவிடு உன்
மனதில் !!!
வேண்டுமென்றே
விழுந்தேன்
நீ வேண்டுமென்றே!!!
இதயத்தில் வழியவிடு காதலை...
இதழ்கள் வியர்த்தோடும் வரை!!!...
இதயம் பேச இணையும் போது
இதழ்கள் வழி மூடி விடுவதால்
வழி விடுகின்றன விழிகள்!!!
"நொடி"க்கு நொடியில்
அர்த்தம் அமைத்தன...
நொடிக்கு நொடி
இமைக்கும் உன்
இமைகள்!!!
நொடி முள்ளும்
மனம் உடைந்தது...
கடிகாரத்தில்
தைக்காமலே!!!
- பா.வெ.
காலம் கூட
கவிதை எழுதுகிறது !!! -
உன்னை என்னில் கண்ட
முதல் நொடி !!!
உன்னைக் கண்ட
முதல் கணம்;
மீண்டும் தர
மறுக்கும் காலம்;
மீட்கும் முயற்சியில்
நான்...
விரும்பியே தொலைகிறேன்
உன்னில்...
விரைவில் மீட்டுவிடு உன்
மனதில் !!!
வேண்டுமென்றே
விழுந்தேன்
நீ வேண்டுமென்றே!!!
இதயத்தில் வழியவிடு காதலை...
இதழ்கள் வியர்த்தோடும் வரை!!!...
இதயம் பேச இணையும் போது
இதழ்கள் வழி மூடி விடுவதால்
வழி விடுகின்றன விழிகள்!!!
"நொடி"க்கு நொடியில்
அர்த்தம் அமைத்தன...
நொடிக்கு நொடி
இமைக்கும் உன்
இமைகள்!!!
நொடி முள்ளும்
மனம் உடைந்தது...
கடிகாரத்தில்
தைக்காமலே!!!
- பா.வெ.
எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
வாவ் ! நிறைய போட்டுவிட்டீங்க, மெதுவாய் படித்து பின்னூட்டம் போடுகிறேன் வெங்கடேசன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
இல்லை அம்மா.எல்லாம் ஏற்கனவே பதிவேற்றியவைதான்.ஓரிடத்தில் குவித்திருக்கிறேன்.அவ்வளவுதான் ..அழகான நாட்கள் மட்டுமே புதிது .
எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
மேற்கோள் செய்த பதிவு: 1168792B.VENKATESAN wrote:இல்லை அம்மா.எல்லாம் ஏற்கனவே பதிவேற்றியவைதான்.ஓரிடத்தில் குவித்திருக்கிறேன்.அவ்வளவுதான் ..அழகான நாட்கள் மட்டுமே புதிது .
ஒ...சரி சரி......ஓரிடத்தில் இருப்பது ரொம்ப நல்லது...பின்பொருநாள் நமக்கே உதவும்...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
எத்தனை அழகு !!!
எல்லாமே அழகு !!!
மனதை மயக்கும்
மழையின் ஓசை அழகு !
மழை நீரில் அரும்பும்
கணநேர நீர்க்குமிழி அழகு !
மஞ்சள் நீராடும்
அந்தி வானம்
மற்றுமோர் அழகு !!!
விழிகள் பேசும்
வினோதம் அழகு !
விழிதேடும் விடை அழகு !
விரல் கோதும் விதம் அழகு !!!
பகலவனைக் கண்டு
பதுங்கும் பனித்துளி அழகு !
பழம் கொறிக்கும் அணிலின்
சுறுசுறுப்பு அழகு !
புதுப்புத்தகப் பக்கங்களில்
நுகரும் புது வாசம்
இன்னுமொரு அழகு !!!
தலையணையில் கிட்டாத
தாய்மடி இதம் அழகு !
தீண்டுவது தெரியாமல்
தீண்டும் தென்றல் அழகு !
தீபாவளி வெடி முழக்கம் கூட
திகட்டாத ஓர் அழகு !!!
அன்னை பாடும்
தாலாட்டு அழகு !
ஆசிரியர் இடும்
அரைக்குட்டு அழகு !
அதிகாலை ஆழியில்
குளித்தெழும் ஆதவன்
அழகோ அழகு !!!
உழைத்து களைத்த பின்
உறக்கம் அழகு !
ஊஞ்சல் ஆடுகையில் வரும்
ஓயாத ஒலி அழகு !
விரும்பி வாங்கிய
குழந்தை உதை கூட
வினோத அழகு !!!
காலை நேர
பறவை ஒலிகள் அழகு !
கானகத்தே கவிபாடும்
குயிலோசை அழகு !
காதோரம் கடக்கும் போது
கொசு தரும் இம்சை கூட
ஓர் அழகு !!!
மலை நடுவில் ஒளியும்
மாலை நேர சூரியன் அழகு !
முட்டினாலும் வலிக்காத
நத்தையின் கொம்புகள் அழகு !
முற்றிய நெற்கதிர்கள்
முகம் சாய்க்கும் பணிவும்
முற்றிலும் அழகு !!!
காதலி தரும் முதல்
முத்தம் அழகு !
களைந்த ஆடையில்
மொத்தமும் அழகு !
காணுதற்கினிய கனவு
கலையும் வரை அழகு !!!
துணை தேடும் மழைக்கால
தவளை ஒலிகள் அழகு !
தூறலில் நின்று ஆடும்
துளிர்விட்ட இலைகள் அழகு !
தூவானம் வரையும்
கருவியற்ற அரைவட்டம்
அத்தனை அழகு !!!
வெண்மை குழைத்து
தண்மை பூசும்
வெண்ணிற இரவு அழகு !
வெற்றிடம் நுழையாத
ஒலியின் வெட்கம் அழகு !
வெட்டவெளி வாரி இறைத்த
விண்மீன்கள் விண்ணின் அழகு !!!
பிரிவின் பின் கூடுதலில்
பின்னிப் பிணைதல்
காதலுக்கு அழகு !
பின்னழகு போர்த்தும்
பின்னாத கூந்தல்
கன்னிக்கு அழகு !
பின்விளைவு அறியா வேகம்
இளமைக்கு என்றும் அழகு !!!
சக்கரத்தில் சரியாத
சரியான மண்பானை
குயவனின் கலையழகு !
சேம இலை உதிர்த்த
பாதரச நீர்த்துளிகள் அழகு !
செதுக்கிய சிலையில்
கல்லின் பொறுமை கூட
சிந்தனைக்கு ஓர் அழகு !!!
நீலம் குழைத்த வானில்
நீந்திச் செல்லும் மேகம் அழகு !
நீரோடை நடுவே
நின்றாடும் கொக்கின்
நீண்ட தவம் அழகு !
நிகழ்ந்த நிகழ்வுகள் மீண்டு(ம்)
நிகழும் நினைவுகள் என்றும்
நீங்காத அழகு !!!
தோல்வியில் நனைந்த
வெற்றி அழகு !
தோல்வியை நினையாத
நெற்றி அழகு !
தோல்வியில் துவளாத மனம்
தோல்விக்கே அழகு !!!
கடையாத தயிரின்
உடையாத நிலை அழகு !
கடையாணி மை போடும்
கச்சிதமான வட்டங்கள்
கூட்டு வண்டிக்கு
கூடுதல் அழகு !
காலத்தை வென்று நிற்கும்
கன்னித் தமிழ் என்
கவிதைக்கே அழகு !!!
- பா.வெ.
எல்லாமே அழகு !!!
மனதை மயக்கும்
மழையின் ஓசை அழகு !
மழை நீரில் அரும்பும்
கணநேர நீர்க்குமிழி அழகு !
மஞ்சள் நீராடும்
அந்தி வானம்
மற்றுமோர் அழகு !!!
விழிகள் பேசும்
வினோதம் அழகு !
விழிதேடும் விடை அழகு !
விரல் கோதும் விதம் அழகு !!!
பகலவனைக் கண்டு
பதுங்கும் பனித்துளி அழகு !
பழம் கொறிக்கும் அணிலின்
சுறுசுறுப்பு அழகு !
புதுப்புத்தகப் பக்கங்களில்
நுகரும் புது வாசம்
இன்னுமொரு அழகு !!!
தலையணையில் கிட்டாத
தாய்மடி இதம் அழகு !
தீண்டுவது தெரியாமல்
தீண்டும் தென்றல் அழகு !
தீபாவளி வெடி முழக்கம் கூட
திகட்டாத ஓர் அழகு !!!
அன்னை பாடும்
தாலாட்டு அழகு !
ஆசிரியர் இடும்
அரைக்குட்டு அழகு !
அதிகாலை ஆழியில்
குளித்தெழும் ஆதவன்
அழகோ அழகு !!!
உழைத்து களைத்த பின்
உறக்கம் அழகு !
ஊஞ்சல் ஆடுகையில் வரும்
ஓயாத ஒலி அழகு !
விரும்பி வாங்கிய
குழந்தை உதை கூட
வினோத அழகு !!!
காலை நேர
பறவை ஒலிகள் அழகு !
கானகத்தே கவிபாடும்
குயிலோசை அழகு !
காதோரம் கடக்கும் போது
கொசு தரும் இம்சை கூட
ஓர் அழகு !!!
மலை நடுவில் ஒளியும்
மாலை நேர சூரியன் அழகு !
முட்டினாலும் வலிக்காத
நத்தையின் கொம்புகள் அழகு !
முற்றிய நெற்கதிர்கள்
முகம் சாய்க்கும் பணிவும்
முற்றிலும் அழகு !!!
காதலி தரும் முதல்
முத்தம் அழகு !
களைந்த ஆடையில்
மொத்தமும் அழகு !
காணுதற்கினிய கனவு
கலையும் வரை அழகு !!!
துணை தேடும் மழைக்கால
தவளை ஒலிகள் அழகு !
தூறலில் நின்று ஆடும்
துளிர்விட்ட இலைகள் அழகு !
தூவானம் வரையும்
கருவியற்ற அரைவட்டம்
அத்தனை அழகு !!!
வெண்மை குழைத்து
தண்மை பூசும்
வெண்ணிற இரவு அழகு !
வெற்றிடம் நுழையாத
ஒலியின் வெட்கம் அழகு !
வெட்டவெளி வாரி இறைத்த
விண்மீன்கள் விண்ணின் அழகு !!!
பிரிவின் பின் கூடுதலில்
பின்னிப் பிணைதல்
காதலுக்கு அழகு !
பின்னழகு போர்த்தும்
பின்னாத கூந்தல்
கன்னிக்கு அழகு !
பின்விளைவு அறியா வேகம்
இளமைக்கு என்றும் அழகு !!!
சக்கரத்தில் சரியாத
சரியான மண்பானை
குயவனின் கலையழகு !
சேம இலை உதிர்த்த
பாதரச நீர்த்துளிகள் அழகு !
செதுக்கிய சிலையில்
கல்லின் பொறுமை கூட
சிந்தனைக்கு ஓர் அழகு !!!
நீலம் குழைத்த வானில்
நீந்திச் செல்லும் மேகம் அழகு !
நீரோடை நடுவே
நின்றாடும் கொக்கின்
நீண்ட தவம் அழகு !
நிகழ்ந்த நிகழ்வுகள் மீண்டு(ம்)
நிகழும் நினைவுகள் என்றும்
நீங்காத அழகு !!!
தோல்வியில் நனைந்த
வெற்றி அழகு !
தோல்வியை நினையாத
நெற்றி அழகு !
தோல்வியில் துவளாத மனம்
தோல்விக்கே அழகு !!!
கடையாத தயிரின்
உடையாத நிலை அழகு !
கடையாணி மை போடும்
கச்சிதமான வட்டங்கள்
கூட்டு வண்டிக்கு
கூடுதல் அழகு !
காலத்தை வென்று நிற்கும்
கன்னித் தமிழ் என்
கவிதைக்கே அழகு !!!
- பா.வெ.
எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN- பண்பாளர்
- பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» தோல்வியைக் கண்டு துவளாதே
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)
» காதல் கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
» சில காதற் கவிதைகள் (தொடர் பதிவு)
» காதல் கவிதைகள் - தொடர் பதிவு
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|