புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02
by ayyasamy ram Today at 14:39
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியின் சிறுகதைகள்: திருட்டுப் பட்டம்
Page 1 of 1 •
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
திருட்டுப் பட்டம்!
சிறுகதை
ரமணி (ஆக 2015)
வெளியீடு: வல்லமை
சைதாப்பேட்டை டாட்ஹண்டர் நகர் ’மாதிரி உயர்நிலைப் பள்ளி’யில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது நானும் கைலாசமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கடைசியில் ஒருவருக்கொருவர் ’காய் விட்டுக்கொண்டு’ பிரிந்தோம். காலப்போக்கில் ஒருவரை ஒருவர் மறந்தே போனோம். என் வாழ்வில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சோகமான, சுமையான நிகழ்ச்சி நடந்தது. பழைய தோழமையைப் புதுப்பித்துக்கொள்ள அது ஒரு தூண்டுதலாக அமைந்தது.
நிகழ்ச்சி நடந்த மறுவாரம் ஒரு நாள் மாலை கைலாசத்துடன் தொலைபேசினேன். அவனைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னேன். மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒலித்த குரலில் என்னை ஒருமையில் ’டா போட்டு’ அழைத்து அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சாப்பிட வரச்சொன்னான்.
ஞாயிற்றுக் கிழமை சென்னை கிழக்கு தாம்பரம் சாலையில் சேலையூர் அருகில் கைலாசம் வீட்டைக் கண்டுபிடித்து அழைப்பு மணியை ஒலித்தேன். ஓடி வந்தான். "ரங்கா, உன்னைப் பார்த்து முப்பது வருஷமாச்சுடா!" என்றான். "இப்ப நீ என் பேச்சு ’பழம்’ தானே?"
"கொஞ்ச நாளாவே நான் உன்கூட ’பழம்’தான்", என்றேன். "அதனாலதான் உன் டெலிஃபோன் நம்பர் கண்டுபிடிச்சு அன்னிக்கு உன்னோட பேசினேன். நீ தமிழ்க் கதையுலக வாசகர்களுக்கு நல்லாப் பரிச்சயமான ஒரு எழுத்தாளன் ஆச்சே! நானும் உன் வாசகன். ’இன்றைய தமிழ் எழுத்தாளர்கள்’ புத்தகத்தில உன் சுயவிவரம், தொலைபேசி எண், விலாசம் பார்த்தேன். உன் படைப்புகளைச் சிலாகித்து அந்த புத்தகத்தில ரெண்டு ரெவ்யூ வந்திருந்ததே!"
"ஆமாம், நீ என்னைத் தொலைபேசில தொடர்புகொண்டப்ப நம்பவே முடியலைடா! இப்ப நேர்ல பாக்கறப்ப, உன் குரல் அப்படியே இருக்கு. உன் உருவம்தான் முழுக்க மாறிடுத்து!"
"ஆனால் உன் குரல், உருவம் ரெண்டும் ஸ்கூல்ல பார்த்த மாதிரியே இன்னமும் இருப்பது ஆச்சரியம்!" என்றேன்.
"அப்படியா! அப்பா போனதும் கண்ணாடி போட்டுக்கிட்டேன். கல்லூரி நாள்லேர்ந்து வெச்சிருந்த மீசையை அம்மா போனதும் எடுத்துட்டேன்."
"உங்கப்பா அம்மா ரெண்டு பேருமே கதை எழுதுவான்னு நீ என்கிட்ட ஸ்கூல் படிக்கும்போதே சொன்னே இல்ல?"
"ஞாபகம் வெச்சிருக்கயே! வா, கூடத்து ஷோகேஸ்ல அவங்க படம் இருக்கு, பாரு", என்று கூட்டிச்சென்று அவன் பெற்றோர் கல்யாண போட்டோவைக் காட்டினான். "அப்பா சின்ன வயசிலயே போய்ட்டதால ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கற மாதிரி இந்த ஒரு படம்தான் கிடைச்சுது."
"ஷோகேஸ்ல மற்ற பொருட்கள்லாம் பாரு. இதோ வரேன். விமலா!" என்று விளித்தபடியே விலகி சமையல்கட்டை நோக்கிச் சென்றான்.
கைலாசத்தின் பெற்றோர் போட்டோவில் அம்மா பக்கம் ஓர் ஊதாநிற ரைட்டர் ஊற்றுப் பேனாவும், அப்பா பக்கம் ஒரு கருப்புநிற பைலட் பேனாவும் லாமினேட் செய்யப்பட்ட போட்டோ சட்டத்துடன் இணைந்திருந்தன. அந்த பேனாக்களைப் பார்த்ததும் என் கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிர்த்தது.
"இவள் விமலா, என் இல்லத்தரசி. சீனு எங்களுக்கு ஒரே பிள்ளை. எட்டாவது படிக்கறான். இப்ப கோடை விடுமுறைல திருச்சிக்குப் போயிருக்கான், அவன் சித்தி வீட்டுக்கு."
"வாங்கோ!" என்றாள் விமலா. "நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல காய் விட்டுண்டதுக்கப்பறம் முப்பது வருஷம் கழிச்சு இப்போதான் சந்திக்கறது மஹா ஆச்சரியம்!"
சிரித்தேன். "என் பிள்ளை மாதுவும் எட்டாவதுதான் படிக்கறான். அவன் தங்கை கமலா நாலாம் கிளாஸ். என் மனைவி பெயர் மாலினி, ஹோம்மேக்கர். கைலாசம், உன்னை மாதிரியே நானும் அரசு வங்கில கிளார்க் வேலை பார்க்கிறேன். வீடு நங்கநல்லூர்ல இருக்கு."
நான் வாங்கியிருந்த பழங்கள் பையை விமலாவிடம் தந்தேன். "கைலாசம், உனக்கு ஒரு சின்ன கிஃப்ட்" என்று சொல்லி அவனிடம் ஒரு சின்ன பார்சலைத் தந்தேன்.
உடனே பிரித்துப் பார்த்து வியந்தான். "எதுக்குடா எனக்கு விலை உயர்ந்த பார்க்கர் பேனா?"
"நன்கு அறியப்பட்ட எழுத்தாளனுக்கு ஓர் வாசக நண்பனின் எளிய பரிசு."
"தாங்க்யு ரங்கா" என்றான். "வா, மணி பன்னிரண்டாகப் போறது. சாப்பிட்டபடி பேசுவோம்."
*** *** ***
சாப்பாட்டு மேசையில் கைலாசம் நாங்கள் பள்ளியில் காய் விட்டுக்கொண்டது பற்றிக் கலகலப்பாக மனைவியிடம் சொன்னான். "எட்டாம் வகுப்பு முழுக்க நாங்க ரொம்ப நெருங்கிய நண்பர்கள் விமலா! அந்த வகுப்பு முழுவருடத் தேர்வில் இவன் என்னைவிடக் கணக்கிலும் ஆங்கிலத்திலும் அதிக மார்க். ஆனால் ரெண்டு பேரும் ஒரே டோட்டல் மார்க்...."
"அறுநூறுக்கு நானூத்தி எண்பது" என்றேன். "உனக்கு ஞாபகம் இருக்கா? ஆனால் மற்ற தேர்வுகள்ல நீ என்னைவிட ஒவ்வொரு பாடத்லயும் அதிக மார்க். அதனால கடைசிப் பரீட்சைக்கு நான் விழுந்து விழுந்து படிச்சேன்."
"ஒன்பதாம் வகுப்பு ஆரம்பிச்சு மூணு மாசத்தில இவன் திடீர்னு ஒரு நாள் ’கைலாசம், இந்த க்ஷணத்லேர்ந்து நான் உன் பேச்சு காய். என்னோட பேச முயற்சி பண்ணாதே, சொல்லிட்டேன்’, அப்படீன்னான். ஏண்டான்னு கேட்டதுக்கு பதில் சொல்லாமப் போயிட்டான். அதுக்கப்புறம் நாங்க கடைசிவரை பேசிக்கவே இல்லை!"
"ஆனால் மத்த பசங்க ஒரு பத்துநாள் நம்ம ரெண்டு பேரையும் சேர்த்துவைக்கப் படாத பாடு பட்டாங்க, இல்லயா?" என்றேன்.
"ஆமாமாம். நாங்க பேசிக்காட்ட கூட முன்ன இருந்த மாதிரி ரெண்டு பேரும் பக்கத்தில பக்கத்திலதான் உக்காரணும்னு கிளாஸ் வாத்தியார் சொல்லிட்டார். அது மஹா அவஸ்தையா இருந்தது. பசங்க எங்க ரெண்டு பேர் செருப்பையும் ஒளிச்சு வெச்சுத் தேட வெச்சாங்க..."
"ஒரு நாள் ஒரு செருப்பை மட்டும் ரெண்டுபேர்க்கும் மாத்தி வெச்சு அப்படியே போட்டுண்டு கொஞ்ச தூரம் போய்ட்டோம்", என்றேன். "அப்புறம் கண்டுபிடிச்சு, தூரத்லேர்ந்து கடுப்பாப் பார்த்து ஒருத்தர் மேல ஒருத்தர் மாறின செருப்பை எறிஞ்சு மண்ணை வீசி எறிஞ்சி மௌனமாத் திட்டிக்கிட்டோம்!"
"டெய்லி சாயங்காலம் கடைசி பீரியட் விளையாட்டு. அப்போ கால்பந்து விளையாடும் போது பசங்க எங்களை ஒருத்தர் மேல ஒருத்தர் விழனும்னு பிடிச்சுத் தள்ளுவாங்க!"
"ராஜேந்திரன்னு எங்க ரெண்டு பேர்க்கும் ஒரு காமன் ஃப்ரெண்டு இருந்தான்", என்றேன். "எட்டாம் வகுப்பு பரீட்சை, டெஸ்ட்கள்ல நாங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி முதல் ரெண்டு ரேங்க் வாங்கின போது ராஜேந்திரன் மூணாவது ரேங்க் வாங்கினான். அவன் எங்களைச் சேர்த்துவைக்க ரொம்பவும் முயற்சி பண்ணி முடியாம ஒரு நாள் எங்களுக்கு எதிர்லயே அழுதுட்டான். அப்பவும் நாங்க சேரக்கூடாதுங்கற திமிர்ல இருந்தோம்!"
"ஏண்டா ரங்கா திடீர்னு என் பேச்சு காய் விட்டே?"
"என்னத்தச் சொல்லறது? இப்ப நினைச்சுப் பார்த்தா வேடிக்கையாவும் வேதனையாவும் இருக்கு", என்றேன். "ஒன்பதாம் வகுப்பு முதல் மூணு மாசத்ல நாம மொத்தம் பத்து தேர்வுகள் எழுதியிருப்போமா? அதுல எல்லாத்லயும் நீ முதல் ரேங்க் வாங்கினதை என்னால சகிச்சுக்க முடியலைங்கறது முதல் காரணம். அப்புறம் எல்லா வாத்தியாரும் உன்கிட்ட அன்பா பழகின மாதிரி என்கிட்ட பழகலைங்கறது ரெண்டாவது காரணம். அப்புறம் எட்டாம் வகுப்பு படிச்சப்ப பள்ளி ஆண்டுவிழாவுல கட்டுரை, கவிதை, பேச்சு மூணு போட்டிலயும் நீ முதல் பரிசு வாங்கின இல்லையா? பேச்சுப்போட்டியின் தரத்தை வெச்சுப் பார்த்தா நான்தான் முதல்பரிசு வாங்கியிருக்கணும். ஆனால் நீ எடுத்த எடுப்பிலேயே கலிங்கத்துப் பரணியோட ’எடுமெடு மெடுவென வெடுத்தவோர்’ பாட்ல ஆரம்பிச்சு ஆடியன்ஸ், ஜட்ஜை மயக்கி முதல் பரிசு வாங்கினது எனக்கு மஹா எரிச்சல்!"
"அப்படியா சேதி! நீ முதல்ல காய் விட்டதும் எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. அப்புறம் எனக்கும் உன்னமாதிரியே விரோதமும் வெறுப்பும் உண்டாச்சு."
கைகள் வாய்பேச்சை நடுநடுவே மீற விமலா சமைத்திருந்த அறுசுவை உணவை ஒருகை பார்த்துப் பாராட்டினேன். சாப்பிட்டு எழுந்ததும் மூவரும் ஹாலில் சோஃபாவில் வசதியாக அமர்ந்துகொண்டு பேச்சைத் தொடர்ந்தோம்.
"திடீர்னு இவரோட காய்விட்ட மாதிரியே முப்பது வருஷம் கழிச்சு, திடீர்னு பழம்விடத் தோணித்தாக்கும்! அது எப்படி?" என்றாள் விமலா.
"ஆமாண்டா, நேத்து வரைக்கும் ரெண்டு பேரும் ஆள் அட்ரஸ் தெரியாம இருந்திட்டு எப்படிடா திடீர்னு என்கூட நம்ம பழைய நட்பைப் புதுசு பண்ணிக்கணும்னு உனக்குத் தோணித்து? யு ஆர் கிரேட் ரங்கா!"
"அதை நான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலைடா", என்றேன். "ஆனால் சொல்லித்தான் ஆகணும்; அப்பதான் என் மனசு ஆறும்."
"என்னடா புதிர் போடறே? விஷயத்தைச் சொல்லேன், எருமை மாடு!"
"சொல்றேண்டா கழுதை!"
அந்த எருமை மாடும் கழுதையும் எங்கள் நட்பு பழையபடி ராசியாகி விட்டது என்று காட்டியது. ஆனாலும் எனக்குள் இருந்த குற்ற உணர்ச்சி குறையவில்லை.
"பதினஞ்சு நாள் முன்ன எம்பிள்ளை மாது அவன் பர்த்டேக்கு நான் வாங்கித்தந்த காஸ்ட்லி வில்சன் பேனாவத் தொலச்சிட்டான். எனக்கு வந்த கோவத்துல அவனை அடி பின்னிட்டேன்! அப்புறம் மறுநாள் அவன் பேனா கெடச்சதும் ரொம்ப ஃபீல் பண்ணினேன். மாதுவைப் பிடிக்காத இவன் கிளாஸ் பையன் ஒருத்தன் இவன் புதுப் பேனாவை எடுத்து இவன் குளோஸ் ஃப்ரெண்ட், பக்கத்து சீட் ராகவன் ஸ்கூல் பையில போட்டானாம். அதை இன்னொரு பையன் மறைஞ்சு இருந்து பார்த்து மாதுட்ட சொன்னானாம். இவன் பொய்க்கோவத்தோட ’ஏண்டா என் புதுப் பேனாவைத் திருடினே?’ன்னு ராகவன்ட்ட கேட்டப்ப அவன், ’சத்தியமா நான் திருடலைடா! நமக்குள்ள சண்டை மூட்டிவிட யாரோ என் பைல போட்டிருக்கணும்டா, ஐ ஸ்வேர்’ அப்படின்னு சொல்ல, இவன் உண்மையைச் சொல்லி ராகவனைக் கட்டிண்டு ’நமக்குள்ள இருக்கற நட்பை யாரும் குலைக்க முடியாதுடா!’ அப்படீன்னு கிளாஸ்ல எல்லோருக்கும் கேக்கற மாதிரி உரக்கச் சொன்னானாம்..."
கைலாசம் என்னை மேலே பேச விடவில்லை.
"ரங்கா, இதே மாதிரி நான் ஒன்பதாவது படிச்சபோது ஒரு நிகழ்ச்சி நடந்ததுடா! நாம ரெண்டு பேரும் அப்ப ஒருத்தரோட ஒருத்தர் பேசாம இருந்தோம். உன் பையன் பேனாவைத் தொலைச்சான். ஆனால் என் பையில யாரோ ரெண்டு பேனாவைப் போட்ட கதையை உனக்கு இப்ப விளக்கிச் சொல்லறேன் கேளு", என்று தொடர்ந்தான்...
*** *** ***
கைலாசம் சொன்னது:
அன்று மாலை ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தேன். காலையில் அம்மா கொடுத்து அனுப்பிய சாக்லெட் இரண்டையும் சாப்பிட மறந்தது ஞாபகம் வந்தது. உடனே அவசரமாக என் ஸ்கூல் பையைத் தலைகீழாகக் கவிழ்த்துத் தரையில் கொட்டித் தேடினேன். அன்று விடுமுறையில் இருந்த என் தந்தை அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா சமையல் கட்டில் எனக்காகப் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.
"ஏண்டா உன் பையிலேர்ந்து ரெண்டு பேனா விழறதே!" என்று என் தந்தை சொன்னபோதுதான் கவனித்து எடுத்துப் பார்த்தேன். ஊதா நிறத்தில் ஒரு ரைட்டர் பேனாவும், கறுப்பு நிறத்தில் ஒரு பைலட் பேனாவுமாக இரண்டு புதிய ஊற்றுப் பேனாக்கள்.
"உன்னோடது மெரூண்கலர் ரைட்டர் பேனா தானே? அதுவும் போன வருஷம் வாங்கினது. ஏது இந்த ரெண்டு பேனா?" என்றார் என் தந்தை.
"தெரியலைப்பா!" என்று நான் சொன்னதை அவர் நம்பவில்லை.
"யாரோட பேனாவோ? ரெண்டும் எப்படீடா உனக்குத் தெரியாம உன் பைக்குள்ள வந்தது?" தந்தையின் குரலில் சூடு ஏறியது.
"நெஜமா எனக்குத் தெரியலைப்பா!"
"பொய் சொல்லாதே! திருடினயா? சாயங்காலம் கடைசி பீரியட்ல பசங்க வெளையாடப் போனப்ப கிளாஸ்ல டெஸ்க் மேல இருந்த இந்தப் பேனா உன் கண்ணுல பட்டது. ஏதோ ஓர் ஆசைல நீ சத்தம் போடாம எடுத்துப் பையில போட்டுண்டு வந்துட்டே, அப்படித்தானே?"
"ஐயோ அதெல்லாம் இல்லைப்பா! நான் திருடலை!"
"அப்புறம் எப்படிடா பேனா ரெண்டும் உன் பைக்கு வந்தது?"
"அதுதான் எனக்குத் தெரியலைப்பா!"
என் அம்மா கையில் பால் டம்ளர்-டபராவுடன் வந்தவள், "கைலாசம், உண்மையைச் சொன்னா அப்பா புரிஞ்சுப்பார். அப்பாக்குக் கோவம் வந்தா உன்னால தாங்க முடியாது!"
"என்னம்மா நீயும் இப்படிக் கேக்கறே? நான் திருடலைம்மா", என்றேன். "பேனா எப்படி என் பைக்குள்ள வந்ததுன்னு எனக்குத் தெரியலையே அம்மா!"
பொங்கிவரும் பாலாக என் தந்தைக்குக் கோபம் தலைக்கேறி அவர் கண்களில் வழிந்தது. பளார் என்று என் கன்னத்தில் அவர் அறைந்தபோது எனக்குத் தலை சுற்றியது.
"திருடவும் செஞ்சிட்டுப் பொய் வேற சொல்லறயாடா, ராஸ்கல்!" என் முதுகில் அடிகள் சரமாரியாக விழ நான் தடுமாறிச் சாய்ந்தேன். ஆனாலும் நான் அழவில்லை.
"கைலாசம், பொய் பேசினா ஸ்வாமி கண்ணக் குத்திடும்னு உனக்குச் சொல்லியிருக்கேன், இல்லையா?" என்றாள் அம்மா. "எப்படி பேனாவைத் திருடினதா அப்பா உன்னை அடிக்கறாரோ அப்படித்தானே பேனாவைத் தொலச்சதுக்கு அந்த ரெண்டு பையன்களும் அவா அப்பாட்ட அடி வாங்குவா!"
அடிகள் போதும் என்று நினைத்தாரோ என்னவோ, அப்பா என்னைத் தரதரவென்று இழுத்துக் கொண்டுபோய் சமையல் கட்டில் இருந்த ஸ்வாமி அலமாரியின் முன் தள்ளினார். "போடா, போய் ஸ்வாமி முன்னால நின்னுண்டு நீ தப்புப் பண்ணலைன்னு சொல்லு."
"கைலாசம், என்னால இந்த அவமானத்தைத் தாங்க முடியலைடா. நீயா இப்படி!", என்று அழுத அம்மா, என்று தன் புடவைத் தலைப்பை எரிந்துகொண்டிருந்த ஸ்டவ் அடுப்பின் ஜுவாலை அருகில் வைத்துக்கொண்டு, "இதுக்கு உயிரை விட்டுடலாம்", என்றாள்.
"பார்றா, அம்மா பத்திக்கப் போறா. உண்மையைச் சொல்லுடா!" என்று தந்தை இரைந்தார்.
"ஐயோ கடவுளே! நான் உண்மையைத் தானே சொல்றேன்", என்று நான் கண்ணீருடன் சத்தம் போட்டுக் கதறினேன். "ரெண்டு பேனாவும் எப்படி என் பைக்குள்ள வந்ததுன்னு எனக்குத் தெரியாது. அப்படி நான் திருடிட்டுப் பொய் சொல்றதா நெனைச்சா ஸ்வாமி என் கண்ணைக் குத்தட்டும், ஏத்துக்கறேன்."
முதன்முதலாக அவர்களுக்கு என் மேல், நான் சொல்வதில், நம்பிக்கை வந்தது. கோபத்துடன் முட்டவந்த மாடு மனிதன் கீழே விழுந்ததும் விலகிச் சொல்வதுபோல் அப்பாவின் கோபம் தணிந்து அவர் அப்பால் சென்றார். அம்மா என்னை அணைத்துக் கொண்டாள், அப்பாவின் விரல்கள் பதிந்த என் கன்னத்தை வருடியபடி.
"ரெண்டு பேனாவும் எப்படி என் பைல வந்ததுன்னு புதிரா இருக்கும்மா!" என்று கேவினேன். "எனக்கு ஒண்ணுமே புரியலை. நாளைக்கு பேனாவைக் கிளாஸ்ல காட்டி யாரோடதுன்னு கேட்டு திருப்பிக் கொடுத்துடறேன்."
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்", என்றார் அப்பா. "அப்படிப் பண்ணினா நீதான் திருடினேன்னு நிரூபணம் ஆய்டும். கொண்டா அந்த ரெண்டு பேனாவையும்" என்று கீழே இருந்தவற்றைப் பறித்து வைத்துக்கொண்டார்.
*** *** ***
"அதுக்கப்புறம் அம்மா அந்த ஊதா நிற ரைட்டர் பேனாவையும் அப்பா கறுப்பு நிற பைலட் பேனாவையும் கதை எழுதப் பயன்படுத்தினாங்க", என்றான் கைலாசம், மோட்டுவளை இல்லாத வீட்டுக் கூரையைப் பார்த்தவாறே. "அந்த ரெண்டு பேனாவும்தான் அவா புகைப்படத்தோட இணைச்சு ஷோகேஸ்ல வெச்சிருக்கேன், பார்த்தே இல்லயா?"
"இன்னிவரைக்கும் ரங்கா, சத்தியமா அந்தப் பேனா ரெண்டும் எப்படி என் ஸ்கூல் பைக்குள்ள வந்ததுதுன்னு எனக்குத் தெரியாது", என்ற கைலாசம், "யாராவது அதைப் பைக்குள்ள போட்டங்களான்னும் தெரியாது", என்றபடி என்பக்கம் திரும்பினான்.
என் கண்களில் இருந்து மாலையாகக் கண்ணீர் பெருகுவது கண்டு திடுக்கிட்டான். "நீ ஏண்டா அழறே?" என்றான்.
பத்திரிகை படித்தவாறே கேட்டுக்கொண்டிருந்த விமலாவும் என்னைப் பார்த்தாள்.
"ஒரு எழுத்தாளன் என்கிற முறையில இந்த சோக நிகழ்ச்சியை கிராஃபிக்கா விவரிச்சேன். நீ ஏன் அழறே?"
"உன்னை உங்கப்பா அடிச்சதெல்லாம் எனக்குத் தெரியும் கைலாசம்! நீ விவரமா அவன்ட்ட சொன்னதை ராஜேந்திரன் என்கிட்ட சொன்னான்."
"அதுக்கு இப்ப என்ன கண்ணீர்! எனக்கே அழுகை வரல!" என்றான் கைலாசம்.
"கைலாசம், உன்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லத்தான் நான் இன்னைக்கு இங்க வந்தேன்", என்றேன். "இத்தனை வருஷமா என் மனசில புகையேறிக் கிடந்த உண்மை. பேனாவைப் பறிகொடுத்த என் பிள்ளையை அன்னிக்கு அடிச்சு மறுநாள் வருத்தப்பட்டேன் இல்லையா? அன்னிக்குதான் எனக்கு உன்னைக் கண்டுபிடிச்சுப் பேசி என் மனசில இருக்கற உண்மையைச் சொல்லணும்னு தோணிச்சு."
"என்னடா புதிர் போடறே? விஷயத்தைச் சொல்லேன், எருமை மாடு!"
"சொல்றேன் கைலாசம். அதுக்கப்பறமும் நான் உன் நண்பனா இருக்க எனக்கு அருகதை உண்டான்னு நீ தீர்மானிச்சுக்க" என்றேன்.
"சொல்லித் தொலையேன்!" என்றான் கைலாசம் பொறுமை இழந்து.
"அன்னைக்கு அந்த ரெண்டு பேனாவையும் உன் ஸ்கூல் பையில் போட்டது நான்தாண்டா கைலாசம்!"
*** *** ***
சிறுகதை
ரமணி (ஆக 2015)
வெளியீடு: வல்லமை
சைதாப்பேட்டை டாட்ஹண்டர் நகர் ’மாதிரி உயர்நிலைப் பள்ளி’யில் எட்டாவது வகுப்பில் படிக்கும்போது நானும் கைலாசமும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். கடைசியில் ஒருவருக்கொருவர் ’காய் விட்டுக்கொண்டு’ பிரிந்தோம். காலப்போக்கில் ஒருவரை ஒருவர் மறந்தே போனோம். என் வாழ்வில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு சோகமான, சுமையான நிகழ்ச்சி நடந்தது. பழைய தோழமையைப் புதுப்பித்துக்கொள்ள அது ஒரு தூண்டுதலாக அமைந்தது.
நிகழ்ச்சி நடந்த மறுவாரம் ஒரு நாள் மாலை கைலாசத்துடன் தொலைபேசினேன். அவனைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னேன். மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒலித்த குரலில் என்னை ஒருமையில் ’டா போட்டு’ அழைத்து அந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை சாப்பிட வரச்சொன்னான்.
ஞாயிற்றுக் கிழமை சென்னை கிழக்கு தாம்பரம் சாலையில் சேலையூர் அருகில் கைலாசம் வீட்டைக் கண்டுபிடித்து அழைப்பு மணியை ஒலித்தேன். ஓடி வந்தான். "ரங்கா, உன்னைப் பார்த்து முப்பது வருஷமாச்சுடா!" என்றான். "இப்ப நீ என் பேச்சு ’பழம்’ தானே?"
"கொஞ்ச நாளாவே நான் உன்கூட ’பழம்’தான்", என்றேன். "அதனாலதான் உன் டெலிஃபோன் நம்பர் கண்டுபிடிச்சு அன்னிக்கு உன்னோட பேசினேன். நீ தமிழ்க் கதையுலக வாசகர்களுக்கு நல்லாப் பரிச்சயமான ஒரு எழுத்தாளன் ஆச்சே! நானும் உன் வாசகன். ’இன்றைய தமிழ் எழுத்தாளர்கள்’ புத்தகத்தில உன் சுயவிவரம், தொலைபேசி எண், விலாசம் பார்த்தேன். உன் படைப்புகளைச் சிலாகித்து அந்த புத்தகத்தில ரெண்டு ரெவ்யூ வந்திருந்ததே!"
"ஆமாம், நீ என்னைத் தொலைபேசில தொடர்புகொண்டப்ப நம்பவே முடியலைடா! இப்ப நேர்ல பாக்கறப்ப, உன் குரல் அப்படியே இருக்கு. உன் உருவம்தான் முழுக்க மாறிடுத்து!"
"ஆனால் உன் குரல், உருவம் ரெண்டும் ஸ்கூல்ல பார்த்த மாதிரியே இன்னமும் இருப்பது ஆச்சரியம்!" என்றேன்.
"அப்படியா! அப்பா போனதும் கண்ணாடி போட்டுக்கிட்டேன். கல்லூரி நாள்லேர்ந்து வெச்சிருந்த மீசையை அம்மா போனதும் எடுத்துட்டேன்."
"உங்கப்பா அம்மா ரெண்டு பேருமே கதை எழுதுவான்னு நீ என்கிட்ட ஸ்கூல் படிக்கும்போதே சொன்னே இல்ல?"
"ஞாபகம் வெச்சிருக்கயே! வா, கூடத்து ஷோகேஸ்ல அவங்க படம் இருக்கு, பாரு", என்று கூட்டிச்சென்று அவன் பெற்றோர் கல்யாண போட்டோவைக் காட்டினான். "அப்பா சின்ன வயசிலயே போய்ட்டதால ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கற மாதிரி இந்த ஒரு படம்தான் கிடைச்சுது."
"ஷோகேஸ்ல மற்ற பொருட்கள்லாம் பாரு. இதோ வரேன். விமலா!" என்று விளித்தபடியே விலகி சமையல்கட்டை நோக்கிச் சென்றான்.
கைலாசத்தின் பெற்றோர் போட்டோவில் அம்மா பக்கம் ஓர் ஊதாநிற ரைட்டர் ஊற்றுப் பேனாவும், அப்பா பக்கம் ஒரு கருப்புநிற பைலட் பேனாவும் லாமினேட் செய்யப்பட்ட போட்டோ சட்டத்துடன் இணைந்திருந்தன. அந்த பேனாக்களைப் பார்த்ததும் என் கண்கள் கலங்கிக் கண்ணீர் துளிர்த்தது.
"இவள் விமலா, என் இல்லத்தரசி. சீனு எங்களுக்கு ஒரே பிள்ளை. எட்டாவது படிக்கறான். இப்ப கோடை விடுமுறைல திருச்சிக்குப் போயிருக்கான், அவன் சித்தி வீட்டுக்கு."
"வாங்கோ!" என்றாள் விமலா. "நீங்க ரெண்டு பேரும் ஸ்கூல காய் விட்டுண்டதுக்கப்பறம் முப்பது வருஷம் கழிச்சு இப்போதான் சந்திக்கறது மஹா ஆச்சரியம்!"
சிரித்தேன். "என் பிள்ளை மாதுவும் எட்டாவதுதான் படிக்கறான். அவன் தங்கை கமலா நாலாம் கிளாஸ். என் மனைவி பெயர் மாலினி, ஹோம்மேக்கர். கைலாசம், உன்னை மாதிரியே நானும் அரசு வங்கில கிளார்க் வேலை பார்க்கிறேன். வீடு நங்கநல்லூர்ல இருக்கு."
நான் வாங்கியிருந்த பழங்கள் பையை விமலாவிடம் தந்தேன். "கைலாசம், உனக்கு ஒரு சின்ன கிஃப்ட்" என்று சொல்லி அவனிடம் ஒரு சின்ன பார்சலைத் தந்தேன்.
உடனே பிரித்துப் பார்த்து வியந்தான். "எதுக்குடா எனக்கு விலை உயர்ந்த பார்க்கர் பேனா?"
"நன்கு அறியப்பட்ட எழுத்தாளனுக்கு ஓர் வாசக நண்பனின் எளிய பரிசு."
"தாங்க்யு ரங்கா" என்றான். "வா, மணி பன்னிரண்டாகப் போறது. சாப்பிட்டபடி பேசுவோம்."
*** *** ***
சாப்பாட்டு மேசையில் கைலாசம் நாங்கள் பள்ளியில் காய் விட்டுக்கொண்டது பற்றிக் கலகலப்பாக மனைவியிடம் சொன்னான். "எட்டாம் வகுப்பு முழுக்க நாங்க ரொம்ப நெருங்கிய நண்பர்கள் விமலா! அந்த வகுப்பு முழுவருடத் தேர்வில் இவன் என்னைவிடக் கணக்கிலும் ஆங்கிலத்திலும் அதிக மார்க். ஆனால் ரெண்டு பேரும் ஒரே டோட்டல் மார்க்...."
"அறுநூறுக்கு நானூத்தி எண்பது" என்றேன். "உனக்கு ஞாபகம் இருக்கா? ஆனால் மற்ற தேர்வுகள்ல நீ என்னைவிட ஒவ்வொரு பாடத்லயும் அதிக மார்க். அதனால கடைசிப் பரீட்சைக்கு நான் விழுந்து விழுந்து படிச்சேன்."
"ஒன்பதாம் வகுப்பு ஆரம்பிச்சு மூணு மாசத்தில இவன் திடீர்னு ஒரு நாள் ’கைலாசம், இந்த க்ஷணத்லேர்ந்து நான் உன் பேச்சு காய். என்னோட பேச முயற்சி பண்ணாதே, சொல்லிட்டேன்’, அப்படீன்னான். ஏண்டான்னு கேட்டதுக்கு பதில் சொல்லாமப் போயிட்டான். அதுக்கப்புறம் நாங்க கடைசிவரை பேசிக்கவே இல்லை!"
"ஆனால் மத்த பசங்க ஒரு பத்துநாள் நம்ம ரெண்டு பேரையும் சேர்த்துவைக்கப் படாத பாடு பட்டாங்க, இல்லயா?" என்றேன்.
"ஆமாமாம். நாங்க பேசிக்காட்ட கூட முன்ன இருந்த மாதிரி ரெண்டு பேரும் பக்கத்தில பக்கத்திலதான் உக்காரணும்னு கிளாஸ் வாத்தியார் சொல்லிட்டார். அது மஹா அவஸ்தையா இருந்தது. பசங்க எங்க ரெண்டு பேர் செருப்பையும் ஒளிச்சு வெச்சுத் தேட வெச்சாங்க..."
"ஒரு நாள் ஒரு செருப்பை மட்டும் ரெண்டுபேர்க்கும் மாத்தி வெச்சு அப்படியே போட்டுண்டு கொஞ்ச தூரம் போய்ட்டோம்", என்றேன். "அப்புறம் கண்டுபிடிச்சு, தூரத்லேர்ந்து கடுப்பாப் பார்த்து ஒருத்தர் மேல ஒருத்தர் மாறின செருப்பை எறிஞ்சு மண்ணை வீசி எறிஞ்சி மௌனமாத் திட்டிக்கிட்டோம்!"
"டெய்லி சாயங்காலம் கடைசி பீரியட் விளையாட்டு. அப்போ கால்பந்து விளையாடும் போது பசங்க எங்களை ஒருத்தர் மேல ஒருத்தர் விழனும்னு பிடிச்சுத் தள்ளுவாங்க!"
"ராஜேந்திரன்னு எங்க ரெண்டு பேர்க்கும் ஒரு காமன் ஃப்ரெண்டு இருந்தான்", என்றேன். "எட்டாம் வகுப்பு பரீட்சை, டெஸ்ட்கள்ல நாங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி முதல் ரெண்டு ரேங்க் வாங்கின போது ராஜேந்திரன் மூணாவது ரேங்க் வாங்கினான். அவன் எங்களைச் சேர்த்துவைக்க ரொம்பவும் முயற்சி பண்ணி முடியாம ஒரு நாள் எங்களுக்கு எதிர்லயே அழுதுட்டான். அப்பவும் நாங்க சேரக்கூடாதுங்கற திமிர்ல இருந்தோம்!"
"ஏண்டா ரங்கா திடீர்னு என் பேச்சு காய் விட்டே?"
"என்னத்தச் சொல்லறது? இப்ப நினைச்சுப் பார்த்தா வேடிக்கையாவும் வேதனையாவும் இருக்கு", என்றேன். "ஒன்பதாம் வகுப்பு முதல் மூணு மாசத்ல நாம மொத்தம் பத்து தேர்வுகள் எழுதியிருப்போமா? அதுல எல்லாத்லயும் நீ முதல் ரேங்க் வாங்கினதை என்னால சகிச்சுக்க முடியலைங்கறது முதல் காரணம். அப்புறம் எல்லா வாத்தியாரும் உன்கிட்ட அன்பா பழகின மாதிரி என்கிட்ட பழகலைங்கறது ரெண்டாவது காரணம். அப்புறம் எட்டாம் வகுப்பு படிச்சப்ப பள்ளி ஆண்டுவிழாவுல கட்டுரை, கவிதை, பேச்சு மூணு போட்டிலயும் நீ முதல் பரிசு வாங்கின இல்லையா? பேச்சுப்போட்டியின் தரத்தை வெச்சுப் பார்த்தா நான்தான் முதல்பரிசு வாங்கியிருக்கணும். ஆனால் நீ எடுத்த எடுப்பிலேயே கலிங்கத்துப் பரணியோட ’எடுமெடு மெடுவென வெடுத்தவோர்’ பாட்ல ஆரம்பிச்சு ஆடியன்ஸ், ஜட்ஜை மயக்கி முதல் பரிசு வாங்கினது எனக்கு மஹா எரிச்சல்!"
"அப்படியா சேதி! நீ முதல்ல காய் விட்டதும் எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. அப்புறம் எனக்கும் உன்னமாதிரியே விரோதமும் வெறுப்பும் உண்டாச்சு."
கைகள் வாய்பேச்சை நடுநடுவே மீற விமலா சமைத்திருந்த அறுசுவை உணவை ஒருகை பார்த்துப் பாராட்டினேன். சாப்பிட்டு எழுந்ததும் மூவரும் ஹாலில் சோஃபாவில் வசதியாக அமர்ந்துகொண்டு பேச்சைத் தொடர்ந்தோம்.
"திடீர்னு இவரோட காய்விட்ட மாதிரியே முப்பது வருஷம் கழிச்சு, திடீர்னு பழம்விடத் தோணித்தாக்கும்! அது எப்படி?" என்றாள் விமலா.
"ஆமாண்டா, நேத்து வரைக்கும் ரெண்டு பேரும் ஆள் அட்ரஸ் தெரியாம இருந்திட்டு எப்படிடா திடீர்னு என்கூட நம்ம பழைய நட்பைப் புதுசு பண்ணிக்கணும்னு உனக்குத் தோணித்து? யு ஆர் கிரேட் ரங்கா!"
"அதை நான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியலைடா", என்றேன். "ஆனால் சொல்லித்தான் ஆகணும்; அப்பதான் என் மனசு ஆறும்."
"என்னடா புதிர் போடறே? விஷயத்தைச் சொல்லேன், எருமை மாடு!"
"சொல்றேண்டா கழுதை!"
அந்த எருமை மாடும் கழுதையும் எங்கள் நட்பு பழையபடி ராசியாகி விட்டது என்று காட்டியது. ஆனாலும் எனக்குள் இருந்த குற்ற உணர்ச்சி குறையவில்லை.
"பதினஞ்சு நாள் முன்ன எம்பிள்ளை மாது அவன் பர்த்டேக்கு நான் வாங்கித்தந்த காஸ்ட்லி வில்சன் பேனாவத் தொலச்சிட்டான். எனக்கு வந்த கோவத்துல அவனை அடி பின்னிட்டேன்! அப்புறம் மறுநாள் அவன் பேனா கெடச்சதும் ரொம்ப ஃபீல் பண்ணினேன். மாதுவைப் பிடிக்காத இவன் கிளாஸ் பையன் ஒருத்தன் இவன் புதுப் பேனாவை எடுத்து இவன் குளோஸ் ஃப்ரெண்ட், பக்கத்து சீட் ராகவன் ஸ்கூல் பையில போட்டானாம். அதை இன்னொரு பையன் மறைஞ்சு இருந்து பார்த்து மாதுட்ட சொன்னானாம். இவன் பொய்க்கோவத்தோட ’ஏண்டா என் புதுப் பேனாவைத் திருடினே?’ன்னு ராகவன்ட்ட கேட்டப்ப அவன், ’சத்தியமா நான் திருடலைடா! நமக்குள்ள சண்டை மூட்டிவிட யாரோ என் பைல போட்டிருக்கணும்டா, ஐ ஸ்வேர்’ அப்படின்னு சொல்ல, இவன் உண்மையைச் சொல்லி ராகவனைக் கட்டிண்டு ’நமக்குள்ள இருக்கற நட்பை யாரும் குலைக்க முடியாதுடா!’ அப்படீன்னு கிளாஸ்ல எல்லோருக்கும் கேக்கற மாதிரி உரக்கச் சொன்னானாம்..."
கைலாசம் என்னை மேலே பேச விடவில்லை.
"ரங்கா, இதே மாதிரி நான் ஒன்பதாவது படிச்சபோது ஒரு நிகழ்ச்சி நடந்ததுடா! நாம ரெண்டு பேரும் அப்ப ஒருத்தரோட ஒருத்தர் பேசாம இருந்தோம். உன் பையன் பேனாவைத் தொலைச்சான். ஆனால் என் பையில யாரோ ரெண்டு பேனாவைப் போட்ட கதையை உனக்கு இப்ப விளக்கிச் சொல்லறேன் கேளு", என்று தொடர்ந்தான்...
*** *** ***
கைலாசம் சொன்னது:
அன்று மாலை ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தேன். காலையில் அம்மா கொடுத்து அனுப்பிய சாக்லெட் இரண்டையும் சாப்பிட மறந்தது ஞாபகம் வந்தது. உடனே அவசரமாக என் ஸ்கூல் பையைத் தலைகீழாகக் கவிழ்த்துத் தரையில் கொட்டித் தேடினேன். அன்று விடுமுறையில் இருந்த என் தந்தை அதைப் பார்த்துக் கொண்டிருந்தார். அம்மா சமையல் கட்டில் எனக்காகப் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தாள்.
"ஏண்டா உன் பையிலேர்ந்து ரெண்டு பேனா விழறதே!" என்று என் தந்தை சொன்னபோதுதான் கவனித்து எடுத்துப் பார்த்தேன். ஊதா நிறத்தில் ஒரு ரைட்டர் பேனாவும், கறுப்பு நிறத்தில் ஒரு பைலட் பேனாவுமாக இரண்டு புதிய ஊற்றுப் பேனாக்கள்.
"உன்னோடது மெரூண்கலர் ரைட்டர் பேனா தானே? அதுவும் போன வருஷம் வாங்கினது. ஏது இந்த ரெண்டு பேனா?" என்றார் என் தந்தை.
"தெரியலைப்பா!" என்று நான் சொன்னதை அவர் நம்பவில்லை.
"யாரோட பேனாவோ? ரெண்டும் எப்படீடா உனக்குத் தெரியாம உன் பைக்குள்ள வந்தது?" தந்தையின் குரலில் சூடு ஏறியது.
"நெஜமா எனக்குத் தெரியலைப்பா!"
"பொய் சொல்லாதே! திருடினயா? சாயங்காலம் கடைசி பீரியட்ல பசங்க வெளையாடப் போனப்ப கிளாஸ்ல டெஸ்க் மேல இருந்த இந்தப் பேனா உன் கண்ணுல பட்டது. ஏதோ ஓர் ஆசைல நீ சத்தம் போடாம எடுத்துப் பையில போட்டுண்டு வந்துட்டே, அப்படித்தானே?"
"ஐயோ அதெல்லாம் இல்லைப்பா! நான் திருடலை!"
"அப்புறம் எப்படிடா பேனா ரெண்டும் உன் பைக்கு வந்தது?"
"அதுதான் எனக்குத் தெரியலைப்பா!"
என் அம்மா கையில் பால் டம்ளர்-டபராவுடன் வந்தவள், "கைலாசம், உண்மையைச் சொன்னா அப்பா புரிஞ்சுப்பார். அப்பாக்குக் கோவம் வந்தா உன்னால தாங்க முடியாது!"
"என்னம்மா நீயும் இப்படிக் கேக்கறே? நான் திருடலைம்மா", என்றேன். "பேனா எப்படி என் பைக்குள்ள வந்ததுன்னு எனக்குத் தெரியலையே அம்மா!"
பொங்கிவரும் பாலாக என் தந்தைக்குக் கோபம் தலைக்கேறி அவர் கண்களில் வழிந்தது. பளார் என்று என் கன்னத்தில் அவர் அறைந்தபோது எனக்குத் தலை சுற்றியது.
"திருடவும் செஞ்சிட்டுப் பொய் வேற சொல்லறயாடா, ராஸ்கல்!" என் முதுகில் அடிகள் சரமாரியாக விழ நான் தடுமாறிச் சாய்ந்தேன். ஆனாலும் நான் அழவில்லை.
"கைலாசம், பொய் பேசினா ஸ்வாமி கண்ணக் குத்திடும்னு உனக்குச் சொல்லியிருக்கேன், இல்லையா?" என்றாள் அம்மா. "எப்படி பேனாவைத் திருடினதா அப்பா உன்னை அடிக்கறாரோ அப்படித்தானே பேனாவைத் தொலச்சதுக்கு அந்த ரெண்டு பையன்களும் அவா அப்பாட்ட அடி வாங்குவா!"
அடிகள் போதும் என்று நினைத்தாரோ என்னவோ, அப்பா என்னைத் தரதரவென்று இழுத்துக் கொண்டுபோய் சமையல் கட்டில் இருந்த ஸ்வாமி அலமாரியின் முன் தள்ளினார். "போடா, போய் ஸ்வாமி முன்னால நின்னுண்டு நீ தப்புப் பண்ணலைன்னு சொல்லு."
"கைலாசம், என்னால இந்த அவமானத்தைத் தாங்க முடியலைடா. நீயா இப்படி!", என்று அழுத அம்மா, என்று தன் புடவைத் தலைப்பை எரிந்துகொண்டிருந்த ஸ்டவ் அடுப்பின் ஜுவாலை அருகில் வைத்துக்கொண்டு, "இதுக்கு உயிரை விட்டுடலாம்", என்றாள்.
"பார்றா, அம்மா பத்திக்கப் போறா. உண்மையைச் சொல்லுடா!" என்று தந்தை இரைந்தார்.
"ஐயோ கடவுளே! நான் உண்மையைத் தானே சொல்றேன்", என்று நான் கண்ணீருடன் சத்தம் போட்டுக் கதறினேன். "ரெண்டு பேனாவும் எப்படி என் பைக்குள்ள வந்ததுன்னு எனக்குத் தெரியாது. அப்படி நான் திருடிட்டுப் பொய் சொல்றதா நெனைச்சா ஸ்வாமி என் கண்ணைக் குத்தட்டும், ஏத்துக்கறேன்."
முதன்முதலாக அவர்களுக்கு என் மேல், நான் சொல்வதில், நம்பிக்கை வந்தது. கோபத்துடன் முட்டவந்த மாடு மனிதன் கீழே விழுந்ததும் விலகிச் சொல்வதுபோல் அப்பாவின் கோபம் தணிந்து அவர் அப்பால் சென்றார். அம்மா என்னை அணைத்துக் கொண்டாள், அப்பாவின் விரல்கள் பதிந்த என் கன்னத்தை வருடியபடி.
"ரெண்டு பேனாவும் எப்படி என் பைல வந்ததுன்னு புதிரா இருக்கும்மா!" என்று கேவினேன். "எனக்கு ஒண்ணுமே புரியலை. நாளைக்கு பேனாவைக் கிளாஸ்ல காட்டி யாரோடதுன்னு கேட்டு திருப்பிக் கொடுத்துடறேன்."
"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்", என்றார் அப்பா. "அப்படிப் பண்ணினா நீதான் திருடினேன்னு நிரூபணம் ஆய்டும். கொண்டா அந்த ரெண்டு பேனாவையும்" என்று கீழே இருந்தவற்றைப் பறித்து வைத்துக்கொண்டார்.
*** *** ***
"அதுக்கப்புறம் அம்மா அந்த ஊதா நிற ரைட்டர் பேனாவையும் அப்பா கறுப்பு நிற பைலட் பேனாவையும் கதை எழுதப் பயன்படுத்தினாங்க", என்றான் கைலாசம், மோட்டுவளை இல்லாத வீட்டுக் கூரையைப் பார்த்தவாறே. "அந்த ரெண்டு பேனாவும்தான் அவா புகைப்படத்தோட இணைச்சு ஷோகேஸ்ல வெச்சிருக்கேன், பார்த்தே இல்லயா?"
"இன்னிவரைக்கும் ரங்கா, சத்தியமா அந்தப் பேனா ரெண்டும் எப்படி என் ஸ்கூல் பைக்குள்ள வந்ததுதுன்னு எனக்குத் தெரியாது", என்ற கைலாசம், "யாராவது அதைப் பைக்குள்ள போட்டங்களான்னும் தெரியாது", என்றபடி என்பக்கம் திரும்பினான்.
என் கண்களில் இருந்து மாலையாகக் கண்ணீர் பெருகுவது கண்டு திடுக்கிட்டான். "நீ ஏண்டா அழறே?" என்றான்.
பத்திரிகை படித்தவாறே கேட்டுக்கொண்டிருந்த விமலாவும் என்னைப் பார்த்தாள்.
"ஒரு எழுத்தாளன் என்கிற முறையில இந்த சோக நிகழ்ச்சியை கிராஃபிக்கா விவரிச்சேன். நீ ஏன் அழறே?"
"உன்னை உங்கப்பா அடிச்சதெல்லாம் எனக்குத் தெரியும் கைலாசம்! நீ விவரமா அவன்ட்ட சொன்னதை ராஜேந்திரன் என்கிட்ட சொன்னான்."
"அதுக்கு இப்ப என்ன கண்ணீர்! எனக்கே அழுகை வரல!" என்றான் கைலாசம்.
"கைலாசம், உன்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லத்தான் நான் இன்னைக்கு இங்க வந்தேன்", என்றேன். "இத்தனை வருஷமா என் மனசில புகையேறிக் கிடந்த உண்மை. பேனாவைப் பறிகொடுத்த என் பிள்ளையை அன்னிக்கு அடிச்சு மறுநாள் வருத்தப்பட்டேன் இல்லையா? அன்னிக்குதான் எனக்கு உன்னைக் கண்டுபிடிச்சுப் பேசி என் மனசில இருக்கற உண்மையைச் சொல்லணும்னு தோணிச்சு."
"என்னடா புதிர் போடறே? விஷயத்தைச் சொல்லேன், எருமை மாடு!"
"சொல்றேன் கைலாசம். அதுக்கப்பறமும் நான் உன் நண்பனா இருக்க எனக்கு அருகதை உண்டான்னு நீ தீர்மானிச்சுக்க" என்றேன்.
"சொல்லித் தொலையேன்!" என்றான் கைலாசம் பொறுமை இழந்து.
"அன்னைக்கு அந்த ரெண்டு பேனாவையும் உன் ஸ்கூல் பையில் போட்டது நான்தாண்டா கைலாசம்!"
*** *** ***
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கதை இனித்தான் படிக்கணும், நம் தளத்தில் லிங்குகள் தர அனுமதி இல்லை ஐயா
............அதனால் எடுத்துவிட்டேன் !
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
ஸாரி, மறந்துவிட்டேன்! லிங்க்கை எடுத்துவிட்டதற்கு நன்றி, அம்மா.
ரமணி
ரமணி
மேற்கோள் செய்த பதிவு: 1168616krishnaamma wrote:கதை இனித்தான் படிக்கணும், நம் தளத்தில் லிங்குகள் தர அனுமதி இல்லை ஐயா............அதனால் எடுத்துவிட்டேன் !
அன்புடன்,
கிருஷ்ணாம்மா![]()
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடாடா..........உண்மை தெரிந்ததும் மறுபடி அவர்கள் சண்டை போட்டுக்காம இருக்கணுமே !
.....அருமையான கதை!.................
............
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ரமணியின் சிறுகதைகள்: திருட்டுப் பட்டம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ரமணியின் சிறுகதைகள்: திருட்டுப் பட்டம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ரமணியின் சிறுகதைகள்: திருட்டுப் பட்டம் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1168620ரமணி wrote:ஸாரி, மறந்துவிட்டேன்! லிங்க்கை எடுத்துவிட்டதற்கு நன்றி, அம்மா.
ரமணிமேற்கோள் செய்த பதிவு: 1168616krishnaamma wrote:கதை இனித்தான் படிக்கணும், நம் தளத்தில் லிங்குகள் தர அனுமதி இல்லை ஐயா............அதனால் எடுத்துவிட்டேன் !
அன்புடன்,
கிருஷ்ணாம்மா![]()
ஐயோ!..சாரி எல்லாம் எதுக்கு, மறக்கிறது எல்லோருக்கும் சகஜம் தானே, நான் பார்த்தேன் அதனால் எடுத்து விட்டேன் , நீங்கள் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|