புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
65 Posts - 64%
heezulia
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
257 Posts - 44%
heezulia
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
16 Posts - 3%
prajai
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_m10சித்தர் பாடல்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர் பாடல்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 08, 2015 9:55 pm

First topic message reminder :

எண்சீர் விருத்தம்-சித்தர் பாடல்கள்

சிறந்தபரா பரமாகிய யெங்குந் தானாய்த்
தீர்க்கமுடன் ரவிமதியுஞ் சுடர்மூன்றாகிப்
பரந்தருளும் ஐம்பூத மாயை தோன்றிப்
பல்லாயிரங் கோடிஅண்டம் படைத்த போதம்
வரம்பெருகி அனந்தஅனந்தம் உயிரு மாகி
மதபேத மாகவுந்தான் வடிவைக் காட்டிச்
சரம்பெருக அண்டத்தி லெழுந்தே நின்ற
சச்சிதா னந்தம்அதைப் பணிகு வோமே.


-காக புசுண்டர் சித்தர்
பராபரமாக எங்கும் சிறந்து தானே எங்குமாய் நின்று,சூரிய சந்திர விண்மீன்கள் ஆகிய மூன்று ஒளியுமாகி, ஐம்பூதங்கள் கொண்ட மாயையும் ஆகி, பல்லாயிரம் கோடி உலகுகளைப் படைத்த அறிவுடைப் பொருளாகி, எண்ணற்ற உயிர்களுமாகி, மதங்களை நீக்கி, தன் உண்மை வடிவைப் புலப்படச் செய்து, எங்கும் சஞ்சரித்து நின்ற சத்சித் ஆனந்தம் ஆகிய கடவுளைப் பணிகுவோமே.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 14, 2015 7:14 pm

சித்தர் பாடல்கள் - Page 2 103459460 சித்தர் பாடல்கள் - Page 2 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2015 7:40 pm

ayyasamy ram wrote:சித்தர் பாடல்கள் - Page 2 103459460 சித்தர் பாடல்கள் - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1168968
நன்றி வணக்கம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Oct 15, 2015 6:17 pm



இருள்வெளியாய் நின்றசிவ பாதம் போற்றி

எழுத்ததனின் விவரத்தை விரித்துச் சொல்வேன்

அருவுருவாய் நின்றதுவே எழுத்த தாகும்

ஆதியந்தம் அண்டபிண்ட மதுவே யாகும்

திருவுருவாய் ரவிமதியாய் நின்ற ரூபம்

சிவசக்தி திருமாலின் ரூப மாகும்

வருமுருவே சிவசக்தி வடிவ மாகும்

வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே.



--வால்மீகி சூத்திரம்

இருளாகவும், வெட்டவெளியாகவும் இருப்பது சிவமேயாகும்.அவரின் பாதம்   போற்றுகிறேன்.
எழுத்துக்களை விவரமாக விரித்துச் சொல்கிறேன். கேள்.
அருவுருவமாகவும் நின்ற நாதமே எழுத்தானது.
ஆதியந்தம் என்பனவும், அண்டங்களே உடலாகப்(பிண்டமாக) உள்ளன என்பதும் சரியேயாம்.
அழகிய உருவமாய், சூரிய சந்திர வடிவமாக இருப்பதும் சிவன், சத்தி, திருமால் ஆகியோரின் வடிவமேயாகும்.
எல்லா உருவங்களுமாகச் சிவசக்தி வடிவமே வரும்.
ஆகவே வந்த்தும் மறைந்த்துமாகிய வடிவங்களில் மனத்தை வைப்பீராக.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Oct 16, 2015 6:40 pm

பூஜா விதி

ஆதியென்ற மணிவிளக்கை அறிய வேணும்

அகண்டபரி பூரணத்தைக் காண வேணும்

சோதியென்ற துய்யவெளி மார்க்க மெல்லாஞ்

சுகம்பெறவே மனோன்மனி யென்னாத்தாள் தன்னை

நீதியென்ற பரஞ்சோதி ஆயி பாதம்

நிற்குணத்தி னின்றநிலை யாருங் காணார்

வேதியென்ற வேதாந்தத் துள்ளே நின்று

விளங்குவதும் பூசையிது வீண் போகாதே.


--இராம தேவர்

எல்லாவற்றுக்கும் மூலமாகிய மணிவிளக்குப் போலும் உள் ஒளியை அறிய வேண்டும்.
அதனால் பிரபஞ்சம் முழுவதும் விரிந்த பரிபூரணத்தை காண வேண்டும்.
சோதி தோன்றுதலை உச்சியிலான வெளியின் வழியே இன்பம் தரும் மனோன்மனியாகும் என் தாய் தன்னை எங்கும் நியதியாய் நிர்வாகம் செய்யும் பரஞ்சோதியான தாயின் பாதம் இவற்றை அறிய வேண்டும்.
நிர்க்குணமாய் இருக்கும் அவள் நிலையை உடலிலும் உலகிலும் யாரும் அறிவது கடினம்.
வேதாந்தமாகிய யோக மார்க்கம் என்னும் வேதிக்கும் செயலால் இவற்றை விளங்கிக் கொள்ளும் பூசை இது வீண் போகாது.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Oct 17, 2015 6:14 pm

காப்பு எண்சீர் விருத்தம்

தெளிவுதனில் தெளிவுதரு மருளுங் காணும்

கெணத்திலே சிவமயமுஞ் சேரத் தோணும்

வழியதனில் நல்லவழி ஞானம் கூடும்

மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும்

ஒளிவுதனி லொளிவுதரு முறுதி சொல்வார்

உற்பனத்தி லுற்பனமா யுறுதி தோணும்

வெளியதனில் வெளியாகி நாதத் துள்ளே

விளங்கிநின்ற வாலைப்பெண் ணாதி காப்பே!

--கருவூரார்.

இவள் தெளிவார்க்குத் தெளிவும் பிறர்க்கு விளங்காமையும் தருவாள்;
ஒரு கணத்தில் சிவமயமாகச் சேர்ப்பாள்;
நல்ல வழியில் ஞானம் காட்டுவாள்;
மறை உடல் மறைவு தருவாள்;
உறுதியும், உதிப்பதில் உதிப்பதும் காட்டுவாள்;
வெளியோடு வெளியாக விரியும் நாதத்தில் ;
விரியும் விளக்கமாய் நிற்கும் வாலைப் பெண்ணாகிய இந்த ஆதி என்னைக் காக்கட்டும்.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 18, 2015 6:02 pm

நஞ்சுண்ண வேண்டாவே      அகப்பேய்

நாயகன் தாள்பெறவே!

நெஞ்சு மலையாதே          அகப்பேய்

நீயொன்றும் சொல்லாதே!


-- அகப்பேய் சித்தர்

அகப்பேயே! நஞ்சு உண்ணல் முதலிய வழிகளில் உயிர் விட்டால் கடவுள் தாள் பெறலாம் என்பது உண்மையன்று. நெஞ்சு மலைக்காமல் நான் சொல்வதைக் கேள். நீ வாயால் ஒன்றும் பேசாதிரு.

விளக்கம்; மவுனமே திருவடி பெற எளிய வழி என்பதாகும்.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 19, 2015 7:07 pm

கலிவிருத்தம்

ஆதி யந்தமில் லாதவ னாதியைத்

தீது றும்பவந் தீப்படு பஞ்சுபோல்

மோ துறும்படி முப்பொறி யொத்துறக்

காத லாகக் கருத்திற் கருதுவாம்.



தொடக்கமும் முடிவும் இல்லாத (ஆதி-பிரம்மம்) பிரம்மத்தைக் காதலோடு கருத்தூண்றி நினைத்தால், பஞ்சில் படும் நெருப்பைப் போல், தீயது தரும் நம் பிறவி மற்றும் மூன்று பொறிகள் வெளிப்படும்.

விளக்கம்= மூன்று பொறி-முத்தீயில் ஏற்படும் மூன்று பொறிகளாம். வேதத்தில் முழுமுதற் கடவுள் என்று பேசபடுவது பிரம்மம் ஆகும். எல்லாவற்றையும் தனியே சேர்ந்தாலும், எல்லாம் ஒன்றாக சேர்ந்தாலும் அவற்றை விடப் பெரியது என்பதே பிரம்ம்ம எனப்படும். இதையே ஆதி என்றும், ஆதியந்தம் இல்லாதது என்றும் கூறுவர்.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Oct 20, 2015 6:38 pm

பதின்மூன்று

சீர்கொண்ட அருமறையின் பொருளாய்நின்ற

தெட்சணா மூர்த்தியுடபாதங் காப்பு

பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன்றுக்குள்

பிரித்துவைப்பேன் பூவழலை பெருமையெல்லாம்

நீர்கொண்ட வூசரத்தின் மகிமைதன்னை

நிசமாகச் சொல்லாமல் மறந்துபோட்டார்

ஆர்கொண்ட வேணியணா ருமைக்குச்சொன்னார்

ஆத்தாளு மடியேனுக் கறைந்திட்டாளே.


--சூரியானந்தர் சூத்திரம்

வேதங்களின் பொருளாய் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் திருவடி காக்கட்டும். பதின்மூன்று சூத்திரங்களுக்குள் யோகம் எல்லாம் அடக்கிச் சொல்வேன். மற்றையோர் உண்மைகளைச் சொல்ல மறந்து விட்டனர்.சிவன் ஆகிய தட்சிணாமூர்த்தி உமைக்குச் சொல்ல அவள் எனக்குச் சொன்னாள்.

நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்


சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Oct 20, 2015 8:36 pm

அருமையான பாடலும், விளக்கங்களும் நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 21, 2015 6:45 pm

கடவுள் வாழ்த்து.


ஆனஅஞ்சு எழுத்துளே அண்டமும் அகண்டமும்

ஆனஅஞ்சு எழுத்துளே ஆதியான மூவரும்

ஆனஅஞ்சு எழுத்துளே அகாரமும் மகாரமும்

ஆனஅஞ்சு எழுத்துளே அடங்கலாவது உற்றதே.


--சிவ வாக்கியர்

திருஐந்து எழுத்து எனப்படும் ‘நமசிவாய’ அல்லது ‘சிவாயநம’ என்னும் சைவ மந்திரத்தை இதில் விளக்குகிறார்.
அண்டமாகிய இந்த உலகம், அண்டமாகிய இந்தப் பிரபஞ்சம் ஆகிய இரண்டும் ஐந்தெழுத்துகளின் உள்ளே அடங்கியன ஆகும்.
எல்லாவற்றுக்கும் ஆதியாகிய பிரமன், திருமால்,உருத்திரன் ஆகிய மூவரும் இந்நமந்திரத்தில் அடங்கியுள்ளனர்.
அ+உ+ம் என்னும் ஓங்காரத்தின் விரிவும் பயனும் இந்த மந்திரத்தில் அடங்கியுள்ளன.
ஐந்தெழுத்தில் எல்லாம் அடங்கியுள்ளன என்க.

விளக்கம்: ஓம் என்பதை முதல் எழுத்தாலும் கடைசி எழுத்தாலும் மூன்றாம் அடியில் கூறினார். தோற்றம், முடிவு ஆகிய யாவும் என்பதை இது குறித்ததால் எல்லாம் என்பது பெறப்பட்டது..
திருமந்திரத்தில் ஓங்காரத்திலும் ஐந்தெழுத்திலும் எல்லாம் அடக்கம் என்ற கருத்தை இப்பாடல் தழுவியுள்ளது.
சிவன் எல்லாம் அறிந்தவர், எல்லாம் செய்தவர், இன்னும் செய்பவர் ஆகையால் அவரைக் குறிக்கும் ஐந்தெழுத்திலும் பூமியிலும் யாவும் அடக்கம் என்றார்.


நன்றி-தெளிவுரை
முனைவர் அ.அறிவொளி ,வர்த்தமானன் பதிப்பகம்


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக