ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

+3
சசி
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
7 posters

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 9 Empty நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Oct 07, 2015 8:08 pm

First topic message reminder :

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.

என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே
.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 9 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 8:00 pm

T.N.Balasubramanian wrote:ஆம் அய்யா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1173629
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 9 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 09, 2015 8:16 am

நவம்பர்-9
போதனா முறை
எண்ணிறந்த ஜீவர்களாகத் தோன்றியிருக்கும் ச்சசிதானந்த சிவமே, உனக்குப் பாடம் புகட்டுதல் என்னும் எண்ணம் என் உள்ளத்தினுள் புகுந்துவிடலாகாது.

பரதத்துவத்தைப் பழக்கத்தில் கொண்டு வருவதே நல்ல போதனா முறை. வெறும் பேச்சாளன் போதிக்கவல்லவனாகான். உண்மைக்கு ஒப்ப வாழ்கின்றவனது ஒவ்வொரு செயலும் வலிவு மிகப் படைத்தது., ஒவ்வொரு சொல்லும் உள்ளத்தை மாற்றியமைக்க வல்லது. நல்வாழ்வு சர்வகாலமும் பாடம் புகட்டும் போதனா முறையாகிறது.

காச்சச் சுடர்விடும்பொற் கட்டிபோல் நின்மலமாய்ப்

பேச்சற் றவரே பிறவார் பராபரமே.


--தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 9 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 10:07 am

நவம்பர்-10

தற்போதம்

உலக வாழ்வு என்னும் தூக்கத்தினின்று பாரமார்த்திக வாழ்வு என்னும் விழிப்பு நிலைக்குப் போவேனாக.

தூங்குபவனுடைய தரம் யாது என்று நமக்கு விளங்குவதில்லை. விழித்தான பிறகு அது நன்கு வெளியாகிறது. பாரமார்த்திக உணர்விலே விழித்து எழுந்திருப்பவனுக்குப் பெருவாழ்வு துவங்குகிறது. அவனுடைய செயல்களெல்லாம் அவனை மேன்மையின் கண் எடுத்துச் செல்வனவாகும். தெய்வப் பெற்றியே அவன்பால் பொலிகிறது.

உள்ளும் புறம்பும் உவட்டாத ஆனந்தக்

கள்ளருந்தி நின்றதிலே கண்ணுற்றாய் நெஞ்சமே.


--பட்டினத்தார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 9 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 12, 2015 12:04 pm

நவம்பர்-11

தனித்திரு

தெய்வ சிந்தனையில் ஊறியிருத்தற் பொருட்டு தனித்திருந்து பழகுவேனாக.

மனிதன் உலகுக்குள் வந்தது தனியாக. அவள் உலகைவிட்டு எகுவது தனியாக. உலகில் இருக்கும்பொழுதும் இனையிடையே அவன் தனித்திருந்து பழகவேண்டும். பாரமார்த்திக வாழ்வுக்குப் பக்குவம் ஆகாதவன் தனித்திருக்க முடியாது. பக்குவப்பட்டவனுக்கு அது தெய்வ சான்னித்தியத்துக்கு ஒப்பானது.

தனிமுதலைப் பார்த்துத்

தனித்திருந்து வாழாமல்

அணியாய மாய்ப்பிறந்திங்கு

அலைந்துநின்றேன் பூரணமே



---பட்டினத்தார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 9 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 12, 2015 12:07 pm

நவம்பர்-12

பசித்திரு

அருட்பசியெடுத்து அழுவேனாகில் அகிலாண்ட நாயகி அப்பசியைப் போக்கியருள்வாள்.

பசியெடுத்திருப்பவனுக்கு உறக்கம் இல்லை.உணவை அவன் நாடுகிறான். கடவுளை அடையவேண்டும் என்ற பசி யாருக்கு வருகிறதோ அவன் பாக்கியவான். யாரும் புகட்டாது அருள் நாட்டம் தானாகவே அவனுக்கு வந்துவிடுகிறது.

விசுத்தி மகேசுரனை விழிதிறந்து பாராமல்

பசித்துருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே
.

---பட்டினத்தார்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 9 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 13, 2015 1:11 pm

நவம்பர்-13

சாக்ஷி

பிரபஞ்சத்தின் நடைமுறை அனைத்துக்கும் பரம்பொருளே, நீ சாக்ஷியாயிருப்பது போன்று எனது உடல் வாழ்க்கைக்கு நான் வெறும் சாக்ஷியாயிருப்பேனாக.

அழகிய படம் ஒன்றை ஒருவன் விலைக்கு விற்கிறான். மற்றொருவன் வாங்குதற்குப் பேரம் பண்ணுகிறான். இருவர் கருத்தும் விலைநிலேயே சென்றுகொண்டிருக்கிறது. வழிப்போக்கன் ஒருவனோ படத்தின் ஓவியத் திறமையை ரசித்துக்கொண்டிருக்கிறான். பிரபஞ்சம் என்னும் படத்தை அதற்கு சாக்ஷியாயிருப்பவனே ரசிக்கிறான். அதில் கட்டுண்டிருப்பவன் ரசிப்பதில்லை.

சொல்லால் மனத்தால் தொடராச் சம்பூரணத்தில்

நில்லா நிலையாய் நிலைநிற்ப தெந்நாளோ?


--தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 9 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 9:21 pm

நவம்பர்-14
பிண நெஞ்சு

நான் யாண்டும் ஜீவபோதத்தில் மூழ்கியிருப்பதால் உள்ளிருக்கும் சிவம் சவம் போன்று கிடக்கிறது.

அடுப்புக்கரி தன்னளவில் கன்னங்கறேரென்று கிடக்கிறது. ஆனால் அதைத் தீயுடன் சேர்த்தால் அது தேஜோமயமாகத் திகழ்கிறது. மனது அதுபோன்றது. உலக விஷயங்களில் சேர்ந்தால் அது பிண நெஞ்சு.பரம்பொருளைச் சார்ந்தால் அது சித்சொரூபம் ஆகிறது.

ஆடு கின்றிலை கூத்துடை யான்கழற்கு

அன்பிலை என்புருகிப்

பாடு கின்றிலை பதைப்பதும் செய்கிலை

பணிகிலை பாதமலர்

சூடுகின்றிலை சூட்டுகின் றதுமிலை

துணையிலி பிணநெஞ்சே

தேடு கின்றிலை தெருவுதோ றலறிலை

செய்வதொன் றறியேனே


--மாணிக்கவாசகர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 9 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 15, 2015 9:40 am

நவம்பர்-15
பூனையின் பல்

நன்றுடையானே, தீ தில்லானே, உன்னை வந்தடைந்த பிறகே நான் தீ தில்லாதவன் ஆகிறேன்.

பூனையின் பல் கருணைக்கு இருப்பிடமா, கொடூரத்துக்கு இருப்பிடமா? பூனைக்குட்டி அது கருணைக்கு இருப்பிடம் என்று சொல்லும். ஆனால் எலியோ அது கொடூரத்துக்கு இருப்பிடம் என இயம்பும். உலகம் நல்லதா, கெட்டதா என்னும் கேள்வி எழுகிறது. கடவுள் மயமாய் அதைக் காண்பவனுக்கு அது நல்லது., மற்றவனுக்கு அது கெட்டது.

எண்ணமுந்தான் நின்னைவிட இல்லை

யென்றால் யான்முனமே

பண்ணவினை யேது பகராய் பராபரமே.


---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 9 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Nov 16, 2015 6:59 pm

நவம்பர்-16

பொறுமை

பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் பண்படுத்தும் பெரிய பொருளே, உன்போன்று நான் பொறுமை படைத்திருப்பேனாக.

அமைதி ஆற்றலுக்கு அறிகுறி. பயிற்சியில் பண்பாடு அடைந்து பொறுமையுடன் இருக்கும் மனதில் ஆற்றல் மிக உண்டு. எப்படி வினையாற்றுவது என்பது பொறுமையாளனுக்குத் தெரியும். அவன் வீண் பேச்சுப் பேசான். அவனுடைய வேலைத்திட்டம் யந்திரம் போன்று ஒழுங்கானது. முன்யோசனை அவனுக்கு மிகவுண்டு. நாடிய கருமத்தை முறையாக அவன் செய்துமுடிப்பான். இதுவே பொறுமையின் விளைவு.

உள்ளும் புறம்பும் ஒருபடித்தாய் நின்றுசுகங்

கொள்ளும் படிக்கிறைநீ கூட்டிடவுங் காண்பேனோ?


---தாயுமானவர்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 9 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 5:31 pm

நவம்பர்-17

உடலை அலங்கரித்தல்

உடல் ஞாபகம் மறந்துபோகவும் பரபோதம் பேலோங்கவும் இறைவா, எனக்கு நீ அருள்புரிவாயாக.


உடல் பற்று வைத்திருப்பவனே உடலை அலங்கரிக்கிறான். பாபங்கள் அனைத்தும் உடல்பற்றினின்று உதிக்கின்றன. உள்ளம் பரிபக்குவம் அடையுமளவு உடலைப்பற்றிய எண்ணம் மறைந்துபோய்விடுகிறது. உடல் வாழ்க்கை வாழ்ந்திருக்கும்பொழுதும் உடலைப்பற்றி எண்ணாதிருப்பவனே நல்ல ஆத்ம சாதகன்

அநித்தியத்தை நித்தியமென்று ஆதரவா யெண்ணுதே

தனித்திருக்கேன் என்குதே தனுமறக்கேன் என்குதே.


--பட்டினத்தார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 9 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 15 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 15  Next

Back to top

- Similar topics
» தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு
» தினசரி நாட்காட்டியில் மருத்துவ குறிப்புகள் -(தொடர் பதிவு)
» வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum