ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

+3
சசி
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
7 posters

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Empty நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Oct 07, 2015 8:08 pm

First topic message reminder :

போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.

என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே
.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 23, 2015 6:58 pm

முமுக்ஷுத்வம்

சச்சிதானந்த சிவமே,உன்னை நான் அடைந்தாக வேண்டுமென்று முழு மனதோடு முயன்றால் நொடிப்பொழுதில் உன்னில் நான் ஒன்றித்து விடுவேன்.

தண்ணீருக்குள் அமிழ்த்தி வைக்கப்பட்டிருப்பவனுக்கு வேறு எந்த விதமான நாட்டமும் உண்டாவதில்லை. சுவாசிப்பதற்குக் கொஞ்சம் காற்றுக் கிடைத்தால் போதுமென்று அதன் பொருட்டே அவன் திணறுவான். உயிரைக் காப்பாற்றத் திண்டாடுவது போன்று தெய்வத்தை அடையத் திண்டாடுவது முமுக்ஷுத்வம்.

தித்திக்குந் தெள்ளமிர்தை சித்தாந்தத்துட் பொருளை

முத்திக்கு வித்தை முதனினைப்பதெக் காலம்?


--பத்திரகிரியார்


நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 24, 2015 7:55 pm

கடலின் அடிமட்டம்

உள்ளத்தினுள்ளே அமைதியில் நிலைத்திருந்து இறைவா, உன்னை நான் போற்றுவேனாக.

கடலின் மேற்பகுதியில் அலை வீசுகிறது. மலைபோன்று அது உயர எழுகிறது. ஆனால் ஆழமான அடிமட்டத்தில் அது அசையாதிருக்கிறது. மனிதனுடைய மனதின் அடிப்பகுதி அங்ஙனம் அசையாதிருக்க வேண்டும். தெய்வ சாந்தி நிலவுதற்கு அந்த அடிப்பகுதியே உற்ற இடமாகும்.

மற்றிடத்தைத் தேடியென்றன்

வாழ்நாளைப் போக்காமல்

உற்றிடத்தைத் தைடி

உறங்குவது மெக்காலம்?


--பத்திரகிரியார்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Oct 25, 2015 7:08 pm

பரபோதம்

உலகை எண்ணி உலகமயமாய் இருக்கும் நான், உன்னை எண்ணி உனது போதத்தில் நிலைத்து நின்று விடுவேனாக.

மாறுபடும் இரண்டு எண்ணங்கள் மனதில் ஏக காலத்தில் வருவதில்லை. ஓர் எண்ணத்தில் அது ஊறியிருக்கும்போது ஏனைய எண்ணங்கள் அடிபட்டுப் போய் விடுகின்றன. பரபோதம் என்னும் பேரறிவால் எண்ணங்கள் யாவும் அடிபட்டுப் போய் விட்டால் பேரறிவே எஞ்சி நிற்கும்.

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்

பொன்னில் மறைந்தது பொன்னணி பூடணம்

தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்

தன்னில் மறைந்தது தன்கர ணங்களே



--திருமந்திரம்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Mon Oct 26, 2015 6:27 pm

சரியை

குழந்தையாயிருந்து வாழ்வைத் துவக்குவது போன்று சாதனம் சரியையில் துவங்குகிறது. பின்பு வாழ்நாளெல்லாம் அது அனுஷ்டிக்கப்படுகிறது.

ஒரு குடுபத்துள் பிறந்து வளரும் குழந்தைக்கு முதலில் வாழ்க்கைமுறை புகட்டப்படுகிறது. பெற்றோர் சொற்படி அது பணிந்து நடக்கவேண்டும். பெற்றோர் ஒழுகுவதைப் பார்த்தும் அது பின்பற்றுகிறது. பழக்கத்தால் நல்ல வாழ்க்கை வாழுதலில் படிந்து விடுவது சரியை.

நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்

தேடித் திரிந்து சிவபெரு மான்என்று

பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்

கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே


--திருமந்திரம்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 27, 2015 9:27 pm

கிரியை

மனம், மொழி, மெய், ஆகிய திரிகரணங்களால் தேவே, உனக்கென்றே நான் செயல் புரிவேனாக.

வயது வரும்பொழுது ஒவ்வொரு மனிதனும் வினையாற்றத் தகுதியுடையவன் ஆகிறான். அவன் புரியும் கருமம் தனக்கு மட்டுமல்லாது உலகுக்கும் நன்கு பயன்படவேண்டும். அத்தகைய கருமத்தைக் கடளுக்கென்றே செய்வது கிரியை ஆகிறது.

இதுபணிந் தெண்டிசை மண்டலம் எல்லாம்

அதுபணி செய்கின் றவளொரு கூறன்

இதுபணி மானுடர் செய்பணி ஈசன்

பதிபணி செய்வது பத்திமை காணே.


--திருமந்திரம்


நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Oct 28, 2015 6:41 pm

சம்யோகம்

யான், எனது என்பவற்றைநெல்லாம் நீ, உனது என்று உன்மயமாக்க கற்றுக் கொள்வேனாக.

கடலினுக்குப் புறம்பாக அலைக்கு வியக்தியில்லை. கடவுளுக்குப் புறம்பாக மனிதனுக்கு வியக்தியில்லை. கடலைச் சார்ந்திருந்தே அலை தன் வலிவைப் பெறுகிறது. கடவுளைச் சார்ந்திருந்தே மனிதன் தனது ஆற்றலைப் பெறுகிறான். தனக்குரிய யாவையும் கடவுளிடத்திருந்து பெறுவது சம்யோகம்.

யோகச் சமயமே யோகம் பலவுன்னல்

யோக விசேடமே அட்டாங்க யோகமாம்

யோகநிர் வாணமே உற்ற பரோதயம்

யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே.

--திருமந்திரம்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Oct 29, 2015 8:38 am

ஞானம்

ஆதிபகவன் எனும் சிவசக்தியினிடத்திருந்தே உலகனைத்தும் உருவெடுத்திருக்கிறன என்பதை அறிந்துகொள்வேனாக.

ஜடப்பொருள்களுள் வேற்றுமை காண்பதும் ஜீவர்களுக்கிடையில் வேற்றுமை காண்பதும் அக்ஞானம். அவையாவும் ஒரே மூலப்பொருளிடத்திருந்து தோற்றத்துக்கு வந்துள்ளன. ஒரு பொருளே பலவாய்த் தோன்றிக்கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது ஞானம்.

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை

ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று

ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்

ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

--திருமந்திரம்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 30, 2015 6:18 pm

சோம்பல்

யாண்டும் பேருக்கம் படைத்திருந்து பரமனைப் போற்றி வருவேனாக.

ஆத்ம சாதனத்துக்குப் பேரிடைஞ்சலாயிருப்பது சோம்பல். அதை அகற்ற இயலாதவர்க்கு முன்னேற்றமில்லை. தேவைக்குமேல் உடலுக்கு ஓய்வும்,உறக்கமும் கொடுத்தால் அது சோம்பலாகும். இன்று செய்து முடிக்க வேண்டியதை நாளைக்கென்று ஒத்திவைப்பது சோம்பல்.

மடியை மடியா ஒழுகல் குடியைக்

குடியாக வேண்டு பவர்


--திருக்குறள்

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 31, 2015 7:02 pm

செயலும் சாந்தியும்

இடையறாது வினையாற்றுவதும், மனதுயாண்டும் அமைதியுற்றிருப்பதும் ஒன்று சேர்ந்து நல்ல வழிபாடு ஆகிறது.

ஹிருதயம் ஓயாது அடித்துக் கொண்டிருக்கிறது. அதனால் அது களைப்புறுவதில்லை. உடல் அங்ஙனம் உழைத்துக்கொண்டிருக்கட்டும். மனது சாந்தியில் நிலைத்திருந்தால் உழைக்கிற உடலுக்கு ஆயாசம் உண்டாகாது. வினையாற்றுதலும் விச்ராந்தியும் சேர்ந்தே நிகழ்கின்றன.

சித்த நினைவுஞ் செயுஞ்செயலும் நீயெனவாழ்

உத்தமர்கட் காண உறவே பராபரமே.


-- தாயுமானவர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 01, 2015 6:34 pm

சில்லரை மாற்றுதல்

பரம்பொருளே, உன்னை உள்ளத்தினுள் உள்குவதும் உரக்க உன்னைப் போற்றிப் புகழ்வதும் எல்லாம் உனக்குகந்த வழிபாடே.

பொன் காசு ஒன்றுக்குச் சில்லரை மாற்றினால் பை நிறைய தாமிரக்காசுகள் கிடைக்கும். சிறிய பண்டங்களை விலைக்கு வாங்குதற்கும் அவைகள் உதவும். ஆனால் அவைகளின் மதிப்போ குறைவானது. கடவுளைப் பற்றி மனதில் உணர்வது பொற்காசு போன்றது. அவரைப்பற்றிப் பேசுவது தாமிர சில்லரைக்காசு போன்றது.

அல்லும் பகலும் அறிவாகி நின்றவர்க்கே

சொல்லும் பொருளுஞ் சுமைகான் பராபரமே
.


-- தாயுமானவர்.

நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு..... - Page 7 Empty Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 15 Previous  1 ... 6, 7, 8 ... 11 ... 15  Next

Back to top

- Similar topics
» தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு
» தினசரி நாட்காட்டியில் மருத்துவ குறிப்புகள் -(தொடர் பதிவு)
» வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum