Latest topics
» நாவல்கள் வேண்டும்by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
+3
சசி
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
7 posters
Page 13 of 15
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
First topic message reminder :
போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.
என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிகிலேன்
உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துள்ளனர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னெருவர் தனது போக்கு வரவை மாற்றுவதில்லை.ஆதலால்இவர்கள் நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.
என்பெற்ற தாயாரும் என்னைப்
பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
வந்து குடமுடைத்தார்
உற்றொழிய வொருபற்றும்
இல்லை உடையவனே.
-பட்டினத்தார்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
3-12-2015
கலை
கலைகள் யாவும் முடிவில் கடவுளின் பெருமையையே விளக்குகின்றன என்பதை நான் அறிந்துகொள்வேனாக.
கலைஞானங்கள் யாவும் உலகத்தில் உள்ள அதிசயங்களை விளக்குகின்றன. ஒவ்வொரு கலையும் கடைசியில் கடவுள் தான் இவ்வுலகாகத் தோன்றிக் கொண்டிருக்கிறார் என்னும் உண்மையை வெளிப்படுத்துகிறது. எனவே கற்கவேண்டிய முறையில் கலையைக் கற்றால் மெய்பொருளை அடைதற்கு அது உபாயமாகும்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
---திருக்குறள்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
கலை
கலைகள் யாவும் முடிவில் கடவுளின் பெருமையையே விளக்குகின்றன என்பதை நான் அறிந்துகொள்வேனாக.
கலைஞானங்கள் யாவும் உலகத்தில் உள்ள அதிசயங்களை விளக்குகின்றன. ஒவ்வொரு கலையும் கடைசியில் கடவுள் தான் இவ்வுலகாகத் தோன்றிக் கொண்டிருக்கிறார் என்னும் உண்மையை வெளிப்படுத்துகிறது. எனவே கற்கவேண்டிய முறையில் கலையைக் கற்றால் மெய்பொருளை அடைதற்கு அது உபாயமாகும்.
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
---திருக்குறள்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
4-12-2015
நிலை
எனது எடல் வாழக்கை தேர் ஓட்டத்துக்கு ஒப்பானது. தேர் நிலைக்கு வருவது போன்று இறைவா, உன்னை அடையுங்கால் நான் நிலைக்கு வந்தவனாகிறேன்.
ஒவ்வொரு பொருளுக்கும் உற்ற நிலையுண்டு. தனது நிலையை அடையும் வரையில் எப்பொருளுக்கும் ஓய்வு இல்லை. நீரானது கடலைப்போய் அடையும் வரையில் அதற்கு நிலை தடுமாற்றமே நிகழ்கிறது. மனிதன் தெய்வத்தை அடையும் வரையில் அவன் நிலை தடுமாறித் தத்தளித்துக்கொண்டிருக்கிறான்.
தேடாத தேட்டினரே செங்கைத் துலாக்கோல்போல்
வாடாச் சமநிலையில் வாழ்வார் பராபரமே
---தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
நிலை
எனது எடல் வாழக்கை தேர் ஓட்டத்துக்கு ஒப்பானது. தேர் நிலைக்கு வருவது போன்று இறைவா, உன்னை அடையுங்கால் நான் நிலைக்கு வந்தவனாகிறேன்.
ஒவ்வொரு பொருளுக்கும் உற்ற நிலையுண்டு. தனது நிலையை அடையும் வரையில் எப்பொருளுக்கும் ஓய்வு இல்லை. நீரானது கடலைப்போய் அடையும் வரையில் அதற்கு நிலை தடுமாற்றமே நிகழ்கிறது. மனிதன் தெய்வத்தை அடையும் வரையில் அவன் நிலை தடுமாறித் தத்தளித்துக்கொண்டிருக்கிறான்.
தேடாத தேட்டினரே செங்கைத் துலாக்கோல்போல்
வாடாச் சமநிலையில் வாழ்வார் பராபரமே
---தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
5-12-2015
அந்தர்யோகம்
விளையாடும் பொம்மைகளை விட்டெறிந்து விட்டுக் குழந்தை தன் தாயை நாடுவது
போன்று இறைவா, உன்னை நான் நாடுவேனாக.
காலமெல்லாம் மனிதன் உலக வியவகாரத்தில் மூழ்கியிருப்பது பொருந்தாது. அவைகளை
ஒதுக்கி வைத்துவிட்டு இடையிடையே அருள் நாட்டம் கொள்ளவேண்டும். அப்படிச்
செய்தால் அவன் பிறவிப் பெருங்கடலில் மூழ்கிப்போய் விடமாட்டான்
ஐவரொடுங்கூடாமல் அந்தரங்க சேவைதந்த
தெய்வ அறிவே சிவமே பராபரமே.
---தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
அந்தர்யோகம்
விளையாடும் பொம்மைகளை விட்டெறிந்து விட்டுக் குழந்தை தன் தாயை நாடுவது
போன்று இறைவா, உன்னை நான் நாடுவேனாக.
காலமெல்லாம் மனிதன் உலக வியவகாரத்தில் மூழ்கியிருப்பது பொருந்தாது. அவைகளை
ஒதுக்கி வைத்துவிட்டு இடையிடையே அருள் நாட்டம் கொள்ளவேண்டும். அப்படிச்
செய்தால் அவன் பிறவிப் பெருங்கடலில் மூழ்கிப்போய் விடமாட்டான்
ஐவரொடுங்கூடாமல் அந்தரங்க சேவைதந்த
தெய்வ அறிவே சிவமே பராபரமே.
---தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
6-12-2015
அந்தக்கரணம்
உலகைக் காண்பதற்குப் பயன்படுகிற அந்தகரத்தை இறைவா, உன்னிடம் திருப்பி
உன்னையே காணப் பழகி வருவேனாக.
அந்தக்கரணம் அல்லது மனது புறவுலகைபக் காண உதவுகிறது. கெட்ட மனமுடையவர்க்கு
உலகம் கேடுடையதாகத் தெரிகிறது. மனம் நல்லதாக மாறுமளவு உலகும் நல்லதாகத்
தோன்றுகிறது. தெய்விக மனதுக்கு தெய்வக் காட்சியே எங்கும் தென்படுகிறது.
மனதை தெய்வத்தில் ஒடுக்கி விட்டால் மனிதன் தெய்வத்தை
அடையப்பெறுகிறான்.
அந்தக்கரணம் அடங்கத் துறப்பதுவே
எந்தத் துறவினும்நன் றெந்தாய் பராபரமே.
--தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
அந்தக்கரணம்
உலகைக் காண்பதற்குப் பயன்படுகிற அந்தகரத்தை இறைவா, உன்னிடம் திருப்பி
உன்னையே காணப் பழகி வருவேனாக.
அந்தக்கரணம் அல்லது மனது புறவுலகைபக் காண உதவுகிறது. கெட்ட மனமுடையவர்க்கு
உலகம் கேடுடையதாகத் தெரிகிறது. மனம் நல்லதாக மாறுமளவு உலகும் நல்லதாகத்
தோன்றுகிறது. தெய்விக மனதுக்கு தெய்வக் காட்சியே எங்கும் தென்படுகிறது.
மனதை தெய்வத்தில் ஒடுக்கி விட்டால் மனிதன் தெய்வத்தை
அடையப்பெறுகிறான்.
அந்தக்கரணம் அடங்கத் துறப்பதுவே
எந்தத் துறவினும்நன் றெந்தாய் பராபரமே.
--தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
7-12-2015
ஆணவம்
இறைவா, நான் யாண்டும் உன்னுடைய சன்னிதியிலேயே இருக்கிறேன் எனினும்
ஆணவம் குறுக்கிட்டு என் காட்சியை மறைக்கிறது, என்னே!
சூரியனைவிடப் பன்மடங்கு சிறியது பூமி. சூரியன் இப்பூமிக்கும் இன்னும் பல கிரகங்களுக்கும்
வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மூடுபனி அவ்வெளிச்சத்தை
வரவொட்டாது தடுத்து விடுகிறது. அற்ப ஆணவத்துக்கு இறைக் காட்சியை
மறைக்கும் திறமையிருக்கிறது. சூரிய வெப்பத்தால் மூடு பனியை
அகற்றுவது போன்று இறைவன் அருளால் ஆணவ மலத்தை
அகற்ற வேண்டும்.
கெட்டவழி ஆணவப்பேய் கீழாக மேலான
சிட்டருனைப் பூஜை செய்வார் பராபரமே.
---தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
ஆணவம்
இறைவா, நான் யாண்டும் உன்னுடைய சன்னிதியிலேயே இருக்கிறேன் எனினும்
ஆணவம் குறுக்கிட்டு என் காட்சியை மறைக்கிறது, என்னே!
சூரியனைவிடப் பன்மடங்கு சிறியது பூமி. சூரியன் இப்பூமிக்கும் இன்னும் பல கிரகங்களுக்கும்
வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மூடுபனி அவ்வெளிச்சத்தை
வரவொட்டாது தடுத்து விடுகிறது. அற்ப ஆணவத்துக்கு இறைக் காட்சியை
மறைக்கும் திறமையிருக்கிறது. சூரிய வெப்பத்தால் மூடு பனியை
அகற்றுவது போன்று இறைவன் அருளால் ஆணவ மலத்தை
அகற்ற வேண்டும்.
கெட்டவழி ஆணவப்பேய் கீழாக மேலான
சிட்டருனைப் பூஜை செய்வார் பராபரமே.
---தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
8-12-2015
முக்கனி
யோகம்,பக்தி, ஞானம் என்னும் முக்கனியை இறைவா, உனக்குப் படைத்து
வணங்க நான் கற்றுக்கொள்வேனாக.
வாழைப்பழம்,மா,பலா ஆகிய மூன்றை முக்கனி என்கிறோம். இவைகளுள் ஒவ்வொன்றும்
தன்னளவில் சுவையும் சத்தும் உடையது. பின்பு மூன்றுஞ்சேருங்கால் சுவையிலும்
உணவுச் சத்திலும் அவை பன்மடங்கு மேலோங்குகின்றன. கடவுளுக்குப்
படைக்க அவை முற்றிலும் பொருத்தமானவைகள். மனம், மொழி ,
மெய்யாகிய முக்கனிகளை நாம் கடவுளுக்குப்
கொடுத்துவிட வேண்டும்
தானந் தவந்தருமஞ் சந்தமுஞ் செய்வர் சிவ
ஞானன் தனையணைய நல்லோர் பராபரமே
---தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
முக்கனி
யோகம்,பக்தி, ஞானம் என்னும் முக்கனியை இறைவா, உனக்குப் படைத்து
வணங்க நான் கற்றுக்கொள்வேனாக.
வாழைப்பழம்,மா,பலா ஆகிய மூன்றை முக்கனி என்கிறோம். இவைகளுள் ஒவ்வொன்றும்
தன்னளவில் சுவையும் சத்தும் உடையது. பின்பு மூன்றுஞ்சேருங்கால் சுவையிலும்
உணவுச் சத்திலும் அவை பன்மடங்கு மேலோங்குகின்றன. கடவுளுக்குப்
படைக்க அவை முற்றிலும் பொருத்தமானவைகள். மனம், மொழி ,
மெய்யாகிய முக்கனிகளை நாம் கடவுளுக்குப்
கொடுத்துவிட வேண்டும்
தானந் தவந்தருமஞ் சந்தமுஞ் செய்வர் சிவ
ஞானன் தனையணைய நல்லோர் பராபரமே
---தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
9-12-2015
மாயை
ஈசா, உனது யோக மாயையினால் நீ உலகாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாய்.
மாயை சொரூதமாக அல்லாது உன்னை நான் உள்ளபடி காண்பேனாக.
முதலில் முட்டையாயிருந்து பிறகு பறவையாவது பறப்பனவற்றின் இயல்பு. பரம்பொருள்
பிரபஞ்ச சொரூபமாகக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஞானக்கண்
பெறுகிறவர்களுக்குப் பிறகு அவர் உள்ளபடி தமது மெய்க்காட்சியளிக்கிறார்.
பிரபஞ்சமாக தம்மைக் காட்டிக் கொள்வது அவருடைய இயல்பு. இந்த
இயல்பை மாயை என்கிறோம்
வல்லமையே காட்டுகின்ற மாமாயை நானொருவன்
இல்லையெனின் எங்கே இருக்கும் பராபரமே.
---தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
மாயை
ஈசா, உனது யோக மாயையினால் நீ உலகாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாய்.
மாயை சொரூதமாக அல்லாது உன்னை நான் உள்ளபடி காண்பேனாக.
முதலில் முட்டையாயிருந்து பிறகு பறவையாவது பறப்பனவற்றின் இயல்பு. பரம்பொருள்
பிரபஞ்ச சொரூபமாகக் காட்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஞானக்கண்
பெறுகிறவர்களுக்குப் பிறகு அவர் உள்ளபடி தமது மெய்க்காட்சியளிக்கிறார்.
பிரபஞ்சமாக தம்மைக் காட்டிக் கொள்வது அவருடைய இயல்பு. இந்த
இயல்பை மாயை என்கிறோம்
வல்லமையே காட்டுகின்ற மாமாயை நானொருவன்
இல்லையெனின் எங்கே இருக்கும் பராபரமே.
---தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
10-12-2015
நெறி
இறையே, உன் காட்சியைப் பெறாதிருக்கிறபொழுதும் உன்னை அடைதற்கான
நெறியில் நான் சென்றுகொண்டிருப்பேனாக.
வீண்காலம் கழிக்காது சரியான பாதையில் போய்க்கொண்டிருப்பவர்கள் சேரவேண்டிய
இடத்தைப் போய்ச் சேருவர். நாம் அனைவரும் பரம்பொருளிடத்து யாத்திரை போய்க்
கொண்டிருக்கிறோம். நெறி அல்லது வழி பிசகாதிருப்போமாகில் அவரைச்
சென்றடைவது திண்ணம்.
மின்னனைய பொய்யுடலை பெய்யென்று நம்பிஐயோ
நின்னை மறக்கை நெறியோ பராபரமே.
-
--தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
நெறி
இறையே, உன் காட்சியைப் பெறாதிருக்கிறபொழுதும் உன்னை அடைதற்கான
நெறியில் நான் சென்றுகொண்டிருப்பேனாக.
வீண்காலம் கழிக்காது சரியான பாதையில் போய்க்கொண்டிருப்பவர்கள் சேரவேண்டிய
இடத்தைப் போய்ச் சேருவர். நாம் அனைவரும் பரம்பொருளிடத்து யாத்திரை போய்க்
கொண்டிருக்கிறோம். நெறி அல்லது வழி பிசகாதிருப்போமாகில் அவரைச்
சென்றடைவது திண்ணம்.
மின்னனைய பொய்யுடலை பெய்யென்று நம்பிஐயோ
நின்னை மறக்கை நெறியோ பராபரமே.
-
--தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: நிலைத்த உறவு - தினசரி தியானம்! - தொடர் பதிவு.....
11-12-2015
நீர்க்குமிழி
இறைவா, நீ நீர். நான் நீர்க்குமிழி. என் வடிவத்தில் நான் வாஞ்சை
வைக்காது உன் சொரூபத்தைப் பற்றியிருப்பேனாக.
நாமரூபத்தில் நாம் மயங்கியிருக்கிறோம். ஆனால் ரூபம் ஓயாது மாறுவதால் நாமமும்
மாறுகிறது. பின்பு பொருளோ நாமரூபத்தில் பாதிக்கப்படாதிருக்கிறது. நீர்க்குமிழி
போன்றது நாமரூபம். அது நிலைத்தில்லை. அழிகிற நாமரூபத்தை
ஒதுக்கிவிட்டுப் பொருளைக் காணக் கற்றுக்
கொள்ளுதல் வேண்டும்.
நித்தியமொன் றில்லாத நீர்க்குமிழி போன்றவுடற்
கித்தனைதான் துன்பமுண்டோ என்னே பராபரமே.
---தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
நீர்க்குமிழி
இறைவா, நீ நீர். நான் நீர்க்குமிழி. என் வடிவத்தில் நான் வாஞ்சை
வைக்காது உன் சொரூபத்தைப் பற்றியிருப்பேனாக.
நாமரூபத்தில் நாம் மயங்கியிருக்கிறோம். ஆனால் ரூபம் ஓயாது மாறுவதால் நாமமும்
மாறுகிறது. பின்பு பொருளோ நாமரூபத்தில் பாதிக்கப்படாதிருக்கிறது. நீர்க்குமிழி
போன்றது நாமரூபம். அது நிலைத்தில்லை. அழிகிற நாமரூபத்தை
ஒதுக்கிவிட்டுப் பொருளைக் காணக் கற்றுக்
கொள்ளுதல் வேண்டும்.
நித்தியமொன் றில்லாத நீர்க்குமிழி போன்றவுடற்
கித்தனைதான் துன்பமுண்டோ என்னே பராபரமே.
---தாயுமானவர்
நன்றி-தெளிவுரை
ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 13 of 15 • 1 ... 8 ... 12, 13, 14, 15
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தினசரி செய்திகள் - பிப்ரவரி '!6- தொடர் பதிவு
» தினசரி நாட்காட்டியில் மருத்துவ குறிப்புகள் -(தொடர் பதிவு)
» வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !
» தினசரி நாட்காட்டியில் மருத்துவ குறிப்புகள் -(தொடர் பதிவு)
» வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» உறவு முறைகள் ....பற்றி .... மிகவும் சிந்திக்கவேண்டிய one of the BEST பதிவு !
Page 13 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|