ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவத் துளிகள்

+6
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
ayyasamy ram
Dr.S.Soundarapandian
krishnaamma
ரமணி
10 posters

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

Go down

அனுபவத் துளிகள் - Page 7 Empty அனுபவத் துளிகள்

Post by ரமணி Wed Oct 07, 2015 6:52 pm

First topic message reminder :

அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)

ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!

[வாயசம் = காக்கை]

--ரமணி, 21/09/2015

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down


அனுபவத் துளிகள் - Page 7 Empty Re: அனுபவத் துளிகள்

Post by Hari Prasath Sat Nov 14, 2015 6:56 pm

ரமணி wrote:34. கண்முன்னே ஓர் கொலை!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

நோயில் நலிவுற நொய்யரி சிக்கஞ்சி!
பாயில் படுத்தவன் பள்ளியை நினைத்தேன்
காலை நேரம் கட்டெறும் பொன்றென்
மேலே ஏற மெல்லச் சுண்டினேன்
கீழே விழுந்த கேடோ அல்லது
வாழும் காலம் வடிந்ததோ குமிழில்
வற்றிய உடல்சாய வாய்வழி உயிர்போகக்
குற்றம் குறுகுறுக்கும் இன்றுமென் நெஞ்சிலே!

--ரமணி, 03/11/2015

*****
என்னே ஒரு உயிரிரக்கம்
மிக அருமை ஐயா



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

அனுபவத் துளிகள் - Page 7 Empty Re: அனுபவத் துளிகள்

Post by ரமணி Tue Nov 17, 2015 8:42 pm

45. சிறகைக் களைந்தால் சிறை?!
(அளவியல் இன்னிசை/நேரிசை வெண்பா)

பிரளயத்தின் ஓர்துளி பேய்மழை ஆட்டம்
இரணியன் நெஞ்சென இற்றது பூமி
தனதாம் பொருட்களின் தாக்கம் தகர்த்தே
மனதை அரித்த மழை. ... 1

தினமும் மழையில் திரண்டுருள் வெள்ளம்
வனப்பில் பயத்தினை வார்த்தது நெஞ்சில்
கனவுகள் பொய்யாய்க் கவலைகள் மெய்யாய்
மனத்தை அரித்த மழை. ... 2

வெள்ளம் நலத்தை விசாரிக்க வீடுபுக
உள்ளம் பயத்தில் உறையவே - உள்ள
உடைமையில் உண்ண உறங்கவெனத் தேவை
எடுத்தேறி னோம்மாடி மேல். ... 3

அணைந்தமின் சாரசக்தி ஆற்றுப் படுத்த
இணையம் இலாத இருளில் - பிணையெலாம்
அற்றவுளம் நிம்மதியில் ஆறாதோ? மாறாகக்
குற்றுயி ரான குலை. ... 4

கடமை குறையக் கவலை குறைய
உடைமை குறைப்பதில் உள்ளங்கள் ஒன்றக்
குடும்பத்தின் கூட்டுறவைக் கொண்டாடி னாலும்
விடுத்ததைப் பற்றும் விழைவு. ... 5

மூன்று தினமாக முக்கி முனகியே
ஊன்றுகோல் இன்றி உளைந்து தவிக்க
விடியலின் கீற்றுவர விட்டது மாரி
ஒடிந்த மனத்தில் உவப்பு. ... 6

இணையம் இலக்கியம் கேளிக்கை என்றே
துணைகளைப் பற்றித் தொடர்ந்திடும் வாழ்வில்
சிறகை விரும்பும் சிறுமனம் எண்ணும்
சிறகைக் களைந்தால் சிறை. ... 7

--ரமணி, 17/11/2015

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

அனுபவத் துளிகள் - Page 7 Empty Re: அனுபவத் துளிகள்

Post by ரமணி Thu Nov 19, 2015 5:59 pm

46. சாலையில் மீன்கள்!
(அளவியல் இன்னிசை வெண்பா)

இந்தமழை வெள்ளத்தில் துன்பம் எதற்கெனில்
சொந்தமென ஏரியின் சூழலில் வாழ்மீன்கள்
ஏரி உடைய எறிவெள்ளம் பாயவே
மூரி இழந்த முடை. ... 1

[மூரி = வலிமை, பெருமை, பழமை; முடை = நெருக்கடி]

சாலைவழி வெள்ளத்தில் சஞ்சரித்த மீனெலாம்
ஓலமிட்ட மௌன ஒலியுடன் வீட்டுவெளிப்
பாதையில் கேணியில் பற்பல குஞ்சுடன்
சேதமுறும் சேற்றுடன் சேர்ந்து. ... 2

இந்தமழை வெள்ளத்தில் இன்பம் எதற்கெனில்
வந்துவந்து வெள்ளம் வரும்மீன் பிடிக்கத்
தடியால் அடித்துத் தவளையாய்ப் பாய்ந்தே
விடுவலை கொண்ட விழி. ... 3

மீன்விலை யேற்ற மிதப்பில் சிலமக்கள்
வான்வழி நீரினால் வந்ததைப் பற்றி
நெகிழ்பையில் சேர்த்த நிகழ்வினைக் கண்டோர்
நெகிழ்ந்தே வருந்தும் நிலை. ... 4

உயிர்கள் வதைதடுக்க உள்ளசட் டம்தான்
அயலாகிப் போக அரிதாமோ மீன்கள்?
கயல்விழி கண்ணில் கவிதையில் தானோ?
உயிர்க்கும் உரிமையிலை யோ? ... 5

--ரமணி, 17/11/2015

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

அனுபவத் துளிகள் - Page 7 Empty Re: அனுபவத் துளிகள்

Post by ரமணி Fri Nov 20, 2015 7:16 pm

35. காலம் கடந்த ரயில்!
(நேரிசை ஆசிரியப்பா)

’அம்மா, எத்தன அய்யில் பத்தியா!’
கம்மல் காதாடக் கண்விரிந் தேநான்
மூன்று வயதினில் மொழிந்ததாய் அன்னை
ஊன்றி நினைத்தே உள்ளம் உவப்பாள்!
காலம் கடந்தும் ரயிலின்
ஓலமாய் ஒலிக்க உள்ளம் விரிக்குமே.

அந்த நாட்களின் அருமையும் நெடுமையும்
சிந்தையில் இன்று சிறுத்த கணங்களாய்,
அணுவின் அளவாய், ஆழத் தங்கியும்
அணுகில் ஆடும் அசைபடம் என்றே
வீழ்ந்ததை உள்ளம் விரிப்பதே
வாழ்ந்ததும் வாழ்வதும் காட்டும் அன்றோ?

--ரமணி, 04/11/2015

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

அனுபவத் துளிகள் - Page 7 Empty Re: அனுபவத் துளிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Nov 20, 2015 8:10 pm

அனுபவத் துளிகள் - Page 7 3838410834 அனுபவத் துளிகள் - Page 7 103459460 அனுபவத் துளிகள் - Page 7 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அனுபவத் துளிகள் - Page 7 Empty Re: அனுபவத் துளிகள்

Post by ayyasamy ram Fri Nov 20, 2015 8:36 pm

அனுபவத் துளிகள் - Page 7 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அனுபவத் துளிகள் - Page 7 Empty Re: அனுபவத் துளிகள்

Post by ரமணி Sat Nov 21, 2015 7:40 pm

36. ஆறும் ஆஞ்சநேயரும்!
(நேரிசை ஆசிரியப்பா)

ஆற்றங் கரைப்பள்ளி. ஆசையுடன் நாங்கள்
சேற்றில் நிற்போம். சிறுமீன்கள் கொட்டும்.
அலைகள் வருடும். ஆனந்தம் பொங்கும்.
சிலபை யன்கள் சிறுமீன்கள் புட்டியில்
நீருடன் அடைத்தே நிறைவெய்தச்
சீரிழந் தேயவை சின்னாளில் சிலையாமே!

அருகில் கோவிலில் ஆஞ்சநேயர் கும்பிட்டே
அருமைச் சுற்றம் அவள்தோழி யுடன்நான்
சில்லெனும் உணர்வையெம் சிறுதொடை விரும்பக்
கல்மேடை அமர்ந்தே சொல்லுரை யாடுவோம்.
கள்ளமிலா நாட்கள் கனவாக
உள்ளம் இன்றும் உவகையில் ஒன்றுமே!

--ரமணி, 05/11/2015

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

அனுபவத் துளிகள் - Page 7 Empty Re: அனுபவத் துளிகள்

Post by ரமணி Sun Nov 22, 2015 6:03 pm

37. கற்சட்டி மகிமை!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

கற்சட்டி நிறையக் கட்டித் தயிர்சாதம்
சுற்றியரை வட்டமாய்ச் சொகுசாய்த் தரையமர்ந்தே
உருவினிற் பெரியதாய் உருண்டை உள்ளங்கைக்
கரம்நீட்டி வாங்கிக் கட்டை விரல்மடித்தே
சின்னதாய்க் குழியைச் செய்தபின் சாம்பாரால்
அன்னையின் அன்னை அற்பக் குளமாக்க
பருக்கை சிதறாமல் பல்லால் கவ்வியதன்
உருவம் சிதைத்தே உட்கொளும் குழந்தைகளாய்ப்
பொன்மாலை மறைந்த பொழுதை இரவுண்ணச்
சின்னக்கை நக்குவோம் சீர்த்தெழும் ஏப்பமே!

கற்சட்டி உடையமாக் கல்லென் றாகியே
பற்பல வாயெழுதப் பயன்தரும் கோலாகும்
மகளிர் புள்ளி வைத்தே கோலமிட
மகன்மை வாரிசாம் வால்கள் நாங்களோ
தரையில் கிறுக்கித் தத்தம் பாடங்கள்
உருவேற்றும் வேலையில் உள்ளம் களைத்தே
வரைவோம் சித்திரம் வாய்மூக்கு வைத்தே
ஒருவரை ஒருவர் புகழ்ந்தே பழித்தே!
கற்சட்டி மாக்கல் கண்படா இன்னாளில்
வெற்றுக் காகிதமும் வீணென மறையுமே!

--ரமணி, 07/11/2015

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

அனுபவத் துளிகள் - Page 7 Empty Re: அனுபவத் துளிகள்

Post by ரமணி Mon Nov 23, 2015 7:29 pm

38. ஆரோவோர் பையன்!
(அறுசீர் விருத்தம்: தேமாங்காய் மா காய் காய் . காய் மா)

ஆரோவோர் பையன்... (கொஞ்சம்நான் நிதானித்தே)
. அடிவாங்கப் போறான்!
தாராள மெனினும் தந்தையன்றோ? என்பொறுமை
. தளைமீற இரைவேன்
பேரோசை விளைத்தே பித்தாக்கும் பிள்ளைதொலை
. பேசியைக்கை விடுக்கும்!
வாரிக்குள் மணியாய் வந்ததன்றோ? குறும்பெல்லாம்
. மனதுக்குள் மகிழ்வே!

ஆரோவோர் பையன்... மீண்டொலிக்கும் என்குரலே!
. ஆசையிலே பிள்ளை
பேரோசை வைத்தே பக்கத்தில் நின்றுகொண்டே
. பிடித்ததெலாம் பார்க்கத்
சோராமல் நானும் மறுபடியும் குரலேற்றத்
. தொலைக்காட்சி யடக்கி
ஆரோவோர் பையன்... பிள்ளையது எதிரொலிக்கும்
. அடிவாங்க மாட்டான்!

--ரமணி, 07/11/2015

*****
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

அனுபவத் துளிகள் - Page 7 Empty Re: அனுபவத் துளிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Nov 24, 2015 12:05 pm


அனுபவத் துளிகள் - Page 7 3838410834 அனுபவத் துளிகள் - Page 7 103459460 அனுபவத் துளிகள் - Page 7 1571444738
ரமணி wrote:38. ஆரோவோர் பையன்!
(அறுசீர் விருத்தம்: தேமாங்காய் மா காய் காய் . காய் மா)
--ரமணி, 07/11/2015

*****
மேற்கோள் செய்த பதிவு: 1176380
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அனுபவத் துளிகள் - Page 7 Empty Re: அனுபவத் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 11 Previous  1, 2, 3 ... 6, 7, 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum