ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறாமை.....அது கூடவே கூடாது !

4 posters

Go down

பொறாமை.....அது கூடவே கூடாது !  Empty பொறாமை.....அது கூடவே கூடாது !

Post by krishnaamma Wed Oct 07, 2015 5:01 pm

பொறாமை.....அது கூடவே கூடாது !

பொறாமை! அது, மனிதர்கள் அனைவரையுமே ஆட்டிப் படைக்க கூடியது. அதற்கு, படித்தவர் - படிக்காதவர் என்ற பேதமில்லை; பொறாமை, உத்தமமான பக்தர்களைக் கூட ஆட்டிப் படைத்திருக்கிறது என்பதற்கு, இக்கதையே உதாரணம்.

கிஞ்சன்வாடி என்ற கிராமத்தில், கணேச பட்டர் எனும் விநாயக பக்தர் வாழ்ந்து வந்தார். விநாயகர் மீது அவர் வைத்திருந்த துாய பக்தியின் காரணமாக, அவர் அளிக்கும் விபூதி பிரசாதத்தால், நோய் மற்றும் பிரச்னைகள் தீரும்; வறுமை நீங்கும் என்று அப்பகுதி மக்கள் நம்பினர். அதன் காரணமாக, அனைவரும் கணேச பட்டரைப் போற்றினர்.

அதே காலகட்டத்தில், துகாராம் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர், ஞான திருஷ்டி படைத்தவர்; அத்துடன், அவர், பண்டரிநாதனுக்கு படைக்கும் உணவை இறைவன் உண்டு செல்வார் என்றெல்லாம் அவரின் புகழ் பரவியிருந்தது.

இவ்விஷயத்தை கேள்விப்பட்ட கணேச பட்டருக்கு, ஒரு குடம் பாலில், துளி விஷம் கலந்தாற் போல, மனதில் பொறாமை தீ வளர்ந்தது.

'நாளை துகாராமிடம் போய், என் கண்முன் பண்டரிநாதனை வரவழையுங்கள் பாக்கலாம் என கேட்கப் போறேன். அப்போது, அவரோட பொய் வெளிப்பட்டு விடும். அத்துடன், நான் விநாயகரை வரவழைத்து, துகாராமை விட நான் தான் பெரிய பக்தன் என, அனைவர் முன்பும் நிரூபிப்பேன்...' என, சபதமிட்டார் கணேச பட்டர்.

மறுநாள், நீராடி, துாய ஆடைகள் அணிந்து, ஆசார அனுஷ்டானங்களை முடித்து, கோவிலுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார் பட்டர். அப்போது, 'ஸ்வாமி... உள்ளே வரலாமா?' எனக் குரல் கேட்டது. வெளியே வந்து பார்த்தார். அங்கே, துகாராம் நின்று கொண்டிருந்தார். 'ஸ்வாமி... நீங்க என்னைப் பாக்க விரும்புவதாகவும், அவருக்கு சிரமம் கொடுக்காமல், நீயே அவரைப் போய் பார்ன்னு பண்டரிநாதர் எனக்கு கட்டளையிட்டார். அதன்படி உங்களப் பாக்குறதுக்காக வந்துருக்கேன்...' என்றார் துகாராம்.

அதைக் கேட்டதும், பட்டருக்கு கோபம் வந்து, 'பொய் சொல்லாதீர்; இன்று நான் உங்கள சோதனை செய்ய வரப் போறத

எப்படியோ தெரிஞ்சு, பண்டரிநாதன் சொன்னதாக பொய் சொல்கிறீர். ஒரு சாதாரண வணிக குலத்தில் பிறந்த நீர், உயர் குலத்தில் பிறந்த என்னிடம் பொய் சொல்லாதீர்...' என்றார்.

துகாராம் எவ்வளவோ சொல்லியும், அதை ஏற்கவில்லை பட்டர். இதனால், 'சரி... இதோ நான் பண்டரிநாதரை அழைக்கிறேன், என் பக்திக்கு இரங்கி அவர் வருவார். நீங்க உங்க விநாயகரை அழையுங்க, நானும் அவரை தரிசிக்கிறேன்...' என்றார்.

இதைக் கேட்டதும், பட்டருக்கு கோபம் அதிகமாகி, 'அப்படியா... இதோ விநாயகரை அழைக்கிறேன்; அவர் கண்டிப்பாக வருவார்...' என்றார்.

தகவல் அறிந்து ஊரே கூடி விட்டது. கணபதி பட்டர் கைகளைக் கூப்பி, மந்திரங்களைச் சொல்லத் துவங்கினார். ஊஹூம்... என்னென்னவோ செய்தும், விநாயகர் வரவில்லை.

அப்போது துகாராம், 'ஸ்வாமி... விநாயகரின் பக்தர் ஒருவர், குளிப்பதற்காக குளத்திற்குச் சென்றிருந்தவர் படிக்கட்டில் வழுக்கி, குளத்தில் விழுந்து விட்டார். 'கணேசா காப்பாற்று...' என்று கதறிய அப்பக்தரை விநாயகர் காப்பாற்றி கரை சேர்த்து, அமைதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதனால் தான் உங்க குரலுக்கு வரவில்லை...' என்று கண்களை மூடியபடியே சொன்னார்.

ஆனால், அதை நம்பவில்லை பட்டர்.

'நான் சொல்வதில் நம்பிக்கை இல்லன்னா நீங்க பூஜை செய்யும் விநாயகர் கோவில்ல போய் பாருங்க உண்மை தெரியும்...' என்றார். அதன்படி, பட்டரும், மற்றவர்களும் கோவிலுக்கு சென்று பார்த்த போது, அங்கே ஈரக் காலடிச் சுவடுகள் இருந்தன. விநாயகரின் திருமேனி முழுவதும் நனைந்திருந்தது. விநாயகர் அணிந்திருந்த ஆடைகளில் இருந்து, தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது.

அனைவரும் வியக்க, உண்மையை உணர்ந்த கணேச பட்டர் தலை குனிந்தார். அவர் மனதில் இருந்த பொறாமையும் அகன்றது.

ஆணவமும், பொறாமையும் அறிவுக்கு சத்ரு; அதுவும், ஆன்மிகத்தில், பொறாமை அறவே கூடாது.

பி.என்.பரசுராமன்


Last edited by krishnaamma on Wed Oct 07, 2015 5:48 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொறாமை.....அது கூடவே கூடாது !  Empty Re: பொறாமை.....அது கூடவே கூடாது !

Post by M.Jagadeesan Wed Oct 07, 2015 5:30 pm

பொறாமை கூடாது அதுவும் ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ள ஞானிகளுக்குப் பொறாமை அறவே கூடாது என்ற நீதியை உணர்த்திய கதை .

கதைக்கும் , கீழே குறிப்பிட்டுள்ள திருமந்திரப் பாடலுக்கும் சிறிதும் தொடர்பில்லை !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பொறாமை.....அது கூடவே கூடாது !  Empty Re: பொறாமை.....அது கூடவே கூடாது !

Post by krishnaamma Wed Oct 07, 2015 5:41 pm

M.Jagadeesan wrote:பொறாமை கூடாது அதுவும் ஆன்மீகத்தில் ஈடுபட்டுள்ள ஞானிகளுக்குப் பொறாமை அறவே கூடாது  என்ற நீதியை உணர்த்திய கதை .

கதைக்கும் , கீழே குறிப்பிட்டுள்ள திருமந்திரப் பாடலுக்கும் சிறிதும் தொடர்பில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1167089

நன்றி ஐயா புன்னகை
.
.
.
நீங்களுமொரு குறள்  போடுவீங்க என்று எதிர் பார்த்தேன் ஐயா புன்னகை
.
.
.
அந்த பதிவில் போட்டிருந்தது எனவே நானும் போட்டுவிட்டேன், எடுத்துவிட்டேன்  ஐயா புன்னகை


Last edited by krishnaamma on Wed Oct 07, 2015 6:56 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொறாமை.....அது கூடவே கூடாது !  Empty Re: பொறாமை.....அது கூடவே கூடாது !

Post by M.Jagadeesan Wed Oct 07, 2015 6:50 pm

திருக்குறளில் ‘ பாவி “ என்ற சொல் இருமுறை வருகிறது . பொறாமை உள்ளிருந்து மனதை அரிக்கும்; வறுமை வெளியிலிருந்து உடலை அரிக்கும் . எனவே இவ்விரண்டையும் “ பாவி “ என்று வள்ளுவர் திட்டுகிறார் .

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும் . ( அழுக்காறாமை – 168 )

இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் . ( நல்குரவு 1042 )

பொறாமை என்னும் பாவி ஒருவனுடைய செல்வத்தை அழிப்பதுடன் , பிற தீய வழிகளிலும் அவனைத் தள்ளிவிடும் .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பொறாமை.....அது கூடவே கூடாது !  Empty Re: பொறாமை.....அது கூடவே கூடாது !

Post by krishnaamma Wed Oct 07, 2015 6:56 pm

மிக்க நன்றி ஐயா புன்னகை ........................ :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொறாமை.....அது கூடவே கூடாது !  Empty Re: பொறாமை.....அது கூடவே கூடாது !

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Oct 07, 2015 7:55 pm

பல பேர் வாழ்க்கை சீர்கெட பொறாமை என்ற கொடிய செயலே காரணம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பொறாமை.....அது கூடவே கூடாது !  Empty Re: பொறாமை.....அது கூடவே கூடாது !

Post by krishnaamma Thu Oct 08, 2015 12:21 am

பழ.முத்துராமலிங்கம் wrote:பல பேர் வாழ்க்கை சீர்கெட பொறாமை என்ற கொடிய செயலே காரணம்
மேற்கோள் செய்த பதிவு: 1167137

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொறாமை.....அது கூடவே கூடாது !  Empty Re: பொறாமை.....அது கூடவே கூடாது !

Post by ayyasamy ram Thu Oct 08, 2015 5:35 am

பொறாமை.....அது கூடவே கூடாது !  103459460 பொறாமை.....அது கூடவே கூடாது !  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பொறாமை.....அது கூடவே கூடாது !  Empty Re: பொறாமை.....அது கூடவே கூடாது !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum